"அபாயா" அணியாத வித்தியாவும் - ஆண் உறுப்பை தூக்கித் திரிகின்ற மதவாதிகளும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 27 April 2018
- Hits: 7408
ஆண் உறுப்பின் தேவையை முன்வைத்துச் சிந்திக்கின்ற ஆணாதிக்கமானது, அதிகாரத்தின் உறுப்பாக மாறி பெண்ணை அடிமைப்படுத்துகின்றது. உடை குறித்த மதவாதம், ஆண் உறுப்பை தூக்கி திரிகின்ற மதவெறி பிடித்த நாய்களின் இழிந்த பண்பாடே ஒழிய, மனிதப் பண்பாடல்ல. மனிதப் பண்பாடு பெண்ணை சதையாகப் பார்ப்பதில்லை. தன் ஆண் உறுப்பால் புணரும் சதையாக யார் பெண்ணைப் பார்க்கின்றனரோ, அவர்கள் தான் பெண்கள் மீதான வன்முறையாளர்கள். பெண்ணிடம் ஒழுக்கத்தைக் கோருகின்ற அனைவரும், பாலியல் வன்முறையாளர்களே. "ஒழுக்கத்திற்காக" இதைத் தான் நீ அணியவேண்டும் என்று கூறுகின்ற போது, உனது பார்வையும் - நடத்தையும் பாலியல் வன்முறை கொண்டதே.
இன-மதவாத சக்திகள் "அபாயா" குறித்து தத்தம் குறுகிய சிந்தனைக்கும் - சுய மன வக்கிரத்துக்கும் ஏற்ப, "அபாயா" அணிவது குறித்தும் - அணியக் கூடாது என்பது குறித்துமான மனிதவிரோத கருத்தையும், வன்முறையையும் கட்டமைத்து மக்களைப் பிளந்து வருகின்றனர்.
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் "அபாயா" அணிவது தொடர்பான இன-மதவாத சர்ச்சைக்குள், ஆணாதிக்க வக்கிரங்கள் தம் பங்குக்கு பெண்களைத் புணரத் தொடங்கி இருக்கின்றது. சதைகளைக் கண்டாலே கண்ட கண்ட இடத்தில் புணருகின்ற நாய்கள் எல்லாம், மக்களைப் பிரிக்கும் தங்கள் மத வக்கிரம் மூலம் புணரகின்றனர்.
ஆசிஃபாவைக் குதறிய இந்துத்துவ பார்ப்பனியமும் இதைத்தான் காஸ்மீரில் செய்தது. இந்தியாவை ஆளும் இந்துத்துவ – பார்ப்பனிய ஆட்சியாளர்கள், "இந்துத்துவ" குற்றவாளிகளைப் பாதுகாக்க முன்வைத்த எல்லா பாசிசக் கருத்துகளும் - செயல்களும் போல், இஸ்லாமிய அடிப்படைவாதமும் பெண்களை தங்களின் நுகர்வுக்குரிய சதையாகவே பார்க்கின்றது, அணுகுகின்றது. இதைத்தான் இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொண்டு அடிப்படைவாதிகள், குழந்தைகள் உள்ளிட்ட பல ஆயிரம் அரேபியப் பெண்களை குதறினர். இதைத்தான் எல்லா அடிப்படைவாத மதவாதிகளும் தம் பங்குக்கு கோருகின்றனர்.
அண்மையில் கொடூரமான பாலியல் வன்முறை மூலம் கொல்லப்பட்ட வித்தியா "அபாயா" அல்லாத உடையை அணிந்த போட்டோவில் வெளித்தெரியும் சதையை, பாலியல் வக்கிரத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாத ஆணாதிக்கமானது குதற வெளிக்கிட்டு இருக்கின்றது. எப்படிப்பட்ட பாலியல் வன்முறையாளர்களைக் கொண்ட குற்றவாளிகள், மத சமூகத்தில் புரையோடிப் போய் இருப்பதை இவை எடுத்துக் காட்டுகின்றது.
தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் மேல் இந்துத்துவ வெள்ளாளிய ஆணாதிக்கம் திணிக்கும் சாறியும், அதில் வெளியில் தெரியும் சதையை பாலியல் பொருளாக இஸ்லாமிய அடிப்படைவாதம் முஸ்லிம் மக்களுக்கு காட்டுகின்றது. இதன் மூலம் வெளித் தெரியும் சதை பெண்ணின் "ஒழுக்க கேட்டின்" அடையாளமாகக் காட்டி, முஸ்லிம் பெண்ணுக்கு "அபாயா"யை இஸ்லாமிய அடிப்படைவாதம் திணிக்கின்றது.
மே தினத்தை மறுக்கும் பௌத்த சிந்தனை முறை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 27 April 2018
- Hits: 3803
உலக தொழிலாளர்களின் போராட்ட தினமான மே 1ம் திகதியை, இலங்கை அரசு வேறு ஒரு திகதிக்கு மாற்றி இருக்கின்றது. பௌத்த மதத்தின் கொண்டாட்டத்தை முன்னிறுத்திய இந்த திகதி மாற்றமானது, இலங்கையை பௌத்த நாடாக பிரகடனம் செய்திருக்கின்றது. இலங்கை மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்க பௌத்த சிந்தனை முறையையே, அரசும் - ஆளும் வர்க்கமும் கையாள்வது வெளிப்படையாக இதன் மூலம் அம்பலமாகி இருக்கின்றது.
இலங்கையில் ஆட்சியாளர்களும் - ஆளும் வர்க்கமும் காலகாலமாக பௌத்த – சிங்கள மக்களின் பெயரில், இன-மத ரீதியாக மக்களை ஒடுக்கிய வரலாற்றின் ஒரு அரசியல் நீட்சியாகவே, பௌத்த கொண்டாட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்திருக்கின்றது. இதன் மூலம் மதம் - இனம் கடந்த, போராடும் உழைக்கும் மக்களின் மேதின போராட்டத்தையும், அதன் பாரம்பரிய வர்க்க வரலாற்றையும் மறுதளித்திருக்கின்றது. அதேநேரம் மதரீதியாக உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி இருக்கின்றது.
உழைக்கும் வர்க்கத்தை அடிமைப்படுத்தி சுரண்ட உதவுகின்ற எல்லா இனவாத-மதவாத தேர்தல் கட்சிகளும், இதனை எதிர்க்கவில்லை. குறிப்பாக இன-மத ஒடுக்குமுறையை முன்னிறுத்தி செயற்படும் தமிழ் - முஸ்லீம் இனவாத-மதவாத கட்சிகள், பௌத்த ஆதிக்கம் மூலம் முன்னிறுத்தும் நவீன ஒடுக்குமுறையை எதிர்க்காத பின்னணியில் இருப்பது, அக்கட்சிகளின் வர்க்கக் குணாம்சமே.
மாணவர்களுக்கு நஞ்சை ஊட்ட முனையும் குறுகிய இன-மதவாத வக்கிரம்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 26 April 2018
- Hits: 6369
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் - ஆசிரியர்கள் - பெற்றோர்கள் உள்ளடங்கிய ஒரு பகுதியினர், முஸ்லிம் ஆசிரியைகள் "அபாயா" அணிந்து வருவதற்கு எதிரான இன-மதவாத போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதன் மூலம் இன-மத அடிப்படைவாதங்களுக்கு ஏற்ப பாடசாலைகள் சிந்திக்க வேண்டும் என்ற பொது உள்ளடக்கத்தை, இலங்கையளவில் கொண்டு சென்று இருக்கின்றனர்.
பௌத்த - இந்து - முஸ்லீம் - கிறிஸ்துவ.. பாடசாலைகளாக கல்விக்கூடங்களை வகைப்படுத்தவும், அவர்கள் அல்லாத பிற மத மாணவர்கள் - ஆசிரியர்கள் தம் மத பண்பாட்டை திணிக்கவும் கோருகின்ற, மனிதவிரோத வக்கிரத்தை போராட்டம் மூலம் முன்னிறுத்தி இருக்கின்றனர்.
