விஞ்ஞானம் என்றால் என்ன?, எங்கிருந்து தோன்றுகிறது?: மார்க்சிய கல்வி -05
- Details
- Category: இதழ் 5
-
13 Feb 2014
- Hits: 3265
"மனித உழைப்பும், உழைப்பு சார்ந்த மனிதர்களின் கூட்டுவாழ்வும் தான் விஞ்ஞானத்தின் ஆதாரம். இன்று அப்படித்தான். உழைப்பிற்கான பொது உடமையின்றி தனிமைப்பட்டுப் போன விஞ்ஞானமும், ஆய்வுகூடத்தில் கண்டறியும் நுட்பக் கருவி சார்ந்த அறிவும் கூட, கூட்டு உழைப்பில் மட்டும் தான் மனிதனின் தேவைக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்த முடியும்."
உழைத்து வாழும் ஒவ்வொருமனிதனும் உழைப்பைச் செலுத்தும் போது, உழைப்புக்கு உள்ளாக்கும் பொருட்கள் பற்றிய அறிவைக் கொண்டிருக்கின்றான். இந்த அறிவு தான் விஞ்ஞானம். இந்த உழைப்புத் தான் விஞ்ஞானத்தின் மூலம். இரண்டையும் ஒன்றிலிருந்து வேறொன்றாகப் பிரிக்க முடியாது. உழைப்பும் அறிவும் இணைந்தது தான் விஞ்ஞானமாகவும், மனித வாழ்வுக்கான அடிப்படையாகவும் இருக்கின்றது.
மாணவர்-தொழிலாளரின் கூட்டிணைவே இலவசக் கல்வியை வென்றெடுக்கும்!
- Details
- Category: இதழ் 5
-
02 Mar 2014
- Hits: 1281
தம் மழழை செல்வங்களை நினைத்தப்படி வைத்தியர்களாகவோ பொறியியலாளர்களாகவோ ஆக்கிட முடியாவிடினும் கனவேனும் காணக் கூடியதாகவுள்ளது. குறைந்த பட்ச கல்வி அறிவையேனும் பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் கல்வி இலவசமாக கிடைப்பதாகும். ஆனால் தொடர்ந்து நிலைமை இப்படியே இருக்க போவதில்லை. அரசு இது வரை இலவசமாக வழங்கி வந்த கல்வியை மெல்ல மெல்ல தனியார் கைகளில் ஒப்படைத்து வருகின்றது. எதிர் காலத்தில் பெற்றோர்களிடம் எவ்வளவு பணம் இருக்கின்றதோ அந்தளவிற்கு தான் பிள்ளைகள் கல்வி கற்க முடியும்என்ற நிலை உருவாகி வருகின்றது.
நீர் முகாமைத்துவத்திற்கு இஸ்ரவேல
- Details
- Category: இதழ் 5
-
15 Feb 2014
- Hits: 1304
இலங்கையில் நீர் முகாமைத்துவம் செய்வது குறித்து ஆராய்வதற்காக இஸ்ரேலிய தூதுக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது. இந்த தூதுக்குழுவை சந்தித்த நீர் முகாமைத்துவ மற்றும் நீர்பாசன அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா, இலங்கையில் விவசாயிகள் நீரை விரயமாக்குவதால் அதனை முகாமைத்துவம் செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால த சில்வாவின் இந்தக் கூற்றோடு தண்ணீரை விற்பதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.
நவ தாராளமய கொள்ளைக்கு பலியாகும் சமூகமும் சூழலும்
- Details
- Category: இதழ் 5
-
26 Feb 2014
- Hits: 2126
2011 நவம்பர் 16ம் திகதி கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அரசாங்கத்தின் செயல் திட்டமொன்று வெளியிடப்பட்டது. 2000மாம் ஆண்டு இலக்கம் 49 நகர மற்றும் கிராம நிர்மாணம்( திருத்தம்) சட்டமூலத்தின் 3(1) உறுப்புரைக்கு ஏற்ப ஜனாதிபதியால் 2011 ஜனவரி 13ம் திகதி நியமிக்கப்பட்ட தேசிய இயற்பியல் நிர்மாண சபையின் மூலம் 2011 மற்றும் 2030க்கிடையிலான 20 வருடகாலத்துக்குமாக தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டம் 'தேசிய இயற்பியல் வரைவு" (National Physical Plan) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வரைவு தொடர்பான அரசாங்கத்தின் விளக்கத்திற்கு ஏற்ப, இலங்கையின் பூகோள அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அதனை பஞ்ச மகா சக்திகளின் கேந்திரஸ்தானமாக்குவதேயாகும்.
சிதைக்கப்பட்ட பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் முழுதும் மரணத்தில் வாழும்!
- Details
- Category: இதழ் 5
-
30 Jan 2014
- Hits: 1461
மழை போல் பொழிந்து தள்ளபட்டுக்கொண்டிருந்த குண்டுகளிடம் இருந்து தப்ப பதுங்கு குழிகளை தேடி பாய்ந்து ஓடினார்கள். காடுகளிற்குள் பாம்புகள் சீறிக் கொண்டிருந்த பற்றைகளிற்கு பக்கத்தில் பயந்து ஒளிந்திருந்தார்கள். ஆண்களிற்கும், பெண்களிற்கும் மரணம் அங்கு பொதுவாக இருந்தது. ஆனால் பெண்கள் மீது அங்கு இன்னுமொரு கொலை நடந்தது. அது மரணத்தை விட கொடுமையானது. மரணத்துடன் எல்லாம் முடிந்து விடும். ஆனால் கரும் பச்சை சீருடை அணிந்தவர்களால் சிதைக்கப்பட்ட பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் முழுதும் மரணத்தில் வாழும். அவர்கள் சிறுமிகள், இளம் யுவதிகள், நடுத்தரவயது பெண்கள், உடல் தளர்ந்த முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்கவில்லை. இறந்த பெண் போராளிகளின் உடல்களை கூட வெறி கொண்டு சிதைத்தார்கள்.
