நிரூபனின் படுகொலையைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
22 Mar 2014
- Hits: 2104
எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்ட ஆசிரியர் நிரூபனின் படுகொலையைக் கண்டித்தும் உரிய நீதி விசாரணையை கோரியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (21.03 2014) யாழ் நகரில் நடைபெற்றது.இப் போராட்டத்தில் பெருந்தொகையான ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் இப் போரடட்டத்துக்கு புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி தனது முழுமையான ஆதரவை தெரிவித்து பங்கு கொண்டதுடன் .அங்கு இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டது.