இனவாதத்துக்கு மதவாதிகள் தலைமை தாங்கிய கல்முனைப் போராட்டம்
கல்முனையில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடியவர்கள், இன-மத ரீதியாக மக்களைப் பிரித்து ஒடுக்கியாண்ட முறைமையே, பிற இன-மத முறுகல்களுக்கு வித்திட்டது. இப்படி இலங்கை ஆட்சி அதிகாரங்கள், இன-மதம் சார்ந்து மக்கள் விரோத தன்மை கொண்டதாகவே இருக்கின்றது. கல்முனை வடக்கு தரம் உயர்த்தப்பட்டால், அந்த ஆட்சிமுறை இதற்கு விதிவிலக்காக ஒரு நாளும் இருக்கப்போவதில்லை. அதுவும் அதே இன-மதவாதம் கொண்ட, செக்குமாடாகவே செயற்படும்.
உலகம் அழிகின்றதா!? அழிக்கப்படுகின்றதா!?
இன்றைய மனிதனின் நடத்தைகள் தொடர்ந்தால், பூமியில் உயிரினம் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். மனித நடத்தைகள் என்றால் அவை எவை? அதை யார் தீர்மானிக்கின்றனர்? அரசுகள் என்ன செய்கின்றது?
பல்லுயிர் மற்றும் சூழலியல் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையேயான அறிவியல் கொள்கை மன்றத்தால் (IPBES) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது, மனிதன் இயற்கை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி எச்சரித்திருக்கின்றது.
இராசராச சோழன் : ஒடுக்கியோரின் "பொற்காலம்" ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருண்டகாலம்
எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றைப் பேசுவதில்லை, ஒடுக்குவோரின் வரலாற்றைப் பற்றியே பேசும். வரலாறாக இருக்கின்ற அனைத்துமே, ஒடுக்கியோரின் வரலாறாகும். எழுதப்பட்ட வரலாற்றை காட்டி இதுதான் அன்றைய மனித வரலாறு என்று கூறுவோர், ஒடுக்குகின்ற தரப்பைச் சேர்ந்தவர்களே. ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறு என்ன என்பதை கண்டறிந்து சொல்வதே, ஓடுக்கப்பட்டவர்கள் சர்hபாக நின்று சொல்வதாகும்.
இது இராசராச சோழனின் வரலாற்றுக்கு விதிவிலக்கல்ல. ஓடுக்கியோரின் வரலாற்றின் எதிர்மறையில் தான், ஒடுக்கப்பட்டடோரின் வரலாற்றை கண்டறிய வேண்டும். வர்ண – சாதிய சமூக அமைப்பில், இராசராச சோழனின்; சாதிய சிந்தனை குறித்தும், ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும், தேவைப்பட்ட பாரிய மனித உழைப்பு எங்கிருத்து எப்படி பெறப்பட்டது என்பது குறித்தும், இராசராச சோழனின்; பின்னால் பதுங்கிக் கிடப்பவர்கள் பதிலளிக்க வேண்டும்.
தமிழ் மொழியை அழிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மொழியே அரபு
அரபு மொழி இலங்கை மண்ணிற்கே உரிய தாய் மொழியல்ல. அரபு மொழி பேசவும் வர்த்தக சமூகத்துடன் உரையாடுவதற்கான ஒரு மொழியாக அரபு இலங்கையில் கற்கவில்லை. அரபு நூல்களை கற்க, அரபைக் கற்பிக்கவில்லை. அரபு மொழி அவசியமற்ற மக்கள் கூட்டத்தின் மேல், இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஒரு மொழியாக இலங்கையில் அரபு மொழி திணிக்கப்பட்டு இருக்கின்றது. வீதிகள், கட்டிடங்கள்.. பெயர்களில் அரபு முதன்மையான மொழியாகி இருக்கின்றது. குறிப்பாக பிற சமூகங்களில் இருந்து முஸ்லிம் சமூகத்தை அன்னியப்படுத்த விரும்பிய, இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளினால் கடவுளின் பெயரால் ஒரு அன்னிய மொழி திணிக்கப்பட்டது.
உடை குறித்த அரசியலும் - முதலாளித்துவப் பெண்ணியமும்
உடையை உற்பத்தி செய்வது இலாபநோக்குக் கொண்ட சந்தையே. இந்தச் சந்தையானது ஆணாதிக்க நுகர்வுச் சிந்தனையால் வடிவமைக்கப்பட்டது. இந்தச் சந்தையில் இருந்து எதை பெண் அணியவேண்டும் என்ற ஆணாதிக்க கட்டளைக்கு எதிரான, பெண்ணின் சுதந்திரமான உடைத் தெரிவு ஆணாதிக்கச் சந்தையைக் கடந்ததல்ல.
