Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

சுகதானந்தாவை வாழ்த்துவோம்...!

சுகதானந்தாவை வாழ்த்துவோம்...!

இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும், சிங்களவர்கள் என்றாலே மனித குலத்தின் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டார்கள்.

அதுவும் இன்னும் துல்லியமாக
சொல்லவேண்டுமென்றால் பவுத்த
துறவிகளை சமூக விரோதிகளாக
வன்முறையாளர்களாகவே உலக
அளவில் பரப்பப்பட்டு வருகிறது.

அதற்கு காரணம் இல்லாமலும்
இல்லை. இலங்கை இன கலவரமும்
பர்மா ரோகியாங் படுகொலையும்
ஒட்டு மொத்த பவுத்த துறவிகளும்
பயங்கரவாதிகள் தான் என்ற பிம்பத்தை நிறுவியது.

எல்லாவற்றிலும் நேர் விசையும்,
எதிர்விசையும் , இருந்தே தீரும்
என்பது விஞ்ஞான உண்மை.
அப்படித்தான் சமூகத்திலும் நிலவும்
என்பதே யதார்த்தம்.

எல்லா மதத்திலும் ,எல்லா இனத்திலேயும் , மனித நேயம்
மிக்கவர்களும், ஏகாதிபத்திய
எதிர்ப்பாளர்களும், சோசலீச
சிந்தனையாளர்களும் , பிறந்து
கொண்டே இருக்கிறார்கள்.

சிங்கள அரசு மருத்துவத்தை தனியார் மயமாவதை எதிர்த்த 
போராட்டத்தை இடதுசாரி சிந்தனை
கொண்ட மாணவர் அமைப்பு வீரம்
செறிந்த போராட்டத்தை நடத்தி
வருகிறது.

அந்த போராட்டத்தின் முன்னணி
தளபதியாக பவுத்த துறவியான
27 வயதே நிறம்பிய
யாழ்பாணத்தை சேர்ந்த பவுத்த
துறவி. Sugathananda Tempitiya
போராடி வருகிறார். அவர் 
மருத்துவ கல்லூரி மாணவர்.
என்பதையும் தாண்டி "சே குவே வின் வாரிசாகவே பார்க்கி்றேன்.

 

அவரின் பிரச்சாரமும் , போராட்ட களத்தில் நிற்கும் துணிவும்,
சி்றை செல்லும் நெஞ்சுரமும்,
ஊடகங்களின் மூலம் அ்றிந்தேன்.

அவருக்கு இன்று பிறந்த நாள்
என்று அறிந்த போது ஒரு போராளி யோடு கைகுலுக்கும் நிறைவை
அடைந்தேன்.

இந்த இனிய நாளில் பல்லாண்டு
வாழ்க என வாழ்த்துவதோடு.....
அவரை பாதுகாக்கும் முயற்சிகளை
அங்கே உள்ள இடதுசாரி அமைப்புகள் எடுக்க வேண்டும்.

 

மணிவண்ணன் மணி