பிறருக்காக உழைத்தலா மனிதசாரம்? (மார்க்சியம் 09)
- Details
- Category: இதழ் 9
-
01 Jul 2015
- Hits: 1297
இன்றைய மனித வாழ்வியலில் உழைப்பு என்பது அனைவருக்கும் முதன்மையானதல்ல, மாறாக ஒரு வர்க்கத்துக்குரிய செயலாக மாறி இருக்கின்றது. ஒரு வர்க்கத்துக்கு உழைப்பு அவசியமானதாக இருக்க, மற்றொரு வர்க்கத்துக்கு அவசியமற்றதாகின்றது. இங்கு உழைப்பவனின் உழைப்பையும், உழைப்பு மூலம் உற்பத்தி செய்த பொருளையும் திருடி வாழ்வதே, உழைக்காதவனின் செயலாக இருக்கின்றது. இதே தனிவுடமை அமைப்பின் மனித அறமாகவும் செயற்படுகின்றது.
மாங்கொட்டையை நட்டு மறியலுக்கு போக வேண்டுமோ..?
- Details
- Category: இதழ் 9
-
05 Jun 2014
- Hits: 1305
"வர்த்தக அமைப்பின் பரிந்துரைகள் என்ற பெயரில் முழு உலகத்தையும் அழிப்பதற்காக இராட்சதன் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறான்"
ஒரு கவிஞன் கூறியதைப் போன்று எமது ஊர், தோட்டம், துரவுகள் மிகவும் செழிப்பானவை. அவற்றில் எதைப் போட்டாலும் துளிர்விட்டு வளரும். சிறுவர்கள் மத்தியில் பிரபலமான ஒரு சிங்களப்பாடல் இருக்கிறது. 'மொனவத முத்தே" (என்ன தாத்தா) என்று. வருங்கால சந்ததியினருக்காக மரம் வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் அந்தப் பாடலின் மூலம் உணர்த்தப்படுகிறது.
நாம் சாப்பிட்ட மாம்பழத்தின் கொட்டையையும் விதைக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் சட்டத்தின் மூலம் மாங்கொட்டை, பலாக்கொட்டை, அந்த விதை, இந்த விதை என்று கூறி எவற்றையாவது விதைகளாக பயன்படுத்துவது சிறை செல்வதற்கான பாதையாக அமையலாம். '2013 விதைகள் மற்றும் நடுகைப் பொருள் சட்டமூலம்" என்ற பெயரிலான புதிய சட்டத்தின் மூலம், தற்போது அமுலிலிருக்கும் '2003ன் 22ம் இலக்க விதைகள் சட்டமூலம் இரத்துச் செய்யப்பட்டு புதிய சட்டம் அமுலுக்கு வரவிருக்கின்றது.
சம உரிமை இயக்கத்தின் செய்தி
- Details
- Category: இதழ் 9
-
21 Feb 2014
- Hits: 1136
தேர்தலுக்காக இனவாதத்தினை முன்னெடுத்தல்
இவ்வருடம் மார்ச் கடைசி வாரத்தில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் கூட்டத் தொடரில், இலங்கையின் நடைபெற்ற யுத்தகால மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவிருக்கும் பிரேரணையை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் கூறுகின்றன. போலியான ஏகாதிபத்திய எதிர்ப்பின் ஊடாக மார்ச் மாதக் கடைசியில் நடைபெறவிருக்கும் மேல் மற்றும் தென் மாகாண சபைகளை வெற்றி கொள்வதே இதன் நோக்கமாக இருக்கிறது.
ஆட்சி மாற்றம் ஒரு தீர்வா?
- Details
- Category: இதழ் 9
-
09 Mar 2014
- Hits: 1255
ஆட்சியாளர்கள் பரந்துபட்ட மக்களிடம் அம்பலப்படும் போது, ஆளும் வர்க்கங்கள் ஆட்சி மாற்றத்தை தீர்வாக முன்வைக்கின்றனர். அதாவது தேர்தல் மூலம் நாட்டை ஆளுகின்ற தனி நபர்களை மாற்றுவதன் மூலம், "ஜனநாயக" மாற்றம் நிகழும் என்கின்றனர். இதுவொரு அரசியல் பித்தலாட்டமல்லவா ? ஆளும் வர்க்கத்துக்கு எதிராக போராடும் மக்கள், அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதே, "ஆட்சி மாற்றம்" மூலம் முன்வைக்கின்ற அரசியலாகும்.
இந்த வகையில் மீண்டும் மக்களை ஏமாற்றுகின்ற திரிபு இன்று மக்கள் முன் வைக்கப்படுகின்றது. மகிந்தாவை தேர்தலில் தோற்கடித்து ஆட்சியை மாற்றுவதன் மூலம், நிலவும் ஜனநாயக விரோத சூழலை மாற்ற முடியும் என்கின்றனர். ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியால், அரசியல் ரீதியாகவே இன்று "ஆட்சி மாற்றமே" ஒரு தீர்வு என்ற கோசம் முன்தள்ளப்படுகின்றது.