Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஊடகங்களுக்கான செய்தி கட்சியின் 40வது ஆண்டு நினைவு உரை -சி.கா.செந்திவேல்

ஊடகங்களுக்கான செய்தி கட்சியின் 40வது ஆண்டு நினைவு உரை 

சி.கா.செந்திவேல் 

பொதுச் செயளாளர்.

நாட்டின் அனைத்து மக்களும் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். அதேவேளை, அதிகார துஸ்பிரயோகங்களும் ஊழல்களும் பெருகிநிற்கின்றன. பழைய திருடர்களைக் காட்டிப் பதவிக்கு வந்தோர் புதிய திருடர்களாக இன்று உருவாகி நிற்கின்றனர். போதைப் பொருட்களின் பரம்பலும் பாவனையும் அதிகரித்து தெற்கே பாதாள உலகக் குழுக்களும் வடக்கே வாள்வெட்டுக் கோஸ்டிகளும் மக்களின் அன்றாட வாழ்வை அச்சுறுத்தியும் சீரழித்தும் வருகின்றன.

இவ்வாறு கடந்த 03.07.2018 அன்று யாழ்ப்பாணம் கொக்குவிலில் இடம்பெற்ற புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் 40 ஆவது ஆண்டையொட்டிய விசேட கலந்துரையாடலில் உரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் அவர்கள் தெரிவித்தார்.

Read more ...

ஊடகங்களுக்கான அறிக்கை - சி.கா.செந்திவேல்

எட்டு மணி நேர வேலை கோரிப் போராடிய அமெரிக்காவின் சிக்காக்கோத் தொழிலாளர்களின் இரத்தத்திலும் உயிர்த் தியாகத்திலும் உதித்ததே உலகத் தொழிலாளர்களின் சர்வதேசப் போராட்டத்தினமான மே தினமாகும். போராட்டத்தில் பிறந்து மீண்டும் உலகத் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் போராட்ட உத்வேகம் அளித்து வரும் மேதினத்திற்கான முதலாம் திகதியினை மறுப்பதற்கோ, மாற்றுவதற்கோ அல்லது தடுப்பதற்கோ முதலாளிய ஆட்சியினருக்கு எவ்வித உரிமையும் கிடையாது. மைத்திரி - ரணில் தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியானது மேதினத்தை முதலாம் திகதிக்குப் பதிலாக மே ஏழாம் திகதியில் நடாத்த வேண்டும் என எடுத்துள்ள முடிவு தொழிலாளர் விரோத முடிவேயாகும். இதனை நாட்டின் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் அவர்களது கட்சிகளும் தொழிற்ச்சங்கங்களும் நிராகரித்து எதிர்ப்பது அவசியமாகும். எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும் ஆட்சியினரது மேற்படி முடிவை மிக வன்மையாக கண்டித்து எதிர்க்கிறது. அதே வேளை மே முதலாம் திகதியே மேதினத்தை நடாத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. 

இவ்வாறு புதிய ஜனநாயக மாச்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் மேதினத் திகதி மாற்றம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கையில் கொலனிய காலத்திலிருந்தே தொழிலாளர் இயக்கங்கள் தோன்றி வளர்ந்து வந்த சூழிலிலே பல்வேறு அடக்கு முறைகளுக்கு மத்தியில் மேதினம் சர்வதேசப் போராட்டத்தினமாக நினைவு கூரப்பட்டு வந்திருக்கிறது. 1956ம் ஆண்டுக்குப் பின்பே மேதினம் பொது விடுமுறைத் தினமாக்கப்பட்டது ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த காலங்களில் பௌத்த தினங்களான வெசாக் தினங்களைச் சாட்டாக வைத்து மேதினங்களைத் தடுப்பதிலும் பொலிஸ் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதிலும் முன்னின்று வந்துள்ளது. அவற்றுக்கு எதிராகத் தொழிலாளர்களும் இடதுசாரிக் கட்சிகளும் போராடி வந்துள்ளன. அதன் வழியிலேயே இன்றைய மைத்திரி-ரணில் தலைமையிலான கூட்டு ஆட்சியானது தொழிலாளர்களின் மேதினத்தை அதற்குரிய நாளில் இருந்து ஏழாம் திகதிக்கு மாற்றியுள்ளது. இத்தகைய தொழிலாளர் விரோத முடிவின் மூலம் மேதினத்தின் முக்கியத்துவத்தை நிராகரித்து முதலாளிய வர்க்க சக்திகளை மனம் குளிர வைத்தும் உள்ளது. எனவே நாட்டின் தொழிலாளர்களும் உழைக்கும்  மக்களும் ஒடுக்கப்படும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நேர்மையான இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் ஐக்கியப்பட்டு எதிர்வரும் மேதினத்தை மே முதலாம் திகதியில் நடாத்துவதற்குத் தயாராக வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்துகிறது.

