உரிமை மறுக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய இனங்கள் ஓரணி திரள்வோம். மேதின அழைப்பு!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 25 April 2014
- Hits: 2457
உழைக்கும் மக்களாகிய நாங்கள் எமது பின்னடைவுகளையும் தோல்விகளையும் பற்றி மட்டுமே கவலைபடுகின்றோம். அதற்கான காரணங்களை கண்டறியாது விடுகின்றோம். மூளை உழைப்பாளிகள் மட்டுமன்றி உடல் உழைப்பாளர்களில் சிலரும் இன்னும் தங்களை தொழிலாளர்கள் என்று ஏற்றுக் கொள்வதில்லை. தங்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்றும் ஏற்பதில்லை. தற்போது மூளை, உடல் உழைப்பாளர்கள் அனைவரும் புதிய பாணிகளில் சுரண்டப்படுவதுடன் பிறரை நம்பி வாழும் புதியவகை ஏழைகளாக்கப்பட்டுள்ளனர் என இலங்கை கொம்யூனிஸ்ட்; ஐக்கிய கேந்திரத்தின் இணை அமைப்பார்களான தோழர் டபில்யூ.வீ. சோமரத்ன தோழர் இ. தம்பையா வெளியிட்டுள்ள மேதின அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அத்துடன் மக்கள் தொழிலாளர் சங்கம் காவத்தையில் ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டத்தில் பங்குகொள்ள கேந்திரம் முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன் அதில் பங்குகொள்ளுமாறு ஜனநாயக, இடதுசாரி அமைப்புகளுக்கும் நபர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரிந்த தோழர்களுடன் இணைந்து.... மாற்றத்துக்காக!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 25 April 2014
- Hits: 2356
மே தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய முறையிற் பல பிரசாரங்களை முன்னிலை சோசலிசக் கட்சி அதன் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்ளுகின்றது. இதன் ஒரு அங்கமாக , நேற்று (24.04.2014), இடதுசாரிய கட்சிகளுடன்- தமிழ் தளத்தில் மிக முக்கிய கட்சியான புதிய ஜனநாயக (மா- லெ) கட்சி உட்பட்ட கட்சிகளுடன் இணைந்து தலைநகர் கொழும்பில் வெற்றிகரமான கருத்தரங்கு ஒன்றை நடாத்தியது. இதன் தொடர்ச்சியாக, ஐக்கிய சோசலிசக் கட்சி (United Socialist Party), சோசலிசக் கட்சி (Socialist Party), சோஷலிச நடைமுறைக் கூட்டுவாழ்வு (Praxis Collective) போன்ற கட்சிகளுடன் இணைந்து, கொழும்பில் நடந்தது போல"மே தினத்தில் பச்சோந்தியும் சிவப்பாகும்" என்ற கருப் பொருளில் கருத்தரங்கும் உரையாடலும் கண்டி நகரில் ஒழுங்கு செய்துஉள்ளது.
எவன்டா சொன்னான் என்னாட்சியில் இன-மதவாதம் இருக்கென்று?...
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 25 April 2014
- Hits: 2398
றோட்டால் போகும் வெறிகாரனைப் பார்த்து சனங்கள் சிரித்தால்..., பார் எனக்கு வெறியாமென இதுகளும் சிரிக்குதுகள் என சனத்தைப் பார்த்து கோபப்படும் சண்டித்தனப் போதையர்களும் உண்டு. இதுபோல் நாடே கை கொட்டிச் சிரிக்கும் அளவிற்கு, நாட்டில் பொதுபல சேனாவின் இன-மத-வெறியுடன் கூடியதும், சாராய-மதுபோதையுடன் கூடியதுமான காடைத்தன கானமழை பொழிந்து கொண்டிருக்கையில், எவன்டா சொன்னான் என்னாட்சியில் இன-மத-வெறி இருக்கின்றதென மகிந்த ராஜபக்சரும் கோபப்படுகின்றார். உண்மையில் இவ்வெறியர்களில் முதலாமவர், மதுவெறியிலும், நம்ம ஜனாதிபதி சுத்த-இன-மத வெறியிலும் உளறுகின்றார்கள்…
தோழர் தவராஜாவின் மரணம் உழைக்கும் மக்களின் இழப்பாகும்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 23 April 2014
- Hits: 2533
தனக்காக மட்டும் வாழாது, பிறருக்காக வாழ்தலே உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற மனிதர்களின் உயரிய பண்பு. தங்கள் வாழ்கையில் இருந்தும், தம்மைச் சுற்றிய மனிதர்களின் வாழ்க்கை சார்ந்தும், சமூக உணர்வு பெற்றவர்கள், சோசலிச சமுதாயத்தை படைக்கப் போராடுவதன் மூலம் மகிழ்சியான சோசலிச வாழ்கையை உருவாக்க முனைகின்றனர்.
