யாரொடு கூடுவோம்... யாரொடு மோதுவோம்... (2)
- Details
- Category: இதழ் 3
-
27 Mar 2012
- Hits: 2911
பெண்கள் படையணி
எங்கள் மண்ணில் நிமிர்ந்தது
வெந்த உணர்வுகள் வீறுடன் நிமிர்ந்தது
எங்கள் இனத்துப்பெண்
சொந்த நிலத்திற்காய் போராட எழுந்தனள்
கையில் ஏந்திய எறிகணை
காலில் பூட்டிய விலங்கை உடைத்ததோ
போரிட்ட யுவதிகள்
வீரிட்டு அழும் அவலமாய்
சிங்கத்துக் கூரியவாள் நெஞ்சில் பாய்கிறது
யாரொடு மோதுவோம்
பிராந்திய உலக மேலாதிக்க முரண்பாட்டுக்குள் இலங்கை...!
- Details
- Category: இதழ் 3
-
14 Jul 2012
- Hits: 3316
பிராந்திய மற்றும் உலக மேலாதிக்க நாடுகளின் நலன் சார்ந்தே, இலங்கையின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளும் மோதல்களும் வெளிப்படுகின்றது. அதாவது பிராந்திய மற்றும் உலக மேலாதிக்கம் சார்ந்த சர்வதேச முரண்பாடுகள், இலங்கைக்குள் பிரதிபலிக்கின்றது. இதில் இருந்துதான் நாம் இன்று எம்மைச் சுற்றிய அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.
யுத்தத்தின் பின்பும், இனவாதமே அரசின் கொள்கை..!
- Details
- Category: இதழ் 3
-
03 Mar 2012
- Hits: 3399
யுத்தம் தான் இனப் பிரச்சினையின் தீர்வுக்குத்தடை என்றவர்கள், இன்று இனப் பிரச்சனையே இல்லை என்கின்றனர். இப்படி தீர்வை மறுப்பவர்கள் தான், தமிழ் மக்களை இலங்கையில் இருந்து இன நீக்கம் செய்கின்றனர். பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் எதைச் செய்கின்றதோ, அதைத்தான் சிங்கள அரச பேரினவாதம் இன்றும் செய்கின்றது. ஆக, யுத்த அழிவின் பின்னான இனவாதம், இலங்கையில் இரண்டு இனங்கள் சேர்ந்து வாழக்கூடாது என்பதான அரசின் இன்றைய கொள்கையாகிவிட்டது.
'பெடியள் விடமாட்டாங்கள்' என்ற எங்கள் அரசியல்
- Details
- Category: இதழ் 3
-
04 Jul 2012
- Hits: 3579
பெடியளின் மந்தைகளாக வாழப் பழகியவர்கள் நாங்கள். இதற்குள் தான் எமது அறிவும், அறியாமையும் கூட. நாம் முன்னணி இதழை விற்பனைக்காக கொண்டு சென்றபோது, 'பெடியள் விடமாட்டாங்கள்' என்ற அரசியல் சூனியத்தை சந்திக்கின்றோம்.
பெடியள், ஐ.நா, மேற்குநாடுகள், இந்தியா, தமிழகம் தொடங்கி பிரபாகரன் ஜெயலலிதா ... என்ற எதிர்பார்ப்புடன் கூடிய அரசியல் நம்பிக்கை, விடுதலையை இலவசமாக எதிர்பார்த்தது, எதிர்பார்க்கின்றது. இதேபோல் எமது முன்னணி இதழையும் அப்படித்தான் கோருகின்றது. முன்னணியை விற்பனைக்கு கொண்டு சென்ற எமது தோழர்களும் இந்த அரசியலுக்குள் தான் பயணித்தனர்.
வன்முறையை உருவாக்குவது அதிகாரவர்க்கமே..!
- Details
- Category: இதழ் 3
-
25 Feb 2012
- Hits: 3461
இன்று ஐரோப்பிய மக்கள் மத்தியில், குறிப்பாக இளம் சந்ததியினரிடம் முஸ்லீம் எதிர்ப்புச் சிந்தனையும், கருத்துக்களும் அதிகரித்துச் செல்கின்றது. இது எல்லா வெளிநாட்டவர் மீதுமான எதிர்ப்பு அலையாக இருந்தபோதும், குறிப்பாக முஸ்லீம் மீதான எதிர்ப்பாகத்தான் பெரிய அளவில் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் சிறுசிறு அளவில் காணப்பட்ட இந்தவகை எதிர்ப்பு உணர்வுகள், தற்போது பேருருக்கொண்டு வன்முறையாக மாறியுள்ளது.
