யாரிடம் இப்போ கால்களில் விழுகிறோம்?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சிறி
- Created: 16 November 2013
- Hits: 6958
அழுவதும் விழுவதும்
அழித்தவர் காலடி மீளத் தொழுவதும்
வேண்டாம் நம் உறவுகாள்
போருக்கு கொடுந்துணை
வியூகம் வகுத்தளி(ழி)த்தவர் தானிங்கு
முகம்போர்த்தி இனியவராமென
வருகிறார் சொரிகிறார் கண்ணீர்.
"கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல் எறிய வேண்டாம்": மகிந்து கமருனுக்கு அறிவுரை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 16 November 2013
- Hits: 2199
"1972 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இராணுவம் வடக்கு அயர்லாந்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களில், 13 பொதுமக்களை சுட்டுக் கொலை செய்தனர். (Bloody Sunday) இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து ராணுவத்தில் தான் குற்றம் என அறிக்கை வெளியிட 40 வருடங்கள் எடுத்தது."
"கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருந்தனர். நாம் அதை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம். 30 ஆண்டுகளுக்கு ஒரு விசாரணை வேண்டும். இதனை விசாரணை செய்ய எங்களிற்கு நிரம்ப காலமாகும்" என இற்றைய பொதுநலவாய அமைப்புக் கூட்டத்தில் பிரித்தானிய பிரதமர் கமருனுக்கு பதிலளிக்குமுககமாக மகிந்த ராஜபக்ஸ பேசியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு நீதி கேட்க வந்த கமருன்?.....
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 16 November 2013
- Hits: 6822
பிரிட்டிஸ் பிரதமரின் இலங்கை விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில் மகிந்த அரசு மண்டியிட்டுத்தான் போயுள்ளது. கமருன் பொதுநலவாய மாநாட்டிற்கு வந்தாரா? அல்லது தமிழ்மக்களுக்கு நீதி கேட்டு வந்தாரா? எனும் கேள்வி தேசிய-சர்வதேசத்தின்பால் பெரும் ஈர்ப்பாகியுள்ளது.
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள பொதுநலவாயத்தின் ஏகப்பெரும்பான்மையான பன்னாட்டு பிரதிநிதிகள் வந்து சேர்ந்துள்ளார்கள். ஆனால் பிரிட்டிஸ் பிரதமர் தனது காலனிய நாடு ஒன்றுக்குள் வந்து தன் கருமங்களை ஆற்றியது போல் நடந்துகொள்ளவும், இலங்கை அரசும், அதன் அரச இயந்திரமும் கைகட்டி, வாய் பொத்தி, நின்று கொண்டு… ஆம் நான் உங்களின் நவதாராள அடிமைதான் என்பதை, தன் அடிமைத்தன செல்நெறி அரசியலால் நிரூபித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் எப்படி அரங்கேறியதோ அப்படி கமென்வெல்த் மாநாட்டை நடத்த முனைகின்றனர்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 16 November 2013
- Hits: 3178
முள்ளிவாய்க்காலில் வெளியுலகில் இருந்து மூடிமறைத்து எப்படி படுகொலை செய்தனரோ, அதே பாணியில் காமென்வெல்த் மாநாட்டை மூடிமறைத்து தங்கள் பாசிசக் கூத்துக்களைக் காட்ட முனைகின்றனர். பிரிட்டிஸ் காலனிய விசுவாசிகளின் வாரிசுகளல்லவா இவர்கள் அனைவரும். யாரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல்ல. உலகமயமாதலில் தமக்குள் இடம்மாறி நிற்கின்றவர்கள் நடத்துகின்ற சதுரங்க ஆட்டத்தில், மனிதவுரிமைகள் சூதாட்டப் பொருளாகியுள்ளது.
இலங்கையின், ஒருவார கால ஜனநாயகம்….
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 13 November 2013
- Hits: 6677
ஒர் நடிகர் ஒருநாள் முதல்வராக நடித்த படம் ஒன்றும் வெளிவந்தது. அதைப்பற்றி கிண்டலாக விமர்சனம் எழுதிய சஞ்சிகை ஒன்று, தமிழ்நாட்டிற்கு இபபடியொரு முதல்வர் கிடைத்தால் தமிழகமே உருப்பட்டுவிடும், மக்கள் மட்டில்லா மகிழ்வில் வாழ்வர்..என!…. அதேபோன்றுதான் கொமன்வெல்த் புரடக்சனின் "ஒருவாரகால ஜனநாயகம்" எனும் படம் இப்போ இலங்கையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. கதாநாயகன் யாரென்னு சொல்லாமலே மக்கள் யாவருக்கும் புரியும்.
