"தெய்வத்தாய்" கருணை புரிந்தாரா?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 19 February 2014
- Hits: 6881
"ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவர் சார்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 11 ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு 2011-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலால் நிராகரிக்கப்பட்டன.
நிராகரிக்கபட்ட மனுவையொட்டி கடந்த ஓராண்டாக இந்திய ஆளும் வர்க்க ஜனநாயக மரபுகளின்படி பெரும் பெரும் சட்டவாக்க வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. இதன் பெறுபேறாக கருணை மனுவை பரிசீலித்து முடிவு எடுப்பதில் தாமதம் செய்யப்பட்டதால் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்” என்னும் வாதாட்டப் புடுங்குப்பாடுகளுக்கு ஊடாக 2012-ம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.!
மலையகத்தில் பதிலீட்டு அரசியலும், மாற்று அரசியலும்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 19 February 2014
- Hits: 3206
2013 பொதுவில் இலங்கையில் உள்ள அனைத்து உழைக்கும் மக்களும் அரசியல், பொருளாதார ரீதியில் பாரிய சவால்களுக்கு உட்பட்ட ஆண்டாகும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள், சுத்தமான நீர் வழங்க கோரிய போராட்டங்கள், ஆட்கடத்தல்கள் படுகொலைகளையும் நிறுத்தவும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான என்ற கோரிக்கையுடனான போராட்டங்கள் ஆகியன மக்களின் எதிர்ப்பை அரசியல் அதிகார மையத்துக்கு வெளிப்படுத்தி நின்றன. எனினும் மக்களின் இந்த போராட்டங்கள் எவ்விதத்திலும் வெளிப்படாத, பிரதிபளிக்காத பிரதேசமாக மலையகம் காணப்பட்டது.
இராணுவ ஆட்சியும் வெலவேரியா படுகொலையும்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 5
- Created: 18 February 2014
- Hits: 1083
குடிக்க சுத்தமான குடிநீர் கேட்ட போராடிய மக்கள் மீது, பாய்ந்து குதறியது அரச பயங்கரவாதம். மூன்று பேர் கொல்லப்பட, 50 மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பொது மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டது. இராணுவ வன்முறைக்கு அஞ்சி தேவலாயத்தில் புகலிடம் பெற்ற மக்களை, இராணுவம் அடித்து துவைத்துள்ளது. சுதந்திரமாக தகவல்களை சேகரிக்கவும், தெரிவிக்கவும் முடியாத வண்ணம், ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரச பயங்கரவரத்தை மூடிமறைக்கும் வண்ணம், அனைத்தையும் கண்காணிக்கின்றது. விசாரணையின் பெயரில் இராணுவவிசாரணைக்கு உத்தரவுவிட்டு நாடகமாடுகின்றது. விசாரணை பெயரில், மக்களையும் ஊடகவியளாளர்களையும் தனது இராணுவ முகாமுக்கு வருமாறு மிரட்டி வருகின்றது. வெலிவேரியாவுக்கு இராணுவத்தை யார் வரவழைத்தது, யார் துப்பாக்கி பிரயோகத்துக்கு உத்தரவை வழங்கியது என்று எதையும் கண்டறிய முடியாதுள்ளதாக கூறுகின்ற பாசிச கோமாளிகளின் கேலிக் கூத்துகளின் பின்னணியில் தான், விசாரணைகள் அனைத்தும் அரங்கேற்றப்படுகின்றது.
"மின்சார நாற்காலி" என்ற கதை: பேரினவாதிகளிற்கு பெரும்யோகம்.
- Details
- Parent Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Category: முன்னணி செய்திகள்
- Created: 18 February 2014
- Hits: 3239
அடுத்தமாதம் நடக்கவிருக்கின்ற தேர்தலில் வாக்குகளை பெருவாரியாக பெற்று வெற்றி வாகை சூடுவதற்க்காக மகிந்த இனவாத அரசு, ஜெனீவாவில் "மின்சார நாற்காலி" என்ற பொய்க்கதை ஒன்றினை தீவிரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.
பேரினவாதிகளிற்கு பெரும்யோகம்.
ஜெனிவாவிலே தமிழர்கள் மகிந்தவை தூக்கிலிடப் போகின்றார்கள், நாட்டைப் பிரித்து சிங்களவர்களை அழிக்கப் போகின்றார்கள் என்றெல்லாம் மிகையான போலிப் பிரச்சாரம் செய்து, சிங்கள மக்களிடம் தன் பௌத்த மேலாண்மையை நிலைநாட்டி பொருளாதார சமூக நெருக்கடிகளினால் தனக்கெதிராக சிங்கள மக்கள் திரண்டெழுவதை தடுத்து நிறுத்தி, தமிழர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை அவர்களை ஆதரிக்கச் செய்து தன் அதிகாரத்தை நன்கு நிலைநாட்டிக் கொண்டுள்ளது மகிந்த பேரினவாத அரசு.
