உதயன் பத்திரிகை மீதான தாக்குதலை கண்டிப்போம்! சம உரிமை இயக்கம்
- Details
- Category: சமவுரிமை இயக்கம்
-
13 Apr 2013
- Hits: 1002
இன்று (13) அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அச்சகத்தின் மீது தாக்குதல் நடாத்தி குழுவொன்று அச்சகத்திற்கும் தீ வைத்துள்ளது. இதற்கு முன்னர் ஏப்ரல் 03ம் திகதி இரவு கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த குழுவொன்று அதனை தாக்கி அங்கிருந்த பொருட்களை சேதமாக்கியது. உதயன் பத்திரிகை கூறுவதைப் போன்று 32 சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியிருப்பதோடு இது 33வது தாக்குதலாகும். அரசாங்கத்தோடு உடன்படாத கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் வெட்கம் கெட்ட அடக்குமுறை குறித்து இது சிறந்த உதாரணமாகும்.
இதற்கு முன்னர் கிளிநொச்சி அலுவலகத்தின் மீது நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சிங்கள மொழியில் பேசியவர்கள்தான் என்பதை கண்கண்ட சாட்சிகள் கூறியிருந்ததோடு அரசபடைகள் பெருமளவில் குவிக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதல்களின் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலக முடியாது. அரசாங்கத்தின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவு பெற்ற குழு உதயன் போன்ற பத்திரிகையொன்றை தாக்கியிருப்பது இலங்கையில் பல்வேறு இனக்குழுமங்களுக்கிடையிலும் தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கிடையிலான கசப்புணர்வும் முறுகல் நிலையும் தோன்றியிருக்கும் நிலையிலேயேயாகும். தமிழ் மக்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் செயற்படும் இனவாத சக்திகளின் பக்கம் ஈர்க்கப்படுவதை தடுப்பதாயிருந்தால் சமத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஒற்றுமை மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படும் சூழலை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும். அதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களினதும் ஒற்றுமை தேவைப்படுகிறது. தமிழ் மக்களை இனவாத மற்றும் அடிப்படைவாத திசைக்குள் தள்ளிவிடுவதேயன்றி ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்பது இப்படியான சம்பவங்களின் மூலம் வெளிக்காட்டப்படுகிறது. இந்த நிலைமையில் இனவாதம் மேலும் வளர்ச்சியடைந்து சிங்கள ,தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான இடைவெளி அதிகரித்து அதனூடாக கொடுமையான யுத்தமொன்றுக்கு வழி சமைப்பது இலங்கை சமூகத்திற்கு பயங்கர விளைவுகளை ஏற்படுத்தித் தரக் கூடும்.
இவ்வாறான மனிதத் தன்மையற்ற காடைத்தனத்தின் ஊடாக இலங்கையின் தேசிய பிரஜைகள் மத்தியில் மோதலை உருவாக்குவதற்கும் வடக்கில் இராணுவ ஆட்சியை தொடர்ந்து நடத்திச் செல்வதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக அணிதிரளுமாறும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைந்த போராட்டமொன்றிற்காக அணிதிரளுமாறும் ஒட்டு மொத்த இலங்கை முற்போக்க மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். உதயன் பத்திரிகைக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களை நிறுத்துவதற்காகவும் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக அமைப்பு ரீதியில் தலையிடுமாறும் ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஜனநாயகத்தை மதிக்கும் சக்திகளிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
-சம உரிமை இயக்கம்-
උදයන් පුවත්පතට එල්ලවූ ප්රහාරයේ වගකීමෙන් ආණ්ඩුවට මිදිය නොහැකියි - සම අයිතිය ව්යාපාරය
අද උදෑසන යාපනයේ උදයන් පුවත් පත් කාර්යාලයට එල්ලවූ මැර ප්රහාරයේ වගකීමෙන් ආණ්ඩුවට මිදිය නොහැකි බව සම අයිතිය ව්යාපාරය නිවේදනයක් නිකුත් කරමින් පවසයි. එම නිවේදනයේ මෙසේද සදහන් වේ,