இந்த இன-மதம் சார்ந்த போராட்டம் சமூகத்துக்கு எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால் இன-மதவாதத்தை விதைப்பது எளிது என்பதையும், இனம்-மதம் கடந்த மனித பண்பாட்டை உருவாக்குவது தொடர்ந்து கடினமாகி வருவதையே எடுத்துக் காட்டுகின்றது.
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி நிகழ்வானது, இலங்கை கல்விக் கூடங்களை மதம் சார்ந்த நிறுவனமாக மாற்றுகின்ற பொதுப்பின்னணியிலேயே நடந்தேறி இருக்கின்றது. அரசு பாடசாலைகள் மதம் சார்ந்து தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் வண்ணம், மக்களை பிரித்தாளும் அரசினதும் - ஆளும் வர்க்கத்தினதும் கொள்கைகளே வழிநடத்தியிருக்கின்றது. இந்த வகையில் இலங்கை தளுவிய அளவில் பாடசாலைகளில் மதம் சார்ந்த கோயில்களைக் கட்டுவது, பாடசாலை முகப்புகளை மத அடையாளங்களாக மாற்றுவது, பாடசாலைப் பெயர்களை மதம் சார்ந்து நிறுவுவது.. என்று, இன்று பல்வேறுவிதமான மதச்செயற்பாடுகள் பாடசாலைகளில் அதிகரித்து வருகின்றது.
எது பெண்விடுதலை.....?
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 34
- Created: 25 April 2018
- Hits: 1035
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக சொகுசாக வாழும் பணக்கார பெண்கள் முதல் உழைக்கும் பெண்கள் வரை பேசுகின்றனர்; போராடுகின்றனர். மேற்தட்டு முதல் அடித்தட்டு வரை உள்ள பெண்கள் லேடிஸ் கிளப்புகள், மாதர் சங்கங்கள், மகளிர் குழுக்கள், உழைக்கும் பெண்களுக்கான புரட்சிகர பெண்கள் அமைப்புகள் என பல அமைப்புகளில் பங்கெடுத்து அவர்களின் உரிமைகளை பற்றி பேசுகின்றனர். பெண்களின் அமைப்புகளிலும் உரிமைகள் கோருவதிலும் கூட நாம் வர்க்க வேறுபாடுகளை தெளிவாக பார்க்கமுடிகிறது.
லேடிஸ்கிளப்பில் பெண்ணடிமைத்தனத்திற்கெதிராக பேசும் பணக்கார பெண்களின் உரிமை என்பது அவர்கள் அணியும் ஆடை மற்றும் அழகைப் பராமரிப்பது என்கிற எல்லையை தாண்டி வேறெந்த உரிமைகளைப் பற்றி பேசப் போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை பெண்ணுரிமை என்றாலே அது உடைகளைப் பற்றியும் அழகைப்பற்றியுமே மட்டுமே.
இவர்கள் அதற்காக போராடவும் செய்கின்றனர். இவர்களின் கோரிக்கைகளையும் போராட்டங்களையும் வைத்துத்தான் மதவாதிகள் “பெண்கள் ஆபாசமாக உடையலங்காரம் செய்துகொள்ள உரிமைக்கோருகிறார்கள். பெண்ணுரிமை என்பது முட்டாள்தனம். பெண்களை அம்மணமாக பார்க்க ஆசைப்படுபவர்களே பெண்ணுரிமைப்பற்றி பேசுவார்கள்” என்று ஒரே போடாய் போட்டு பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக பேசும் உழைக்கும் பெண்களின் சார்பாக பேசுவோரையும் சேர்த்து விமர்சிக்கின்றனர்.
