ருஹுணு பல்கலை மாணவர் தாக்கப்பட்டார்.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
17 Jan 2013
- Hits: 2053
ருஹுணு பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் தலைவர் நேற்றிரவு இனந்தெரியாத குண்டர்களால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலைக் கண்டித்து மேற்படி பல்கலைக் கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இன்று பகல் 12.00மணியளவில் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக நடை பயணமும், கண்டன ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதோடு, பல்கலைக் கழகத்தின் முன்பாக கறுப்புக் கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளதாக எமது நிருபர் அறிவித்தார். இதற்கு முன்னர் களனி பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் தலைவரும் குண்டர்களால் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.