புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் -(புலிகளின் வதை முகாமில் நான்-பாகம் 13):
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 25 February 2012
- Hits: 3649
புலி ஒரு பாசிச இயக்கமாக, அதுவே ஒரு அரசியல் சக்தியாக இருந்ததை பலர் புரிந்து கொள்ள மறுக்கும் போதே, தொடர்ச்சியான தவறுகள் இழைக்கப்பட்டது. புலிகளை வெறும் குட்டிப+ர்சுவா வர்க்க இயக்கமாகவும், தேசிய பூர்சுவா வர்க்க நலனை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் கருதினர். புலிப் பாசிசத்தின் அடிப்படையை காணத் தவறியதன் மூலம், சரியான அரசியல் வழி தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பாசிசத்துக்கு துணைபோனார்கள். உண்மையில் புலிகளின் பாசிசத்துக்கு எதிரான அணியை துல்லியமாக தனித் தனியாக ஆராய்ந்தால், பாசிசத்தை நிலை நாட்டுவதில் தோல்வி பெற்ற மற்றொரு பாசிச பண்பியலை அடிப்படையைக் கொண்ட உதிரி நபர்களும், குழுக்களும் காணப்படுகின்றனர். புலிப் பாசிசத்தை சரியாக அரசியல் ரீதியாக புரிந்து கொள்ள தவறியதன் விளைவு, எதிர் தரப்பையும் புரிந்து கொள்வதை நிராகரிப்பதன் மூலம் போராட்டமே அழிந்தது. அரசியல் ரீதியான தவறான மதிப்பீடு, அரசியல் ரீதியான பாசிச கண்ணோட்டத்தையே நட்பு சக்தியாக அனுசரிக்க கோரியது.
வன்முறையை உருவாக்குவது அதிகாரவர்க்கமே..!
இன்று ஐரோப்பிய மக்கள் மத்தியில், குறிப்பாக இளம் சந்ததியினரிடம் முஸ்லீம் எதிர்ப்புச் சிந்தனையும், கருத்துக்களும் அதிகரித்துச் செல்கின்றது. இது எல்லா வெளிநாட்டவர் மீதுமான எதிர்ப்பு அலையாக இருந்தபோதும், குறிப்பாக முஸ்லீம் மீதான எதிர்ப்பாகத்தான் பெரிய அளவில் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் சிறுசிறு அளவில் காணப்பட்ட இந்தவகை எதிர்ப்பு உணர்வுகள், தற்போது பேருருக்கொண்டு வன்முறையாக மாறியுள்ளது.
புலிப் பாசிசத்தின் தோற்றம் என்பது வரலாற்று நீட்சி -(புலிகளின் வதை முகாமில் நான்-பாகம் 12 ): இரயாகரன்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 24 February 2012
- Hits: 4276
புலிகள் எப்படி ஒரு பாசிச இயக்கமாக உருவானார்கள் எனப் பார்ப்போம். முதலில் இதை நாம் வரலாற்று கூறில் இருந்து குறிப்பாக பார்ப்போம். சண் தலைமையிலான இடதுசாரி இயக்கம் முன்னிறுத்திய வர்க்கப் போராட்டமும், வடக்கில் நடத்திய சாதிப் போராட்டங்களும், தமிழ் வலது பிரிவின் பொது அரசியலை நெருக்கடிக்குள்ளாகியது. தமிழ் தேசியத்தை முன்வைத்து வந்த வலது பிரிவுகளான நிலப்பிரபுத்துவ மற்றும் தரகு வர்க்க நலன்களுக்கு, இது பலத்த அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதே போன்று இலங்கை அளவில் தொடர்ச்சியாக பல குழுக்கள் சார்ந்த இடதுசாரி போராட்டங்கள், சுரண்டும் வர்க்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கியது. இதை முறியடிக்கவே வலது பிரிவுகள் இனம் கடந்து, இன மோதலை உருவாக்கினர். இலங்கையில் 1960க்கு பிந்திய பத்தாண்டின் இறுதியில் நடந்த வர்க்கப் போராட்டங்கள், வலது பிரிவை ஒற்றுமைப்படுத்தியது. அமைதியான வழியில் இனப்பிரச்சனையை தீர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.
அன்டனி பெனான்டோ, மீனவரின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 23 February 2012
- Hits: 2092
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து நடைபெற்ற மீனவர் ஆர்ப்பாட்டத்தின்போது சிலாபத்தில் கடந்த புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட அந்தனி பெர்ணான்டோவின் உடல் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
இந்த இறுதிச் சடங்குகள் நடக்கும்போது எந்தவிதமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படக்கூடாது என்று பொலிசாரின் கோரிக்கையின் பேரில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், சனிக்கிழமை இறுதி நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட எதிரணி அரசியல் தலைவர்களும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.
அடித்தால் திருப்பி அடிப்பேன்..