ஊடகங்களுக்கான அறிக்கை - சி.கா.செந்திவேல்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 25 April 2018
- Hits: 826
எட்டு மணி நேர வேலை கோரிப் போராடிய அமெரிக்காவின் சிக்காக்கோத் தொழிலாளர்களின் இரத்தத்திலும் உயிர்த் தியாகத்திலும் உதித்ததே உலகத் தொழிலாளர்களின் சர்வதேசப் போராட்டத்தினமான மே தினமாகும். போராட்டத்தில் பிறந்து மீண்டும் உலகத் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் போராட்ட உத்வேகம் அளித்து வரும் மேதினத்திற்கான முதலாம் திகதியினை மறுப்பதற்கோ, மாற்றுவதற்கோ அல்லது தடுப்பதற்கோ முதலாளிய ஆட்சியினருக்கு எவ்வித உரிமையும் கிடையாது. மைத்திரி - ரணில் தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியானது மேதினத்தை முதலாம் திகதிக்குப் பதிலாக மே ஏழாம் திகதியில் நடாத்த வேண்டும் என எடுத்துள்ள முடிவு தொழிலாளர் விரோத முடிவேயாகும். இதனை நாட்டின் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் அவர்களது கட்சிகளும் தொழிற்ச்சங்கங்களும் நிராகரித்து எதிர்ப்பது அவசியமாகும். எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும் ஆட்சியினரது மேற்படி முடிவை மிக வன்மையாக கண்டித்து எதிர்க்கிறது. அதே வேளை மே முதலாம் திகதியே மேதினத்தை நடாத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு புதிய ஜனநாயக மாச்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் மேதினத் திகதி மாற்றம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கையில் கொலனிய காலத்திலிருந்தே தொழிலாளர் இயக்கங்கள் தோன்றி வளர்ந்து வந்த சூழிலிலே பல்வேறு அடக்கு முறைகளுக்கு மத்தியில் மேதினம் சர்வதேசப் போராட்டத்தினமாக நினைவு கூரப்பட்டு வந்திருக்கிறது. 1956ம் ஆண்டுக்குப் பின்பே மேதினம் பொது விடுமுறைத் தினமாக்கப்பட்டது ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த காலங்களில் பௌத்த தினங்களான வெசாக் தினங்களைச் சாட்டாக வைத்து மேதினங்களைத் தடுப்பதிலும் பொலிஸ் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதிலும் முன்னின்று வந்துள்ளது. அவற்றுக்கு எதிராகத் தொழிலாளர்களும் இடதுசாரிக் கட்சிகளும் போராடி வந்துள்ளன. அதன் வழியிலேயே இன்றைய மைத்திரி-ரணில் தலைமையிலான கூட்டு ஆட்சியானது தொழிலாளர்களின் மேதினத்தை அதற்குரிய நாளில் இருந்து ஏழாம் திகதிக்கு மாற்றியுள்ளது. இத்தகைய தொழிலாளர் விரோத முடிவின் மூலம் மேதினத்தின் முக்கியத்துவத்தை நிராகரித்து முதலாளிய வர்க்க சக்திகளை மனம் குளிர வைத்தும் உள்ளது. எனவே நாட்டின் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நேர்மையான இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் ஐக்கியப்பட்டு எதிர்வரும் மேதினத்தை மே முதலாம் திகதியில் நடாத்துவதற்குத் தயாராக வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்துகிறது.
சி.கா.செந்திவேல்
பொதுச் செயலாளர்
31-03-2018
ஆசிஃபாவைக் குதறியது நவபாசிச நவதாராளவாதமே
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 19 April 2018
- Hits: 6167
"ஒழுக்கமாகவும் - புனிதமாகவும்" பெண்கள் மேல் திணிக்கப்படும் ஆணாதிக்கமானது, மாறாத ஒற்றைப் பண்புவடிவம் கொண்ட ஆணாதிக்க வாழ்வியல் நெறியல்ல. ஆணாதிக்க பாலியல் வாழ்வியலானது மதத்தின் அல்லது மதங்களால் கட்டியமைக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமுதாய பண்பாட்டு எச்சமுமல்ல. மாறாக தனியுடமை சமூகப் பொருளாதார அடிப்படையில் தோன்றிய ஆணாதிக்கமானது, அதற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளுகின்றது. இந்த வகையில் நவதாராளவாத பொருளாதாரத்தை முன்னெடுக்கும் ஆட்சி முறையானது பாசிச வடிவத்தை எடுக்கும் போது, ஆணாதிக்கமானது வீரியமடைகின்றது.
