அரசு வெளியிட்ட "பயங்கரவாதப்" பெயர் பட்டியல்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 May 2014
- Hits: 2264
அரசோ "பயங்கரவாதிகள்" என்று பெயரில் ஒரு பெயர் பட்டியலையும், அமைப்புகளுக்கு தடைகளையும் வெளியிட்டுள்ளது. அதேநேரம் இன்ரபோல் மூலம், கணிசமானோருக்கு சர்வதேச பிடிவிராந்துகளையும் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையினர் "போர்க் குற்றவாளிகள்" என்று அடையாளப்படுத்திய ராணுவத்தினரின் படங்களையும், அவர்கள் குடும்பப் படங்களையும் வெளியிட்டு இருக்கின்றது.
மோடி பிரதமரானால் "தீர்வு" கிடைக்குமா!?
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 May 2014
- Hits: 2290
மோடியின் ஆட்சி பற்றி பிரமைகளும், நம்;பிக்கைகளும், எதிர்பார்புக்களும் கொண்ட் "தீர்வு" பற்றிய "தமிழினின்" உணர்வுகள் எதார்த்தமானவையல்ல. தமிழகத்தைச் சேர்ந்த தமிழினவாதிகளின் சந்தர்ப்பவாத பிழைப்புவாத நிலைப்பாட்டை, குருட்டுத்தனமாக வழிபடுவதாகும். கடந்த 60 வருடத்துக்கு மேலாக நம்பி அழிந்த தமிழ் மக்களின் பகுத்தறிவற்ற முட்டாள்தனமுமாகும்.
இந்தியாவின் ஆளும் வர்க்கக் கொள்கை என்பது, பிராந்திய மற்றும் உலக மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இதை மீறி எந்த தனிநபரோ, கட்சிகளோ முடிவுகளை எடுக்க முடியாது.
அரசு அனுசாரணையில் தொடங்கியுள்ள தென் ஆபிரிக்க மத்தியஸ்த்தம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 May 2014
- Hits: 2277
தென்னாபிரிக்க அனுபவம் மற்றும் தீர்வின் அடிப்படையில், இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது மக்களுக்கானதல்ல. தென்னாபிரிக்க தீர்வு என்பது மக்களுக்கு கறுப்பரின் ஆட்சியைத் தவிர, வேறு எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை. "தமிழ் மக்களுக்கு தீர்வு வேண்டும்" என்ற அடிமுட்டாள்தனமான அறியாமையை முன்னிறுத்தியே, மக்களுக்கு எதிராக இந்தப் பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த அடிப்படையிலேயே தென்னாபிரிக்கவின் மதிஸ்யத்தை அரசு நாடுகின்றது. கூட்டமைப்பு அதற்கு இணங்கிப் போகின்றது.
இலங்கையில் அறுபது வீதத்தினர் உளநோய்க்கு ஆளாகியிருக்கினராம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 May 2014
- Hits: 2432
மேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் அனுஷா கோகுல, இலங்கையின் சனத்தொகையில் அறுபது வீதத்தினர் ஏதோ ஒரு வகையில் உள நோய்க்கு ஆளாகியிருப்பதாக கூறினார். அத்துடன் அவர் “சமூகப் பிரச்சினைகள் கட்டுமட்டில்லாமல் அதிகரிப்பதாக", அதை எதிர் கொள்ள தயராகுமாறு கேட்டுக் கொண்டார், குறிப்பாக "விவாகரத்து வீதம் உயர்வதாகவும், நீரிழிவு நோயினால் கால்கள் துண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாகவும், வீதி விபத்துக்கள், சிறுவர் துஷ்பிரயோகம், பதின்ம வயதுக் கர்ப்பம், உளப்பாதிப்புக்குள்ளான குழந்தைகளைப் பிரசவித்தல் போன்றவற்றினால் சிதைவடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருதாக" எச்சரித்தார். இப்படி கூறியவர் இதைவிட அதிதமான உளநோய்களை இனம் காட்ட தவறியவர், இதற்கு காரணமனவர்களையும், இது ஏன் எற்படுகின்றது என்பதையும் கூட மூடிமறைத்து விடுகின்றார்.
