விருதுநகரில் என்னைத் தோற்கடிக்க ராஜபக்ச இரகசியச் சதி! வை.கோ.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 20 March 2014
- Hits: 2122
தமிழகத்தில் கருணாநிதிதான் காமடி அரசியல்வாதியென்றால், வை.கோ. பலபடிகள் மேல் சென்று காமடியிலும் காமடியாகியுள்ளார். இலங்கைத் தமிழ்மக்களின் அவல அரசியலை வைத்து பிழைப்பு நடாத்தும் கூத்தாடிகளின் கூடாரகியுள்ளது தமிழகம். அதுவும் தேர்தல் என்று வந்துவிட்டதால், கோமாளிகளிலும் கோமாளிகளான கோமாளிகளின் கோட்டமாகியுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினையில் வாஜ்பாய் எடுத்த நிலையை கடைபிடிக்க மோடியிடம் கோரினேன். மோடி நேர்மையானவர், நியாயமானவர், தன்னலமற்றவர், மதுவிலக்கை அமூல்படுத்தியவர். மத்தியில் ஊழல் இல்லாத அரசை மக்கள் எதிர்பார்க்கின்றனர் அதை மோடி தருவாராம்.
மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் ராணுவ அரசை எதிர்த்து போராடுவோம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 19 March 2014
- Hits: 2168
தர்மபுரம் பகுதியில் நடந்த பாலேந்திரா ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா கைதும், மன்னாரில் ஒட்டப்பட்டுள்ள தேடப்படும் நபர்கள் குறித்த சுவரொட்டியும் எதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கின்ற மாகாணசபை தேர்தல் பெருவெற்றிக்கா மகிந்த அரசால் திட்டமிடப்பட்டு நடாத்தப்படுகின்ற இனவாத நடவடிக்கைகளே!
ஜ.நா மனித உரிமை சபையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்த பிரேரணை பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற இன்றைய வேளையில், மகிந்த அரசு காணாமல் போனவர்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற உறவினர்களையும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் பழிவாங்கும் நோக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதன் மூலமாக இந்த அரசு மக்களுக்கு ஜனநாயகத்தை மறுக்கின்ற தனது போக்கிலிருந்தும்-இனவாதம், மதவாதம் கொண்டு மக்களை மோதவிட்டு நாட்டை மோசமான நிலைமைக்குள் இழுத்து செல்வதிலும் இருந்தும் பின்வாங்கப் போவதில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலை வன்மையாக கண்டிப்போம்! - முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 19 March 2014
- Hits: 851
'இன்போம்" நிறுவனத்தைச் சேர்ந்த பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர்களான திரு ருகி பர்ணாந்து மற்றும் சமாதானம் மற்றும் மீள் கூட்டமைப்பு சம்பந்தமான நிலையத்தின் முக்கியஸ்தர் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கடந்த 16ம் திகதி இரவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முன்னிலை சோஷலிஸக் கட்சியின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு
'ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயகத்திற்கு முரணான செயல்களுக்கு எதிராக குரலெழுப்பும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் குரல்வளையை நசுக்குவதற்காக எடுக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மார்ச் 16ம் திகதி இரவு பாதுகாப்புப் படையினரால் முதல்நிலை மனித உரிமை செயற்பாட்டாளர்களான 'இன்போம்" நிறுவனத்தின் ருகீ பர்னாந்து மற்றும் சமாதானம் மற்றும் மீள் கூட்டபை்பு சம்பந்தமான முக்கியஸ்தர் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான தாய்மாரின் குரலாயிருந்தோர் பழிவாங்கப்பட்டுள்ளனர்.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 19 March 2014
- Hits: 2281
அண்மையில் கிளிநொச்சி தருமபுரத்தில் பாலேந்திரா ஜெயகுமாரியும் அவரது மகள் சிறுமி விபூசிக்காவும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரால் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அவர்கள் விசாரிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்களான ருக்கி பெர்ணான்டோவும் மத குருவான பிரணவீனும் அதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த வருடம் செப்ரம்பர் மாதத்தில் விஞ்ஞான பாட ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் காணாமல் போனார். அண்மையில் மாங்குளத்தில் அவரது எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதனை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வார நிகழ்வுகளின் சாரம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 16 March 2014
- Hits: 2166
பிரபாகரனுக்கு நேர்ந்ததே ஹக்கீமிற்கும் நேரும் மேர்வின்!