சி.கா.செந்திவேல்

பொதுச் செயலாளர்

31-03-2018

ஊடக அறிக்கை-புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 27 ஆம் திகதி முதல் தமது வழக்குகளை

மீளவும் வவுனியா நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரி மூன்று தமிழ் அரசியல்

கைதிகள் முன்னெடுத்து வரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முற்றிலும்

நியாயமானதாகும். உயிராபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இம் மூன்று

அரசியல் கைதிகளையும் அரசாங்கமும் ஜனாதியும் பாதுகாக்க வேண்டும். இவ்

அரசியல் கைதிகளின் உயிர்கள் பறிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும்

ஏற்றுக்கொள்ள முடியாது.

 

சட்டபூர்வமாகவும், நியாயத்தின் அடிப்படையிலும், மனித உரிமைகளின்

அடிப்படையிலும் இம் மூன்று தமிழ் அரசியல் கைதிகளினதும் உணவுத்

தவிர்ப்புப் போராட்டக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டியது அவசியம்.

எனவே, இப்பிரச்சனையை ஆளும் வர்க்க பேரினவாத நிலைப்பாட்டில் இருந்து

நோக்காது, சட்டம், நீதி, மனிதாபிமான அடிப்படையில் அணுகித்

தீர்க்கப்படவேண்டும் என்பதை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

வலியுறுத்துகின்றது.

Read more ...

ஊடகங்களுக்கான அறிக்கை -01.03.2016 -புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

நல்லாட்சி என்னும் முகமூடி அணிந்த இன்றைய கூட்டு அரசாங்கத்தின் கீழ் பேரினவாத வெறியாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதையே அம்பாறை நகரின் முஸ்லீம் கடைகள் பள்ளிவாசல் மீதான அண்மைய தாக்குதல்களும் எரிப்புச் சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன. சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு மணி நேரம் கழித்தே பொலிசார் அவ்விடத்திற்கு வந்ததாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் மூலம் மேற்படி தாக்குதல் பேரினவாத நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது முஸ்லீம்கள் மீது இடம் பெற்று வந்த தொடர் தாக்குதல்களில் ஒன்றாகவே அமைந்துள்ளது. எனவே பேரினவாத வக்கிரம் கொண்ட அம்பாறைத் தாக்குதலை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. 

இவ்வாறு கடந்த 26ம் திகதி இரவு அம்பாறை நகரின் முஸ்லீம் கடைகள் பள்ளி வாசல் மீதான தாக்குதல் வாகனங்கள் எரியூட்டப்பட்மை பற்றி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில், கடந்த காலத்தைப் போன்றே இன்றும் பேரினவாதச் செயற்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சட்டபூர்வமாகவும் சட்டங்களை மீறியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாட்டின் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் கடுமையாகன பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். நல்லாட்சி நல்லெண்ணம் சமாதானம் போன்ற திரைகளின் பின்னால் இடம் பெற்றுவரும் பேரினவாத செயற்பாடுகளுக்கு அரசாங்கத்தில் அங்கம் பெற்று வரும் முஸ்லீம், மலையகத் தமிழ் பிரதிநிதிகளோ அல்லது எதிர்க்கட்சி என்ற பெயரில் இருந்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ திடமான தமது எதிர்ப்பைக் காட்டுவதில்லை. வெறும் வாய் உபசாரத்திற்குச் சம்பவங்கள் இடம் பெறும் போது அறிக்கைகள் வெளியிட்டு விட்டு தத்தமது பதவிகளில் ஒட்டி இருந்து சுகபோகம் அனுபவித்து வருகிறார்கள். அடையாள அரசியலை உசுப்பிவிட்டு, பாராளுமன்றம் வரை சென்று தமக்குரிய பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் முஸ்லீம் தலைமைகள் சாதாரண முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் பேரினவாதப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதில்லை. கொடுக்கவும் மாட்டார்கள்.

