இலங்கையின் புதிய விதைகள் சட்டம்: விவசாயிகள் எதிர்ப்பு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 05 June 2014
- Hits: 2255
சனத்தொகைப் பெருக்கம், பருவநிலை மாற்றங்கள் இப்படியான சவால்களை எதிர்கொண்டிருக்கின்ற உலக நாடுகளுக்கு விவசாயத்திற்குத் தேவையான விதைகளை விருத்தி செய்வதும் பாதுகாப்பதும் இன்று பெரும்பிரச்சனைக்குரிய விடயமாகியுள்ளது.
இலங்கையில் இது சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
மீண்டும் ஒரு யுத்தத்தை எதிர்கொள்ளப் போகிறது யாழ்ப்பாணம்! அதிர்ச்சி தரும் தகவல்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 05 June 2014
- Hits: 2448
கடந்த காலப் போரின் பின்னால் அந்தப் போர் நடந்த பூமியில் விஸ்வரூபம் எடுக்கப் போகின்றது இயற்கைக்கும் எமக்குமான கொடிய போர். இப் போர் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
அதவாது, உலகின் சகல மனிதர்களுக்கும் அவர்களது உயிர் வாழ்க்கைக்கும் மிகவும் அத்தியாவசியமானது குடிநீர். அந்த வகையில் யாழ்.குடாநாட்டிலும் இன்றுள்ள பிரச்சினைகள் எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு நீர் விநியோகமும் சிக்கலானதாக அமைந்துள்ளது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பல நாடுகள் சந்தித்த இயற்கை மாற்றத்துடனான எதிர்பார்ப்புக்கள் பற்றி எமக்கு நன்றாகவே தெரியும். அவ்வாறானதொரு குடிநீர் குறித்த பெரும் பிரச்சினைக்கு இப்போது யாழ். குடாநாட்டு மக்கள் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.
'கல்வி வெள்ளை அறிக்கை" வரலாற்றை மறந்த ரணில்!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 04 June 2014
- Hits: 615
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இலவசக் கல்வியையும், அதன் மதிப்பையும் பற்றி இந்நாட்களில் பிதற்றித் திரிகிறார்.
திடீரென தூக்கத்தில் விழித்தவரைப் போன்று ஏதேதோ கூறுகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அரசாங்கம் செயற்படுவதாகவும் அதன்படி, கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படுவதாகவும் கூறும் அவர், இவற்றை தடுப்பதற்காக சமூகமுறையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமெனவும் கூறுகிறார். இதில் முக்கியமான விடயம் என்னவெனில், அவர் வரலாறை மறந்துவிட்டிருப்பதுதான்.
மனிதப்பண்டங்கள்........... சிறுகதை
இப்ப ஆக்களை விட வாகனங்கள் தான் கூடிப்போச்சு. சும்மா நாட்களிலேயே கார்கள் விட இடமில்லை. அதுவும் சனிக்கிழமையெண்டால் சொல்லவா வேண்டும்...? சுற்றிச் சுற்றிக் களைச்ச எனக்கு கடைசியிலே ஓர் இடம் கிடைச்சது. காரை விட்ட இடத்துக்கு முன்னால் ஒரு சின்ன மரக்கூடல், அதுக்கு கீழே இருக்க நாலைந்து வாங்குகள். அதிலேயிருந்து சில பேர் வைனும், பியரும் குடித்துக் கொண்டிருந்தார்கள். சில பேர் புகைத்துக் கொண்டிருந்தார்கள்.
வேலையில்லாத ஆக்கள், குடிகாரர்கள், குடும்பத்தைத் துலைத்தவர்கள், வாழ்க்கையை வெறுத்தவர்கள், நிரந்தர வீடில்லாதவர்கள், என்று பல தரப்பட்டவர்கள் இப்படிக் கூடி சேர்ந்து குடிப்பது இங்கே ஒரு வழக்கம், இவர்கள் எதிலும் சுதந்திரமானவர்கள் சந்தோசமானவர்கள் எண்டும் சொல்லலாம்.