"பிரபாகரனுக்கு நேர்ந்த அதே கதிதான் எனக்கும் நேரக்கூடுமென அமைச்சர் நண்பர் மேர்வின் சில்வா என்னை எச்சரித்திருக்கிறார். பிரபாகரனுடைய பிரிவினைப் போராட்டத்திற்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு நல்கியிருந்தால் இந்த நாடு எப்பொழுதோ பிளவுபட்டிருக்கும் என்பதை நான் நண்பர் மேர்வின் சில்வாவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். "
"ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சோற்றுப் பார்சல்களை வழங்கி பஸ்களில் ஆட்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வந்து சேர்க்கும் கட்சியல்ல. களனித் தொகுதியில் இருந்து தான் சோற்றுப் பார்சல்கள் கொடுத்து கொழும்புக்கு ஆட்கள் அதிகம் கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றனர்."
சபாஸ் சரியான அதிரடிதான். இருந்தாலும் எங்களுடைய கட்சியின் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கியதன் நோக்கம் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு சுகபோகங்களை சுகிப்பதற்கு அல்ல! அவ்வாறான அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருக்கத்தான் செய்கின்றனர். என்கின்ற போது, மகிந்தாவின் காலிற்கு பாதபூசை செய்யும் மேர்வினுக்கு இவர் சாஸ்டாங்க நமஸ்காரம் செய்யலாம்
இலங்கை அரசின் திடுக்கிடும் துப்பறியும் சினிமா- "றிவோல்வர் விபூசிகா": விமர்சனம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 15 March 2014
- Hits: 2393
நேற்று முன்தினம் இலங்கை அரசு கிளிநொச்சியில் மிகச் சிரமப்பட்டு துப்பறியும் படம் ஒன்றை எடுத்துள்ளது. அதன் திரைக்கதை இப்படிப் போகின்றது.
கிளிநொச்சி தர்மபுரத்தில் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாயாரான பா.ஜெயகுமாரி- 13 வயதே நிரம்பிய அவரது மகள் விபசிகா இருவரும் கைது. சந்தேகநபர் ஒருவரைத் தேடிச் சென்ற சமயம் அவர் ஜெயகுமாரியின் வீட்டில் இருந்து பொலிஸாரைச் சுட்டு விட்டுத் தப்பிச் சென்று விட்டார்.
ஏழை அழுத கண்ணீர்.............
பாழும் அரசும் கோழைப்படைகளும்
வீழுமென்றால்
அண்ணனைத்தேடி ஓவென்றழுத கண்ணீர்போதுமம்மா,
இரணியர் தலையில்
ஏன்,
இடிவிழவில்லை இன்னமும்...
எலும்புக்கூடு பேசுகிறது!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 14 March 2014
- Hits: 3121
யாரது என்னைத்
தொந்தரவு செய்வது
மண்ணுக்குள் ஆவது
நிம்மதியாய் இருப்போமேன்றால்
விடமாட்டீர் போலத் தெரிகிறது!
வவுனியாவில் கடந்த வருடம் கடத்தப்பட்ட ஆசிரியர் மாங்குளத்தில் எலும்புக்கூடாக மீட்பு!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 14 March 2014
- Hits: 2070
வவுனியாவில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டு தற்போது எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதை கண்டித்து, வட மாகாண ஆசிரியர்களை ஒன்றிணைத்து பாரிய போராட்டமொன்றினை நடத்தவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட தாயும், மகளும் பூஸா முகாமில் அடைப்பு!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 14 March 2014
- Hits: 2225
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரி 3 மாத தடுப்புக்காவல் விதிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்திய தேவைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.