நவீன நவதாராளவாத ஆணாதிக்கமே ஆசிஃபாவை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்று போட்டு இருக்கின்றது. தைமாதம் நடந்த இந்தப் பாலியல் குற்றத்தையும், கொலையையும் மூடிமறைக்க, இந்தியாவை ஆளும் பார்ப்பனிய - இந்துத்துவ அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டிருந்தது. குற்றத்தை சட்டரீதியாக முன்னெடுக்க பொலிசார் மறுத்தனர். குற்றத்தை பிறர் மீது சுமத்தி, திசைதிருப்ப முனைந்தனர். அப்பாவி ஒருவரை குற்றவாளியாக்கி, சட்டத்தின் முன் கொண்டு வந்தனர். குற்றத்தை மூடிமறைக்கும் வண்ணம், சாட்சியங்களையே பொலிஸ் அழிக்கிறது. நடந்த குற்றத்துக்கு எதிராக நாடு தளுவிய மக்களின் போராட்டம், சட்டத்தை அமுல்படுத்தக் கோரிய சூழலில், குற்ற வழக்கு தாக்கல் செய்வதை இந்துத்துவ –பார்ப்பனிய வழக்கறிஞர் கும்பல் தடுக்க முனைகின்றது. இந்த குற்றவாளிக்கு எதிராக வழக்காடும் வழக்கறிஞர் மிரட்டப்படுகின்றார்.
அதேநேரம் இந்தக் குற்றத்தை செய்த கும்பலைப் பாதுகாக்க, இந்துத்துவ தேசபக்தியும் - ஒடுக்கும் பார்ப்பனிய சாதி உணர்வும் ஆளும் தரப்பால் முடுக்கிவிட்ப்பட்டது. ஒடுக்கும் தங்கள் சாதிய உணர்வுடன், குற்றவாளிகளுக்காகக் குலைப்பது நாடு தளுவிய அளவில் பா.ஜ.க கட்சியின் அரசியல் உணர்வானது. பா.ஜ.க சட்டசபை உறுப்பினர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். பார்ப்பனிய ஊடகங்களின் துணையுடன், தங்கள் குற்றத்தை மூடிமறைக்கும் தொலைக்காட்சி விவாதங்களில் இறங்கினர். இந்திய தேசிய கொடியுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள், இந்துத்துவ தேசபக்தி கோசங்களை எழுப்பினர்.
சிரியா மீதான மேற்கு ஏகாதிபத்தியம் நடத்திய போலித் தாக்குதல்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 15 April 2018
- Hits: 6111
சிரியாவில் உள்ள இரசாயன ஆயுதங்களை அழிக்க போவதாகக் கூறி, வரிந்துகட்டிய வலிந்த யுத்தப் பிரகடனத்தை அமெரிக்கா – பிரான்ஸ் - பிரிட்டன் செய்திருந்தனர். இதையடுத்து சிரியா மீதான மேற்கின் வலிந்த எந்தத் தாக்குதலையும் முறியடிக்கப் போவதாகவும், தாக்குதல் நடத்தும் ஏவுதளங்களை அழிக்கப் போவதாகவும் ருசியா எச்சரிக்கையை விடுத்தது. ஆக மூன்றாவது உலக யுத்தத்தின் விளிம்பிற்கு, வலிந்த தாக்குதல் அறிவிப்புகள் இட்டுச் சென்று இருந்தது.
பொருட்களை வரைமுறையின்றி நுகர்ந்து கொண்டு இருந்த சந்தைச் சூழலில், மூலதனத்தை குவிப்பதில் தீவிரமாக இயங்கிக் கொண்டு இருந்த முதலாளித்துவத்தின் அமைதியான சூழலுக்கு, இந்த யுத்த அறிவிப்பு முரண்பாடாக வெளிவந்தது. அதாவது பதற்றமற்ற உலக சூழலில், ஏகாதிபத்திய தலைவர்களின் தனிப்பட்ட உள்நாட்டு அரசியல் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள விடுத்த இந்த தாக்குதல் அறிவிப்பு, பெரும் யுத்தமாக மாறும் நிலைக்கு இட்டுச் சென்றது. இதன் பின் விழித்துக் கொண்ட ஆளும் வர்க்கங்கள், யுத்தத்தை தவிர்க்கும் பேரத்தை முரண்பட்ட ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடத்தியது. இறுதியில் எப்படி எங்கு எந்த நேரத்தில் தாக்குவது என்ற பேரத்தை ருசியாவுடன் செய்ததன் மூலம், வரையறுக்கப்பட்ட தாக்குதலை நடத்தி முடித்தனர். அதாவது தங்கள் "மீசையில் மண் படவில்லை" என்ற வீறாப்பு பேசி மேற்கு மக்களை ஏமாற்றும் வண்ணம், இரு தரப்பு ஓப்புதலுடன் தாக்குதல் வரையறுக்கப்பட்டு நடத்தப்பட்டது.
