Sun04282024

Last updateSun, 19 Apr 2020 8am

இராணுவ ஆட்சிக்கான முன் தயாரிப்புகள்..! – (பகுதி2)

 

 

 

2.யுத்தத்தின் பின் பௌத்தமூலம் தமிழினத்தை அழிக்கின்றது...

யுத்தத்தின் பெயரில் ஓர் இனத்தைக் கொன்று குவித்தவர்கள், யுத்தத்தின் பின் அதை நிறுத்திவிடவில்லை. ஆனால் அதன் வடிவத்தை மட்டும் மாற்றியுள்ளனர். 1940கள் முதல் எல்லையோரத்தில் திட்டமிட்டு நடாத்தி வந்த இன அழிப்புக் குடியேற்றம், யுத்தத்தின் பின் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளுக்குள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் பேரினவாதம் தன் இன அழிப்புக்கு, இன்று பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி முன்நிறுத்துகின்றது. அரசு தன்னை மதத்தின் ஊடாக அடையாளப்படுத்தி, பேரினவாதத்தை முன்தள்ளுகின்றது. ஆயுத மூலமான இன அழிப்பில் புலிகள் மீதான படை நடவடிக்கை மூலம் அழிப்புகள் முடிந்த நிலையில், பௌத்த மதத்தைக் கொண்டும் அதனைச் செய்கின்றது. யுத்தத்தின் பின்னான இன அழிப்பில் இன்று மதம் பாவிக்கப்படுகின்றது.

Read more ...

இராணுவ ஆட்சிக்கான முன் தயாரிப்புகள்..! - (பகுதி1)

1.உங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்...

'உங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்" என்ற மகிந்த ராஜபக்சாவின் குற்றவாக்கு மூலத்தில் எதற்காக, எதைக் காட்டிக் கொடுக்கமாட்டோம் என்கின்றனர்? யுத்தக் குற்றம் எதையும் நாங்கள் செய்யவில்லை என்று கூறிவருகின்ற அரசு, மறுபுறம் உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்கின்றது. எதை? குற்றம் இழைக்கவில்லை என்றால், காட்டிக்கொடுக்க எதுவுமில்லை. காட்டிக் கொடுக்க ஏதோ இருக்கின்றது என்றால், அங்கு குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது.

"காட்டிக் கொடுக்கமாட்டோம்" என்று கூறி, குற்றம் நடந்ததாக சுயவாக்கு மூலம் தருகின்றது அரசு. ஆக அரசு குற்றமிழைத்ததை ஒத்துக்கொள்ளும் அதேநேரம், யாரையும் காட்டிக் கொடுக்கமாட்டோம் என்கின்றனர்? சரி யாரை? இங்கு உங்களை என்று குற்றஞ்சாட்டி, அது நாங்களல்ல என்று தமது குற்றத்தை அப்பாவி இராணுவ வீரன் மீது சுமத்துகின்றது. இப்படி தங்களின் குற்றத்தை மூடிமறைக்க, பேரினவாத தேசிய வெறியை முன்னிறுத்தி குற்றத்தை மற்றவர்கள் மேல் அபாண்டமாக சுமத்துகின்றது அரசு. ஆக இங்கு காட்டிக் கொடுக்க ஏதோ இருக்கின்றது. யாரோ போர்க்குற்றத்தை இழைத்துள்ளனர் என்பதை, ஜனாதிபதி மகிந்தாவின் இந்தக் கூற்றும் உறுதி செய்கின்றது.

Read more ...

பிரமாண்டமான சதுரங்கப் பலகையில் ஆடிய ஆட்டம்..(பகுதி -1)

பின்லேடன் கொலை!

