நாள இதைப்போல் வேளை பிறக்குமா?
- Details
- Category: சிறி
-
15 Feb 2012
- Hits: 5069
உறவு உறவெண்டாலும்
பறியில கைவையாதையடா மேனே
எவனுக்கும் குழிபறிக்காம
சிவனுக்கும் அடிபணியாம
கருக்கல் பொழுதுகள்ள
கணுக்கால் கரையில
மெல்ல மெல்ல
சலசலக்காம
பதுங்கிப்பதுங்கி
வீசின வலையில
சிக்கின பாடொடு
இடுப்பில கட்டின
பறியில இன்னும்
உயிராய் துடிக்கிற
மீன்கள கரையில
கடற்கரை மணலில
பரப்பிப் போட்டு
வித்துப் பிழைக்கிற
விட்டுணு மாமா
கள்ள குடித்து
குலுங்கிக் கலங்கி
பாடின பாட்டு
நான் பெற்ற செல்வம்
நலமான செல்வம்.
பூஞ்சி எரியிற
குடிசை விளக்கில
தன் காதல
பிள்ளயள் காதில ஓத
பாடுற பாட்டு
காத்தில கலக்கும்
ஊரில உள்ள
காதுகள் எல்லாம்
ரசிப்பில லயிக்கும்.
கள்ளு வெடிலோட
கருவாடு கடிக்கிற
கண்கள் ரெண்டு
காதல் தாரத்த
கனிவில கிறக்கும்.
காயப் போட்ட
வலயைப் பொத்தி
இடுப்புத் துண்டில
முகத்தை ஒத்தி
காத்துத் திசைய
வானம் பார்த்து
கணிக்கிற முகத்தில
இருக்கிற வாழ்க்கைய
எடுப்பவர் யாரவர்
நாள இதைப்போல்
வேளை பிறக்குமா?
சிறி
26/02/2011