எனவே, பேரினவாதத்தை எதிர்கொண்டு வரும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் குறுகிய நிலைப்பாடுகளுக்கு அப்பாலான சிங்கள உழைக்கும் மக்களோடு இணைந்து வெகுஜனத் தளங்களில் முன் செல்வதையிட்டுச் சிந்திப்பதே பேரினவாதத்தை முறியடிப்பதற்குரிய வழிமுறையாகும். ஆளும் வர்க்க சக்திகள் ஒரு போதும் பேரினவாதத்தைக் கைவிட மாட்டார்கள். அதே போன்று தத்தமது இனங்கள் மத்தியில் இருந்து வரும் அடையாள அரசியல் சக்திகள் மக்களைக் குறுகிய நிலைகளுக்குள் வைத்துத் தமது ஆதிக்க அரசியலை முன்னெடுப்பதையே நோக்காகவும் போக்காகவும் கொண்டுள்ளனர். இதனை அனைத்துத் தரப்புகளின் உழைக்கும் மக்களும் புரிந்து கொள்வது அவசியமாகும். 

சி. கா. செந்திவேல்

பொதுச் செயலாளர். 

புதிய ஜனநாயக மார்க்சிய லெனிசக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.கே செந்திவேலுடன் ஒரு நேர்காணல்.

யாழ்ப்பாணத்தில் சாதி உறவுகள் மற்றும் மோதல்கள் வெவ்வேறு காலங்களில் வேறுபட்ட வடிவங்களை எடுத்துள்ளன. ஒடுக்கப்பட்;ட சாதியினரின் குடியிருப்புகளுக்கு அருகே உயர் சாதியினரின் மயானங்கள் அமைக்கப்படுவதன் காரணமாக ஏற்பட்ட மோதலின் விளைவாக மே, 13ல் யாழ்ப்பாண பஸ்நிலையத்துக்கு முன்பாக ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. புத்தூரில் உள்ள கலைமதி கிராமம் வரலாற்று ரீதியாகவே யாழ்ப்பாணத்தில் ஒரு கம்யுனிஸ்ட் கோட்டையாக திகழ்ந்து வருகிறது, அவர்களின் கிராமத்தின் மத்தியில் உள்ள ஒரு மயானத்தின் காரணமாக ஒரு தீவிரமான போராட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 23 கிராமவாசிகள் கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார்கள் மற்றும் 11 பெண்கள் உட்பட 30 பேர் பிணையில் வெளியே வந்துள்ளார்கள். மக்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள அனைத்து மயானங்களையும் அகற்றக் கோரி இப்போது கலைமதி கிராமத்தில் ஒரு சத்தியாக்கிரகப் போராட்டம் பல வாரங்களாக நடைபெற்று வருகிறது. வேறு ஒடுக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த  சாதியினரும் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறார்கள், வேறு பலரும் தங்கள் ஒற்றுமையைக் காட்டுவதற்காக இங்கு வருகை தருகிறார்கள். இந்த சமீபத்தைய மோதல் பற்றி, புதிய ஜனநாயக மார்க்சிய லெனிசக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.கே செந்திவேல் தனது கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார், யாழ்ப்பாணத்தில் சாதி விரோத போராட்ட வரலாறு தொடர்பாக  அவர்களது வேலை கலைமதி கிராமத்தில் கடந்த நான்கு தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது.

கேள்வி: புத்தூருடன் உங்களுக்கு ஒரு நீண்ட தொடர்பு உள்ளது மற்றும் குறிப்பாக கலைமதி கிராமம் இன்று போராட்டத்தின் மையமாக உள்ளது. இந்த மோதல் பற்றி விளக்க முடியுமா?

பதில்: 700 குடும்பங்களைச் சேர்ந்த 4,500 பேரைச் சனத்தொகையாகக் கொண்ட கலைமதி கிராம மக்கள், சமூக நீதி வெகுஜன அமைப்பின் ஆதரவுடன் ஒரு சத்தியாக்கிரக போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை மக்கள் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள மயானங்கள் யாவும் அகற்றப்பட வேண்டும் என்பதாகும், புத்தூர் கலைமதி கிராமத்தின் பெரும் பகுதி மக்கள்  இதில் இரவு பகலாக பங்கேற்பதுடன் ஒரு சக்திவாய்ந்த மனச்சாட்சிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.இந்த மக்கள் கூட்டாக ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். அவர்கள் தங்கள் தினக்கூலி வேலைகளைத் தொடர்ந்து செய்து வரும் அதேவேளை வெவ்வேறு ஆட்கள் அந்த நாட்களில் வேலைகளில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு இந்தப் போராட்டத்தை ஒழுங்கு செய்வதில் தங்கள் சக்தியை பங்களிப்புச் செய்து வருகிறார்கள்.

Read more ...

Subcategories