புலம்பலிலும் நிதானம் வேண்டும் தலைவா!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
01 Apr 2012
- Hits: 2128
பூகோள வெப்பமடைதலுக்கு காரணமான நாடுகளே உண்மையான போர்க்குற்றவாளிகள்!
பூகோள வெப்படைதல் காரணமாக அனைத்து தாவர, விலங்கு இனங்களும் அழிவடையலாம்!
கண்டியில் நடைபெற்ற புவி மணித்தியால நிகழ்வில் ஜனாதிபதி!!
தலைவனின் "ஜிவகாருண்ணியம் கொண்ட….புத்த சிந்தனைச் சிலாவகங்ககைக்" கேட்கும் போது உலக ஜிவராசிகளுக்கெல்லாம் மெய் சிலிர்க்கும்! எங்களுக்காகப் பேச இப்படியும் ஓர் ஜிவகாருண்ணியச் சிந்தனையாளனோ! என…
புள்ளி விபரங்களின் படி, பூகோள வெப்பமடைதலுக்கு காரணமான மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளதாக உளறியுள்ளீர்கள்! இதற்குள் உங்கள் கூட்டாளிகளான சீன-ரஸ்யா போன்ற இன்னோரன்னவர்கள் எல்லாம் அல்லவோ, இப்புவியின் பிரதான எதிரியாக உள்ளார்கள்!
கடந்த மாதம் தான் இவர்களின் பலர் உங்களை ஜெனீவாவில் காப்பாற்றியவாகள்!
நீங்கள் இப்படிப் பேச, காப்பாற்றியவர்களுக்கு கோபம் வெப்பமாக வர, உங்கள் குடும்ப அரசியலின் "சுற்றுப்புற சூழல்கள்" அல்லவோ மாசடையப் போகின்றது!
உங்களுக்கு இப்போ மகா "ரென்ஸனுடன் கூடிய கொன்பிளிக்கேற்"
கடாபியும் கனாவில் வந்து போகின்றார் போல் உள்ளது. அதனால் தான் அவர் நிலை எனக்கும் வராதென்ற புல்பல்! இதிலும் அல்லவோ உங்களின் "உளவியலின் சுற்றுப்புறச் சூழல் மாசடைகின்றது"! அதன் தொழிற்பாடு வினையாற்றுகின்றது!
புலம்பலிலும் நிதானம் வேண்டும் தலைவா!
--அகிலன் 01/043/2012