பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்பாட்டத்தினால் போர்க்களமானது கோட்டை! (படங்கள்)
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
29 Aug 2012
- Hits: 2209
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்பாட்டத்தில் பொலிஸார் கண்ணீர்புகை குண்டுத்தாக்குதல். மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களை உடனடியாக திறக்க கோரி பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் முதலில் தண்ணீரைப் பீய்ச்சியடித்துள்ளனர் இதனையும் தாண்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்கையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர்ப்புகைக் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன..
குறித்த ஆர்பாட்டத்தினால் கொழும்பு கோட்டை பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.