நாசிகளும் - ஐரோப்பாவும், நோர்வே பயங்கரவாத தாக்குதற்கொலைகள்..
- Details
- Category: இதழ் 3
-
17 Apr 2012
- Hits: 3779
அவர்கள் ஐரோப்பா ஆக்கிரமிக்கப்படுகிறது என்றார்கள். ஒவ்வொரு விவாதங்களிலும் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரங்களிலும் ஒவ்வொரு கலந்துரையாடல்களிலும், நாளாந்த செய்தி ஊடகங்களிலும் அவர்கள் தான், அவனிடம் கூறினார்கள் 'நோர்வே ஆக்கிரமிக்கப்படுகின்றது.., ஐரோப்பா இஸ்லாம் மயமாகின்றது பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், பாடசாலைகள், வேலைத்தளங்கள், கூட்டங்கள், கலந்துரையாடல்கள் எல்லாவற்றிலும் அவர்கள் வாய்கிழிய ஆவேசமாக கத்தினார்கள். நோர்வே இஸ்லாம் மயமாகிவிடும். நோர்வேஜிய கலாச்சாரப் பாரம்பரியங்களுக்கு முடிவு கட்டப்பட்டுவிடும். எழுமின் விழிமின் என்றார்கள். அறைகூவி அழைத்தார்கள். இடதுசாரிக் கட்சிகள் தான், அவர்களுடைய குடிவரவு அகதிக் கொள்கைகள் தான் நாட்டினை நாசப்படுத்துகிறது என்றார்கள். குற்றச் செயல்கள் யாவுமே ஊற்றெடுப்பது இந்த வேற்று நிறங்கொண்டவர்களால் தான் என்றார்கள்.
பிரமாண்டமான சதுரங்கப் பலகையில் ஆடிய ஆட்டம்..(பகுதி -2)
- Details
- Category: இதழ் 3
-
14 Feb 2012
- Hits: 3352
அல்ஃபைடா எனப்படும் ‘இலாபம்” இந்தப் பிரமாண்டமான சதுரங்கப் பலகை வாஷிங்டன் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன்னர், பயங்கரவாதிகளை உருவாக்குவது மற்றும் இராணுவச் சதிகள் (படுகொலைகள்) மூலமாகவே ஆடப்பட்டது. 2001ஆம் ஆண்டுக்குப் பின்னான இந்தப் பத்துவருடத்தில் இதே பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்தமாகவும், இறுதி 5வருடங்களில் புதிய தொடக்கமாகவும் ஆடப்பட்டது. இந்தப் பிரமாண்டமான சதுரங்கப் பலகை யூரேஷியாவை அடிப்படையாகக் கொண்ட உலகின் பிரமாண்டமான ஒரு துருவ தலைமைத்துவத்துக்கான யுத்த ஆட்டத் தொடக்கமாகும். குறிப்பாக தெற்காசியாவின் பாரசீக வளைகுடாவை மையப்படுத்திய ஒரு நீண்டகால காலனித்துவ யுத்தம் என்ற கண்ணோட்டத்திலேயே இந்தச் சதுரங்க ஆட்டம் தெரிவு செய்யப்பட்டதாகும். இருப்பினும், 2001 ஆம் ஆண்டு நியூயோக் இரட்டைக் கோபுரத்தை அல்கைடா விஸ்வரூபம் எடுத்துத் தாக்கியதாக அமெரிக்கா இந்தச் சதுரங்க ஆட்டத்தை வெளிப்படையாகவே ஆடத் தொடங்கியது. பயங்கரவாதத்துக்கு எதிரானது என்ற கோசத்தோடு மேற்குலகையும் சேர்த்து வெளிப்படையாக பலமாக ஆடநினைத்த ஆட்டமாகும்.
2025ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை உலகில் முதலிடத்திலும், ஐரோப்பிய யூனியனை இரண்டாம் இடத்துக்கும் கொண்டுவருவதற்கான ஒரு மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பு ஆட்டமாகும். சுருங்கச் சொன்னால் இது மத்திய ஆசியாவை ஆக்கிரமிக்கும் சுனாமி ஆட்டமுமாகும். மத்திய ஆசியா எனப்படுவது சோவியத் யூனியனில் இருந்து உடைந்த மேற்சொன்ன ஜந்து நாடுகள் உள்ளடங்கலாக, ஈரான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வடக்காக அமைந்திருக்கிறது. அதேவேளை அதன் மேற்கெல்லையாக காஸ்பிக் கடலையும், கிழக்கில் சீனாவையும் கொண்டு அமைந்திருக்கும் கனிமவளங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரு கேந்திரப் பிரதேசமாகும்.