சிரியாவைக் குதறும் ஏகாதிபத்திய வல்லூறுகள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 12 April 2018
- Hits: 5422
உலகை உலகமயமாக்கி கொழுக்கும் முதலாளித்துவமானது, சந்தையைக் கைப்பற்றும் ஏகாதிபத்திய முரண்பாட்டைக் கடந்த சுதந்திர சந்தையல்ல. மூலதனத்தை விரிவாக்க முனையும் மேற்கு முதலாளித்துவத்தின் வன்முறை தான், சிரியா யுத்தம். அதாவது ருசிய ஏகாதிபத்திய மூலதனச் செல்வாக்கில் இருந்து சிரியாவைக் கைப்பற்றும் மேற்கு ஏகாதிபத்தியத்தின் வலிந்த தாக்குதலுக்கு, இன்று சிரிய மக்கள் பலியாகிக் கொண்டு இருக்கின்றனர்.
சிரிய அரசை தேர்தல் "ஜனநாயகமற்ற" சர்வாதிகார நாடாக சித்தரிக்கும் மேற்கு ஏகாதிபத்தியமும் - ஏகாதிபத்திய ஊடகங்களும், சவூதி அரேபியாவின் மன்னர் ஆட்சியை அப்படி அழைப்பதில்லை. சர்வாதிகார சவூதி மன்னரை அமெரிக்கா - பிரான்ஸ் - பிரிட்டன் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதை சமகாலத்தில் காண முடியும்;. மேற்கு நாடுகள் தமது மூலதன நலனுக்கு முரணான நாடுகளையே, மனித குலத்தின் எதிரியாக காட்டி அழிப்பதே இதன் வரலாறாக இருப்பதுடன், அதுவே சிரியாவில் நடந்து வருகின்றது.
இதில் வேடிக்கை என்னவென்றால் சிரியாவில் தேர்தல் "ஜனநாயகத்தை" கொண்டு தேர்ந்தெடுக்கும் முறைமையைக் கொண்டுள்ள அதேநேரம், சவூதியில் அது கூட கிடையாது. இங்கு ஜனநாயகம் குறித்தும், தேர்தல் ஜனநாயகம் குறித்துமான மேற்கின் அளவீடுகள் எல்லாம், தங்கள் நாட்டு மூலதனத்தின் நலன்களை முன்வைத்தே அளக்கப்படுகின்றதே ஒழிய முரணற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் அல்ல என்பதே உண்மை.
மூலதனத்துக்கு இடையிலான யுத்தமே, அமெரிக்கா – சீனா முரண்பாடாகும்
- Details
- Category: Uncategorised
- Created: 10 April 2018
- Hits: 1064
மூலதனத்தைக் குவிக்கும் வரைமுறையற்ற சந்தைப் பொருளாதாரத்தில் திவாலாகும் மூலதனங்கள், மீள கையில் எடுத்திருக்கும் தற்காப்பு ஆயுதம் தான் எல்லைக்குட்பட்ட ஏகாதிபத்தியப் பொருளாதாரம். அதாவது உலகமயமாதலுக்கு எதிரான, ஏகாதிபத்திய தேசியவாதம்.
