ஏகாதிபத்தியத்தின் கோமணமொன்று ஏகாதிபத்தியத்தை எதிர்க்குதாம்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 13 March 2014
- Hits: 6819
"ஏகாதிபத்தியவாதிகளுக்கோ அவர்களின் அடிவருடிகளுக்கோ நாம் அடிபணியமாட்டோம்! ஏகாதிபத்தியவாதிகளின் முன்பாக கடின முயற்சியின் மூலம் பெறப்பட்ட அமைதியையும். சுதந்திரத்தையும் காட்டிக் கொடுத்த அவர்களின் அடிவருடிகள் முன்பாகவோ நாம் தலைவணங்க மாட்டோம்
"ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நாம் ஜெனிவாவுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. நாம் மனித உரிமைகளை மீறியதாக அவர்கள் கூறுகிறார்கள். மக்களை உயிர் வாழ அனுமதித்ததை விட பெரிய மனித உரிமை என்ன இருக்கிறது! வாழும் உரிமை தான் முக்கியமான மனித உரிமை. மக்கள் தான் சரியானது எது? தவறானது எது? என்பதை தீர்மானிக்க முடியுமே தவிர ஐ.நா மனித உரிமை ஆணையம் அல்ல. முடிவெடுக்கும் அதிகாரம் உங்களின் கைகளில் தான் உள்ளது. நீங்கள் தவறு என்று கூறினால் அதற்கு நாம் தலைவணங்கத் தயார். ஆனால் ஏகாதிபத்தியவாதிகளிடமோ அவர்களின் அடிவருடிகளிடமோ தலைவணங்க மாட்டோம் என்பதை தெளிவாக கூறுகிறோம்".
ஆட்சி மாற்றம் ஒரு தீர்வா?
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 9
- Created: 09 March 2014
- Hits: 1280
ஆட்சியாளர்கள் பரந்துபட்ட மக்களிடம் அம்பலப்படும் போது, ஆளும் வர்க்கங்கள் ஆட்சி மாற்றத்தை தீர்வாக முன்வைக்கின்றனர். அதாவது தேர்தல் மூலம் நாட்டை ஆளுகின்ற தனி நபர்களை மாற்றுவதன் மூலம், "ஜனநாயக" மாற்றம் நிகழும் என்கின்றனர். இதுவொரு அரசியல் பித்தலாட்டமல்லவா ? ஆளும் வர்க்கத்துக்கு எதிராக போராடும் மக்கள், அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதே, "ஆட்சி மாற்றம்" மூலம் முன்வைக்கின்ற அரசியலாகும்.
இந்த வகையில் மீண்டும் மக்களை ஏமாற்றுகின்ற திரிபு இன்று மக்கள் முன் வைக்கப்படுகின்றது. மகிந்தாவை தேர்தலில் தோற்கடித்து ஆட்சியை மாற்றுவதன் மூலம், நிலவும் ஜனநாயக விரோத சூழலை மாற்ற முடியும் என்கின்றனர். ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியால், அரசியல் ரீதியாகவே இன்று "ஆட்சி மாற்றமே" ஒரு தீர்வு என்ற கோசம் முன்தள்ளப்படுகின்றது.
நம்வாழ்வை அனைவரும் சேர்ந்து மாற்றுவோம்! - மக்கள் தொழிலாளர் சங்கம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 March 2014
- Hits: 2254
மலையக தோட்ட தொழிலாளர்களின் தொழிற் சங்கமான மக்கள் தொழிலாளர் சங்கம் மலையக மக்களின் பிரச்சனைகள், உரிமைகள் குறித்த துண்டுப்பிரசுரம் ஒன்றினை அண்மையில் வெளியிட்டிருந்தது. அதனை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
ஈ.பி.டி.பியிடம் ஆயுதங்களே இல்லையாம்! டக்ளஸ் சத்தியம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 March 2014
- Hits: 2045
ஈ.பி.டி.பி.யின் தீவக அமைப்பாளரான கமலேந்திரனிடம் இருந்தது அவரது தனிப்பட்ட துப்பாக்கி. அதற்கும் கட்சிக்கும் எந்தவித தொடர்புமில்லை. அவரது உதவியாளரிடம் இருந்ததும் அவரது தனிப்பட்ட துப்பாக்கி. இப்போது துப்பாக்கிகளை பெற்றுக்கொள்வது இலங்கையினில் சாதாரண விடயம்.ஆவா குழுவிடம் கூட கைக்குண்டுகள் இருந்திருக்கின்றன. கொழும்பினில் துமிந்த சில்வாவிற்கும் பிரேமச்சந்திராவிற்குமிடையே துப்பாக்கி சூடு நடந்த வேளை ஒருவருமே ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் ஆயுதங்கள் உள்ளதாகவோ ஆயுத கலாச்சாரம் இருப்பதாகவோ பேசவில்லை. ஆனால் ஈபிடிபியின் ஒரு சிலநபர்களிடம் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதும் எமது கட்சிக்கு சேறடிக்கிறார்கள் எனத்தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. யாழ்.ஊடக அமையத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஓநாய் தனக்காக அழுகிறதா? அல்லது ஆடு நனைவதற்கு அழுகிறதா?
