மலையகத்தில் அரசியல் கூட்டணிகள் யாருக்கானவை?
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 07 May 2014
- Hits: 3404
விகிதாசார தேர்தல் முறை அறிமுகம் செய்ததில் இருந்து தேர்தல் கூட்டுகள் என்பது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாதவைகளாக மாறியுள்ளன. இந்த தேர்தல் கூட்டுகள் பார்ப்பதற்கு பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் இணைந்து செயற்படுவதாக தோற்றமளிக்கின்ற போதும் அவர்களுக்கிடையில் உள்ளூர ஐக்கியம் இருக்கின்றமை கவனிக்கத்தக்கது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் ஏறக்குறைய மைய நீரோட்டத்தில் உள்ள அனைத்து மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் அங்கம் வகிப்பதோடு அதற்கு ஆதரவு வழங்குபவர்களாகவும் காணப்படுகின்றனர். அந்த இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐ.ம.சு.மு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்கி அதன் கொள்கை நடைமுறைகளை ஏற்று அங்கீகரித்து வருகின்றனர். எனினும் மறுபுறம் மலையக மக்களிடம் தங்களுக்கிடையில் வேறுபாடுகள் இருப்பதான தோற்றப்பட்டடை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எனினும் இவர்களுக்கிடையில் அரசியல் கொள்கை அடிப்படையில் உள்ள வேறுபாடு என்ன என்பது பற்றிய கருத்தாடல் இடம்பெறாமையானது துரதிஸ்டமே.
இந்துவின் மைந்தர்கள், ஹாட்லியின் காவலர்கள் மற்றும் தமிழ்ச்சினிமா கோமாளிகள்!!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 04 May 2014
- Hits: 3130
"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கள் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்" என்றும் தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர்" (Medical Evangelist to the Tamils) என அதில் பொறிக்குமாறும் வேண்டிக் கொண்ட அமெரிக்கரான வைத்தியக்கலாநிதி சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் போன்ற மனிதாபிமானிகள், கன்டி பேரின்பநாயகம், ஒரேற்றர் சுப்பிரமணியம், கார்த்திக்கேசன் போன்ற சமுக உணர்வும், கடமை உணர்ச்சியும் கொண்ட ஆயிரம், ஆயிரம் ஆசிரியர்கள் உருவாக்கிய பெருவிருட்சம் தமிழ்மக்களின் கல்வி. அர்ப்பணிப்பு என்ற ஒரு சொல் மட்டும்தான் அவர்களிடம் இருந்தது. அதைத் தவிர வேறெந்த வசதியும் அவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் அயராது உழைத்தார்கள். கல்வி வெள்ளம் தமிழ் சமுதாய வாழ்வு எங்கும் நிறைந்தது.
ஞானசார தேரர் போல் வெறிகொண்டு விரட்டிய ஆறுமுகன் தொண்டமான்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 04 May 2014
- Hits: 2433
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக்கூட்டம் பண்டாரவளையில் நடைபெற்ற போது, ஆறுமுகன் தொண்டமான் தனது பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ மேடைக்கு வருகை தந்தார். அந்த மேடையில் ஊடகவியலாளர் சிலர் தமது கடமைகளை செய்து கொண்டிருந்தார்கள். ஆறுமுகன் மேடைக்கு வந்தவுடனேயே வெறிகொண்ட யானைபோல் கடமையில் இருந்த ஊடகவியலாளரை தூக்கித் தள்ளி விட்டார்.
"சிங்களவனுடன் தமிழனுக்கு என்னடா வேலை" என்று கூறி பாரிசில்- மேதினத்தில் வன்முறை!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 03 May 2014
- Hits: 2589
பாரிஸ்-பிரான்ஸ் மேதின ஊர்வலத்தில் சிங்கள-தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சென்றதும், புலிகளின் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிகைக்கு நிகராக, சிங்கள - தமிழ் மக்கள் அணிவகுத்து சென்றதும், துரோகத்துக்குரியதாக கூறி, சிங்கள - தமிழ் மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டது.
தமிழ்-சிங்கள மக்கள் இணைந்து இலங்கை அரசுக்கு எதிரான வர்க்க ரீதியான கோசங்களைத் தாங்கிய பதாதைகளும், ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் உரிமையை முன்னிறுத்திய கோசங்களும், பாரிஸ் மேதின ஆர்பாட்டங்களில் பங்கு கொண்ட லட்சக்கணக்கான உலக தொழிளார்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களை எம்பால் திரும்ப வைத்தது. அத்துடன் புரட்சிகர பாரம்பரிய அடிப்படையில் கோசங்களை கைகளில் எந்திய எமது ஊர்வலம், இலங்கையை சேர்ந்தவர்கள் பங்கு கொள்ளும் ஊர்வலங்களின் வழமைக்கு மாறானதாகவும் இருந்ததனால், எம்முடன் அரசியல் அடிப்படையில் கருத்து ரீதியாக முரண்பாடு கொண்டவர்கள் கூட எம்முடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டனர்.
