இந்தியாவின் உதவியுடன் வடமாகாணசபையை இயக்க முடியும் - ஐ.தே.கட்சி
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 14 April 2014
- Hits: 2278
அரசாங்கம் தற்போது வடமாகாண சபைக்கு எதிரான அடக்குமுறையை கையாண்டு வருகிறது. வடமாகாண சபையை சுயாதீனமாக செயற்பட மத்திய அரசாங்கம் தடையாக இருக்கிறது. இந்தியாவின் உதவியுடன் வடமாகாண சபையை தனித்து இயங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம் என்று ஐக்கிய தேசிய கட்சி எச்சரித்துள்ளது
நீதி தேவதை வடிவிலான எங்கள் நீதி அமைச்சர்?..
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 13 April 2014
- Hits: 2233
நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபல சேனவின் மரண பயம் கொண்ட நடவடிக்ககைகளாலேயே மன்னிப்பு கேட்டேன் எனக் கூறியுள்ளார் விஜிததேரர்.
இந்நிலையில் பொறுத்தது போதும் தக்க நடவடிக்கை வேண்டுமென…. அசாத்சாலியும், பொதுபல சேனாவின் நடவடிக்கையை மேலிடம் கொண்டு செல்லப் போகின்றேன் என….ரிசாத் பதியூனும்பொலிஸ் நடவடிக்கையை எதிர்பார்க்கின்றேன்!... நீதி அமைச்சரும் மகிந்த சரணம் கச்சாமி போடுகின்றார்கள்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் நீதிமன்றில் வழக்குத் தொடர முடியுமாம் - பாதுகாப்பு அமைச்சு!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 13 April 2014
- Hits: 2228
தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பாற்பட்டவர்கள் தங்கள் பக்க நியாயங்களை நீதிமன்றில் வெளிப்படுத்தி. குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியுமென பாதுகாப்பு அமைச்சு ஆலோசனையும் சொல்கின்றது. இது மட்டி-மடையன் கதைபோலதான் உள்ளது.
என்கவுண்டர் பாணியிலான கொலைகள்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 13 April 2014
- Hits: 2307
"சிறிலங்காப் படைகளால் தேடப்பட்டு வந்த கோபி அப்பன் தேவிகன் ஆகிய மூவரும் நெடுங்கேணிப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நெடுங்கேணி வெடிவைத்தகல்லுப் பகுதி காட்டுப் பகுதியை அண்டிய வீடொன்றைச் சுற்றி வளைத்த போது இவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாகவும்இ அப்போது இடம்பெற்ற மோதலில் கோபி எனப்படும் செல்வநாயகம் கஜீபன் தேவிகன் எனப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் அப்பன் எனப்படும் நவரத்தினம் நவநீதன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது".
தனது அரசியல் நெருக்கடிகளை மூடிமறைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 12 April 2014
- Hits: 2394
நெடுங்கேணி பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தின் இலங்கை தலைவர் என கருதப்படும் கோபி மற்றும் அவருடன் சேர்த்து மேலும் இருவரை சுட்டுக் கொன்றுள்ளதாக அரசு திடீரென அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் 50க்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் அறிவித்திருந்தார்.
ஆளும் வர்க்கத்துக்கு இனவாதம் மட்டுமல்ல, புலியும் தேவைப்படுகின்றது!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 12 April 2014
- Hits: 2266
இலங்கை ஆளும் வர்க்கம் இனவாத மூலமாக மட்டும் மக்களை அடக்கியாள முடியாத நிலையில், இன்று புலி தேவைப்படுகின்றது. 30 வருடமாக புலியைக் காட்டி ஆண்டவர்கள், புலியை தோற்கடித்தன் மூலம் அரசியல் ரீதியாக தனிமைப்பட்டு விட்டனர். பெரும்பான்மையின மக்களுக்கு எதிரியை காட்டி ஏமாற்ற முடியதா நிலையில், அவர்கள் அரசிற்கு எதிராக அணிதிரண்டு போராட எழுவதனை தவிர்க்க, மீண்டும் புலி தேவைப்படுகின்றது. அதாவது மக்கள் தமது எதிரியாக அரசைப் பார்க்காமல் இருக்க வேண்டுமென்றால், மக்களுக்கு ஒரு எதிரியை உருவாக்கிக் கொடுக்க வேண்டி நிர்ப்பந்தத்தில் அரசு தடுமாறுகின்றது. புதிய புலி வேட்டை, இப்படித்தான் மேடையில் அரங்கேறியது.
