Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சர்வதேச மனித உரிமைகள் தினமன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

அரச படைகளால் கடத்தப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி சர்வதேச மனித உரிமைகள் தினமன்று கொழும்பில் இடதுசாரி அமைப்புக்களின் ஆர்ப்பாட்டமும், கலந்துரையாடலும் நடைபெறவுள்ளன. 

எதிர்வரும் 10ம் திகதி காலை 10 மணிக்கு லிப்டன் சதுக்கத்தில் பாரிய ஆர்ப்பாட்டமும் அதனைத் தொடர்ந்து இடதுசாரி அமைப்புக்களின் தலைவர்கள் பங்குபற்றும் கருத்தரங்கம் ஒன்று பத்திரமுல்ல லயன்கிளப் மண்டபத்தில் நடைபெறுகின்றது.