இறுதி எச்சரிக்கை, உலகிலிருந்து விடுதலை பெற்றுவிடுவீர்கள் - யாழ் பல்கலைக்கழகத்தினுள் துண்டுப்பிரசுரம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 23 May 2014
- Hits: 2507
யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு மீண்டும் அச்சுறுத்தல் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் அந்த துண்டுப்பிரசுரங்களில் குடாநாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளின் பத்திரிகையாளர்கள் இருவரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வாளாகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் 20.05.2014 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் போது காலை முதல் மதியம் வரை சுமார் 15 புலனாய்வாளர்கள் ஆலயத்தின் உள்ளே காணப்பட்டனர் என்றும் என்ன காரணத்துக்காக பூசைகள் நடைபெறுகின்றன என்பது குறித்த விவரங்களை அவர்கள் சேகரித்துக் கொண்டிருந்தனர் என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
நடைமுறையற்ற "சுயநிர்ணய" கோசத்தை முன்னிறுத்திய இனவாதம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 May 2014
- Hits: 2293
இலங்கையின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்தே இன முரண்பாடுகளை கழைய முடியும் என்ற அரசியல் உண்மை இன்று அரசியல் ரீதியாக முன்னுக்கு வருகின்றது. அதேநேரம் எல்லாவிதமான இனவாத குறுந்தேசியவாத அரசியல் போக்குகளும் அம்பலமாகி முட்டுச்சந்திக்கு வருகின்றது.
இனவாதமும் குறுந்தேசியவாதமும் முந்தைய வியாபாரிகளினதும் பிழைப்புவாதிகளினதும் தொங்கு சதையாக எஞ்சிக் கிடக்கின்றது. இப்படி வலதுசாரியக் கூறுகள் மக்களில் இருந்து தனிமைப்பட்டு விட இடதுசாரிய வேடம் போட்டோர், சீரழிந்த தேசியவாதத்தை நடைமுறையற்ற "சுயநிர்ணயம்" என்ற வெற்றுக் கோசம் மூலம் மூடிமறைத்து மீண்டும் அரங்கேற்ற முற்படுகின்றனர். இந்த வகையில் இன்று தனிநபர்கள் தொடக்கம் குறுங்குழுக்கள் வரை "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்திக் கொண்டு இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தங்களைப் போன்றோரை அணிதிரட்ட முற்படுகின்றனர்.
பல்கலைக்கழக மாணவர்களின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 21 May 2014
- Hits: 2444
பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டமைக்கும் அவர்கள் மீதான தாக்குதலுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று மேற்கொண்டனர். பதாகைகளையும் கோசங்களையும் எழுப்பிய வண்ணம் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நான்கு வருடகால சுகாதார பட்டப்படிப்பை மூன்று வருடமாக குறைத்தமை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்பாக செய்த ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் போது பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.அத்துடன் இவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ் பல்கலைக்கழகத்தில், இறுதி யுத்தத்தின்போது, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 21 May 2014
- Hits: 2314
இறுதி யுத்தத்தின்போது, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு மே மாதம் 18 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் நினைவஞ்சலி செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன்கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் புதன்கிழமையன்று திறக்கப்பட்டபோது இராணுவ அச்சுறுத்தலையும் மீறி, இனப்படுகொலைக்கு பலியாகிய போராளிகள் உறவினர்கள் மற்றும் மற்றும் மக்களிற்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் போராளிகள் கொலையும், மஹிந்த அரசும், இடதுசாரிகளும்...
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 20 May 2014
- Hits: 2456
இலங்கை அரசு தனது உள்நாட்டு இனவாத அரசியலைத் தொடர்வதற்காகவும், தொடர்ந்தும் தன் அரச அதிகார ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் அரசியலாக புலிகளின் மறு உருவாக்கம் என்ற பூச்சாண்டிக் கதைகள் கடந்த மாசி மாதம் ஊடகங்களில் தலைகாட்டத் தொடங்கியது .
யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்கள் கடந்த பின்னும், புலிகளின் மறு உருவாக்கம் என்ற பொய்யைக் கசியவிட்டுப் பின், அப்பொய்யை உண்மையென நிரூபிக்க வேண்டிய தேவை, ஏன் இலங்கை அரசுக்கு உள்ளது ஏன ஆராய்ந்தால், அது தற்போது பல இக்கட்டான நெருக்கடிகளுக்கிடையே சிக்கியுள்ளது இலகுவாகத் தென்படும்.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பொலிஸ் அடக்குமுறைக்கு எதிரான ஊடகவியலாளர் சந்திப்பு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 18 May 2014
- Hits: 2321
இணைந்த சுகாதார பட்டப்படிப்பிற்கான நான்காண்டு கால வகுப்புகளை மூன்றாண்டு காலமாக குறைத்தமைக்கு எதிராகவும் பல்கலைகழக மாணவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்பு கோரியும் அனைத்து பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியம் தொடர்ச்சியாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விவகாரத்தில் அரசாங்கம் கண்டுகொள்ளா கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. இதனை கண்டித்து அனைத்து பல்கலைகழக மாணவர்கள் 16ஆம் திகதி பல்கலைகழக மானிய ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்க்கொண்டு விட்டு கலைந்து சென்ற மாணவர்களை சிவில் உடை தரித்த பொலிசார் அடாத்தான முறையில் கைது செயத்துடன் கண்மூடித்தனமாக தாக்கி விளக்கமறியலில் வைத்துள்ளனர். அரசாங்கம் பல்கலைகழக மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைக்கு எதிராகவும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் இடதுசாரி கட்சிகள் 17ஆம் திகதி 'நிப்போன் ஹேட்டலில்' ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தினர். அதில் கலந்து கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக்களின் சாரம்சம்:
இனவழிப்பின் ஜந்தாவது வருட நினைவுகளும், தொடரும் துயரங்களும்...
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 17 May 2014
- Hits: 2413
எமது மக்கள் பாரிய மனித அழிவைச் சந்தித்து ஜந்து வருடங்களாகின்றது. இது இந்த நூற்றாண்டில் நடந்த பாரிய மனித அவலமாகும். இலங்கைப் பேரினவாத அரசு எம் மக்கள் மீதான ஒரு இனப் படுகொலையை நடத்தியிருந்தது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் ஈவிரக்கமற்று நடத்தப்பட்ட வன்முறை, இன்றும் ரணமாகி பாரிய வலியை எம் சமுதாயத்தில் ஏற்படுத்திய வண்ணமுள்ளது.
எம் மக்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகளுக்கும், ஆயுத வன்முறைக்கும் பொறுப்பேற்க வேண்டிய மஹிந்த – பாசிச அரசு, யுத்தத்தின் பின்னான காலத்தில் தனது அனைத்து அதிகார இயந்திரங்களையும் பயன்படுத்தி, திறந்த வெளிச் சிறைச்சாலையாய் மாற்றப்பட்ட எம் நிலத்தில் மக்களை சொல்லொணா அடக்குமுறைக்கு தொடர்ந்தும் உள்ளாக்குகின்றனர்.
அரசாங்கத்திலிருந்து வெளியேறக் கூடியவர்களின் ஊழல் குறித்த கோப்புக்கள் வெளியிடப்படும் என அச்சுறுத்தல்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 17 May 2014
- Hits: 2302
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தாவிற்கு எதிராக நிறுத்தப்படவுள்ள பொது வேட்பாளருக்கு ஆதரவு குறித்து எதிர்க்கட்சிகளுடன் இரகசியமாக தொடர்பிலுள்ள அமைச்சர்கள் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜபக்ஸ அரசாங்கம்அடையாளம் கண்டுள்ளது என்று தெரியவந்ததுள்ளது. மேலும் ஆளும் மகிந்த தரப்பினர் இவர்களின் ஊழல் சம்பந்தமான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதன் மூலம் பொது வேட்பாளர் ஒருவரை ஆதரிக்க கூடிய ஆளும் கட்சி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை மறைமுகமாக மிரட்டும் வேலைகளை ஆரம்பித்துள்ளது.
மாணவர் போராட்டங்களை இருட்டடிப்பு செய்து அரசுக்கு உதவுகின்ற "தமிழ்" இனவாதம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 17 May 2014
- Hits: 2444
புலிகளை வெற்றி கொண்ட இறுமாப்பில் நாட்டை இராணுவமயமாக்கி, நவதாராளவாத பொருளாதாரத்தை முன்னெடுக்கும் அரசுக்கு எதிராக இடியாக இறங்கியது மாணவர்களின் நவதாராளவாத கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள். தொடரான தடைகளையும், அடக்குமுறைகளையும் மீறி, அலை அலையாக மாணவர்களின் போராட்டங்கள் எழுந்து வருகின்றன. நீதிமன்ற தடையையும், அதியுர் பாதுகாப்பு அரணையும் தாண்டி, ஜனாதிபதி வாசஸத்;தலமான அலரி மாளிகை வாசலிலேயே மாணவர்கள் போராடியதைக் கண்டு அரசும், ஆளும் வர்க்கமும் அதிர்ந்து போய் உள்ளன. பழிவாங்கும் உணர்வுடன், பாசிச வழியிலான அனைத்து ஒடுக்குமுறைகளையும் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. கைதுகள், தேடுதல்கள், தாக்குதல்கள்... வரைமுறையின்றி தொடருகின்றன.
மகிந்தாவின் வாசஸ்தலத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மீதான கைது தொடர்கின்றது. (படங்கள்)
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 16 May 2014
- Hits: 2500
நேற்று (2014-05-16) காலை 10:30 மணியளவில்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இதன் பின்னர் நான்கு மாணவ பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டு கிருலப்பனை காவல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
சிறிது நேரத்தின் பின்னர் ஆர்ப்பாட்டத்தினை முடித்து கோட்டை பஸ் நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த மாணவர்களில் மாணவர் ஒருவரை பொய்யான பிடியாணை காட்டி கைது செய்ய முற்பட்ட கொம்பனித்தெரு பொலீசாரிற்கு எதிராக குரலெழுப்பிய மாணவர்களில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.