சுரண்டலும், சாதியமும், இனவாதமும், ஆணாதிக்கமும்.. கொண்ட இன்றைய வாழ்க்கை முறை எற்படுத்தும் மனித அவலங்களையும் துயரங்களையும் இல்லாதொழிக்க, உழைக்கும் வர்க்க உணர்வு பெற்ற போராட்டமே மிகச் சிறந்த மனிதர்களை மட்டுமல்ல முன்னுதாரணம் மிக்க வாழ்க்கையையும் உருவாக்கின்றது.
ஆசியாவின் ஆச்சர்யம்!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 23 April 2014
- Hits: 3572
அப்பப்பா என்னமா புழு(ங்)குது
யுத்தம் முடிந்தது சத்யம் ஜெயித்தது
புத்த பகவானின் கருணையோ கருணை
பிதற்றித்திரியும் பக்ச நாடு நா(யா )டாய் !
வாய் திறந்தால் அபிவிருத்தி
வயிற்றுப் பசியாலோ மக்கள் அவதி
மந்திரிக்கும் தொண்டர்களுக்கும் சலுகை
வகை தொகை இன்றி மக்கள் பஞ்சத்தால் அழுகை!
வீடு, காணி, சம்பள உரிமைகளை வென்றெடுக்க பலமான தொழிற்சங்கத்தைக் கட்டுவோம். மக்கள் தொழிலாளர் சங்க மே தின அறைகூவல்!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: மக்கள் தொழிலாளர் சங்கம்
- Created: 23 April 2014
- Hits: 1091
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மே தினக் கூட்டமும் கருத்தரங்கும் வீடு காணி சம்பள உரிமைகளை வெற்றெடுப்போம் என்ற தொனிப்பொருளில் காவத்தை கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் காலை 10 மணி முதல் இடம்பெற உள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா குறிப்பிட்டுள்ளார்.
மேதினம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் எட்டு மணித்தியாலம் மட்டுமே வேலை நேரம் என்ற உரிமையை வென்றெடுத்த தொழிலாளர் போராட்ட மேதினத்தை நினைவூட்டும் இவ்வேளையில் அவ்வுரிமையை இழந்து விட்ட நாம் இன்று பல மணிநேரம் ஓய்வின்றி வேலை செய்து மாய்கிறோம். ஆரம்பத்தில் காடு வெட்டி மேடு திருத்தி பெருந்தோட்டங்களை அமைத்து பிரிட்டிஷ் கம்பனிகளுக்கு உழைத்த கொடுத்த பரம்பரைகள் இன்றில்லை. பின்னர் அரச நிறுவனங்களுக்கும் உழைத்து கொடுத்த பரம்பரைகள் போய், இன்று பெருந்தோட்ட பல்தேசிய கம்பனிகளுக்கும் சிறுதோட்ட உடைமையாளர்களுக்கும் உழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். எமது பரம்பரையான வர்க்க அடையாளம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்பதாகின்ற அதே வேளை எமது அதிகப் பெரும்பான்மையினரின் இன அடையாளம் மலையகத் தமிழர்களே.