யாழ். நூலக எரிப்பும், சுஜாதாவின் பார்ப்பன வெறியும்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 01 June 2014
- Hits: 2566
இந்த நாட்களில் தான் யாழ்ப்பாண பொதுசன நூலகம் கிழட்டு நரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அடியாட்களான காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியு கும்பலால் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலையின் ஏட்டுச்சுவடி, ஆனந்த குமாரசுவாமியின் ஆய்வுகள், பேராசிரியர் ஜசாக் தம்பையாவின் நூல்கள் போன்ற 97000 நூல்கள் தீயில் எரிந்து போயின. நூலகம் எரிந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் பிதா. டேவிட் மரணமடைந்தார். நூலகத்தினை எரித்த நெருப்பு அடங்கிய போதும் தமிழ்மக்களின் மனதில் எழுந்த கோபம் ஒரு போதும் அணைந்துவிடவில்லை.
மதப்பயங்கரவாதி மோடியும், கொள்ளைக்காரி ஜெயலலிதாவும் கிளிநொச்சி சிறிதரனின் நம்பிக்கை நட்சத்திரங்களாம்!!!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 29 May 2014
- Hits: 2517
இந்தியாவின் அடுத்த பிரதமராக சவால்களையே சாதனைகளாய் மாற்றி இந்திய மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்ற குஜராத்தின் பூகம்ப மலர் நரேந்திரமோடி அவர்கள் அரியணை ஏறுவது கண்டும் அவர் தலைமையின் கீழ் அமையும் இந்திய பெரும் முதற்சபையில், தமிழர்களின் உணர்வு பூமியாம் தமிழ்நாட்டில் இருந்து தனித்தொரு பெண்ணாய் வரலாற்றுப் பக்கங்களில் சாதனைகளுக்குச் சொந்தக்காரியாய் திகழும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரின் வழிகாட்டலின் கீழ் நிகரற்ற பெரு வெற்றிபெற்று தமிழர் குரலாய் செல்ல இருக்கும் பெரு மாண்புக்கும், போர் நடந்த ஈழத்தமிழ் மண்ணில் இருந்து தமிழ் மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையை விளங்கிக் கொள்வதற்காக ஒரடி முன்னால்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 28 May 2014
- Hits: 3380
தனிநபரொருவரின் ஏக அதிகாரங்கள் அதவாது நிறைவேற்று ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரங்கள் மற்றும் அவரது குடும்ப, உறவினர் நலன்சார்வாதம் என்பவற்றால் கட்டமைக்கப்பட்ட மஹிந்த ஆட்சியின் சர்வாதிகாரத்திலிருந்தும் நாட்டின் மீதான வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்தும் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான கருத்தாடலை நோக்கி இலங்கை மக்களின் கவனம் திரும்பியுள்ளது.
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாமே என பிரகடனப்படுத்திக் கொண்டு, தனிநபர் படுகொலை, சாதாரண மக்களை பலி எடுத்தல் போன்ற தவறாக வழி நடத்தப்பட்ட போராட்ட தந்திரோபாயங்களை முன்னெடுத்தப் போதும் 2009 மே வரை அரசிற்கு எதிராக ஆயுத நடவடிக்கைகளை முன்னெடுத்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை வெளிநாட்டுச் சக்திகளின் கூட்டு ஒத்துழைப்புடன் தோற்கடித்த மஹிந்த அரசாங்கத்தின் இராணுவ வெற்றிவாதத்தினால் மக்களின் கவனத்திற்குரிய விடயம் தொடர்பான விவகாரங்கள் பலவீனமான தன்மை மேலும் மோசமடைந்தது.
கனவுலகிலிருந்து நனவுலகிற்கு! அதைப்பற்றிப் பேசுவோம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 26 May 2014
- Hits: 2692
இந்நாட்களில் பிரபலமான தொனிப்பொருள் எது?