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 March 2014
- Hits: 2376
ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் ஜக்கிய அமெரிக்கா கொண்டுவர இருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் நகல் அறிக்கையை வெளியிட்டதன் மூலம் தனது ஏகாதிபத்தியத்திய உள்நோக்க சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளது. இதனைப் புரிந்து கொள்ளாது அமெரிக்கா மேற்குலக விசுவாசிகளான தமிழர் தரப்புக் கட்சித் தலைமைகள் ஜெனிவாத் தீர்மானம் மூலம் தமிழ் மக்களுக்கு ஏதோ வரப்பிரசாதம் வரப்போவதாகப் பொய்த்தனமான பிரச்சாரங்களைச் செய்து வந்தன. இப்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கவலையும் ஒப்பாரிகளும் வைக்கிறார்கள். இது அவர்களது தூர நோக்கற்ற குறுகிய அரசியலினதும் ஏகாதிபத்தியத்தைப் புரிந்து கொள்ளாத வெள்ளைத் தோல் விசுவாசத்தினதும் வெளிப்பாடேயாகும். ஓநாய் தனக்காக அழுகிறதா அல்லது ஆடு நனைவதற்கு அழுகிறதா என்பதை விளங்கிக் கொள்ளாத தமிழர் தரப்புத் தலைமைகளின் அந்நிய விசுவாச அரசியல் வெளிப்பாட்டையே இன்று காண முடிகிறது.
அறிவுக்கு வேலை கொடுப்போம்!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 6
- Created: 11 March 2014
- Hits: 1132
இன்று சமயங்களுக்கிடையில் மோதல்களும், விவாதங்களும், நடந்து கொண்டிருக்கின்றன. இந்த சமயங்களை உலகிற்கு தந்தவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் இவற்றை ஒருபோதும் அனுமதித்திருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களைப் பின்பற்றும் மனிதர்கள் தமது மதத்திற்காக சண்டை பிடிக்கின்றார்கள், மோதிக் கொள்கிறார்கள், கொலை செய்து கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும் ஒரு மனிதன் எந்த சமயத்தையும் சாராதிருப்பது எவ்வளவு நல்லது என்று நினைப்பது தவறாக இருக்காது.
சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளின் போது... Photos
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 March 2014
- Hits: 2056
2014 சர்வதேச மகளிர் தினத்தில் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினால் சரிபார்க்கப்டாத நிறம் என்னும் தலைப்பில் புகைப்பட கண்காட்சி (unseen colour) கட்டுநாயக சுதந்திர வர்த்தக வலய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
இவ்வார நிகழ்வுகளின் சாரம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 09 March 2014
- Hits: 2023
சர்வதேச விசாரணை குறித்து என்னை பேசவிடவில்லை: அனந்தி எழிலன்
ஜெனீவா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோரிக்கைகள் தொடர்பாக எதுவும் முன்வைக்காத நிலையில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான என்னையும் பேசுவதற்கு அனுமதியளிக்கவில்லை என்று அனந்தி கூறியுள்ளார்.
கூட்டமைப்பு இதற்கொரு ஆணைக்குழு வைத்து ஜெனீவாவில் விசாரணையை ஆரம்பித்திருக்கலாமே? மெத்தப் படித்தவர்கள் பேசுமிடங்களில் இவவுக்கு என்ன வேலையென சம்பந்தன், சுமந்திரனின் கணிப்பு. இல்லை புலிகளின் உறவுகளும் பேசலாமென்பது ஸ்ரீதரன் எம்.பி. போன்றவர்களின் நிலைப்பாடு. இதனால் வந்த வினையாற்றல்தான் வடமாகாணசபைத் தீர்மானம். இதில் அனந்திக்கு கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை.
மக்களின் வாழ்வை மக்களே தேடுவோம்..!
இராக்களில் இருளடித்து மீண்டாலும்
ஊர்களில் நோய்நொடிகள் தீண்டாமல்
தெருமுனையில் காவல் நிற்கும்
சண்டிச் சாமி சிலைகளைப் போல்..,
கரைகளில் அலையடித்து மீண்டாலும்
திடுமென சீற்றங்கள் தீண்டாமல்
தடுமென காவல் நிற்கும்
ஈஸ்ட்டர்தீவு ரப்பாநூயி சிலைகளைப் போல்..,
உலக மகளிர் உரிமைகளுக்கான போராட்ட தின அறைகூவல்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 08 March 2014
- Hits: 2146
ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து உழைக்கும் வர்க்கப் பெண்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்க்காக உலக மகளிர் உரிமைகளுக்கான போராட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்க்காக உழைக்கும் வர்க்க பெண்கள் நீண்ட காலமாக போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
18ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும் சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது.