அரசியல் அனாதையான கூட்டமைப்பின் வெற்றுவேட்டு; அரசியல் மேற்கை விடிவெள்ளியாக காட்டுகின்றது
பேரினவாதிகளும் கூட்டணியும் தமக்குள் கூடிக் கூத்தாடும் அரசியல் பித்தலாட்டம் அனைத்தும், போலி யானவை, புரட்டுத்தனமானவை. இவை அனைத்தும் அடிக்கடி பிசுபிசுத்தபடி அம்பலமாகின்றது. மக்களை அணிதிரட்டாத, தங்கள் நியாயமான கோரிக்கைகளை சிங்கள மக்களிடம் எடுத்துச்செல்லாத எந்தப் போராட்டமும், பேச்சுவார்த்தையும் தொடர்ந்து தோல்வி பெறும். இதுதான் எம் சொந்த வரலாறு.
காத்தான்குடி, ஏறாவூர் முஸ்லீம்கள் படுகொலை: தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாள்
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 65
தென்னிலங்கையில் JVP இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் கொன்றொழித்து நிலைமைகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டிருந்த பிரேமதாச தலைமயிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு வடக்குக்-கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் முழு இராணுவப் பலத்தையும் பிரயோகிக்கத் தொடங்கியிருந்தது. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஆரம்பித்து விட்டிருந்த போர், நாமறிந்த அனைத்துப் போர்களையும் போலவே நிராயுதபாணிகளான அப்பாவி மக்களை காவு கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது.
எம் வீட்டின் சொந்தக்காரன்……
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 01 August 2012
- Hits: 3574
கடந்தவிரு நாட்கள்
அப்பாவின் முகநூலில்
அரசியல் செய்திகள் எதனையும் காணவில்லை!
ஆம்!
"அடக்கி-ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காய்
தன் வாழ்நாளையே அர்ப்பணித்த
விடியல் சிவா எங்களிடம் இருந்து
இறுதி விடை பெற்ற" பெரும்துயரால்…
முடிவுக்கு வந்த பிரேமதாச - பிரபாகரன் "தேனிலவு" : இரண்டாவது ஈழப் போரின் ஆரம்பம்
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 64
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை வந்தடைந்திருந்த வேளையில் இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கெதிராக வடக்குக்-கிழக்கில் போராடிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விடுதலை இயக்கங்களின் திசைவிலகல்களால் விடுதலை இயக்கங்களிருந்து ஒதுங்கியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கு அஞ்சியும் கொழும்பை வந்தடைந்திருப்பதைக் காண முடிந்தது.
விடியல் சிவா மரணம் - ஒரு நினைவுக் குறிப்பு
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 31 July 2012
- Hits: 6104
சென்ற திங்கட்கிழமை இந் நேரம் நாம் கோவை சிறீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் தோழர் சிவாவை பார்த்துக்கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் கொழும்பு செல்வதற்கான கடைசி விடைபெறலுக்காக நாம் அவரை தழுவியபோது கண்ணீர் விட்டு அழுதார். நாம் கணங்களை கண்ணீரால் கரைத்துக்கொண்டிருந்தோம். ஒருசில வார்த்தைகளை எம்முடன் பரிமாறுதற்காய்; அவர் தனது உடல்நிலையுடன் போராடிக்கொண்டிருந்தார். நானும் றஞ்சியும் பிள்ளைகளும் அவரை மாறிமாறி தழுவினோம். கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
"சமூக விடுதலைக்கு உரமூட்டி" விடியல் சிவா மரணித்து விட்டார்.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 30 July 2012
- Hits: 2732
விடியல் சிவா (சிவஞானம்) என அழைக்கப்பட்ட, விடியல் வெளியீடுகள் மூலம் அறியப்பட்ட சிவாவின் மரணம் ஈடு இணையற்றது. வியாபாரத்தை மையமாக வைத்து நூலைகளை வெளியிடும் இன்றைய நூலக அமைப்பில், சமூக நோக்கத்தை மையமாக வைத்து நூல் வெளியீடுகளை கொண்டு வந்த ஒரு தோழனின் மரணம், நிரப்பப்பட முடியாத இழப்பாகும்.
வலியோடு வாழும் கலையரசி
துடிப்பும் மிடுக்குமாய்
புழுதிபறக்க
சிறுமியாய் ஓடிவிளையாடித்திரிந்தவள்
அண்ணாவெனத்தோளில்
தாவியேறி கூடவந்தவள்
திரண்டெளும் அலைகளிலும்
கையைப்பிடித்தவாறு எதிர்த்து நின்றவள்
அடுத்தொரு அழிவிற்கு அலுவல்கள் நடக்குதோ?
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 29 July 2012
- Hits: 2472
ஈழத் தமிழருக்கு சம உரிமை கிடைக்காவிட்டால் புதிய வடிவில் இன மோதல் வெடிக்கும்: எரிக் சோல்ஹெய்ம் தெரிவிப்பு
"இலங்கையில் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்துக்கு தமிழர் பிரச்சனையே காரணமாக இருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளை ராணுவம் தோற்கடித்த பிறகும் அப்பிரச்சனை தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதையும் அவர்கள் இன்னும் செய்யவில்லை. இந்த விவகாரங்கள் தீர்க்கப்படாவிட்டால், இலங்கையில் எதிர்காலத்தில் மீண்டும் இன மோதல் புதிய வடிவங்களில் வெடிக்குமாம்"!
NDMLP இன் 34வது ஆண்டுவிழாவும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 29 July 2012
- Hits: 2364
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 34வது ஆண்டு விழாக் கூட்டம் 28.07.2012ம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. இதில் ‘சமகால அரசியல் போக்குகளும் அவற்றின் எதிர்கால வளர்ச்சியும்’ என்ற தொனிப்பொருளில் கருத்தரங்குக் கூட்டம் பு.ஜ.மா.லெ.கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர். வெ. மகேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் தோழர். பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல், தோழர்கள் க.தணிகாசலம், ச.பன்னீர்செல்வம், கா. செல்வம் கதிர்காமநாதன், த. பிரகாஸ், ஆர். நெல்சன் மோகன்ராஜ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். கூட்டத்தின் முடிவில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை கையெழுத்து போராட்டம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 26 July 2012
- Hits: 2482
நாட்டில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும்,கடத்தப்பட்டு காணாமல் போன அனைவரையும் விடுவிக்குமாறு கோரி கையெழுத்து பெறும் போராட்டம் ஒன்றை மக்கள் கண்காணிப்பு குழு நாளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.