Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் வைச்சான் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காகிதம் போட்டான் வெள்ளக்காரன். தன் கரங்களால் நாட்டி நீர்ப்பாய்ச்சி பராமரித்து விளைச்சலாக்கும் சாதாரண வெள்ளரிக்காய் பிஞ்சின் மேல்கூட அவனுடைய உழைப்புடனோ அல்லது நிலத்துடனனோ சம்பந்தப்படாத வேற்று நாட்டவன் முழுஅதிகாரத்தையும் கொண்டுள்ளான் என்ற அவலத்தை அச்சொட்டாகச் சொல்கின்ற இந்த சொற்கோவைகளை அந்த உழைப்பாளியின் வேகும் மனதுக்குள் புகுந்து படம் பிடித்துக் காட்டுகின்ற இந்தக் கலைஞன் யார்?

Read more ...

வடபகுதியின் மீன்பிடி அபிவிருத்தி சிறு வரலாற்றுப் பார்வை

இலங்கைக்கு பாரிய கடற் பிரதேசம் இருந்தும், இலங்கைஇன்றுவரை மீன்பிடியில் எந்தவகையிலும் அபிவிருத்தியடைந்த நாடல்ல. மீன்பிடித்தொழில் அபிவிருத்திக்கான முதல் அடித்தளம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் (1972 - 1977) பதவிக்காலத்தில் இடப்பட்டது. இக்காலப் பகுதியில் மீன்பிடி கூட்டுறவு சங்கங்களும், அகில இலங்கை மீன்பிடி தொழிலாளர் சமாசமும் உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டு திட்டம் தீட்டப்பட்டு, அத்திட்டத்தில் முதல் இரண்டாண்டுகள் கரையோர மற்றும் களப்புசார் மீன்பிடியை அபிவிருத்தி செயய திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் இலகு கடன்கள் மீன்பிடிகூட்டுறவுச் சங்கங்களுக்கூடாக வழங்கப்பட்டது. இக்கடன்கள் வடக்கு-கிழக்கில் உபயோகிக்கும் மரவள்ளங்களையும், தெற்கில் பாவிக்கும் கட்டுமரங்களையும், வலைகளையும் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டது.

Read more ...

சிங்கள மக்களின் பிரச்சினைக்கு மதவாதம் தீர்வாகுமா?

இலங்கையில் நூற்றாண்டு காலமாக சிங்கள- முஸ்லிம் மக்களுக்கிடையே நிலவி வந்த நல்லுறவிற்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் கடும்போக்கு பௌத்த குழுக்களினால் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. ஒற்றுமையாக சகோதரத்துவ மனப்பாங்குடன் வாழ்ந்த சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் இனவாதத்தை தூண்டியதன் காரணமாக நாட்டை பிணக்காடாக்கிய யுத்தம் மூன்று தசாப்தங்களாக நடந்தது. அதன் காரணமாக இந்த நாட்டின் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் இன, மதவேறுபாடின்றி சாகடிக்கப்பட்டார்கள்.

Read more ...

சொர்க்கவாதிகளால் சபிக்கப்பட்ட நிலமெங்கும் நரக வரலாறு

அள்ள அள்ள

அள்ளிக் கொண்டேயிருக்க

ஜீ... பூம்பாச் சுரங்கமல்லவா...

 

வெளிநாட்டார் பலரும்

உள்நாட்டார் சிலரும்

அள்ளி அள்ளித் தங்களைச்

சொற்கமாக்கிய மண்ணல்லவா...

Read more ...

முள்ளிவாய்க்காலின் தோல்வியும், படிப்பினையும்

இலங்கையில் தொடருகின்ற இன ஒடுக்குமுறைக்கும், இன அழிப்புக்கும் எதிராக வாக்குப்போடுவதன் மூலமும், அமெரிக்காவை நம்புவதன் மூலமும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியுமா? இப்படி செயற்படும் எமது அரசியல் சரியானதா? இதில் முள்ளிவாய்க்கால் வரை நம்பிய அரசியல் ஏன் தோற்றுப் போனது என்பதைத் தெரிந்துகொண்டால், நாம் நம்பும் அரசியலின் தோல்வியையும் தெரிந்துகொள்ள முடியும். அத்துடன் நாம் எப்படிப் போராடவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவும் முடியும்.   

Read more ...

சிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்ட சில தீய சக்திகள் இனவாதத்ததை பரப்பி வருகின்றன: என்.எம். அமீன்

இன்றைய சூழ்நிலையில் இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து நவமணி பத்திரிகையின் ஆசிரியரும், பேராதனை பல்கலைக்கழக முன்னால் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஜனாப் என்.எம். அமீன் அவர்களோடு போராட்டம் பத்திரிகை நடத்திய நேர்காணலிலிருந்து…..

போராட்டம்: இன்றைய நிலையில் நாட்டில் 65வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினம் பற்றிய உங்களது கருத்து என்ன?

