மலையக மக்களின் அவல வாழ்வியல்..!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 6
- Created: 31 October 2013
- Hits: 944
எமது நாட்டின் வருமானத்தில் ஏகப்பெரும்பான்மையான வருவாயைப் பெற்றுத்தரும் மலையக மக்கள் இன்றும் தோட்டத் தொழிலாளர்களாகவே நாட்கூலி சம்பளத்திற்கு பணிபுரிகின்றனர். இவர்களுக்கான கல்வி சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி உள்ளிட்ட சகல அடிப்படை வசதிகள் யாவும் மிகத் தாழ்ந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன. அவர்களது வாழ்க்கைத் தரம் நாட்டின் ஏனைய மக்களது வாழ்க்கைத் தரத்தையும் விட மிகவும் கீழ் மட்டத்திற்கே தள்ளப்பட்டுள்ளது.
காசு, பணம், நிலம், சாதி, குலம், மதம்..!?
உப்பினில் மீனினம்
உப்பியே காய்கின்ற
வெம்மணற் கரையோரம்..,
மரக்கலம் தனித் தனி
அலையுடன் மோதிய
வீரங்கள் பல பேசும் - ஆங்கே
பனையொடு தென்னையும்
தனித்தனி வளர்ந்ததில்
தனிமரத் தோப்பாகும் - அதில்
தனி நின்று அறுகின்ற
அடம்பன் கொடி சேர்ந்து - தம்
பலத்தினைப் பறைசாற்றும்.
வடபகுதியின் மீன்பிடி அபிவிருத்தி சிறு வரலாற்றுப் பார்வை
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 2
- Created: 30 October 2013
- Hits: 2023
இலங்கைக்கு பாரிய கடற் பிரதேசம் இருந்தும், இலங்கைஇன்றுவரை மீன்பிடியில் எந்தவகையிலும் அபிவிருத்தியடைந்த நாடல்ல. மீன்பிடித்தொழில் அபிவிருத்திக்கான முதல் அடித்தளம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் (1972 - 1977) பதவிக்காலத்தில் இடப்பட்டது. இக்காலப் பகுதியில் மீன்பிடி கூட்டுறவு சங்கங்களும், அகில இலங்கை மீன்பிடி தொழிலாளர் சமாசமும் உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டு திட்டம் தீட்டப்பட்டு, அத்திட்டத்தில் முதல் இரண்டாண்டுகள் கரையோர மற்றும் களப்புசார் மீன்பிடியை அபிவிருத்தி செயய திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் இலகு கடன்கள் மீன்பிடிகூட்டுறவுச் சங்கங்களுக்கூடாக வழங்கப்பட்டது. இக்கடன்கள் வடக்கு-கிழக்கில் உபயோகிக்கும் மரவள்ளங்களையும், தெற்கில் பாவிக்கும் கட்டுமரங்களையும், வலைகளையும் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டது.
நான் உன்னை விட்டு பிரிவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 29 October 2013
- Hits: 3475
ஈழமாணவர் பொதுமன்றம் டேவிட்சனை பொலிஸ்காரங்கள் பிடிச்சுக் கொண்டு போய் விட்டாங்களாம் என்று வாகை மரத்தடியில் நின்று கொண்டு இருக்கும் போது சந்திரன் ஓடி வந்து சொன்னான். அன்றிரவு ஊர் மதில் எல்லாம் "டேவிட்சனை விடுதலை செய்" என்று எழுதினார்கள். அடுத்த நாள் காலை பள்ளிக்கூடம் போவதற்கு பஸ்சிற்கு காத்திருக்கையில் ஆறுமுகம் மாஸ்டர் வந்தார். "தம்பிமாரே டேவிட்சனை விடுதலை செய் எண்டு என்ரை மதிலிலே எழுதியிருக்கு. ஏன் நானோ அவரை பிடிச்சு வைச்சிருக்கிறேன், விடுதலை செய்யிறதுக்கு" என்று கேட்டார். நாங்கள் தான் எழுதியிருப்போம் எண்டு தனக்கு தெரியுமென்று சொல்லாமல் சொல்லுறார், வயது போனாலும் இவங்களின்ரை நக்கல் போகாது என்றான் தயா.
"போராட்டம்" இதழ் 06 வெளிவந்து விட்டது
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 6
- Created: 27 October 2013
- Hits: 1230
இடதுசாரியத்தின் வெற்றி எப்போது?
வாக்குறுதிகள், வாய்ச்சவாடல்கள் மற்றும் வன்முறைகள் கூடிய இன்னொரு தேர்தலும் முடிந்து விட்டது. வெற்றி பெற்றது யாராக இருந்தாலும் அது நவதாராளமய முதலாளித்துவத்தின் மக்கள் மத்தியில் மேலும் திணிப்பதற்காக அதிகார வர்க்கத்திற்கு இன்னொரு தேர்தல் வெற்றி கிடைத்திருக்கிறது. தங்களை ஏமாற்றுவதற்கு தகுதியானவர்கள் யார் என்பதை மக்களே தேர்ந்தெடுத்திருக்கின்றனர். தேர்தல் முடிந்தாலும், அது பற்றிய தேர்தல் முடிவுகளை பகுப்பாய்வு செய்பவர்களின் குரல்கள் கேட்டு இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. மக்கள் அலையொன்றை உருவாக்கி அரசாங்கத்திற்கு அதனை "பூமராங்" ஆக மாற்றுவோம்" என உளறிக் கொட்டியவர்கள் தேர்தல் முடிவுகளைப் பார்த்து வாய்மூடி மௌன விரதம் அனுஸ்டிக்கின்றனர்.