சர்வதேச நாடுகள் எங்கிலும் சல்லடைபோட்டுத் தேடப்பட்டு வந்த ஒருவர் பில்லேடன். அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் முதல் நபராக இவர் இடம்பெற்றும் இருந்தார். இவரை அண்மையில் அமெரிக்க சிறப்புப்படையினர் சுட்டுக் கொன்று விட்டதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. எப்படி இலங்கையில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்திகள் வெளிவந்தபோது, அவரது ஆதரவாளர்களால் நம்பமுடியாமல் திகைத்துப்போய் இருந்தனரோ, அதேமாதிரி பில்லேடனின் ஆதரவாளர்கள் மத்தியிலும் இது காணப்பட்டது. பின்லேடன் உலகநாடுகளை எல்லாம் மிரட்டிக்கொண்டிருந்தாரோ இல்லையோ, அமெரிக்காவின் கண்களில் தன் விரலைவிட்டு ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார் என்பது மிகையாகாது.

Read more ...

இறந்தவர்களின் தோத்திரம்

அருள் நிறைந்த அம்மா வாழ்க
டெல்லி சர்க்காரும் சர்வலோகமும்
உம்முடனே இருக்கக் கடவதாக
பெண்களுக்குள் தமிழ்நாட்டில்
ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆனீர்
தமிழர்களின் திருவயிற்றின்
கனியாகிய கன்னித்தாயே
முள்ளிவாய்க்காலில் மரித்த எங்களுக்காக
எங்கள் மரணநேரத்திலும்
டெல்லி சர்க்காரை
சங்காரம் வேண்டாமென்று
வேண்டிக் கொண்ட தாயே
எங்கள் சந்ததியினருக்காக
நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்
எங்கள் சந்ததியினரை இரட்சித்தருளும்
அவர்களை அவர்கள் சித்தத்தில் வாழ அனுமதித்தருளும்.
முள்ளுக் கிரீடம் அணிந்து
சிலுவையில் அறையப்பட்டு
மரணித்தார் நாதர் இயேசு
நாங்கள் பிறருக்காய் மண்ணுக்குள்
மரணிக்கப்பட்டோம் தாயே.
உயிர்த்தெழுந்து நாங்கள் வருகிறபோது
தாயே உமக்கே தோத்திரம்
உண்டாகக் கடவது.

Read more ...

அவதாரங்கள் இறக்கிறார்கள், கைதாகிறார்கள்!

அய்யாமுத்து பூசையிலே மனமுருகி நின்றான். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி பக்தி என்ற இன்ப வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது, அவனிற்கு முன்னாலே நின்றவர்கள் ஏதோ பெரிதாக கதைத்து அவனது சிந்தனையை குழப்பி விட்டார்கள். வகுப்பறையிலே பெடியன்கள் சத்தம் போட்டால் தமிழ் படிப்பிக்கும் நாகலிங்கம் வாத்தியார் சொல்லும் “காவோலையிலே நாய் ஒண்ணுக்கு அடிக்கிற மாதிரி சளசளக்காதேயுங்கடா” என்பது ஞாபகம் வந்தது. முன்னிற்கு நிக்கிறவர்கள் பூசையையும் கவனிக்காமல் அப்படி என்ன கதைக்கிறான்கள் என்று காதைக் கொடுத்துக் கேட்டான். இப்ப எவ்வளவு போகுது என்று ஒருத்தன் மற்றவனை கேட்டுக் கொண்டு நின்றான். யாழ்ப்பாண முறைப்படி செய்யப்படும் காரம், குணம், மணம் நிறைந்த மிளகாய்த் தூள் போட்ட கறியை ஒவ்வொரு நாளும் போட்டுத் தாக்குவதால் மூலக்கொதி வந்து அல்லல்படும் அய்யாமுத்துவிற்கு இதைக் கேட்டதும் கொதி உச்சந்தலை வரைக்கும் ஏறியது. ஏண்டா இதையெல்லாமாடா அளக்கிறது. அதையும் கதைக்க இடமில்லாமல் கோயிலிலை வைச்சா கதைக்கிறது எண்டு அவங்களைப் பார்த்து கத்தினான். வங்கியிலே வட்டி வீதம் எவ்வளவு போகுது என்டதை கோயிலிலே வைச்சு கேக்கக் கூடாதோ என்று அவங்கள் அய்யாமுத்துவை பார்த்துக் கேட்டார்கள்.

 

Read more ...