மஹிந்தவின் வாசஸ்தலத்துக்கு முன்னால் போராடிய 15 மாணவர்கள் கைது !
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 16 May 2014
- Hits: 2518
மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகளைக் கண்டித்தும், இணைந்த சுகாதார பட்டப்படிப்பை மூன்று வருடங்களாக குறைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால், பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் இணைந்த சுகாதார கல்விபீட மாணவர்கள் சங்கம் மற்றும் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (16.05.20014) முற்பகல் நடாத்தப்பட்டது.
மக்கள் பண்பாட்டுக் கொள்கை
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 15 May 2014
- Hits: 3477
மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் இம்முறை (14.05.2014) பௌர்ணமி ஒன்றுகூடலில் கழகத்தின் செயலாளர் பா. மகேந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் “பண்பாட்டுக் கொள்கை” பற்றிய அடிப்படை ஆவணம் ஏற்று அங்கீகரிக்கப்பட்டது. அந்த ஆவணத்தின் உள்ளடக்கம் பின்வருமாறு:
மக்கள் எனப்படுவோர்
உலக இயக்கத்துக்கு உந்து சக்தியான அதேவேளை தங்களின் உழைப்பின் பலாபலன்களில் இருந்து மூலதன உடைமையாளர்களினால் அந்நியமயப்படுத்தப்பட்டிருக்கும் பரந்துபட்ட ஏக பெரும்பான்மையான உழைப்பாளர்கள், தேசிய, இன, மத, பால், சாதி மற்றும் பலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் உட்பட்டு ஆதிக்க சக்திகளினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ விலங்கிடப்பட்டிருக்கும் அனைத்து மனிதர்களையும் உள்ளடக்கிய திரளை மக்கள் என்ற சொற்பதத்தில் அடங்குவதுடன் அவர்கள் அவ்விலங்குகளை உடைத்தெறிந்து விடுதலை அடையும் பெருமூச்சுடன் செயற்படுபவர்களாவர்.
இலங்கை ராணுவம் மாணவர்களுக்கு கட்டாய பௌத்த தலைமைத்துவ பயிற்சியளிக்கும்"
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 15 May 2014
- Hits: 2180
இலங்கையில் அனைத்து இடைநிலைக் கல்வி நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு ஒராண்டு பௌத்த தலைமைத்துவ பயிற்சியை இலங்கை இராணுவம் அளிப்பதற்கான முன்னெடுப்புக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டின் இரண்டு அதியுயர் பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரியப் பீடத்தினர் இது குறித்து வைத்த பிரேரணைகளை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த பீடத்தின் பேச்சாளரான மெதகம தம்மானந்த தேரர் பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.
தேசியம் கொலை செய்யும்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 15 May 2014
- Hits: 2464
அய்ரோப்பாவில் நிலபிரபுத்துவ பொருளாதார முறையின் கீழ் அரசுகள் இருந்தன. நாடு, தேசம் என்ற ஒன்று அந்த பொருளாதார முறையின் கீழ் இருக்கவில்லை. அரசுகள் ஒன்றுடன் ஒன்று போர் செய்தன. மக்கள் பெரும் நிலப்பிரபுக்களின் விவசாய பண்ணைகளில் அடிமைகளாக இருந்தனர். நிலப்பிரபுக்களின் நிலங்களில் வேலை செய்தனர். நிலப்பிரபுக்களிற்கு சொந்தமான வீடுகளில் வசித்தனர். கத்தோலிக்க திருச்சபை, பால சிங்கமும் பசுவின் கன்றும் பக்கம் பக்கம் நின்று நீர் பருகும் காலம் வரும். அதுவரை ஒரு கன்னத்தில் அடித்தால் மறுபேச்சின்றி மற்றக்கன்னத்தை காட்டுங்கள் என்று நிலப்பிரபுக்களின் அடக்குமுறைகளிற்கு, பொருளாதார சுரண்டல்களிற்கு பணிந்து போகச் சொல்லி மூளைச்சலவை செய்தது.
மக்கள் கிளர்ச்சிக்குப் பயப்படும் இனவாத மஹிந்த அரசும் - தமிழ் இனவாதிகளும்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 14 May 2014
- Hits: 2458
அனைத்துப் பலகலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த வைகாசி 7 ஆம் திகதி மாணவர்களின் உரிமைகளை முன்னிறுத்தியும், அவர்களின் மனித உரிமைகளைக்கோரியும் மஹிந்த ராஜாபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு முன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடாத்தினார்கள். தற்போது வெளிவந்துள்ள தகவல்களின் படி, இப்போராட்டமானது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தலைமையினான இலங்கையின் பாதுகாப்புக்குப் பொறுப்பான போலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வு நிறுவனங்களின் தலைமைகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையின் அதிஉச்ச பாதுகாப்பு வலயத்திலுள்ள ஜனாதிபதி வாசஸ்தல பகுதிக்குள் எவ்வாறு திட்டமிட்ட முறையில் மாணவர்கள் புக முடிந்து என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அனைத்துப் பாதுகாப்புப் பிரிவினரையும் பணித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிகின்றன.
