அயோக்கியத்தனமான தீர்ப்பு: ‘பினாயக் சென் ஒரு தேசத் துரோகி’
பினாயக் சென்என்ற மருத்துவர் சமீப காலத்தில் இந்திய அரசியலில், நீதித்துறையினரால், பத்திரிகைகளால், அறிவாளிகளால் பெரிதும் பேசப்பட்டு வருகிறார். அவர் ஒரு ஊழலில் திளைத்த அரசியல்வாதியோ அல்லது கிரிமினல் பணிகள் செய்து மாட்டிக்கொண்ட போலிஸ்காரரோ அல்ல, வெறும் குழந்தை நல மருத்துவர் மட்டுமே. மருத்துவர்கள் எல்லாம் நகரங்களையும், பணத்தையும் தேடி ஓடும இந்தக் காலத்தில் இவர் பணமில்லாத வறுமையில் வாடும் பழங்குடிகள் நிறைந்து வாழும் சத்திஸ்கர் மாநிலத்தில் சென்று இலவச சேவை செய்து வருபவர். வேலூர் கிறித்தவக் கல்லூரியில் படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற, எம்.டி படித்த ஒரு மருத்துவர் மற்றும் பேராசிரியர் இவர். அநேகமாக அவரைப்போன்றோர் இருக்கும் இடம் அமெரிக்காவோ அல்லது குறைந்த பட்சம் நமது சென்னை போன்ற நகரத்தின் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள் தான். ஆனாலும் பினாயக் வங்காளத்தின் கர்மயோகிகள் வழியில் வந்த ஒரு மனித நேயம் மிக்க மருத்துவர்.
இதோ வருகிறது ஜனநாயகப் புரட்சி !! அரேபியா எங்கும் கலகம் !! தப்பி ஓடும் சர்வாதிகாரிகள் !! அஞ்சி நடுங்கும் ஆளும் வர்க்கங்கள்!! தொடை நடுங்கும் ஏகாதிபத்தியங்கள் !!
இந்தக் கட்டுரையின்நோக்கம் டுனிசியா, ஏமன், எகிப்து போன்ற அரபு நாடுகளில் நடக்கும் ஜனநாயகப் போராட்டங்களைப் பற்றிய செய்திகளைத் தருவது மட்டும் அல்ல. மாறாக, அரபு மக்களைப் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வரும் மேற்கு உலக நாடுகளின் செயல்களை மீறி அரபு மக்களின் போராட்டம் முன்னேறியிருப்பதையும் அது சீனா, இலங்கை, பர்மா, போன்ற சர்வாதிகார நாடுகளில் வாழும் மக்களுக்கு விடுக்கும் செய்தியை வாசகர்களுக்கு உணர்த்துவதே நமது நோக்கம்.
மாவோயிஸ்டுகளும் ஆட்கடத்தலும்
கடந்த மூன்று நாட்களாக, இந்தியப் பத்திரிகைகள் தொலைக் காட்சிகளில் ஒரே ஒப்பாரி: மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் மாவட்ட ஒரு நல்ல ஆட்சித்தலைவரைக் கடத்திக்கொண்டு போய் விட்டார்கள். கொலைகார்கள். ஐயோ என்ன இது மோசம். மாவோயிஸ்டுப் பயங்கரவாதிகளின் நிபந்தனைகளுக்கு செவிசாய்க்கக் கூடாது. அவர்களோடு பேசக்கூடாது அவர்களுடனான போரை தீவிரப்படுத்த வேண்டும். விமானங்களைக் கொண்டு தேடவேண்டும். முடிந்தால் ராணுவ கமாண்டோக்களைக் கொண்டு அவர்களை மீட்க வேண்டும்! இப்படிப் பலவாறாக பேச்சு! உளறல் !
ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்
உலகின் ஐந்து பெரிய பணக்கார நாடுகளுள் ஒன்றான ஜெர்மனி நாட்டில் உள்ள அதே எண்ணிக்கையில் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் (பில்லியனர்) இருக்கிறார்களாம். சமீபத்தில் இந்தியத் தொலைக் காட்சிகள் அறிவித்த இன்னுமொரு பெருமை. அப்பேர்ப்பட்ட பெருமை பெற்ற இந்தியத் திருநாட்டில் சுமார் எண்பது கோடிப் பேர் கால் பட்டினி கிடக்கிறார்கள், அதாவது நூற்றுக்கு எண்பது சதவீதம் பேர் அன்றாடம் இருபது ரூபாய் கூட சம்பாதிக்க வக்கின்றி காலம் தள்ளுகிறார்கள். இதுவும் இந்திய மக்களின் வறுமை பற்றி இந்தியத் திட்டக் கமிசன் வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வமான புள்ளி விபரம்.
பிரிட்டிஷ் தொழிலாளர்களின் லண்டன் ஆர்ப்பாட்டம்: தேசிய நடவடிக்கை நாள்
உலகாளும் நிதி மூலதனம்
நிதி மூலதனத்தின் ஆதிக்கம் உலக அரங்கில் பெருகியதன் காரணமாக பல மாற்றங்களை உலகம் கண்டு வருகிறது. வங்கிகளின் நிதி நெருக்கடிக்கு முதன்மையான் காரணமாக அமெரிக்க வீட்டுக் கடன் மோசடித் திட்டங்கள், யூக வாணிபத் திட்டங்களைக் காரணம் சொன்னாலும் இதர உள்நாட்டுக் காரணங்களும் இருக்கவே செய்கின்றன. பல ஐரோப்பியத் தொழில் நிறுவனங்கள் குறிப்பாக இரும்பு, வாகன உற்பத்தி நிறுவனங்கள் போன்றவை தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. பணக்கார நாடுகள் என்று கருதப்படும் பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் பெரும் தொழில் நிறுவனங்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மிக உயர்ந்த வாழ்நிலைமையில் வசதியாக இருந்த அயர்லாந்து, பின்லாந்து போன்ற நாடுகள் திவால் நிலைமையை எட்டி ஐரோப்பிய ஒன்றியத்தால் மறுவாழ்வு அளிக்கப்பட்டு உள்ளன. இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின், பிரிட்டன்,
அநியாயம் நிறைந்த உலகில் நமக்கு மட்டும் நியாயம் வேண்டிக் கேட்க முடியாது – அருந்ததி ராய்.
இந்திய அரசின் போருக்கு எதிராக லண்டன் பொதுக் கூட்டம்: 12 ஜூன் 2011
மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு நாட்டின் கனிம வளங்களை அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நிறுவனங்கள் இந்தியப் பெரும் வணிக நிரறுவனங்களுடன் இணைந்து கொள்ளையிட்டுச் செல்ல அனுமதி வழங்கி உள்ளது. இப்படி பல ஆயிரக்கணக்கிலான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ள மாநிலங்களில் ஒரிசா, சத்திஸ்கார், ஜார்கண்ட், ஆந்திரம் போன்ற பழங்குடிகள் வாழும் பகுதிகள் முக்கியமானவை. தங்கள் வாழ்வும் வளமும் பறிபோவது கண்டு இந்த மாநிலங்களில் வாழும் மக்கள் குறிப்பாக பழங்குடிகள் போராடிவருகின்றனர். மலைகள, ஆறுகள், நிலம் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தையும் சுரங்கம் தோண்டவும், ஆலைகள் அமைக்கவும் இந்திய அரசு விற்று வருவது கண்டு சகிக்காத இந்தப் பகுதி மக்களின் போராட்டம் முன்னெப்போதும் காணாத பெரும் வீச்சைக் கண்டு வருகிறது. ஏற்கனவே வறுமையில் உழலும் இந்த மக்கள் கொடுரமான முறையில் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். போராடும் மக்கள் மீது போலீசைக் கொண்டு நடத்தும் அடக்குமுறைகள் இந்திய அரசுக்கு புதியவை அல்ல. அனால் தற்போதைய அடக்குமுறையில் காந்தியவாதிகள், ஜனநாயக இயக்கங்கள், அரசு சாராத நிறுவனங்கள், இன்ன பிற சில்லறை அரசியல் கட்சிகள் அனைவரும் கூண்டோடு விரட்டியடிக்கப்பட்டு வருவது கூடுதல் சிறப்பு.
