சம உரிமை இயக்கத்தின், சர்வதேச மனித உரிமைகள் தின லண்டன் கூட்ட செய்தி
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 16 December 2013
- Hits: 1147
நேற்றைய தினம் (15/12/2013) சம உரிமை இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மனித உரிமை தின கூட்டம் லண்டன் கரோ பகுதியில் இடம் பெற்றது. சீரற்ற காலநிலை நிலைவிய போதும், அறுபதிற்கும் அதிகமானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை காலமும் இலங்கையில் இடம்பெற்ற சகல அடக்கு முறைகளிற்கும் எதிராக போராடி மரணித்த போராளிகளிற்கும் பொது மக்களிற்கும் இரு நிமிட மௌன அஞ்கலியுடன் கூட்டம் ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து சமஉரிமை இயக்கத்தின் சார்பில் தோiர்கள் சீலனும் நுவானும் முறையே தமிழிலும் சிங்களத்திலும் உரையாற்றினர்.
டென்மார்க் சம உரிமை கூட்ட செய்தி
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 15 December 2013
- Hits: 947
டென்மார்க்கில் கொல்ஸ்ரோபுறோ நகரில் 14.12.2013, சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு இலங்கை அரசிற்கு எதிரான கண்டனக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இந்த கண்டன எதிர்ப்புக் கூட்டத்தில் தமிழ், சிங்கள தோழர்கள் கலந்து கொண்டார்கள். இலங்கையில் இருந்து சம உரிமை இயக்கத்தின் பரப்புரையாளர் ரவீந்திரமுதலிகே, சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் ஜீட் சில்வா புள்ளே ஸ்கைப் இல் சிங்கள மொழியில் உரையாற்ற தோழர் பாரூக் தமிழில் மொழி பெயர்த்து வழங்கி கொண்டிருந்தார். சம உரிமை இயக்கத்தின் நோக்கம் அதன் செயற்பாட்டுத் திட்டம் பற்றிய விரிவான விளக்கம் இந்த உரையின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பங்கு பற்றிய சிலரது கேள்விகளுக்கு தமிழ், சிங்கள மொழியில் பதிலளிக்கப்பட்டது.
சிவனுடன் தீட்சிதர்கள் சிதம்பரம் வந்தார்களாம். தீட்சிதர்கள் சிதம்பரத்தில், சிவன் எவ்விடத்தில்!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 13 December 2013
- Hits: 3426
சிவன் மூவாயிரம் தீட்சிதர்களைக் கூட்டிக் கொண்டு சிதம்பரம் வந்தானாம். தீட்சிதர்கள் கோயில் நகைகளைக் களவெடுத்துக் கொண்டு, கோவிலிற்கு வரும் பெண்களின் கைகளை பிடித்து சேட்டை விட்டுக் கொண்டு, ஒருத்தன் மேல் ஒருத்தன் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுக் கொண்டு சிதம்பரத்தில் பக்திப்பரவசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிவனுடன் வந்தவர்கள் என்பதால் சிதம்பரம் கோயில் தங்களது சொத்து என்று அடம் பிடிக்கிறார்கள். இவர்கள் இங்கே என்றால் அந்த சிவன் எங்கே?. பிள்ளை கொடுத்து பிரிந்த காதலன் போல் எங்கே போய் விட்டான்.
மாற்றத்தின் முன்மொழிவு...
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 12 December 2013
- Hits: 3407
ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிலிருந்து வேறுபட்டவர்கள். அவ்வேறுபாடுகள் அப்படியே இருக்க எல்லோருக்கும் தெரிந்த பொது வார்த்தையொன்று இருக்கிறது. அதுதான் எல்லோரும் மனிதர்கள் என்பது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கேயான நிலைத்தலொன்று இருக்கிறது. அதற்கு வாழ்க்கை என்று சொல்கிறோம். அந்த வாழ்க்கையில் மனிதர்கள் பலவற்றை செய்கின்றனர். சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள், இனப்பெருக்கம் செய்கிறார்கள். மாத்திரமல்ல, அதற்காக அநேக வேலைகளை செய்கிறார்கள். எந்தவொரு மனிதனிடமும் தான் யாரென்று கேட்டால், தான் செய்யும் வேலையை பொறுத்தே அவர் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்.
புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் இன்றைய போராட்டம்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 10 December 2013
- Hits: 6612
லலித், குகனை விடுதலை செய்!
கடத்தல்களை நிறுத்து!
புதிய ஜனநாயக மா.லெ.கட்சி, நவ சமசமாசக் கட்சி உட்பட ஏனைய பல்வேறு அமைப்புகள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!
இத்தாலியில் சம உரிமை இயக்கம், மனித உரிமைகளை வலியுறுத்தி போராட்டம்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 10 December 2013
- Hits: 999
மனித உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைந்து போராடுவோம்! என்ற தொனிப்பொருளில், இந்தாலிய சம உரிமை இயக்கம் நடாத்திய - கடத்தல்கள் உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டம் நேற்றைய தினம் இடம் பெற்றது. இதில் பல வெளிநாட்டினர் கலந்து கொண்டு இலங்கை அரசால் மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை மீறல்ளுக்கு எதிராகவும் குகன், லலித்தை விடுதலை செய்யக்கோரியும் தமது கையெழுத்துக்களை பதிந்து சென்றனர்.
மனித உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைந்து போராடுவோம்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 09 December 2013
- Hits: 1007
சுதந்திரம் அடைந்த காலம் முதல் இலங்கையை ஆண்டு வருகின்ற அரசியல் கட்சிகள் அவற்றின் தலைவர்கள் தமது அரசியல் இருப்புக்காக அடிப்படை மனித உரிமைகளான பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திரங்களைச் சாதாரண மக்களிற்கு மறுத்து வந்துள்ளனர். மேலும் மக்களை இனம், மதம், மொழி வாரியாக பிரித்து வைத்து இனக்கலவரங்களைத் தூண்டியும், மனித உரிமைகளை மறுக்கின்ற சட்டங்களை இயற்றியும் மக்கள் ஒன்றிணைந்து தமக்கு எதிராக அணிதிரளா வண்ணம் திட்டமிட்டு இவர்கள் செயற்பட்டு வந்தனர் வருகின்றனர்.
இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். குறிப்பாக மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டமை, சிங்களச் சட்டமூலம் மற்றும் தமிழ்-முஸ்லீம் மக்களின் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட பல இனக்கலவரங்கள், தொழிலாளர் போராட்டங்கள் மீதான அரச படைகளின் திட்டமிட்ட தாக்குதல்கள் என பலவற்றினைக் கூறலாம்.
லலித், குகனை விடுதலைசெய்! துண்டுப்பிரசுரம் விநியோகம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 09 December 2013
- Hits: 2109
லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக நாட்டு மக்களை தெளிவுடுத்தும் துண்டுப்பிரசுர விநியோகம் இன்று(09) காலை 07.00 மணி முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டு நாடு பூராகவும் முன்னிலை சோசலிச கட்சியினால் விநியோகிக்கப்படுகின்றது.
தெவனகல மலைப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களை வெளியேறுமாறு பணிப்பு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 08 December 2013
- Hits: 2090
மாவனல்ல தெவனகல மலைக்குன்றுக்கு அண்மையிலுள்ள ஹெமிமாதகம பகுதியில் வசிக்கும் சுமார் 100 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் அறிவித்துள்ளது தொடர்பாக முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்து விளக்கமளித்து வருவதாக கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் வீரகேசரிக்குத் தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினமன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 08 December 2013
- Hits: 2154
அரச படைகளால் கடத்தப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி சர்வதேச மனித உரிமைகள் தினமன்று கொழும்பில் இடதுசாரி அமைப்புக்களின் ஆர்ப்பாட்டமும், கலந்துரையாடலும் நடைபெறவுள்ளன.