ருகுணு பல்கலைக்கழக மாணவர்களிற்கு உயர்கல்வி அமைச்சரின் அச்சுறுத்தல்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 14 May 2014
- Hits: 2440
எதிர்வரும் நாட்களில் ருகுணு பல்கலைக்கழகத்தில் “தேசத்தின் மகுடம்” கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாணவர் எவராது இடையூறு விளைவித்தால் கடும் தண்டனையினை அனுபவிக்க வேண்டியிருக்கும். இடையூறு விளைவிக்கும் மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினரும் இந்த நாட்டில் இடம் கிடையாது. வேறு நாட்டில் தான் வாழ வேண்டியிருக்கும் என உயர்கல்வி அமைச்சர் S. B. திஸ்சநாயக்கா எச்சரித்துள்ளார்.
அலரி மாளிகைக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள்: பொலீஸ் ஊடகப் பேச்சாளர்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 14 May 2014
- Hits: 2354
நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து, அலரி மாளிகைக்கு முன்னாள் கடந்த 7ம் திகதி மறியல் மற்றும் ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு (ICUF) மாணவர்கள் கொழும்பில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற உலக இளைஞர் காங்கிரஸ் முடிந்ததும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.
கல்வி- மற்றும் தமிழ் மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போர் மீது தாக்குதல் !
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 13 May 2014
- Hits: 1054
இலங்கை அரசின் கல்விக் கொள்கை, மனித உரிமை மீறல்கள் , மாணவர்களில் கல்வி கற்கும் உரிமை மறுப்பு, கல்வியைத் தனியார் மயப்படுத்தல் போன்ற மாணவர் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்முனைப் போராட்டங்களை பலவடிவங்களிலும் நடாத்தி வருகின்றது. இப்போராட்டகளுடன், யாழ். மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதற்கு எதிரான போராட்டங்களும் இணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது.
உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு தடைவிதித்தமையை வன்மையாக கண்டிக்கிறோம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 May 2014
- Hits: 2444
இம் மாதம் 12ம் திகதி முதல் ஒரு கிழமைக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் வடக்கில் யுத்தத்தால் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளமையை வன்மையாக கண்டித்து முன்னிலை சோசலிசக் கட்சி வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது:
யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதை தடுப்பதன் மூலம் மீண்டும் ஒரு பிரிவினைவாதம் தோன்றுவதற்கும் மற்றும் விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாவதை தடுக்க முடியாது ஆகிவிடும் என்று கூறி வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை இப்படியான அச்சுறுத்தல்கள் மூலம் இந்த அரசாங்கம் மீறிவருகின்றது.
மகிந்தாவின் வாசஸ்த்தலத்தின் முன்னாள் போராட்டம் நடாத்திய மாணவ தலைவர்களிற்கு நீதிமன்ற அழைப்பாணை!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 May 2014
- Hits: 2142
இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ வாசஸ்த்தலத்திற்கு முன்பாக கடந்த 07/05/2014 புதனகிழமை அன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது. இதே காலப்பகுதியில் அகில உலக இளைஞர் மகாநாடு கொழும்பில் மகிந்த அரசால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனை காரணம் காட்டி பொலீசாரால் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
மகிந்த ராஜபக்ஸ குடும்ப அரசால் முன்னெடுகப்பட்டுக் கொண்டிருக்கின்ற நவதாராளமயவாத பொருளாதாரக் கொள்ளையின் ஒரு அங்கமாக இலவசக் கல்வியனை இல்லாதாக்கும் உலக வங்கியின் திட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் நவதாராளவாத கல்விக் கொள்கைக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்த வண்ணமுள்ளது. அதாவது இலவசக் கல்வியை இலங்கையின் அனைத்து மக்களிற்கும் உறுதி செய்வதே இந்த தொடர்ச்சியான போராட்டங்களின் நோக்கமாகும். கல்வி என்பது பணம் படைத்தவனுக்கே என்ற நிலையினை நோக்கி நவதாராளவாத கல்விக் கொள்கை உலக வங்கியால் இன்று உலகெங்கும் முன்தள்ளப்பட்டுகின்றது. பண வசதி அற்றவர்கள் நவீன அடிமைகளாக மாற வேண்டிய நிலையினை நோக்கிய அபாயத்தில் எமது எதிர்கால சந்ததி உள்ளது.