Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

கண்டியிலும் நீர்கொழும்பிலும் வடக்கு கிழக்கு போராட்டங்களிற்கு ஆதரவு தெரிவித்து சமவுரிமை இயக்கம் அடையாள சத்தியகிரகப் போராட்டம்!

இன்று 20-4-2017 வடக்கு கிழக்கில் தமது அபகரிக்கப்பட்ட நிலங்களை மீள வழங்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், அனைத்து வலிந்து காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்தக்கோரியும் போராடும் மக்களிற்கு ஆதரவு தெரிவித்து கண்டி மற்றும் நீர்கொழும்பில் சமவுரிமை இயக்கம் ஒருநாள் அடையாள சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

தென்பகுதி மக்களிற்கு வடக்கு கிழக்கு மக்களின் நியாயபூர்வமான போராட்டங்களை ஆதரிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.