இலங்கை இனவெறியை ஜெனீவாவும் கண்டுகொள்ளாது!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 18 February 2014
- Hits: 2288
"யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்காது போயிருந்தால் வெறும் 12 ஆயிரம் தோட்டாக்கள் மட்டுமே செலவாகியிருக்கும்" என இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதுவும் மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூறியுள்ள விடயமாகும்.
ஜெனீவாவும், மகிந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவும்
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி மகிந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் நான்கு நாள் விசாரணைகளை வெள்ளியன்று ஆரம்பித்து திங்களன்று நிறைவு செய்துள்ளது.
இந்த விசாரணைகளுக்கு சமூகமளித்திருந்தவர்கள் பலரும் தமது துயரங்களையும், நிலைமைகளையும் ஆணைக்குழுவினருக்கு கண்ணீர் மல்க எடுத்துரைத்தனர். சிலர் ஆவேசம் கொண்டிருந்தார்கள்.
அரச படைகளின் மிரட்டல்கள், அச்சுறுத்தல்களையும் மீறி மக்கள் அரச படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்து துணிந்து முறைப்பாடு செய்ததுடன், சர்வதேச மக்களிற்கு வன்னி இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதனையும் தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் காணாமல் போதல் தொடர்வதனையும் அரசின் தொடரும் இனவாத அடக்குமுறையையும் அம்பலப்படுத்த இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தியுள்ளனர்.
"எனது மகன் காணாமல் போகவில்லை! இராணுவத்தினர் தான் கைது செய்தனர்"
ராஜினி, ஒரு மனித உரிமை போராளியின் மரணம்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 16 February 2014
- Hits: 3680
அந்தக் கோழைகள் பின்பக்கமாக நின்று கொண்டு அவரது பெயர் சொல்லி அழைத்தனர். அவர் சைக்கிளில் இருந்தபடியே திரும்பி அவர்களைப் பார்த்தார். அவரை ஒரு துப்பாக்கி கொலைவெறியோடு குறி பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் ஒரு மருத்துவராக, இயக்க ஆதரவாளராக காயம்பட்ட இயக்க உறுப்பினர்களிற்கு சிகிச்சை அளித்தவரை நோக்கி அவர்கள் துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருந்தார்கள். தனது வெற்றுக்கைகளினால் நெற்றியை மறைக்க முயன்றவரை அந்த மிருகங்கள் எதுவிதமான சலனமும் இன்றி கொன்றனர். போராட்டம் என்றால் கொலை செய்வது தான் என்பதை இயக்கத்தின் முதலாவது விதியாக வைத்திருப்பவர்களிற்கு ஒரு நிராதரவான பெண்ணை கொல்கிறோம் என்ற தயக்கம் ஏன் வரப்போகிறது.
சமவுரிமை இயக்கத்தின் கலந்துரையாடல் நிகழ்வு
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 16 February 2014
- Hits: 1006
2009ம்ஆண்டு பேரழிவுக்கு பின்னால் இலங்கையில் தொடருகின்ற அரசியல் நிலவரத்தில், சமவுரிமை இயக்கத்தின் அவசியமும் அதன் தேவையும் குறித்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்விற்கு உங்களை அழைக்கின்றோம்
இந்நிகழ்வு எதிர்வரும் 22ம் திகதி சனிக்கிழமை (பெப்ரவரி) காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை நியூமோல்டனில் நிகழவுள்ளது
நீர் முகாமைத்துவத்திற்கு இஸ்ரவேல
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 5
- Created: 15 February 2014
- Hits: 1312
இலங்கையில் நீர் முகாமைத்துவம் செய்வது குறித்து ஆராய்வதற்காக இஸ்ரேலிய தூதுக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது. இந்த தூதுக்குழுவை சந்தித்த நீர் முகாமைத்துவ மற்றும் நீர்பாசன அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா, இலங்கையில் விவசாயிகள் நீரை விரயமாக்குவதால் அதனை முகாமைத்துவம் செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால த சில்வாவின் இந்தக் கூற்றோடு தண்ணீரை விற்பதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.
அடைந்தால் தமிழீழத்தேவி இல்லையேல் மரணதேவி!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 12 February 2014
- Hits: 6789
"தனிப்பெரும் தலைவரின்" பேரனுக்கு தமிழீழம் தவிர்ந்த வேறெதுவும் வேண்டாமாம். தற்போது இந்தியாவில் தங்கியுள்ள சம்பந்தன், இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு நிகரான தீர்வினையே தமிழ் மக்களும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் "இவ்வாறான ஒரு தீர்வினையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வாக கொண்டிருக்குமாக இருந்தால் அது தமிழ் தேசிய மக்களுக்கான ஒரு சாவுமணியாம். இந்தியாவில் இன அழிப்பை எதிர்கொள்ளக்கூடிய தேசங்கள் அங்கு இல்லை. அங்கிருக்கும் மாநிலங்களின் மக்களின் கோரிக்கைகள் முற்றிலும் வித்தியாசமானவை. தற்போது இந்தியாவிலுள்ள அரசியலமைப்பு மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் பிரிந்ததற்கு பிற்பாடு உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பாகும். இது சமஸ்டியே இல்லையெனவும் அலம்புது."