புல்லுருவி விதைகள் சில தம் ஆணவக்குறி நீட்டி
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
- Created: 12 November 2013
- Hits: 1580
உயிர்ப் பலிகளினால்
இயற்கையை அழித் தொழிக்க
அறிவிலி அரசியலில்
கங்கணம் கட்டி நிற்கும்
பாரதத் தமிழ் நாட்டின்
கூடங்குள அணுமின்னிலை முன்
அல்லும் பகலுமாய்
ஆயிரம் மக்கள் கூடி
இலங்கை வரையான
பல்லாயிரம் மக்களின்
எதிர்கால இயல் வாழ்வை
மீட்கப் போராடும் நிலையில்...
CHOGM : எதிர்க்காமல் இருந்தால் மக்கள் மீது இதுபோன்ற சுமைகள் தொடர்ந்தும் ஏற்றப்படும்.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 12 November 2013
- Hits: 2164
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களது ஆட்சியும் எதிர்வரும் 15ம் 16ம் 17ம் திகதிகளில் கொழும்பில் நடாத்தும் பொதுநலவாய நாடுகளது அமைப்பின் மாநாட்டின் மூலம் நாட்டு மக்கள் எவருக்கும் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை.
குறிப்பாக வாழ்க்கைச் செலவின் உயர்வால் வாட்டி வதைக்கப்பட்டு வரும் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதுவித பயன்களும் கிடைக்கப் போவதில்லை. அதே போன்று பேரினவாத ராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் தமிழ் மக்களுக்கோ ஏனைய தேசிய இனங்களுக்கோ இது எவ்வித நன்மைகளையும் கொண்டு வந்து விடமாட்டாது. மக்களின் வரிப்பணத்திலிருந்து பலநூறு கோடி ரூபாய்கள் செலவு செய்யப்பட்டு ஆடம்பரமாக நடத்தப்படும் இம் மாநாடு மகிந்த சகோதரர்களது ஆட்சி அதிகார நிலைப்பிற்கும் நீடிப்புக்கும் மட்டுமே பயன் தர உள்ளதாக இருக்குமே தவிர நாட்டு மக்களுக்கானதாக அமைய மாட்டாது. எனவே அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் இம்மாநாடு பற்றி அக்கறைப்படுவதோ ஆதரவு தெரிவிப்பதோ அர்த்தமற்ற ஒன்றாகும்.
ஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதே முன்னுள்ள ஒரே வழி.
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 10 November 2013
- Hits: 3044
தமிழ்மக்கள் மீதான சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் ஊடகவியலாளர்களாலும், மனித உரிமைச்செயற்பாட்டார்களாலும் தொடர்ந்து வெளிக்கொணரப்படுகின்றன. இலங்கை அரசின் போர்க்குற்றங்களை சர்வதேசமன்றத்தில் வைத்து விசாரிக்க வேண்டிய கடைமைப்பாடு கொண்டது என்று சொல்லிக் கொள்ளும் அய்க்கிய நாடுகள் சபை வன்னியில் போர்க்குற்றங்களை முன்னின்று நடத்திய சவேந்திர சில்வாவை இலங்கையின் பிரதிநிதியாக அங்கிகரித்துள்ளது. இனப்படுகொலையின் பின் வன்னி சென்று வந்த பான் கி மூன் இலங்கை அரசின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என்று நற்சான்றிதழ் கொடுக்கிறார்.
வங்கக் கடலோடிகளின் கண்ணீர்: வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
- Created: 09 November 2013
- Hits: 1363
கடந்தமாத போராட்டத்தில், பிரசுரிக்கப்பட்ட இக்கட்டுரைத் தொடரின் முதற் பாகத்தின் இறுதியில் '1983 இல் வடபகுதியின் அதி உச்ச மீன்பிடி காரணமாக, நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத்தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்த சாதனையை செய்தனர் என்று குறிப்பிட்டிருந்தேன். வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட ஆழ்கடல் மீன் பிடிப்படகுகள் (one day boats -3 ½ Tonners) 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2600 ஆகவும், மரவள்ளங்கள் 3865 ஆகவும் இருந்தது. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப்படகுகளாலும், கரையோரத் தொழிலாளர் பயன்படுத்தும் மரவள்ளங்களாலேயே பிடிக்கப்பட்டது.
வலி வடக்கு : வெகுஜனப் போராட்டங்களைத் தவிர வேறு மார்க்கமில்லை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 09 November 2013
- Hits: 2086
வலி வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவப் பிடிக்குள் இருந்து வரும் மக்களின் வீடுகள் இடித்து அழிக்கப்படுவது இராணுவத்தின் நிரந்தர இருப்பையும் விஸ்தரிப்பையும் நோக்காகக் கொண்டதாகும்.
1990ல் வலிவடக்கில் இருந்து துரத்தப்பட்ட மக்களில் இன்னும் தமது சொந்த நிலங்களுக்கு மீளக்குடியமர செல்லவிடாது தடுக்கப்பட்டுள்ள சுமார் 3இலட்சம் மக்கள் அவல வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது வீடுகளில் ஒருபகுதியே தற்போது இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை மறுத்து இவ்வீடுகள் அழிக்கப்பட்டு வருவதை எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.