காணமல் போன விவகாரத்தை உளவியல் பிரச்னையாக்கும் ஆணைக்குழு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 May 2014
- Hits: 2377
உளவியல் சிகிச்சை மூலம் காணமல் போன விவாகரத்துக்கு தீர்வு காண வழிகாட்டுகின்றார், காணமல் போனவர் தொடர்பாக ஆராயம் ஆணைக்குழுவின் செயலர் குணதாச. இலங்கையில் எவரும் காணமல் போகவில்லை என்பதே அரசின் நிலைப்பாடு. அதை நிறுவவே ஆணைக் குழு.
பேராசிரியர் சாய்பாபா கைது: மாணவர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 10 May 2014
- Hits: 2336
டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வரும் ஜி.என். சாய்பாபாவை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக கருதி மகாராஷ்டிர காவல்துறையினர், அவரை பல்கலைக்கழக வளாகத்தில் கைது செய்தனர்.
பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் சட்டவிரோத கைது குறித்து மகாராஷ்டிரா பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரை விடுதலை செய்ய கோரியும் ஆர்வலர்கள் இன்று சனிக்கிழமை இந்திய தலைநகர் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
'உயிர் அச்சுறுத்தல்': யாழ் பல்கலை. ஆசிரியர்கள் போராட்டம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 10 May 2014
- Hits: 2050
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் மாணவர் பிரதிநிதிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியுள்ளனர்.
இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.
சூரிச் மேதினம் 2014
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 08 May 2014
- Hits: 2276
முதலாளித்துவத்தின் நெருக்கடியை அம்பலப்டுத்தி,எதிர்ப்பு தெரிவிக்க என்றும்மில்லாத மக்கள்அணி அவர்களோடு முன்னிலை சோசலிச கட்சி, சமவுரிமை இயக்கம்.
சுவீஸ் நாட்டின் மக்களும், அந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல்வேறு நாட்டைச்சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களும் கலந்து கொண்ட மாபெரும் மேதினமாக வர்ணிக்கப்படும் இம் மேதினத்தில் தொழிற்சங்கங்கள், கலாச்சார அமைப்புகள், கட்சிகள், இடதுசாரி அமைப்புகள், முதலாளித்துவ நெருக்கடிகளைப் புரிந்து கொண்ட தனிநபர்கள் என 14 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.
அலரி மாளிகைக்குள் மாணவர்கள் புகுவதென்பது புதிய விடயம் ஒன்றல்ல! புபுது ஜாகொட
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 08 May 2014
- Hits: 2461
இன்று பல்கலைக்கழகங்களுக்குள்ளும் மாணவர்கள் மத்தியிலும் அரசு தேவையற்ற வன்முறைகளை பிரயோகித்து வருகின்றது.
ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதித்து இன்றுடன் 150 நாட்கள் கடந்தும் எந்த விதமான முடிவும் இதுவரை மாணவர்களுக்கு இந்த அரசால் வழங்கமுடியவில்லை. இன்று முன்னிலை சோசலிச கட்சி நிப்போன் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட இவ்வாறுதெரிவித்தார்.
நீதிமன்ற தடை உத்தரவை மீறி ராஜபக்ச வாசஸ்தலத்தினை முற்றுகையிட்டு மாணவர் போராட்டம்! (படங்கள்)
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 07 May 2014
- Hits: 2887
பல்கலைக்கழக மாணவர்கள் ராஜபக்ச அரசின் நவதாரளவாத கல்விக் கொள்கைக்கு எதிராக பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான போராட்டங்களை மிக நீண்ட நாட்களாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். மகிந்த அரசு போராடும் மாணவர்கள் மீத பல அழுத்தங்களை பிரயோகித்து மாணவர் போராட்டங்களை மழுங்கடிக்க தொடர்ந்து முனைந்து கொண்டே இருக்கின்றது. இனந்தெரியாத நபர்களை மாணவர்களின் வீட்டுக்கு அனுப்பி பெற்றோரை மிரட்டுவது முதல் மாணவர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கவது பல்கலைக்கழக பிரதேசங்களிற்கு அருகில் வருவதனை தடை செய்வது வரை அனைத்து பாசிச அடக்குமுறைகளையும் தொடந்து கொண்டிருக்கின்றது.