டென்மார்க்கில் நடைபெற்ற ஒன்று கூடல்..!
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
21 May 2018
- Hits: 1134
டென்மார்க்கில் நடைபெற்ற ஒன்று கூடல்..!
டென்மார்க் சம உரிமை இயக்கத்தினால் சனிக்கிழமை (19.05.2018) கொல்ஸ்ரபோ நகரில் ஒன்று கூடல் ஒன்று நடாத்தப்பட்டது. இந்த ஒன்று கூடல் நிகழ்வில் பல தமிழ், சிங்கள மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையினையும் வளர்தெடுப்பதே இந்த ஒன்று கூடலின் முக்கிய நோக்கமாகும். கலை நிகழ்வாக சிங்கள தமிழ் பாடல்கள் இடம்பெற்றன.
சுவையான உணவு, தேனீர், சிற்றூண்டிகள், சிறுவர்களின் விளையாட்டு என ஒன்று கூடல் நிகழ்வு கூடியிருந்த மக்களுக்கிடையிலான நல்ல புரிந்துணர்வோடு சிறப்பாக நிகழ்ந்தது.
சமஉரிமை இயக்கம்
டென்மார்க்.
படங்கள் இணைப்பு
படங்களின் மேல் அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்
அனைத்து இனவாதங்களுக்கும் எதிராக சமவுரிமை இயக்கம் இன்று 08.03.2018 கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம்
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
08 Mar 2018
- Hits: 729
அனைத்து இனவாதங்களுக்கும் எதிராக சமவுரிமை இயக்கம் இன்று 08.03.2018 கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம்
புகைப்படங்களோடு
2018 மார்ச் 05 அன்று சமவுரிமை இயக்கம் வெளியிட்ட அறிக்கையும்
இனவாதத் தீயை அணைக்க முன்வருவோம்!
இனவாதத் தீயை அணைக்க முன்வருவோம்! ( 2018 மார்ச் 05அன்று சமவுரிமை இயக்கம் வெளியிட்ட அறிக்கை)
கடந்த சில நாட்களாக அம்பாறையில் மற்றும் பண்டாரவளையில் ஏற்படவிருந்த சம்பவங்களின் சூடு தணிவதற்கு முன்பே தெல்தெனிய பற்றி எரிகின்றது. இதற்கு முன்பு கின்தோட்டையிலும், அதற்கும் முன்பு அளுத்கமவிலும் இனவாதத் தீப்பிளம்புகள் கிளர்ந்தெழுந்தன. இந்த மோதல்களின் சமீபத்திய சம்பவமானது பெற்றோல் நிலையமொன்றிற்கு அருகாமையில் நடந்த கருத்து மோதலின்போது ஒருவர் தாக்கப்பட்டு மரணமடைந்துதான். இறந்த இளைஞர் சிங்களவர் என்பதனாலும் தாக்கியவர்கள் முஸ்லிம்களாக இருப்பதாலும் பிரச்சினை இனவாதத் தீயாக பற்றி எரியத் தொடங்கியது. சில தசாப்தங்களாக இனவாதத் தீப்பொறி அடிக்கடி தோன்றுவது தற்செயலானதல்ல. அது பல தலைமுறைகளுக்கு பகைமையின் தீப்பொறியை எடுத்துச் செல்லக் கூடியதும் அதனால் மீண்டும் மீண்டும் அவலங்கள் ஏற்படக் கூடியதுமான நிலைமையின் வெளிப்பாடுதான். இந்நிலைமை எரிமலையின் முகட்டைப் போன்று இருப்பதோடு சிறு சம்பவம் கூட அந்த எரிமலையை வெடிக்கச் செய்துவிடும். இந்த நிலைமை தானாக உருவானதொன்றல்ல.
இன மற்றும் வர்க்க முரண்பாட்டினால் பலியானவர்களின் நினைவுதினமாக, சர்வதேச மனிதவுரிமைத் தினத்தை முன்னிறுத்துவோம்!
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
25 Nov 2017
- Hits: 971
ஆளும் வர்க்க வரலாறுகளே மனித வரலாறாகி இருப்பது போல், இன முரண்பாட்டுக் காலத்தில் ஒடுக்கியோர் போற்றப்படுவதே வரலாறாகி வருகின்றது. ஒடுக்கியவர்கள் போற்றப்படுவதோடு, அந்த ஒடுக்கியவர்களால் ஒடுக்கப்பட்டவர்கள் வரலாற்றில் இருந்து காணாமலாக்கப்படுகின்றனர்.
ஆயுதம் தாங்கிப் போராடிய அமைப்புகள், தங்கள் அமைப்பையும் முன்னிறுத்தி நினைவுகளைக் கொண்டாடுவதே நடந்து வருகின்றது. அதேநேரம் தங்கள் அரசியலை முன்னிறுத்தி அனைத்து ஒடுக்கப்பட்டவர்களின் பொதுவான நினைவுகளை மறுப்பதும் நடந்து வருகின்றது. ஒடுக்கப்பட்டவர்களின் நினைவை மறுப்பது என்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் மனிதவுரிமையை மறுக்கும் அரசியலாக இருக்கின்றது.
ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் மூலமே, ஒடுக்கப்பட்டவர்களின் தியாகங்களை முன்னிறுத்த முடியும். இந்த வகையில் சர்வதேச மனிதவுரிமைத் தினத்தை ஒடுக்கப்பட்டவர்களின் தினமாக முன்னிறுத்துமாறு, சமவுரிமை இயக்கம் அழைப்பு விடுக்கின்றது. சர்வதேச மனிதவுரிமைத் தினமான மார்கழி 10 திகதியை முன்வைத்து 10.12.2017 பாரிசில் ஒடுக்கப்பட்டோர் நினைவுநாளை நடத்த சமவுரிமை இயக்கம் அழைப்பை விடுகின்றது.
யார் ஒடுக்கப்பட்டவர்கள்?
இனமுரண்பாட்டினால் பலியானவர்களில் ஒடுக்கியோரும், ஒடுக்கும் அரசியலைக் கொண்டு இருந்தோரும் அடங்கும். ஒடுக்கியவர்கள் பலியானதால் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல. இந்த வகையில் அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கு பலியானவர்களையும் முன்னிறுத்துவோம். உதாரணமாக யார் ஒடுக்கப்பட்டவர்கள்?
இனவாதத் தீயை அணைக்க முன்வருவோம்!
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
06 Mar 2018
- Hits: 694
கடந்த சில நாட்களாக அம்பாறையில் மற்றும் பண்டாரவளையில் ஏற்படவிருந்த சம்பவங்களின் சூடு தணிவதற்கு முன்பே தெல்தெனிய பற்றி எரிகின்றது. இதற்கு முன்பு கின்தோட்டையிலும், அதற்கும் முன்பு அளுத்கமவிலும் இனவாதத் தீப்பிளம்புகள் கிளர்ந்தெழுந்தன. இந்த மோதல்களின் சமீபத்திய சம்பவமானது பெற்றோல் நிலையமொன்றிற்கு அருகாமையில் நடந்த கருத்து மோதலின்போது ஒருவர் தாக்கப்பட்டு மரணமடைந்துதான். இறந்த இளைஞர் சிங்களவர் என்பதனாலும் தாக்கியவர்கள் முஸ்லிம்களாக இருப்பதாலும் பிரச்சினை இனவாதத் தீயாக பற்றி எரியத் தொடங்கியது. சில தசாப்தங்களாக இனவாதத் தீப்பொறி அடிக்கடி தோன்றுவது தற்செயலானதல்ல. அது பல தலைமுறைகளுக்கு பகைமையின் தீப்பொறியை எடுத்துச் செல்லக் கூடியதும் அதனால் மீண்டும் மீண்டும் அவலங்கள் ஏற்படக் கூடியதுமான நிலைமையின் வெளிப்பாடுதான். இந்நிலைமை எரிமலையின் முகட்டைப் போன்று இருப்பதோடு சிறு சம்பவம் கூட அந்த எரிமலையை வெடிக்கச் செய்துவிடும். இந்த நிலைமை தானாக உருவானதொன்றல்ல.
மக்கள் மத்தியில் அடிக்கடி நிர்மாணிக்கப்படும் பல்வேறு பிரிவினைகள், வீண்புரளிகளை சிருஷ்டிக்கும் இயந்திரங்கள், தமது அதிகார நோக்கத்திற்காக சமூகத்தின் இருப்பை துச்சமாக மதிக்கும் அரசியல்வாதிகள் போன்ற அனைவரும் இது விடயத்தில் பங்கேற்றிருக்கின்றார்கள். இந்த கருத்தியல் யுத்தத்திற்கு சிறந்த உதாரணம் முஸ்லிம் வியாபாரிகளால் கொடுக்கப்படுவதாகக் கூறப்படும் மலட்டுத் தன்மையை உருவாக்கும் குளிசை சம்பந்தமான பிரச்சாரமாகும். இரு சம்பந்தமாக எந்தவித விஞ்ஞான அல்லது தர்க்க ரீதியிலான சான்றுகள் இல்லாத போதிலும், அவற்றிற்கு ஒரு சிறப்பு மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை சமூகத்தை சூழ்ந்து கொண்டுள்ள பிற்போக்குத்தனத்தின் ஆழம் எவ்வளவு என்பதை விளக்கும் நேரடியான உதாரணமாக அவை இருக்கின்றன. இந்த வீண் வதந்திகள், விசேடமாக பாலியல், தனிப்பட்ட தகவல்கள், ஏனைய இனங்களினால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் பல்வேறு வன்முறை நடவடிக்கைகளை உயர்த்திப் பிடித்தல் போன்றவை, பிரச்சாரங்களின்போது அவற்றிற்குள்ள புதுமையான தொடர்பாடற் சாத்தியங்களாகும். அவை பல்வேறு ஊடகங்களின் வாயிலாக வீட்டுக்கு வீடு, வாய்க்கு வாய் சில நொடிகளில் பரப்பப்படுகின்றது. பின்பு அவை உண்மையல்லவென எவ்வளவுதான் உறுதி செய்தாலும் அவை ஒருநாளும் சரியாக மாட்டாது.
