Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

"இலங்கையர்" என்ற அடையாளத்தை ஏற்க மறுப்பு

சம உரிமை இயக்கதின் தலைவர்கள் மீது இன்று காலையில் மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சு தாக்குதல் மற்றும் கழிவு எண்ணெய் தாக்குதல் சம்பந்தமாக முறையிட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற அதன் தலைவர் ரவீந்திர முதலிகேயின் தனித்துவ அடையாளம் குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிய வருகிறது.

Read more ...

சம உரிமை இயக்கத்தின் எதிர்ப்பு பதாகையில் ஒப்பமிடப்படுகிறது படங்கள் இணைப்பு

அநீதியான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்துள்ள யாழ் பல்கலைக் கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறும், இராணுவ ஆட்சியை விலக்கிக் கொண்டு சிவில் நிர்வாகத்தை அதமுல்படுத்துமாறும் அரசாங்கத்தை வற்புறுத்தும் எதிர்பு பதாகையில் ஒப்பமிடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஒப்பமிட வந்த மக்கள் தடுக்கப்பட்டனர்,  பொலிஸாரினதும் இராணுவத்தினரினதும் தடைகளை மீறி மக்கள் ஒப்பமிட்டனர்.

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று யாழ் நகரில் காலை 09:30 மணிக்கு நடைபெற்றது. இவ்வேளை போராட்டம் பத்திரிகையும் விற்பனை செய்யப்பட்டது.

Read more ...

யாழில் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம் (படங்கள்)

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்த கோரியும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும், கடத்தல் மற்றும் கைதுகளை நிறுத்த கோரியும் சம உரிமை இயக்கத்தினரால் கையெழுத்து போராட்டம் நடாத்தப்பட்டது.

இந்த கையெழுத்து போராட்டம் இன்று (21) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் யாழ் மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது கையெழுத்துகளை பதிவு செய்தனர்.

Read more ...

யாழில். கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டிருந்த சம உரிமை இயக்க வாகனத்தின் மீது படையினர் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் சம உரிமை இயக்க உறுப்பினர்களது வாகனத்தின் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தும் முகமாக கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டிருக்கும் வேளையிலேயே இவர்களது வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more ...

யாழ்ப்பாணத்தில் அநீதிக்கு எதிராக கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சம உரிமை இயக்கத்தினர்மீது ஒயில் வீச்சு!

யாழ்ப்பாணத்தில் அநீதிக்கு எதிராக கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சம உரிமை இயக்கத்தினர்மீது சற்று முன்னர் ஒயில் வீசப்பட்டுள்ளதுடன் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களும் ஒப்பமிட கலந்து கொண்ட மக்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடத்தில் பொலிசார் பாதுகாப்பபு கடமையில் நின்றிருந்த போதும் சம்பவம் தொடர்பாக எவ்வித நடவடிக்கைம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் அரச இனவாதத்திற்கு எதிராக சமவுரிமை இயக்கத்தால் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல்!

 முஸ்லிம் மக்களுக்கு எதிராக "பொதுபல", "சேனா" போன்ற மதவாத இனவாத அமைப்புகள் அரசாங்க ஆசீர்வாதத்தோடு செயற்படுத்திவரும் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளை கண்டித்து கடந்த 13-ம் திகதி கொழும்பு தேசிய நூலக மற்றும் சுவடுகள் சேவை சபை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. 

இக்கலந்துரையாடலை சமவுரிமை இயக்கம் முன்னின்று நடாத்தியுள்ளது. இதில் இன ஐக்கியத்தை முன்னெடுக்கும் நோக்கில் சிங்கள-தமிழ்-முஸ்லிம்- சமூகங்கங்களைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுடன் இடதுசாரிச் சிந்தனைச் செயற்பாட்டாளர்கள், முற்போக்கு எண்ணம் கொண்ட புத்திஜீவிகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர் அமைப்புகளின் தலைவர்கள், முஸ்லிம்-புத்தசமயத் தலைவர்கள், பெண்கள் அமைப்புப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Read more ...

யாழ்ப்பாணத்தில் அநீதிக்கு எதிராக கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சம உரிமை இயக்கத்தின் வாகனம் மீது கல் வீச்சு!

யாழ் நகரில் அநீதிக்கு எதிராக கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடு பட்டுக் கொண்டிருந்த சம உரிமை இயக்கத்தின் வாகனம் மீது இன்று காலை 8.45 மணியளவில் இனந்தெரியாத விசமிகள் கல் வீச்சு நடத்தியுள்ளனர்.

 

alt

alt

 

நாளை யாழ் நகரில், மாபெரும் கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம்!

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் பதாகை கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் 15-01-2012 அன்று யாழ் நகரில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்!

வடக்கு கிழக்கிலிருந்த ராணுவத்தை வாபஸ் வாங்கு!

வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து!

கைதுகளையும் கடத்தல்களையும் உடன் நிறுத்து!

அனைத்து அரசியல் சிறைக்கைதிகளையும் உடன் விடுதலை செய்!

Read more ...