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சிறி
- Created: 15 February 2012
- Hits: 6468
நான் எந்த அதிகார வர்க்கத்திலிருந்தும்
ஊற்றுப் பெற்றவன் அல்ல நண்பரே
அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு ஓதுக்கப்பட்ட
சமூகத்திலிருந்து போராடிப் பெற்ற
அனுபவக் கல்வியின் ஆழத்திலிருந்து
கொதித்தெழுந்து வந்தவன்.
அடி செருப்பால
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சிறி
- Created: 15 February 2012
- Hits: 6149
பசியில பஞ்சத்தில வாடிற வயித்துக்கு
கஞ்சியாகிலும் ஊத்திட,
காத்து மழயில கடும்கும்மிருட்டில,
கடலில மோதி விரட்டிற அலையில
தோணித்துரும்பில
வாழ்வை வெல்லும் எங்கட சாதி ஊர்மனை பக்கமா
அட ராசா நீ உன் காலில மணல் பட
நடந்தாயா?
அரசியற் குறிப்புகள் (மார்கழி-09 – தை-10)
ஜனாதிபதி – நிறைவேற்று அதிகாரமும் தமிழ்மக்களின் – நிறைவேறாத ஆசைகளும்…
ஜனாதிபதித் தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா முதலில் நிகழும் என்ற எதிர்பார்ப்புக்கு இம்மாதத் தொடக்கத்தில் பதில் கிடைத்திருந்தது. வரும் 2010ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
இத் தேர்தலில் மகிந்தாவும் எதிரணி பொது வேட்பாளராக சரத்தும் போட்டியிடுவார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. புலிகளையும் பயங்கரவாதத்தையும் ஒழித்துக் கட்டியது தாம் தான் என இருவரும் உரிமைகோரும் போட்டிப்பலத்துடன் களத்தில் குதித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியவில்லை என்பதால் இரு வருடத்துக்கு முன்னரே தான் தேர்தலை வைப்பதாக தமிழ் மக்களின் மனங்களை லேசாகத் தொட முயற்சிக்கிறார் மகிந்தா. கடந்த தேர்தலில் புலியுடன் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தத்தை நயிசாக மென்று விழுங்கியும் விடுகிறார்.
மீண்டும் “மரம் பழுத்தால் வெளவால்கள் பறந்து வரும்” ...
மீள் பதிவு:
1977 ஆம்ஆண்டு தேர்தலில் போது வண்ணை ஆனந்தன் என்ற ஆசாமி “மரம் பழுத்தால் வெளவால்களை” (வெளிநாடுகளை) அழைக்கத் தேவையில்லை. அவை தாமாக பறந்து வரும் என கதை விட்டு, இளைஞர்களின் இரத்தத்தினை சுடாக்கி இரத்தத் திலகமிடவைத்தும், தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்த உடுப்பிட்டி வட்டாரக்கல்வி அதிகாரியாக இருந்த இராசலிங்கம் அவர்களை உடுப்பிட்டி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி, உலகமே உடுப்பிட்டி தொகுதியின் முடிவினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று தமிழ் குறுந்தேசிய வெறியினை ஊட்டி தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் வென்று பாராளுமன்றம் சென்றதுடன் மக்களிற்கு கொடுத்த தமிழீழ வாக்குறுதியினையும் காற்றில் பறக்கவிட்டனர்.
அதிகாரவர்க்க நலன்சார்ந்த ஊதுகுழல்களான ஊடகங்கள் ஒருபோதும் மக்கள்நலன் சார்ந்து நிற்காது…!
என்ரை அம்மா…, என்ரை அப்பா…,
ஐயோ என்ரை பிள்ளை… என்று பலஅவலக் குரல்களையும் அலறல்களையும் சனல்-4 தொலைகாட்சியில் பார்த்து நெஞ்சு அடைத்துப் போகும் நிலைக்கு நாம் சென்று விட்டோம். ஆனால் எங்களுக்குக் கேட்காத எங்களால் பார்க்க முடியாத இன்னும் எத்தனை ஆயிரம் அலறல்கள் அந்த வன்னி மண்ணுக்குள் புதைந்து போயிருக்கின்றது.
இதற்காகவா கொன்றீர்கள்…!
இன்று ஈழத்தில் என்ன நடக்கிறது?
பல துரோகக் கும்பல்கள் புதிய முகங்களோடு மக்கள் முன் தோன்றியுள்ளார்கள். வன்னியை புனரமைக்க ஒருவர், யாழ்பாணத்தை வசந்தமாக்க ஒருவர், கிழக்கு மக்களை தூக்கி நிறுத்த சிலர் என்று திடீர் அரசியற் பிறப்பெடுத்துள்ளார்கள். கோடிக் கணக்கில் மக்கள் பணத்தினை சுருட்டி தங்கள் கணக்கில் பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகள் தான் இவர்கள். இவர்கள் தான் இன்று மீட்பாளர்களாக அவதாரம் எடுத்துள்ளார்கள்.