அழகிய (அழகற்ற) நுவரெலியா.
- Details
- Category: இதழ் 29
-
21 May 2017
- Hits: 797
அனைவருக்கும் நுவரெலியா என்ற பெயரைக் கேட்டவுடன் நினைவில் வருவது சுத்தமான அழகிய பசுமையான இயற்கை வளங்கள் நிறைந்த தூய நீரினால் நிரம்பிய வனப்பான பிரதேசமாகும். அதைப்போலவே பறவைகளின் கீச்சிடும் ஒலிகளும் பல்வேறு மிருகங்களும் நிறையப் பெற்ற இயற்கைச் சூழலாகும். இவ்வாறான இயற்கை எழில் நிறைந்த பிரதேசமாக நுவரெலியா காணப்பட்ட போதும் அதற்குள்ளே மறைந்திருக்கும் உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
'ஏகாதிபத்திய நவலிபரல் வேலைத்திட்டத்திற்கு எதிராக சோசலிசத்துக்காக வர்க்கத்திற்கு ஒரு கட்சி"
- Details
- Category: இதழ் 29
-
15 May 2017
- Hits: 821
முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மாநாடு 2012 ஏப்ரலில் நடந்தது. அந்நேரத்தில் எமக்கு எதிரான அடக்குமுறை நடந்தவண்ணம் இருந்தது. அப்போது லலித், குகன் சகோதரர்கள் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டிருந்தனர். மாநாடு நடக்கும் ஓரிரு தினங்களுக்கு முன் சகோதரர் குமார் குணரத்தினம் மற்றும் சகோதரி திமுதுவும் கடத்தப்பட்டதன் காரணமாக மாநாட்டில் அவர்கள் கலந்து கொள்ள முடியாமல் ஆக்கப்பட்டிருந்தது.
ஏனையோர் கட்சியை ஆரம்பிக்கும் வேலைகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது. கடந்த சில வருடங்கள் கட்சியினுள் பலகருத்தாடல்கள் இடம்பெற்றன. இரண்டு வருடங்களுக்கு மேலாக கட்சித்தலைமை மட்டுமல்ல, உறுப்பினர்கள் எல்லோரும் போராடிப்பெற்ற வெற்றியின் மூலம் தான் இந்த இரண்டாவது மாநாடு மட்டும் நாங்கள் வந்திருக்கின்றோம்.
முன்னிலை சோசலிசக் கட்சியும், இடதுசாரியப் பாரம்பரிய உடைப்பும்!
- Details
- Category: இதழ் 29
-
27 Apr 2017
- Hits: 756
முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் மாசி மாதம் முதலாந் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றது. 3500 க்கும் மேற்பட்ட பிரதேசவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் உலகின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த உலக இடதுசாரி இயக்கங்களின் பிரதிநிதிகள், சகோதரக்கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் காங்கிரஸ் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகியது.
அரச கட்டமைப்பை சீர்குலைக்கும் ஆட்சி முறைமையும் ஆட்சி முறைமையை மாற்ற விரும்பாத அரசியல் போக்கும்
- Details
- Category: இதழ் 29
-
14 May 2017
- Hits: 1069
நம் நாட்டில் கடந்த 2015 சனவரி 8ந் திகதி முதல் சனநாயகம் மீட்கப்பட்டு குடிமக்களுக்கு சுதந்திர சுபீட்ச நல்வாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், 2015 செப்டம்பர் முதல் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நாடு முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுவதாகவும் இவற்றைச் சர்வதேச சமூகம் பாராட்டியுள்ளதாகவும் ஆட்சியாளர்கள் அண்மையில் அறிக்கை விடுத்துள்ளனர்.
பண பலம் - அரசியல் செல்வாக்கு – அரச அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட அறிவுப்புக்களும் ஆட்சியாளர்களின் உரைகளும் பொருந்துகிறதே ஒழிய குடிமக்களுக்கும் அதற்கும் ஏதும் சம்பந்தம் இருப்பதாக நாட்டின் இன்றைய நடைமுறைகள் சிறிதளவேனும் வெளிப்படுத்தவில்லை.
முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சேனாதீர ஆற்றிய உரை
- Details
- Category: இதழ் 29
-
25 Apr 2017
- Hits: 805
எமது கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டின் செயலாளர் சபையும், தலைவர் சபையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதரர்களே, இங்கு கூடியிருக்கும் அன்பிற்கினிய சகோதரர்களே, சகோதரிகளே வணக்கம்.
ஆரம்பத்திலேயே எமது மாநாட்டில் கலந்து கொள்வதோடு மாநாட்டிற்காக வாழ்த்துக்களை கொண்டு வந்திருக்கும் தேசிய, சர்வதேசிய இடதுசாரிய இயக்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதரர்களை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.
இந்த நிகழ்வுக்கு ஜேர்மன் மார்க்சிய லெனினியக் கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான செயலாளர் ரோஸ் வொலன்டின்ஸ் சகோதரர், அதேபோல் இந்திய மார்க்ஸ் லெனினிய கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பி.ஜே.ஜேம்ஸ் சகோதரர், அதேபோல் இத்தாலிய ரிபோன்தியோ கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசக் கமிட்டி உறுப்பினர் ஜான் மாகோ பீசா சகோதரரும் இங்கு வருகை தந்துள்ளார்கள். 5 வது சர்வதேச லீக்கின் சார்பில் ஸ்ரீவன் மெகன்சி சகோதரர் வருகை தந்துள்ளார். அதே போல் சர்வதேச தொழிலாளர் சங்கம் சார்பில் சர்வதேச சங்க உறுப்பினர் ஜெகதீஸ் சுந்தர சகோதரர் வருகை தந்துள்ளார். கியூபா நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கியூபா நாட்டுத் தூதுவர் பிரவானா எலேனா ராமோஸ் ரொன்டிகார் சகோதரி இங்கு சமூகம் தந்து உள்ளார்.