சமீபகாலமாக நாட்டில் பேசப்பட்ட தொனிப்பொருட்களில் முக்கிய இடத்தை வகித்தது போதைப்பொருள் பாவனை. நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்யும் பொது வேட்பாளர் குறித்த பிரச்சினை. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி கொண்டு வந்தாலும், அதையும் கடந்து, அதிகாரமாற்றம், ஆட்சிமாற்றம் குறித்துப் பேச்சுக்களும் அடிபடுகின்றன. சிலர் அதற்காக பொதுவேட்பாளரைத் தேடுகின்றனர். இவற்றுக்கிடையில் எந்த வித்தியாசமுமில்லை.
மலையகத் தோட்டங்களில் 'நவீன அடிமைமுறை'
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 26 May 2014
- Hits: 2252
உலகில் நவீன அடிமை முறைகளில் ஒன்றான கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் தொழில்முறைகளை ஒழிப்பதற்காக உலக நாடுகளை சட்டப்படி நிர்ப்பந்திக்கும் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றில் அரசுகள் கைச்சாத்திட வேண்டும் என்று அடிமைத்தனம், குடியேறிகள் மற்றும் மனிதக் கடத்தல்கள் தொடர்பாக ஆராயும் ஐநாவின் சுயாதீன நிபுணர்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
உலகில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என சுமார் இரண்டு கோடிப்பேர் கட்டாய வேலைவாங்கல் முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா கூறுகின்றது.
'லாபங்களும் வறுமையும்: கட்டாய தொழிலின் பொருளாதாரம்' என்ற பெயரில் ஐஎல்ஓ என்ற சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் இந்தவாரம் வெளியிட்டுள்ள புதிய புள்ளி விபரங்களில், ஏற்கனவே மதிப்பிடப்பட்டதை விடவும் மூன்று மடங்கு அதிகமாக, அதாவது ஆண்டுக்கு சுமார் 150 பில்லியன் டாலர்கள் கட்டாய வேலை வாங்கல் முறைகள் மூலம் லாபம் ஈட்டப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரும் மே 28-ம் திகதி நடக்கவுள்ள உலக தொழிலாளர் மாநாட்டில், அரசுகளை சட்டப்படி நிர்ப்பந்திக்கும் உடன்படிக்கை ஒன்றுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி ஐஎல்ஓவின் உறுப்புநாடுகளை மனித உரிமை ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலைமையில், இலங்கையில் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் இன்றளவும் நவீன அடிமைமுறைகள் நீடிப்பதாக சமூக ஆர்வலர்களும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
நூற்றாண்டு காலமாக தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் குடியிருப்புகள், அவர்களுக்கு சொந்தமாக்கப்படாத சூழ்நிலையை தோட்டக் கம்பனிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் இ. தம்பையா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தோட்டக் கம்பனிகள் தமது நிர்ப்பந்தங்களுக்கு கட்டுப்படாத தொழிலாளர்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுகின்ற போக்கு பல தோட்டங்களில் இன்னும் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத் தோட்டமொன்றில், '30 நாட்களும் வேலைசெய்ய தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதற்கு முடியாதபோது தோட்டக் காவலாளிகளை வைத்து தொழிலாளர்களைத் தாக்குகின்ற சூழ்நிலையும் காணப்படுகின்றது' என்றார் வழக்கறிஞர் தம்பையா.
தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சனைகளை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்ல முடியாத விதத்தில் தோட்டக் கம்பனிகள் மலையகத் தொழிற்சங்கங்களை முடக்கி வைத்திருப்பதாகவும் வழக்கறிஞர் தம்பையா கூறினார்.
-http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/05/140523_sri_lanka_forced_labour.shtml
பிரதேச செயலர் பிரிவு ரீதியாக இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 24 May 2014
- Hits: 2302
இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு யாழ்ப்பாணத்து இளைஞர், யுவதிகளை இணைப்பதற்குரிய மாபெரும் வேலைத் திட்டத்தை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர். இராணுவத் தொண்டர் படைக்கு ஆள்களைத் திரட்டித் தருமாறு ஒவ்வொரு பிரதேச செயலாளர்களையும் கோரியுள்ள இராணுவத்தினர், கிராம சேவையாளர்கள் ஊடாகக் கிராமம் கிராமமாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.