மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து செல்வதே தியாகிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 06 April 2014
- Hits: 2274
"71ஏப்பிரல் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் வீரப்பிரதாபங்களை ஞாபகப்படுத்துவது மட்டுமே இந்த நினைவு கூரும் நிகழ்வுகளின் மையமான விடயமாக இருக்கக் கூடாது. கிளர்ச்சி வீரர்களின் வீரபிதாபங்கள் பேசப்படல் வேண்டும். அத்துடன் ஏன் இந்த வீரர்களின் போராட்டம் தோற்றுப்போனது? அதற்க்கான காரணங்கள் என்ன? இனி எவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்து செல்வது? பற்றி சிந்திப்பதும், பேசுவதும் தான் இந்த நிகழ்வுகளின் வெற்றியாக இருக்க முடியும்.
ஏப்பிரல் வீரர்களின் 43வது ஞாபகார்த்த லண்டன் கூட்ட செய்தி: படங்கள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 05 April 2014
- Hits: 2411
லண்டனில் 05/04/2014, 43வது ஏப்பிரல் வீரர்கள் தினம் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரித்தானிய கிளையினரால் அனுஸ்டிக்கப்பட்டது. இங்கு 71 ஏப்பிரல் கிளர்ச்சி பற்றிய தெரிந்தெடுக்கப்பட்ட கவிதைகள் வாசிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கலந்து கொண்டவர்கள் 71 கிளர்ச்சியின் போது தாம் சிறுவர்களாக இருந்ததாகவும், அப்போது கிளர்ச்சி குறித்து தாம் கேட்ட கதைகளை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
பேச்சு, கருத்து, எழுத்து சுதந்திரங்களிற்கு விடுக்கும் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 05 April 2014
- Hits: 2158
புதிய திசைகள் அமைப்பினது குரல் இணைய செய்திகளின் படி, இனியொரு இணையத்தளம் மீது அதில் பிரசுரமாகிய கட்டுரை ஒன்றின் காரணமாக சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். மக்கள், அரசியலாளர் மற்றும் ஊடகங்கள் மீது அடிப்படை ஜனநாயக சுந்திரங்களான பேச்சு, கருத்து, எழுத்து சுதந்திரங்களிற்கு எதிராக நடாத்தப்படுகின்ற எத்தகைய வன்முறைகளையும் நாம் அனுமதிக்க முடியாது.
புலம்பெயர் 16 அமைப்புகளுக்கும், 424 பேருக்கும் இலங்கை அரசாங்கம் தடை!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 04 April 2014
- Hits: 2182
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைப்போர் சரியான திசை நோக்கின் தடைகள் தானாகத் தகரும்!!
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் பதினைந்து மேலதிக இயக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், இந்த அமைப்புக்களுடன் தொடர்வுள்ளவர்கள் என நம்பப்படுகின்ற 424 பேருக்கு இலங்கைக்கு வருவதற்க்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையிலிருந்து இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக காணப்படுவார்கள்.
அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலின் பின்னர் ஐக்கிய நாடுகள் பாதுக்காப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 1373இன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இந்த அமைப்புக்களை வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் எனத் தடைசெய்கின்றது.
ஐ.நாவில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட 1373 தீர்மானத்தின் அடிப்படையில் பயங்கரவாதத்தை அழிப்பதற்காக ஒரு நாடு மற்றதற்கு உதவி புரிய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.!
சமவுரிமைக்காக போராடுவது, இனவொடுக்கு முறைக்கு உதவுவதா!?
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 01 April 2014
- Hits: 2160
ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு சமவுரிமையை வழங்கக் கோரி ஒடுக்கும் இனங்கள் போராடுவதும், சமவுரிமையை வழங்கக் கோரும் இந்தப் போராட்டத்துடன் ஒடுக்கப்பட்ட இனங்கள் ஒன்றுபட்டு, சமவுரிமையை பெற்றுக் கொள்வதற்காக போராடுவதுமே சமவுரிமையின் அரசியல் சாரம்.
எந்த இனத்துக்கும் தனிச் சலுகை கிடையாது. ஒரு இனம் அனுபவிக்கக் கூடிய உரிமைகைள் அனைத்தும், எல்லா இனத்துக்கும் உண்டு என்பதே சமவுரிமையின் கொள்கை விளக்கம். தேசங்கள் கொண்டு இருக்கக் கூடிய தன்னாட்சியும் கூட, சமவுரிமையின் அடிப்படையிலானதே ஒழிய ஒரு இனத்திற்கான விசேட சலுகையின்பாலனதல்ல.