மாற்றொன்று இல்லையேல் மக்கள் விரோதம் தொடரும்!
- Details
- Category: இதழ் 3
-
15 Apr 2012
- Hits: 3445
சும்மா சொல்லப்படாது, மகிந்தா மகிந்தாதான்..! மகிந்த சிந்தனை மகத்தான சிந்தனைதான்..! முழு உலகமும் சுற்றி நின்று எதிர்த்தாலும், சுழன்று சுழன்று எதிர்த்தாடுகின்றார். சனல் 4-ல் நான் சர்வதேசக்குற்றவாளி என்றால், என் சனல் 5-ஐயைப் பார். அதில் நான் குற்றவாளியென்ற குறிப்பேதுமுண்டோ..? என முறைக்கின்றார்..! முள்ளிவாய்க்காலில் சரணடைய வந்தவர்களை, நாமா சாகடித்தோம்..?
போர்க்குற்ற விசாரணையும்… மேற்குலகமும்…!
- Details
- Category: இதழ் 3
-
11 Feb 2012
- Hits: 3557
இலங்கை அரசின் மீதும், அதன் ராணுவத்தின் மீதும் போர்க்குற்றம், சர்வதேச விசாரணை என, அமெரிக்காவும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், யுத்தம் முடிந்து இரு வருடங்களின் பின்னர் மிகவும் ஆக்கிரோசமாக பொங்கி எழுகின்றன. ஏன் இந்தத் திடீர் கரிசனை. இந்த இருவருட காலத்தில் என்னதான் நடந்தன என்பதனை, சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விடுப்பு! (சிறுகதை)
- Details
- Category: இதழ் 3
-
03 Mar 2012
- Hits: 3321
எல்லாரும் கொஞ்சம் சத்தம் போடாமை.., கொஞ்சம் அமைதியாய் இருங்கோ.., இப்ப வந்து பேசப்போறாங்கள். ஏதோ எங்களை நாகரீகம் தெரியாத பட்டிக்காட்டு சனங்கள் எண்டு நினைச்சுப் போடுவாங்கள். வெளிநாடென்று வந்து இன்னும் திருந்தேல்லை போலைக் கிடக்கு.., ஏதோ எங்கடை நல்ல காலத்துக்கு நிக்கிற டொக்ரரும் ஆரோ தமிழ்ப்பிள்ளை போல இருக்கு.., அவதான் பெரிய டொக்டர் போல தெரியுது.., என அங்கு நின்ற எல்லோரையும் சமாதானப்படுத்தி ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார் சுவிஸ் மாமன்.
சாம்பல் பூத்த மேட்டில் இருந்து.....
- Details
- Category: இதழ் 3
-
02 Feb 2012
- Hits: 4373
நீர் கொழும்பின் கரையோரப் பகுதி. தென்னை மரங்களும், செம்மஞ்சள் மணலும், நீல கடலையும் கொண்ட, சர்வதேச புகழ் பெற்ற கடற்கரைகளில் ஒன்று. ஜே.ஆர்(J.R) ஆட்சியில் சர்வதேச நிதி மூலம் நீர்கொழும்பின் கரையோர பகுதி உல்லாசப்பயணிகளின் சொர்க்க புரியாக்கப்பட்டது.
வறுமை மிகுந்த மீன்பிடி கிராம மக்கள் தம் நிலங்களை, சர்வதேச உல்லாசப் பயண நிறுவனங்களுக்கு தாரை வார்த்ததுக் கொடுத்து விட்டு, நீர்கொழும்பின் உட் பிரதேசங்களில் குடி ஏறினர். கடற்தொழிலைத் தவிர வேறொன்றும் தெரியாத இம் மக்கள் பலர் உல்லாச விடுதிகளில் கூலித் தொழிளார்காளாக அமர்த்தப்பட்டனர். ஆசியா அபிவிருத்தி வங்கி மூலம், அந்நியமொழி கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இளம் பெண்களும், ஆண்களும் விடுதிகளில் நாளாந்த பணி செய்யும் சேவையாளர்களாக ஆக்கப்பட்டனர்.