ஜெனீவா தீர்மானம் : அமெரிக்காவின் உள்நோக்கத்தினை முறியடிக்க இலங்கைக்கு உள்ள ஒரே வழி எது?
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 26 March 2012
- Hits: 994
ஊடகங்களுக்கான அறிக்கை 25.03.2012
ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத இராணுவ ஒடுக்குமுறையினதும் யுத்த வெற்றி என்ற மமதையினதும் எதிர்விளைவேயாகும்.
அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 24 March 2012
- Hits: 2296
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்துள்ள அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் கோரி தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது.
அடுத்து என்ன அதிசயம் நிகழ்த்தப்போகின்றன தமிழகக்கட்சிகள்!!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 14 March 2012
- Hits: 2382
தமிழக மக்களின் உணர்வுகளை தமது கட்சியிருப்பாக மாற்றுவதற்காகவே ஈழத்தமிழர் இன்னல்களை காலத்துக்காலம் கையிலெடுத்தவர்கட்கு, இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்கு கிருஸ்ணா அளித்துள்ள பதில்---
அமெரிக்க சிப்பாய் சுட்டதில் குழந்தைகள் உட்பட 15 பேர் பலி
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 12 March 2012
- Hits: 2198
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தில் வகைதொகையின்றி துப்பாக்கித் தாக்குதல் நடத்திய ஒரு அமெரிக்க சிப்பாய் வீடுவீடாகச் சென்று சுட்டதில் குறைந்தபட்சம் 15 பேரைக் கொன்றிருக்கிறார். அவர்களில் 9 பேர் குழந்தைகளாவர்.
ஞாயிறன்று காலையில் இந்தத் சம்பவம் நடந்திருக்கிறது.
அந்தச் சிப்பாய் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் கொலைகளுக்கு முன்னதாக அவர் மனோ ரீதியாக உடைந்து போயிருந்ததாகக் கூறப்படுகின்றது.
ஆயிரம் திருடர்கள் அரசியலுக்கு வந்தால்….
புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயற்பாட்டாளராகச் செயற்பட்ட கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் அரசியலுக்கு வந்தால், அதனை ஏற்றுக் கொள்ள தாங்கள் தயார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்பதே எங்களுடைய சித்தாந்தம். அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தை விட்டு ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த கருணாவை கூட நாங்களே முன்னின்று வரவேற்றோம். எனினும் அவர்களுடைய அரசியல் இருப்பை உறுதி செய்வது மக்கள் கைகளிலேயே உள்ளது." என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
ஆயிரம் திருடர்கள் அரசியலுக்கு வந்தால்….
புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயற்பாட்டாளராகச் செயற்பட்ட கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் அரசியலுக்கு வந்தால், அதனை ஏற்றுக் கொள்ள தாங்கள் தயார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்பதே எங்களுடைய சித்தாந்தம். அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தை விட்டு ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த கருணாவை கூட நாங்களே முன்னின்று வரவேற்றோம். எனினும் அவர்களுடைய அரசியல் இருப்பை உறுதி செய்வது மக்கள் கைகளிலேயே உள்ளது." என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
இசை பிரியாவின் படுகொலை புதிய அதிர்ச்சி படங்கள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 09 March 2012
- Hits: 6651
முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம். தாயக விடுதலைக்கு தங்களை கொடையாக்கிய எங்கள் பெண்புலிகளின் வரலாறு உலகறிந்த விடயம். ஆனால் முள்ளிவாய்க்கால் அந்த பெண்போராளிகளுக்கு தந்த வலி பெரிய கொடூரம். தமிழ்பெண்களை காணாத கொடிய சிங்களகாடையர்கள் இறுதிப்போரில் சரணடைந்தவர்களை. காயமடைந்தவர்களை கொடிய சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளது.
அதிகாரவர்க்கம் அறிமுகப்படுத்தும் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரமும் மக்கள் சீரழிவும்..!