என்.எம். அமீன்: இந்தக் கேள்வியைக் கேட்கும்போது சுதந்திரம் என்ற ஒன்று இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. ஊடக சுதந்திரம் இருப்பதாக சொன்னாலும் கூட இன்று மறைமுகமாக பறிக்கப்பட்டு வருகிறது. ஒருவரின் கருத்தை அவரின் சுய விருப்பத்தின் பேரில் வெளியிடுவதுதான் சுதந்திரம் என்பது. ஆனால் பத்திரிகையாளர்களால் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடியாதுள்ளது. அப்படி மீறிவெளியிட்டால் அவர் மாற்றுக் கண்கொண்டு பார்க்கப்படுகிறார்கள். இந்த நிலையில் சுதந்திரம் என்பதை யோசிக்க வேண்டியுள்ளது.

Read more ...

இயற்கை பற்றிய மனித அறிவு, சமூகம் பற்றிய அறிவாகியது எப்படி? - மாக்சியம் 02

மார்க்சியத்தை தெரிந்து கொள்ளாமல், உலகை நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. மார்க்சியம் மனித சமூகத்தின் நிலவும் சமூக அறியாமையையும், கற்பனைகளையும் மட்டும் போதித்த தத்துவமல்ல. மனித துன்பங்களும் துயரங்களுக்கும் காரணமான சமூக காரணங்களை மட்டும் விளக்குவதுடன் நிற்கவில்லை, அதற்கான தீர்வுகளையும் கூட விஞ்ஞானபூர்வமாக முன்வைக்கின்றது.

Read more ...

கொல்லவரும் கூடன்குளம் அணு உலைகள்!!

தென்னிந்தியாவின் கிழக்கு கரையோரத்தில் கூடன்குளம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அணுஉலைகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. கூடங்குளத்தை அண்மித்த பிரதேசங்களிலும் தென்னிந்தியாவிலும் கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இலங்கையிலும் கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான பிரச்சாரங்கள் மெல்ல மெல்ல வலுப்பெற்று வருகின்றன. இவற்றிற்கு மத்தியில் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்படும் இரண்டு அணுஉலைகளில் ஒன்றின் நிர்மாணப் பணி நிறைவிற்கு வந்துள்ளமை பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

Read more ...

இலங்கையில் ஜனநாயகத்தை நேசிப்பதும், மனிதவுரிமையைக் கோருவதும் குற்றமா!?

சர்வதேச மனிதவுரிமைகள் தினத்தில் லலித் குமார, குகன் முருகன் ஆகிய இருவரும் அரச கூலிப் படைகளால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென புதிய ஜனநாயக மக்கள் முன்னணி கோருகின்றது. அவர்கள் இருவரின் விடுதலைக்காக நடாத்தப்படும் நாடு தழுவிய ரீதியில் நடாத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும், தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது.

Read more ...

மலையக தோட்டத் தொழிலாளர்கள் உரிமைக்காக போராட முன்வர வேண்டும்!

ராசையா ஒரு தோட்டத் தொழிலாளி. ஹல்வத்துர தோட்டத்தில் வேலை செய்கிறார். 28 வயது. 3 குழந்தைகள். வழமைபோல் வேலைக்குச் செல்கிறார். அவர் வேலை செய்யும் இடத்தில் காய்ந்து இற்றுப்போன மரமொன்று இருக்கின்றது. அந்த மரத்திற்கு பட்டும் படாமலும் 33000 வாட்ஸ் மின்சார கடத்திக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தன. வேலை பார்க்கும் சுபவைசர் வந்து அந்த மரத்தை வெட்டும்படி ராசையாவிடம் கூறுகிறார். மின்சாரக் கம்பி இருப்பதால் அதனை வெட்டுவது ஆபத்தை வலிய அழைத்துக் கொள்வதாக இருக்கும் எனவே அதை வெட்ட ராசையா மறுத்துவிடுகிறார். தொழிலாளி தனது ஆணைக்கு கட்டுப்பட்டுத்தான ஆக வேண்டுமென்ற இறுமாப்போடு மரத்தை வெட்டாவிட்டால் வேலை தராமல் வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என்று சுபவைசர் பயமுறுத்தவும் ராசையா ஒருகணம் யோசிக்கிறார், வேலையை விட்டு தூக்கிவிட்டால் தனது குடும்பம் பட்டினியால் துன்பப்படும். பிள்ளைகளின் படிப்பு நின்றுவிடும். யோசிக்கிறார். ' என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ மரத்தை வெட்டு" என்று சுபவைசர் தையிரமூட்டுகிறார். என்ன நடந்தாலும் நடக்கட்டும். மரம் என்ன தலையிலா விழப்போகிறது என்று கோடரியால் மரத்துக்கு இரண்டு வெட்டுதான் கொடுத்தார். மரம் சாய்ந்து மின்சாரக் கம்பியில் பட்டுவிட்டது. மரத்தில் கைவைத்த ராசையா ஐம்பதடி தூரத்திற்கு தூக்கி வீசப்படுகிறார். மரம் மாத்திரமல்ல அதோடு அவரது வாழ்க்கையும் சாய்ந்து விட்டது.

Read more ...