ஆர்ப்பரிக்கும் மக்கள் போர் வெடிக்கட்டும்..!
மனித இனம் வாழுகின்ற நிலத்திலெங்கும்
விலங்கினங்கள் இரையாடும் வனங்களாக்கி - ஆங்கே
வீற்றிருக்கும் சிங்க ராசாக் குழுமத்தார் - தம்
காலனியப் பிணிசுமந்த கொடுமைகளால்
மனித உறவுகளை மிருகமென வதைகளிட - அதை
புகழ்ந்து போற்றியும்..இ இகழ்ந்து தூற்றிடும்..,
ஆதிக்க அரசியல் - சமூகச் சூழ்ச்சியால்
ஒடுக்கி அடங்கிய அனைத்து மக்களே..!
தீர்ப்பிடாதீர்கள்... தீர்ப்பிடப்படுவீர்கள்... (சிறுகதை)
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 27 October 2013
- Hits: 2152
"டேய் கொஞ்சம் பொறு.. ஏன் இப்ப அவசரப்படுறாய்..... அவன் வந்தவுடன் எல்லாருமாச் சேர்ந்து ஒரு முடிவெடுப்போம். சும்மா கோவப்பட்டு அவசரப்படாதே."...
"இல்லை மச்சான் என்னாலே பொறுக்கேலாமல் கிடக்கு.... இப்ப அவள் என்ரை கையிலே கிடைச்சால்...... என்ன செய்வேனெண்டே தெரியாது.... அவ்வளவு கோவமாயிருக்கு"....
"எனக்கென்ன கோபமில்லையே.... இதைக் கேள்விப்பட்ட நேரத்திலேயிருந்து இன்னும் நான் நித்திரையே கொள்ளவேயில்லை".....
இப்படியே மூன்று பேரும் மாறி மாறி கோவப்பட்டுக் கதைத்துக் கொண்டிருந்தனர்.
சர்வதேசத்தின் துணையுடன் இலட்சியத்தை அடைய போகிறதாம் கூட்டமைப்பு. வெட்கம் என்பதே கிடையாதா!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 23 October 2013
- Hits: 3336
பிணம் தின்னும் கழுகுகள் சிரியாவை கடித்துக் குதற தருணம் பார்க்கின்றன. அப்கானிஸ்தானில் தலிபான்களாலும், ஈராக்கில் சதாம் குசைனாலும் மக்கள் கொல்லப்பட்டார்கள். சர்வாதிகார, அடக்குமுறை ஆட்சிகள் மக்களைக் கொல்கிறார்கள், உலகத்தின் மனச்சாட்சி உறங்குகிறதா? கொலைகளிற்கு எதிராக உலகம் ஒன்று பட வேண்டும் என்று அமெரிக்காவும், அதனது அடிமைகளும் கூப்பாடு போட்டன. அந்த நாடுகளை ஆக்கிரமிப்பு செய்தார்கள். தலிபானும், சதாமும் கொன்றதை விட பலமடங்கு அதிகமாக அமெரிக்காவும், அதன் அடிமைகளும் அந்த மக்களை கொல்கிறார்கள். அந்த நாடுகளின் வளங்களை கொள்ளை அடிக்கிறார்கள்.
சொர்க்கவாதிகளால் சபிக்கப்பட்ட நிலமெங்கும் நரக வரலாறு
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 2
- Created: 23 October 2013
- Hits: 1397
அள்ள அள்ள
அள்ளிக் கொண்டேயிருக்க
ஜீ... பூம்பாச் சுரங்கமல்லவா...
வெளிநாட்டார் பலரும்
உள்நாட்டார் சிலரும்
அள்ளி அள்ளித் தங்களைச்
சொற்கமாக்கிய மண்ணல்லவா...
உலகப் பொருளாதார நெருக்கடி
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
- Created: 21 October 2013
- Hits: 1507
ஒருவன் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவன் இழப்பதன் மூலம் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். மற்றவனுடைய செல்வத்தை அனுபவிப்பது தான் மகிழ்ச்சி. இதுதான் இந்த தனியுடமை சமூக அமைப்பின் அறம் மற்றும் கோட்பாடாகும். இதை அமெரிக்க அரசின் முன்னைய முக்கிய கொள்கை வகுப்பாளரும், முக்கிய மந்திரியுமாக இருந்த கொலின் பாவெல் நறுக்குத் தெறித்தது போல் மிக எடுப்பாகவே கூறியிருந்தார். "தனிச் சொத்துரிமையை மதிப்பது மனித கௌரவத்தின் அடையாளம் இதில் சமரசம் செய்து கொள்வது கூடாது. சுதந்திரச் சந்தையும், சுதந்திர வாணிபமும் நமது தேசியப் பாதுகாப்புத் திட்டத்தில் முன்னுரிமை பெறுகின்றது" என்றார். தனியுடமைச் சமூக அமைப்பு இதைத் தாண்டி மனிதனை மனிதனாக மதிக்காது. இந்தத் தனியுடமை சார்ந்த பொருள் உலகில், மனிதன் தானும் ஒரு உயிருள்ள சடப்பொருளாக மாற்றப்பட்டு விடுகின்றான். இந்த சமூக அமைப்பில் ஏற்படும் அதிர்வுகளில் ஒன்றுதான் உலகப் பொருளாதார நெருக்கடி.