இலங்கையின் மிக முக்கிய இடதுசாரியக் கட்சிகள் இணைந்து நடாத்தும் மே -தினக் கருத்தரங்கு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 April 2014
- Hits: 2297
- புதிய ஜனநாயக (மா -லெ ) கட்சி
- புதிய சமத்துவ சமூகக் கட்சி
- முன்னிலை சோசலிசக் கட்சி
- இலங்கை முன்னிலைக் கட்சி
ஆகிய கட்சிகள், மேதினத்தை முன்னிட்டு நாடுதழுவிய முறையிற் பல பிரசாரங்களை மேற்கொள்ளுகின்றன. இதன் தொடர்ச்சியாக, கட்சிகள் இணைந்து:
"மே தினத்தில் பச்சோந்தியும் சிவப்பாகும்" என்ற கருப் பொருளில் கருத்தரங்கும் உரையாடலும் ஒழுங்கு செய்துள்ளன .
சமவுடமை வாழ்க்கை – சமவுடமை சமுதாயம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 21 April 2014
- Hits: 2420
இன்னுமொரு சர்வதேச தொழிலாளர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாங்கள் உங்களை நாடி வந்திருப்பது பெரிய செய்தியொன்றின் ஆரம்பத்திற்காகத்தான்.
எமது நாட்டில் அநேகமானோர் சர்வதேச தொழிலாளர் தினத்தை மே தினம் என்றே அழைக்கின்றனர். தலைநகர் கொழும்பு வீதிகளை அதிரச் செய்யும் விதத்தில் மே முதலாம் திகதி நடக்கும் ஊர்வலங்கள் பிற்பகலில் நடக்கும் அரசியல்வாதிகளின் ஆவேசப் பேச்சுக்களினாலும், அவற்றில் சில இசை நிகழ்ச்சிகளுடனும் நிறைவு பெறும். வாராந்திரப் பத்திரிகைகள், தினசரிப் பத்திரிகைகள் போன்ற அனைத்து பத்திரிகைகளும் மே தினத்திற்காக பல பக்கங்களை ஒதுக்குகின்றன. பெரும்பாலும் புறக்கோட்டையில் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர் தோழர்களின் துன்ப ரேகைகள் படர்ந்திருக்கம் முகங்களுடனான புகைப்படங்கள் அவற்றை அலங்கரிக்கின்றன. ஆனால் அந்த மே தின ஊர்வலங்களில் எப்போதாவது அந்த தோழர்களை நீங்கள் கண்டதுண்டா?
சுவீசில் தமிழ், சிங்கள மக்கள் குடும்பமாக பங்கேற்று புதிய கலாச்சாரத்தை தொடங்கி வைத்த நிகழ்வு!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 21 April 2014
- Hits: 2620
சமவுரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். நிகழ்வின் தொடக்கமாக "மலரும்பூக்கள்" என்ற அமைப்பின் உதவியும் அதன் செயற்பாடு முறைபற்றியும் விபரிக்கப்பட்டது. தொடர்ந்து இவ்வுதவிப்பணி கிடைக்கும் பிள்ளைகள் Skype மூலம் இவ்வுதவியின் பயன்பற்றியும் அதற்கான நன்றியையும் தெரிவித்தனர். அப்பணிகளுக்கு பொறுப்பாக நாட்டில் இருந்து ஒழுங்கமைப்போர் மேலதிக விளக்கங்களையும் இப்பணியின் அவசியம் பற்றியும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அறிவு என்பது என்ன? -மார்க்சிய கல்வி -06
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 6
- Created: 21 April 2014
- Hits: 4773
இயற்கைக்கும், உழைப்புக்கும், நுகர்வுக்கும் இடையிலான மனித உறவுகள் பற்றிய எதார்த்தமே அறிவாகும். இயற்கையில் இயற்கையாக வாழ்தல் அறிவல்ல. இயற்கையைச் சார்ந்து வாழும் மிருகங்கள் கொண்டிருக்கக் கூடிய வாழ்தல் முறை, அதன் அறிவின் பாலானதல்ல. மாறாக தன்னுணர்வு இன்றி அவை செயற்படுகின்றது. இயற்கையுடன் இணைந்த தகவுத் தன்மை கொண்டு இயங்குகின்றது. இயற்கையின் சூழலுடன் படிப்படியாக தன் நிலை மறுத்தல் மூலம் தன்னை இசைவாக்கிக் கொள்கின்றது.