இலங்கை ஒருமைப்பாட்டு மையத்தின் ஊடகச் செய்தி.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 03 May 2014
- Hits: 2385
இலங்கையர் ஒருமைப்பாட்டு மையத்தின் 'மே-1" தொழிலாளர் தின ஊர்வலம் பிரான்ஸ் தலைநகர் பஸ்டில் சுதந்திர சதுக்கத்தில் பிற்பகல் 4மணிக்கு ஆரம்பமாகி நசியோன் சதுக்கத்தில் மாலை 6 மணியளவில் நிறைவுபெற்றது.
இந்த ஊர்வலத்தை இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் தனது உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருடைய பங்களிப்புடன் ஏனைய தோழமை அமைப்புக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்ப்பதற்கு வர்க்கப்போராட்ட அரசியல் மார்க்கம் அவசியம்.
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 03 May 2014
- Hits: 3509
யாழ்ப்பாணம் - வவுனியா மேதினக்கூட்டங்களில் சி.கா.செந்திவேல் ஆற்றிய உரை.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியானது பேரினவாத ஒடுக்குமுறை என்ற மூலதனத்தை முதலிட்டே ஆட்சி அதிகாரம் செலுத்தி வருகிறது. அது பாசிச சர்வாதிகாரமாகவே முன்னெடுக்கப்படுகிறது இத்தகைய ஆட்சியானது தமிழ் முஸ்லீம் மலையக மக்களை மட்டுமன்றி சிங்களத் தொழிலாளி விவசாயி மற்றும் உழைக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்கியே வருகிறது பொருட்களின் விலைகள் அதிகரிப்பிலும் கட்டணங்களின் உயர்விலும் சம்பள உயர்வு மறுப்பிலும் ஜனநாயக மனித உரிமை மீறல்களிலும் இதனைக்காண முடிகிறது இச்சூழலில் இலங்கை முன் என்றுமில்லாத அளவிற்கு மோசமான பொருளாதார அரசியல் சமூக நெருக்கடிக்குள் புதையுண்டுவருகிறது. எனவே இந்நாட்டின் அனைத்து மக்களும் வர்க்க - இன அடிப்பபடைகளில் ஒன்றிணைந்து தமது அடிப்படைஉரிமைகளை வென்றெடுப்பதற்கு ராஜபக்ச சகோதரர்களது ஆட்சிக்கு எதிராக வெகுஜனப் போராட்டங்களில் அணிதிரள வேண்டிய அவசியமும் தேவையும் எழுந்துள்ளது இதனை ஒடுக்கப்படும் நிலையில் உள்ள தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
புலி உறுப்பினர்களை கொன்ற இராணுவ அதிகாரிகளுக்கு கௌரவிப்பு!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 03 May 2014
- Hits: 2220
நெடுங்கேணி பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்பட்ட கோபிதாஸ், அப்பன் மற்றும் தேவியன் ஆகிய மூவரையும் சுட்டுக் கொன்றதுடன் திறமையாக செயற்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
என்னை வெள்ளை வான் துரத்துகின்றது: விஜித தேரர்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 03 May 2014
- Hits: 2319
"மிகவும் சுதந்திரமானதும், ஜனநாயகமானதுமான முறையில் மே தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட தொழிலாளர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கக் கிட்டியமை தனக்கு பெருமகிழ்ச்சி அளிப்பதாகத் நம்ம ஜனாதிhதி மேதினச் செய்தியாக தெரிவித்துள்ளார்.
ஜரோப்பாவில் சமவுரிமை இயக்க மேதினம் (படங்கள்)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 02 May 2014
- Hits: 1128
நேற்றைய மேதினத்தில், சமவுரிமை இயக்கத்தின் ஜரோப்பிய கிளைகள் அந்தந்த நாடுகளில் இடம்பெற்ற மேதின ஊர்வலங்களில் பங்குபற்றியுள்ளன. ஜரோப்பிய நாடுகளில் உள்ள பாரிய தொழிற்சங்கங்களினாலும் இடதுசாரிகளினாலும் இந்த மேதின ஊர்வலங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சமவுரிமை இயக்கமானது முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் இலங்கை சார்ந்த ஜனநாயக அமைப்புக்களுடன் இணைந்து இந்த நிகழ்வழில் கலந்து கொணடது குறிப்பிடத்தக்கது. மேதின ஊர்வல படங்களை இங்கு காணலாம்.
உழுகிறமாட்டை மாத்திப் பூட்டினால் நேரமினக்கேடாம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 02 May 2014
- Hits: 2190
இருபத்துநான்கு மணிநேரமும்
இயந்திரத்துடன்
தொழிலாளரும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்
இன்னம் வேகத்தை அதிகரிக்குமாறு
நிர்வாகம்
அழுத்தம் கொடுக்கிறது
முடியாதென
மூச்சுவிட்டால் வேலைபறிபோகலாம்