புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
03 Feb 2013
- Hits: 2054
புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்
பிரான்ஸ் :CHANTIER - 24 Rue Antoine julien henard - 75012 Paris. (Metro: Montgallet ou Reuilly Diderot ) என்னும் முகவரியில் 10.02.2013 ஞாயிறு மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.
மூவின மக்கள் கலந்து கொண்ட லண்டன் சம உரிமை இயக்கத்தின் அங்குராப்பண கூட்டம் (படங்கள் இணைப்பு)
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
03 Feb 2013
- Hits: 1473
இன்று ஞாயிறு லண்டனில் நிகழ்ந்த சம உரிமை இயக்கத்தின் அங்குராப்பண கூட்டத்தில் இலங்கையின் மூவினங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அண்ணளவாக நூற்றிக்கு மேல் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தோழர்கள் சேனகா, சபேசன், குமார், சீலன், மகிந்தா, சுகத் உட்பட பலர் சம உரிமை இயக்கம் குறித்தும் இலங்கையில் இனவாதத்திற்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் குறித்தும் உரையாற்றினார்கள்.
துண்டுபிரசுரம் விநியோகித்த சமஉரிமை இயக்க செயற்பாட்டாளர்களுக்கு தடங்கல் ஏற்படுத்தியமைக்கு எதிரான கண்டனம் !
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
31 Jan 2013
- Hits: 1308
உண்மைக்கு புறம்பான தகவல்களை பிரச்சாரப்படுத்தி சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே குரோதத்தையும் மோதலையும் தோற்றுவிப்பதற்காக இனவாதம், மதவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை தூண்டிவிடும் வகையில் செயற்படும் அமைப்புகளை அம்பலபடுத்தி மக்களை தெளிவுபடுத்தும் வகையில் நாடு பூராகவும் இன்றைய தினம் (ஜனவரி 31) துண்டுபிரசுரம் விநியோகித்த சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கு அரசாங்க கட்சியினர், பொலிசார் மற்றும் குண்டர்கள் தடங்கல்களை ஏற்படுத்தியமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இலண்டன் தமிழ்வானொலியில் 29.01.2013 அன்று நடத்தப்பட்ட சமவுரிமை இயக்கம் அறிமுகமும் கலந்துரையாடலும்
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
30 Jan 2013
- Hits: 1086
FIRSTAUDIO.NET இணைய வானொலியில், காற்றலையின் அனுமதியோடு, "சம உரிமை இயக்கம்" பற்றிய அறிமுகமும் அதன் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலும். இந்நிகழ்வில் புதிய திசைகள் பாலன் அவர்கள் ஜரோப்பிய சமவுரிமை இயக்க உறுப்பினர்களுடன், இலங்கையிலிருந்து தோழர் பழ.ரிச்சார்ட் (இணை ஏற்பாட்டாளர், சமஉரிமை இயக்கம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை ஒலி வடிவில் கேட்க
சுவீஸ் சம உரிமை இயக்க கூட்ட செய்தி (படங்கள் இணைப்பு)
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
27 Jan 2013
- Hits: 1324
26.01.2013- அன்று சுவிஸ்ட்சர்லாந்தில் சமஉரிமை இயக்கத்தின் ஆரம்பமும் கொள்கை விளக்க கூட்டமும் நடைபெற்றது. சிங்கள, தமிழ் மக்கள் என கிட்டத்தட்ட நாற்பது பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். தோழர் குமார் குணரட்ணம் (மு.சோ.க) சிங்களத்திலும் தமிழிலும் விசேட உரையாற்றினார். தோழர் றயாகரனும் சிறப்புரையாற்றினார்.
இனவாதத்தை தந்திரமாக தக்கவைத்துக் கொண்டிருக்கும் இலங்கை முதலாளித்துவ ஆட்சியாளர்களையும் அனைத்து சிங்கள, தமிழ், கட்சிகளின் இனவாதத்தில் குளிர்காயும் போலித்தனங்களையும் அம்பலப்படுத்தினார். அங்கு சமூகம் தந்திருந்தவர்கள் இனவாதத்திற்கு எதிரான ஆதரவையும், இவ்விடயம் வளர்த்துச் செல்லப்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அத்தோடு அதற்கான பங்களிப்புக்களை வழங்குவதாகவும் தெரிவித்தனர். மேலும் சம உரிமை இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" என்னும் பத்திரிகையை அனைவரும் பெரும் ஆர்வத்துடன் வாங்கிப்படித்தனர்.
"யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்" சமவுரிமை இயக்கத்தின் ஊடக அறிக்கையும் படங்களும்
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
17 Jan 2013
- Hits: 978
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி சம உரிமை இயக்கத்தினால் இணையத்தள மகஜர் கையெழுத்திடல் இன்று ஆரம்பிக்கப்பட்டது. http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் மகஜரில் கையெழுத்திட முடியும்.
லண்டன் வானொலியில் சமவுரிமை இயக்கம் அறிமுகமும் கலந்துரையாடலும்
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
24 Jan 2013
- Hits: 1308
FIRSTAUDIO.NET இணைய வானொலியில், காற்றலையின் அனுமதியோடு, "சம உரிமை இயக்கம்" பற்றிய அறிமுகமும் அதன் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலும் நிகழவுள்ளது. புதிய திசைகள் பாலன் அவர்கள் இந்த சந்திப்பை நடத்தவுள்ளார்.
இந்நிகழ்வில் ஜரோப்பிய சமவுரிமை இயக்க உறுப்பினர்களுடன், இலங்கையிலிருந்து தோழர் பழ.ரிச்சார்ட் (இணை ஏற்ப்பாட்டாளர், சமஉரிமை இயக்கம்) மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
உரிமையை பெற்றுக் கொள்ள ஒன்றுபடுவோம்!
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
15 Jan 2013
- Hits: 881
யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு சிறந்த உதாரணம் தான் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் சிவில் நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையும், வடக்கில் நடக்கும் இராணுவ நிர்வாகமும். இந்த இராணுவ நிர்வாகத்தின் கீழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகிறன. கடத்தல், காணாமலாக்கள், கொலை செய்தல், பயமுறுத்தல் மற்றும் சித்திரவதை செய்தல் போன்று உதாரணங்களை கூற முடியும். அவற்றிற்கு மத்தியில் தமிழ் மக்களின் கலாச்சார உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இராணுவ பலவந்தத்தை பயன்படுத்தி வடக்கு மக்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்களை கொள்ளையிடுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் வெளிப்படையாகும்.