முதலாளித்துவத்தின் பொது முரண்பாடானது, உலகப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முதல் இரு நாடுகளான அமெரிக்கா – சீனாவுக்கு இடையில் முற்றி வருகின்றது. அதாவது உள்ளார்ந்த உள்ளடக்கமென்பது உலக மூலதனத்துக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையில் நடக்கும் வர்க்கப் போராட்டத்தின் பிரதிபலிப்பாகும். மூலதனங்கள் ஒன்றையொன்று அழித்து கொழுக்கும் உலகமயமாக்கலுக்குப் பதில், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான யுத்தமாக அதை மாற்றி விட முனைகின்றனர்.
தேசங்களின் எல்லைகள் இன்றி மக்களையும் - இயற்கையையும் வரைமுறையின்றி சுரண்டுவதற்காக மூலதனங்களால் உருவாக்கப்பட்ட உலகமயமாக்கமானது, ஒன்றையொன்று அழித்து கொழுக்கும் தனக்குள்ளான போட்டியில், முன்னேற முடியாத தேக்கத்தை அடைந்து இருக்கின்றது. தேக்கத்தைக் கடக்க உற்பத்திப் பொருட்களின் விலையைக் குறைத்து சந்தையை தக்க வைக்கவும், இலாபத்தை அடையவும் முனைந்தனர். அந்தப் போட்டியால் சந்தையில் பொருட்கள் குவிந்துவிட, பொருட்கள் விற்க முடியாது தேங்கி விடுகின்றது. விலைக் குறைப்பு, பொருள் தேக்கமானது வேலை இழப்புகளாகவும், கூலி குறைப்பாகவும், அதிக நேர வேலையாகவும், குறைந்த கூலி உள்ள நாடுகளை நோக்கி மூலதனத்தின் பாய்ச்சலாகவும் மாறியது. மொத்தத்தில் உழைக்கும் வர்க்கம் மீதான மூலதனத்தின் ஒடுக்குமுறைகள் மூலம், சந்தையை தொடர்ந்து தக்கவைக்க முனைந்த மூலதனத்தின் போராட்டமானது, உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தியை இல்லாதாக்கி வருகின்றது. இது சுழற்சியாக மூலதனத்திற்கு எதிரான புதிய நெருக்கடியாக மாறும் அதேநேரம், மூலதனத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தைக் கூர்மையாக்குகின்றது.
சாதியை அரசியலாக்கியது உள்ளூராட்சித் தேர்தல்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 05 April 2018
- Hits: 5288
நடந்த உள்ளூராட்சியில் பங்குகொண்ட தேர்தல் கட்சிகள் அனைத்தும், வடக்கில் தேர்தலை வெல்வதற்கு சாதியையே முதன்மைப்படுத்தினர். வடக்கில் கிராமங்கள் - வட்டாரங்கள் அனைத்தையும் சாதிரீதியாக பிரித்து, அந்தந்த சாதிய வாக்குகளைப் பெறுவதற்கு அந்தந்த சாதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தியது. இதன் மூலம் சாதி அடிப்படையில் வாக்குகளை, ஓவ்வொரு தேர்தல் கட்சியும் பெற்;றது. இதுதான் வடக்கின் தேர்தல் முடிவுகளை தீர்மானித்தது.
உள்ளூராட்சி தேர்தலானது, வடக்கு சமூகத்தை சாதியாக அணிதிரட்டியுள்ளது. "தமிழன்" என்ற இனவாத "தேசிய" அடையாளமானது, வெள்ளாளியச் சாதியக் சமூகக் கட்டமைப்பு என்ற அடிப்படை உண்மையை, இந்தத் தேர்தல் வெளிப்படையான சாதி மூலம் தன்னை தகவமைத்திருக்கின்றது. ஒவ்வொரு சாதிக்கும் அதிகாரத்தில் பங்குகொடுத்ததன் மூலம், வெள்ளாளிய சாதிய சமூக ஓடுக்குமுறையிலான சமூக அமைப்பை, தேர்தல் ஜனநாயக வடிவம் மூலம் பலப்படுத்தி இருக்கின்றது. இதன் மூலம் "தேசம் - தேசியம் - தன்னாட்சி" என்று கூறி வந்த "தமிழனின்" இனவாத அரசியலானது, நடந்த உள்ளூராட்சி தேர்தல் மூலம் வெளிப்படையான வெள்ளாளிய சாதிய அரசியலாகியது.