மனிதனுடைய சிந்தனையும் செயற்பாடும் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் மாற்றம் பெற்ற வண்ணமுள்ளது. எதிலுமே இது தான் நிலையானது என்ற முடிவினை யாராலும் எடுக்க முடியாது. எந்த விடயத்தினை எடுத்தாலும் மனிதனுடைய ஒவ்வொரு நடைமுறையும் நாளுக்கு நாள் புதியதொரு மாற்றத்தினை அடைந்து கொண்டுதானிருக்கிறது. இதனை நாகரீக மாற்றம் என்று சொல்வதா அல்லது மனிதனுடைய அறிவு சார்ந்த சிந்தனையின் மாறுதல் என்று சொல்வாதா..? என்னைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு மனிதனுடைய அறிவு சார்ந்த சிந்தனையின் மாற்றம் என்று தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு மனிதன் பிறந்து வளரும் சூழல், அவன் குடும்பத்தில் வளர்க்கப்படும் முறை, அவனுடைய சமூகம் அத்துடன் ஆட்சி செலுத்தும் அதிகார வர்க்கத்தின் அரசியல் என்பன அவனுடைய வளர்ச்சியில் பங்கு வகிக்கிறது. ஆனால் ஒரு மனிதனுடைய அறிவு பூர்வமான சிந்தனை வளர்ச்சியில் முதலில் முக்கிய பங்கு வகிப்பது அவனது குடும்பம். ஒரு குழந்தை முதலில் தனக்குள்ளே உள்வாங்கிக் கொள்வது தாய் தந்தையினை, அதற்குப் பின்னர் தான் வெளிச் சூழலினை பார்க்க ஆரம்பிக்கிறது. ஒரு குழந்தை வளர்ந்து வரும் போது குழந்தைப் பருவத்திலே அது தன்னுள் வாங்கிக் கொள்ளும் ஒவ்வொரு விடயங்களும் அதன் சிந்தனையினையும், செயற்பாட்டினையும் ஆக்கிரமித்து கொள்கிறது. இந்த சூழ்நிலையில் புறச் சூழலில் இருந்து உள்வாங்கி கொள்ளும் ஒவ்வொரு விடயத்தினையும் தெரிந்து சரி பிழை, அவசியம் அவசியமற்றது.., என்பதை பிள்ளைக்கு இனங் காட்ட வேண்டிய பெரிய பொறுப்பு தாய் தந்தை இருவரிலேயே தங்கியுள்ளது. இங்கு பெற்றோர்களின் சிந்தனையில் தவறான கருத்துக்கள் உள்வாங்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதுவே பிள்ளைகளுக்கான வழிகாட்டலாக அமைந்துவிடுகிறது.
சர்வதேசப் பெண்கள் தினம் (பகுதி-2)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3801
பத்திரிகையினதும்-குடும்பத்தினதும் நண்பர் ஒருவருக்கு ஜென்னி மார்க்ஸ் எழுதிய ஓர் கடிதம் (பகுதி-2)
எம் வாழ்க்கையின் ஒருநாளை இருந்தது இருந்தபடி சித்தரித்துக் காட்டுகின்றேன்:
இதைப் பார்த்தால் இத்தகைய இன்னல்களை நாடு கடத்தப்பட்ட சிலரே அனுபவித்திருப்பர் என்பதைக் காணலாம். செவிலித்தாய் அமர்த்துவது என்றால் மிகவும் செலவாகுமாதலால், எனது மார்பிலும் முதுகிலும் தொடர்ந்து பயங்கரமான வேதiனை இருந்தபோதிலும், குழந்தைகளுக்கு நானே பால் ஊட்டுவது என முடிவு செய்தேன். ஆனால் இந்தப் பச்சைக்குழந்தை பாலுடன் சேர்ந்து அளவற்ற கவலையினை – அடக்கி மூடப்பட்ட வருத்தங்களையும் சேர்த்துப் பருகியதால், இரவும் பகலும் பர்pதாபகரமாக கஸ்டப்பட்டபடி இருந்தது. இந்த உலகிற்கு வந்தநாள் முதல் அவன் ஒரு இரவிலாவது, இரண்டு மூன்று மணி நேரத்திற்கு மேல் நிம்மதியாக தூங்கியதில்லை. அண்மையில் அவனுக்கு கடுமையான வலிப்புக்கள் வரத்தொடங்கின. வாழ்விற்கும் சாவிற்கும் இடையே அவன் எப்போதும் போராடிக்கொண்டு இருந்தான். அவனுக்கிருந்த வேதனையில் அவன் பலமாக உறிஞ்சியதன் ;விளைவாக எனது மார்பு உரசலுக்கு இலக்காகி தோல் வெடித்து, நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் இரத்தம் கொட்டியது. இவ்வாறு ஒருநாள் அவனுடன் நான் அமர்ந்திருந்தபோது எங்கள் வீட்டு நிர்வாகத்தை பார்ப்பவள் உள்ளே வந்தாள்.
சர்வதேசப் பெண்கள் தினம் பகுதி 01
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 30 January 2012
- Hits: 3707
பத்திரிகையினதும்-குடும்பத்தினதும் நண்பர் ஒருவருக்கு; ஜென்னி மார்க்ஸ் எழுதிய ஓர் கடிதம் – பகுதி (01)
ஜென்னியின் வாழ்க்கைக் குறிப்பு
ஜென்னி 1814-ம் வருடம் மாசிமாதம் 12-ந் திததி பிறந்தார். ஜென்னியின் பெற்றோரும், கார்ல் மார்க்சின் பெற்றோரும் பக்கத்துப் பக்கத்து வீட்டிலேயே வசித்து வந்தனர். இதன் விளைவு இருவரும் காதலர் ஆகினர். 1843-; ஆனி 19-ம் நாள் கார்ல் மாhக்ஸ் ஜென்னியைக் கைப்பிடிக்கின்றார். அன்றில் இருந்து தன் இறுதி வாழ்நாள் வரை மார்க்சின் தோழியாக, ஆசிரியையாக, மாணவியாக, குடும்பத் தலைவியாக, அன்பு மனைவியாக, வாழ்ந்தார். ஜென்னியின் தன் குடும்பவாழ்வின் பெரும்பகுதியை பஞ்சம் பசி பட்டினி பெரும்பிணி கடன்தொல்லை, பிள்ளைகளின் தொடர் மரணம் போன்ற சொல்லொனாத் துயர்களுக்கூடாகவே வாழ்ந்து முடித்தார்.