ஐரோப்பிய நாடுகளில் மதத் தீவிரவாதம்: நார்வேப் படுகொலைகள்
ஐரோப்பிய நாடுகளில் கிறித்தவ தீவிரவாதம் ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் கிறித்தவ தீவிரவாத, வெள்ளை இளைஞன் ஒருவனால் நார்வேயில் நடத்தப்பட்ட ஒரு படுகொலைச் சம்பவம் “அமைதி மிக்க நாடாகத் தம்மை “அடையாளம் காட்டிக் கொள்ளும் இந்த நாட்டில் வாழும் பிற இன, நிற, மத மக்களைப் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கொலை நடந்து கொண்டிருந்த அதே வேளையிலும், செய்தி முழுமையாக வெளிவராதும் இருந்த நேரத்தில் இஸ்லாமிய இயக்கங்களைச் சந்தேகத்திற்குள்ளாக்கி பி.பி.சி, ஸ்கை உள்ளிட்ட டி.வி. நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. கொலையில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகள் தான் என்று விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், அனைவரும் திகைப்படையும் வண்ணம் இந்தக் கொலைகளைச் செய்தது ஒரு வெள்ளையர், அதுவும் நார்வே நாட்டைச் சேர்ந்தவன் என்ற செய்தி வெளி வந்தவுடன் பொது விவாதங்கள் இறந்தவர்களுக்கு இரங்கற்பா பாடும் நோக்கில் திசை திரும்பியுள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதத்தைச் சாடும் ஒருவரும் ஐரோப்பியர்களின் இந்த வெள்ளையின கிறித்தவத் தீவிரவாதத்தை சாடுவதாகக் காணோம்.
மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான்-பாகம் 10 )
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 05 February 2012
- Hits: 3844
10.பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள்
எனது மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை என்ற இந்தக் குறிப்பை 2001 இல் எழுதிய போது பின்வரும் குறிப்பை நான் எழுதியிருந்தேன். புலிகளின் பாசிசம் பற்றி எழுதியுள்ளது தொடர்பாக பலர் ஆச்சரியமடையலாம்.
மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான்-பாகம் 8 & 9)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 05 February 2012
- Hits: 3818
8.இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது
தமிழ் மக்களின் மீதான தொடர்ச்சியான இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் போராடிய மக்கள், போராடும் உரிமையை சொந்த வலதுசாரி குறுந் தேசியவாதிகளான பாசிச புலிகளிடம் இழந்த பரிதாபம், போராட்டத்தினையே
அம்மன் கோயில் அய்யாமுத்து – பகுதி 1
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 04 February 2012
- Hits: 3154
அய்யாமுத்து ஒரு தமிழன். ஆகவே தமிழர்களின் தமிழ் பண்பாடுகளை ஒழுங்காகப் பின்பற்றிக் கொண்டு வந்தான்.
அவையாவன
1. கோயிலிற்குப் போதல்
2. ஆண்கள் தமிழர் பாரம்பரியப்படி கோட் சுட்டும், பெண்கள் பட்டுச்சேலையும் கட்டிக்கொண்டு திருமணங்கள், பிறந்தநாள், புhப்புனித நீராட்டு விழாக்களிற்கு போதல்.(முதல் முறை மட்டும் அல்லாது ஒவ்வொரு மாதமும் பூப்புனித நீராட்டு விழாவை பெரிதாக கொண்டாடுவது நல்லது என தமிழ்க்கலாச்சார காவலர்கள் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்)