முதலாளித்துவ தேசியவாதிகள் தங்கள் வர்க்க நலன் சார்ந்து, சமவுரிமையை ஒரு நாளும் அங்கீகரிப்பதில்லை. ஜனநாயகப் பிரச்சனையான தேசியத்தை கையில் எடுக்கும் இரண்டு வர்க்கங்களுக்கு இடையில் உள்ள அரசியல் வேறுபாடு, சமவுரிமைக்காக போராடுவதா இல்லையா என்பது தான். அதாவது முரணற்ற ஜனநாயகத்துக்காக போராடுவதா இல்லையா என்பது தான்.
இவ்வார நிகழ்வுகளின் சாரம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 30 March 2014
- Hits: 2134
தேர்தல் வெற்றிகள் தரும் பாடங்கள் என்ன?
அரசிற்கொதிரான சக்திகள் எல்லாம் தங்களவில் தாங்கள் பலமாக இருக்கின்றோம் எனும் தற்திருப்தி மாயையைக் களைந்து, மக்கள் மத்தியில் பலமாக இல்லையென்ற பெரும் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் தோல்விகளுக்கு ஊடாக வாக்கு வங்கியில் பலமாக (விழுந்தும் மீசையில் மண் படவில்லை) இருக்கின்றோம் எனும் தேர்தல்கால மார்தட்டலை விடுத்து, தேர்தலுக்கு அப்பாலும் மக்களின் விடியலுக்கான பலதரப்பட்ட ஜனநாயக வெகுஜனப் போராட்ட மார்க்கங்கள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இத்தொடர் போராட்டங்கள்தான் எதிர்காலத்தில் உங்களை பலமான சக்தியாக்கும் என்பதையும் உணருங்கள்.
மலையக தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்கருதி பொது இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்...
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 29 March 2014
- Hits: 3352
மலையக தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பொது இணக்கப்பாட்டுடன் பொது வேலைத்திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் அதனடிப்படையில் செயற்படவும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஆரோக்கியமான கருத்தடல்களை ஆரம்பிக்க வேண்டுமென மக்கள் தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுக்கிறது.
இவ்வழைப்பை மக்கள் தொழிலாளர் சங்கத்தின் 2வது மாநாட்டின் போது பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி இ. தம்பையா அச்சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் பேசும் போது தெரிவித்தார்.
அதி உத்தம ஜனாதிபதி மகிந்த சிந்தனைகள் பாகம் இரண்டு
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 29 March 2014
- Hits: 3705
இலங்கையையும், சிங்கள மக்களையும், புத்த மதத்தையும் காப்பாற்றிய இலங்கேஸ்வரன், துட்ட கைமுனு எல்லாளனோடு வாள் சண்டை போட்டு தமிழர்களிடமிருந்து இலங்கையை காப்பாற்றினான். நவீன கைமுனு மகிந்தா கொழும்பிலிருந்து கொண்டே இலங்கையை காப்பாற்றினார் என்றெல்லாம் மண்டையில் மயிரை வழித்தால் மட்டும் போதும் புத்த பிக்குவாகி விடலாம் என்ற மகத்தான கொள்கை கொண்ட இலங்கை பிக்குகளால் போற்றப்படும் அதி உத்தம ஜனாதிபதி மகிந்த கவலையோடு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். அடுத்த தேர்தலிலே வெல்ல முடியுமா என்ற பெரும் கவலையில் அவர் ஆழ்ந்திருந்தார்.
நவநீதம்பிள்ளையின் பூனை, எலி பிடிக்குமா?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 28 March 2014
- Hits: 6953
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் இடம்பெற்ற மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த எமது - சுய விமர்சனமும், அரசியல் நடைமுறைக்கான அனுபவப் பகிர்வும்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 27 March 2014
- Hits: 2594
தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட, தமிழ் தேசியப் போராட்டம் முடிவுக்கு வந்த 2009 யுத்தத்தின் பின்னான காலத்தில், அப்போராட்டத்தை தொடர்வதற்கான பலவகையான அரசியல் வழிமுறைகள் புலம்பெயர் தேசங்களில் விவாதிக்கப்படுகிறன. பெரும்பான்மையான புலிகளின் ஆதரவாளர்கள், அவர்களின் ஏற்கனவே உருவாக்கப்பட்ட அரசியற் சிந்தனைக்கேற்ப மேற்கு ஏகாதிபத்தியநாடுகைளைச் சார்ந்து நின்று தமிழ் ஈழத்தைப் பெறுவதே தமது அரசியல் நடைமுறையாகக் கொண்டுள்ளனர். இதற்கு வெளியில் உள்ள இடதுசாரியம் கதைக்கும் உதிரிகளும், சிறு சிறு குழுக்களும் அவர்களின் இணையங்களும் மேற்படி புலிகளின் ஆதரவாளர்களின் அரசியலை விமர்சித்த வண்ணம், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பல வழிகளை முன்வைக்கின்றனர்.