அன்றாட வாழ்வின்போது இலங்கை சமூகத்தில நடக்கும் ஏதாவது சிறு மோதல் கூட இனவாத – மதவாத மோதலாக உருவெடுத்து மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஆபத்து நிலவுகின்றது. சமூகம் என்ற வகையில் இப்போது நாம் அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். ஒருவரை அடித்துக் கொல்வது பாரதூரமான செயலாக இருப்பதைப் போன்றே அதைக் கொண்டு இனவாத மோதல்களுக்கு ஆரம்பத்தை எடுப்பது அதனையும் விட படுமோசமான நிலைக்கு இலங்கை சமூகம் தள்ளப்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும்.
இனவாத தீ மூட்டலுக்கு எதிராக அணிதிரள்வோம்!
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
21 Nov 2017
- Hits: 733
கடந்த சில நாட்களாக காலி மாவட்டத்தில் கிங்தொட்டயை அண்டிய பகுதிகளில் நடந்திருக்கும் அமைதியின்மை மற்றும் இனவாத- மதவாத மோதல்கள் அதிகரித்துள்ளமை சம்பந்தமாக சம உரிமை இயக்கம் என்ற வகையில் நாம் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றோம். கிடைக்கும் தகவல்களுக்கமைய சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் வீடுகளும் ஏனைய சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்தோடு, உயிரழப்பொன்றும் நடந்திருக்கின்றது.
நவம்பர் 13ம்திகதி காலி மஹஹபுகல பகுதியில் நடந்த வாகன விபத்துதான் இந்த பரிதாப நிலைக்கு முழுமுதற் காரணமாக இருந்தது. அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஒரு சாரார் சிங்களவர்களாக இருந்ததோடு மற்றவர்கள் முஸ்லிம்களாக இருந்தனனர். வாகன விபத்தினால் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் இரு சாராருக்கும் மத்தியல் மோதல் உருவாகியிருந்த நிலையில்தான் அது இனவாத மோதலாகப் பரவியது. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலை இனவாத மோதலாக பரவச் செய்வதற்கு பிரதேச அரசியல்வாதிகள் பாரதூரமான முறையில் தலையிட்டிருக்கின்றனர். அது எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் அதிகாரப் போட்டி சம்பந்தப்பட்டதாகும். மோதலின்போது நேரடியாக தலையிட்டவர்களில் 1997ல் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்ப்பில் பிரதேச சபைக்கு போட்டியிட்ட மற்றும் எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையேற்கும் இலங்கை பொதுஜன முன்னணியின் சார்ப்பில் போட்டியிட எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு பௌத்த பிக்குவும், பிரதேச சபையில் தலைவராகும் கனவுடன் போராடிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள மற்றும் இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருப்பது இதற்கு சாட்சியாகும். கடந்த 16ம் திகதி இரவு நடந்த தீ வைப்பு சம்பவத்துடன் இந்த ஐதேக அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதோடு, 17ம் திகதி நடந்த வன்முறைகளோடு சம்பந்தப்பட்டவர்களை கோபமூட்டியிருப்பது இலங்கை பொதுஜன முன்னணியில் தேர்தல் வேட்பாளராக எதிர்ப்பார்த்திருக்கும் இருவராகும். எவ்வாறாயினும், இந்த வன்முறையை தூண்டியிருப்பது ஒரே ஊரில் வசிக்கும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களல்ல, வெளியிடங்களிலிருந்து வந்த அரசியல் ஆதரவாளர்கள்தான் என்பதை பொலிஸாரும் ஏற்றுக் கொள்கின்றனர். இச்சம்பவத்தில் அரசாங்கம் மோதலை தவிர்க்கும் திசையில் அல்லாது அதனை தூண்டிவிடும் திசைக்கு திருப்பிவிடுவதற்காக குழப்பநிலை அதிகரித்திருந்த சந்தர்ப்பத்தில் பிரதேச பொலிஸை அகற்றிக் கொண்டது. நல்லிணக்கம் குறித்து அரசாங்கம் வாய்ச்சவாடல் விட்டாலும் பிணைமுறி மோசடி உட்பட தனது நெருக்கடியை மறைத்து சமூக கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்காக எந்தவொரு நாசகார நடவடிக்கையையும் எடுக்க பின்வாங்காது என்பதை இச்சம்பவம் நிரூபித்துள்ளது.