பால்மா தடை: உண்மை மீதான பொய்கள்
- Details
- Category: இதழ் 5
-
25 Feb 2014
- Hits: 1374
பொன்டாராஎன்ற பன்னாட்டு நிறுவணத்தின் உற்பத்தியான அங்கர், மெலிபன், டயமன்ட் பால்மாவில் டி.சி.டி. (டைசை யான்டியாமைட்) என்ற இரசாயனப் பொருள் கலந்துள்ளதாக கூறி தடை செய்த அரசு, மக்கள் நலனில் இருந்து இதைச் செய்யவில்லை. மக்கள் நலன் சார்ந்த அக்கறையிலான முடிவுவல்ல, வேறு சொந்த நலன்கள் சார்ந்த முடிவாகும். இலங்கை அரசு மக்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்ட ஒரு அரசு அல்ல. வெலிவேரியாவில் சுத்தமான நீரை கேட்ட மக்களையே, சுட்டுக் கொன்ற அரசு அல்லவா இது.
இரசாயனம் அங்கர், மெலிபன், டயமன்ட் பால்மாவில் மட்டுமல்ல, எல்லா உணவு சங்கிலித் தொடரிலும் காணப்படுகின்றது. வடமத்திய மாகாணத்தில் அதிகரித்த சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு காரணம் விவசாய உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயான உரவகைகளும், கிருமிநாசினிகளும் காரணமாக இருக்கின்றது. இந்த வகையில் ஆசனிக், கட்மியம், ஈயம் என்பன நிலத்திலும், நிலத்தடி நீரிலும், உற்பத்தி பொருட்களிலும் காணப்படுவதுடன் பலவித நோய்கள் உருவாகின்றது. இதை உணவாகக் கொள்ளும் கால்நடை உணவுகள் ஊடாகவும், மனித உடலில் புகுகின்றது.
"போராட்டம்" இதழ் 05 வெளிவந்து விட்டது
- Details
- Category: இதழ் 5
-
27 Sep 2013
- Hits: 1869
மௌனம் கலையும் போராட்டம்!
நான்கு தசாப்தங்களுக்கு அதிகமான காலங்களை கடந்தும் முன் கொண்டு செல்லப்படும் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராக பல போராட்டங்கள் உள் நாட்டிலும், உலக அளவிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. தொடர்ச்சியாக பல எதிர்ப்பு குரல்கள் முழங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படி நடந்த பல போராட்டங்களை நடத்திய இயக்கங்களின் செயற்பாட்டாளர்கள் போராட்டங்களுக்கு ஆதரவு குரல் எழுப்பியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். உண்மையில் சொல்லப் போனால் காணாமல் போக செய்யப்பட்டனர்.
இராணுவ ஆட்சியும் வெலவேரியா படுகொலையும்
- Details
- Category: இதழ் 5
-
18 Feb 2014
- Hits: 1072
குடிக்க சுத்தமான குடிநீர் கேட்ட போராடிய மக்கள் மீது, பாய்ந்து குதறியது அரச பயங்கரவாதம். மூன்று பேர் கொல்லப்பட, 50 மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பொது மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டது. இராணுவ வன்முறைக்கு அஞ்சி தேவலாயத்தில் புகலிடம் பெற்ற மக்களை, இராணுவம் அடித்து துவைத்துள்ளது. சுதந்திரமாக தகவல்களை சேகரிக்கவும், தெரிவிக்கவும் முடியாத வண்ணம், ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அரச பயங்கரவரத்தை மூடிமறைக்கும் வண்ணம், அனைத்தையும் கண்காணிக்கின்றது. விசாரணையின் பெயரில் இராணுவவிசாரணைக்கு உத்தரவுவிட்டு நாடகமாடுகின்றது. விசாரணை பெயரில், மக்களையும் ஊடகவியளாளர்களையும் தனது இராணுவ முகாமுக்கு வருமாறு மிரட்டி வருகின்றது. வெலிவேரியாவுக்கு இராணுவத்தை யார் வரவழைத்தது, யார் துப்பாக்கி பிரயோகத்துக்கு உத்தரவை வழங்கியது என்று எதையும் கண்டறிய முடியாதுள்ளதாக கூறுகின்ற பாசிச கோமாளிகளின் கேலிக் கூத்துகளின் பின்னணியில் தான், விசாரணைகள் அனைத்தும் அரங்கேற்றப்படுகின்றது.
வடக்கின் தேர்தல், எதிர்பார்ப்பும் எதார்த்தமும்...
- Details
- Category: இதழ் 5
-
11 Sep 2013
- Hits: 1510
இன்னும் சில நாட்களில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. வரலாற்றில் முதன்முறையாக வட மாகாண சபைக்காக நடக்கும் தேர்தல் இதுவாகும். 1987ல் இந்திய-இலங்கை ஆட்சியாளர்கள் சேர்ந்து, வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ற வகையில் மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், கடந்த 25 வருடங்களாக வடக்கில் மாகாண சபையை அமைக்க முடியவில்லை என்பதுதான் நகைப்புப்குறிய விடயம். எப்படியிருந்தாலும் இப்போது வடக்கில் மாகாண சபை தேர்தல் நடக்கப் போகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு வேட்பாளர்கள் பல்வேறு விடயங்களைக் கூறிக் கொண்டு உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்கள். அதற்காக பல காரணங்களைக் கூறுகிறார்கள்.