இனவாதத்தை முன்னிறுத்தி சிந்திப்பது, செயற்படுவது சமூக விரோதமானது
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 6
- Created: 10 April 2014
- Hits: 1277
இனரீதியான ஒடுக்குமுறையை, அதே இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இனரீதியாக எதிர்கொள்வது சரியானதா!? இது இனவொடுக்குமுறைக்கு தீர்வைத் தருமா? இனரீதியாக ஒடுக்குபவனின் அரசியல் பொருளாதார நோக்கத்தை ஆராய்ந்து அதற்கு எதிராக போராடுவதற்கு பதில், இனவொடுக்குமுறை வடிவத்தை மட்டும் எதிர்க்கின்ற இனவாத அரசியல் தவறானது. இது அதே இனவாதத்தைப போற்றி தனதாக்குவதுடன், ஒடுக்குபவனின் அரசியல் பொருளாதார நோக்கத்தை பாதுகாக்கின்ற படுபிற்போக்கான அரசியலாகி விடுகின்றது.
நாடு பொது பல சேனவின் இனவெறிக் களுஞ்சியமாகியுள்ளது.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 10 April 2014
- Hits: 2227
மகிந்தா இனவெறிக்கு குழலூதும் கண்ணனாகியுள்ளார்!
ஜாதிக பல சேனா எனும் அமைப்பு நேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் காடையர்கள் போல் புகுந்த பொது பல சேனா அமைப்பினர் ஊடகவியலாளர் மாநாட்டை தடுத்து நிறுத்தியதோடு, வந்திருந்த ஒரு சில பிக்குமாரையும் மௌலவிமாரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.
மன்னார் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வில்பத்து பிரச்சினை உட்பட பொது பல சேனாவினர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தெளிவு படுத்துவதற்காகவே இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் பக்ஸ் மூலம் அறிவித்திருந்தனர்.
குறுங்குழுவாதமும், தனிநபர்வாதமும் சமூகத்துக்கு எதிரானது
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 08 April 2014
- Hits: 2202
இன்று கொள்கைளும், நோக்கங்களும், நடைமுறைகளுமற்ற, உதிரி வர்க்கங்களைக் கொண்டு குறுங்குழுக்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இதேயடிப்படையிலேயே தனிநபர்கள் கூட அரசியல் குதர்க்கங்களையும், தர்க்கங்களையும் முன்வைத்து, தங்களை வேறுபடுத்துவதன் மூலம் தம்மை முன்னிறுத்துகின்றனர். இவை அனைத்தும் இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து முன்னெடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் தோற்றத்துடன், அதற்கு எதிரான ஒன்றாக முனைப்பு பெற்று வருகின்றன.
இவ்வார நிகழ்வுகளின் சாரம்! (6/4/14)
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 06 April 2014
- Hits: 2235
இறந்தவர்களுக்கும் அரசு தடை விதித்துள்ளது!
இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இறந்தவர்களின் பெயர்களும் வெளியாகியுள்ளன. இவர்களால் தடை செய்யப்பட்டுள்ள கருணாநிதி துரைரத்தினம் எனும் நபர் கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் 19 ம் திகதி மரணமடைந்துள்ளார் அவரது மரண அறிவித்தல் மற்றும் கண்ணீர் அஞ்சலி இணையங்களில் வந்துள்ளதை அரசின் துப்பறியும் பிரிவின் கவனத்திற்கும் சமர்ப்பணமாக்கலாம். இனிமேல் கட்டுநாயக்காவில் துரைரத்தினம் எனும் புலமபெயர் நபர் யாரேனும் பிரயாணம் செய்ய முற்பட்டால் அவர் கதி அதோ கதிதான். இவர்களால் அவசரம் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கோபி புலிகள் அமைப்பு பற்றியும் முன்னுக்குப் பின் முரணனான பல கிண்டக்க முண்டக்கங்க சோடனைகளையும் காணமுடிகின்றது.