இந்த ஆணாதிக்க சந்தைச் சமூக அமைப்பில் உடை குறித்து சட்டங்கள், மத - இன - சாதி சார்பற்றதாக இருக்க வேண்டும். இதற்கு முதலில் அரசு இனம், மதம், சாதி கடந்த முரணற்ற ஜனநாயக அரசாக இருக்க வேண்டும். இதற்கு மாறாக அரசு மதம் சார்பானதாக இருக்கும் போது, சட்டங்கள் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும். இது ஒரு மதத்துக்கு எதிரான இன்னொரு மதத்தின் ஒடுக்குமுறையாக மாறுகின்றது. மறுபக்கத்தில் எல்லா மத தனி அடையாளத்தையும் பொது இடங்களில் அனுமதித்து, சமூகத்தைப் பிரித்து கூறுபோடுவதை செய்கின்றது. இதன் மூலம் பரஸ்பரம் ஒடுக்குமுறையை கொண்ட சமூகமாக, சமூகத்தை குறுக்கிவிடுவதே இலங்கையில் நடந்தேறுகின்றது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் வரட்டுக் கோசங்கள்
இனவாத, மதவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, எந்த அரசியல் நடைமுறைகளையும் கொண்டு செயற்படாதவர்களே இலங்கை இடதுசாரிகள். இன-மத வன்முறைகளின் போது திடீரென கோசம் போடுவதால், சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. இதைத்தான் இலங்கை இடதுசாரிகள் செய்கின்றனர்.
இன-மத வன்முறைக்கு எதிராக "இன்னொரு யுத்தம் வேண்டாம்!" என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைக்கின்றனர். "எங்கள் பிள்ளைகளுக்கு யுத்தம் வேண்டாம்" என்று சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கமும் முன்வைத்திருக்கின்றது.
மூளை சிந்திக்கும் திறனை இழந்ததன் அறிகுறியே, இனவாதமும் - மதவாதமும்
சொந்த இனத்தின் இனவாதம் குறித்தும், சொந்த மதத்தின் மதவாதம் குறித்தும் கருத்துச் சொல்ல முனையாதவன், இனவாதியாகவும் மதவாதியாகவும் இருக்கின்றான். சாதாரண மனிதன் முதல் அரசியல்வாதிகள் வரை, சொந்த இன-மத ஒடுக்குமுறையை ஆதரிக்கின்றவர்களாக, பிற இன-மத வாதங்களை மட்டும் காட்டி அதை எதிர்ப்பவராகவும் இருக்கின்றனர். இதுவே சமூகத்தின் சிந்தனைமுறையாக இருக்கின்றது.
தான் அல்லாத பிற சமூகம் குறித்தும், இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் எதிரான பெரும்பாலான கருத்துகளும், இனவாதமாகவும் மதவாதமாகவும் இருக்கின்றது.
அனைத்தும் தனக்கில்லை பிறருக்கே என்று கூறுகின்ற தர்க்கங்களும், வாதங்களும், மனிதத் தன்மைக்கு வேட்டு வைப்பதுடன், சமூகத்தில் புரையோடிக்கிடக்கின்றது.
முஸ்லிம் மக்களை, மக்களின் எதிரியாக்குகின்ற சமூக விரோதிகள் யார்?
உனக்காகவும், உன் நன்மைக்காகவும் உழைப்பதாகவும் - குரல் கொடுப்பதாகவும் கூறிக் கொண்டும் - காட்டிக்கொண்டும், உன்னை பிறரிடம் இருந்து தனிமைப்பட்டு வாழக் கோருகின்ற பொறுக்கிகள் தான் சமூகவிரோதிகள்.
இந்த சமூக விரோதிகள் மானிடத்துக்கு கேடு விளைவிக்கும் வண்ணம், பிற சமூகத்துடன் கூடி உழைத்து வாழும் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து ஓடுக்குகின்றது. வதந்திகளை உருவாக்கி அதைப் பரப்புவது முதல் பொது இடத்தில் முஸ்லிம்களை சந்தேகத்துக்குரியவராக முன்னிறுத்தி தனிமைப்படுத்தி ஒடுக்குவதே, இவர்களின் நோக்காக இருக்கின்றது.
பௌத்த பேரினவாதத்துக்கு எதிரான கூட்டு ராஜினாமா கூட இஸ்லாமிய அடிப்படைவாதமே
தங்கள் கூட்டு ராஜினாமா மூலம் தங்களது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பறைசாற்றினார்களே ஒழிய, மதம் மற்றும் இனம் கடந்த மனிதர்களாக தங்களை முன்னிறுத்தவில்லை. இன-மதம் சாராத ஜனநாயகவாதிகளாக தம்மை முன்னிறுத்தி, பிற இன-மதம் சார்ந்தவர்களுடன் கூட்டு ராஜினாமாவைச் செய்யவில்லை. பௌத்த பேரினவாதம் போல் குறுகிய வட்டத்துக்குள் நின்று, குண்டு சட்டிக்குள் ராஜினாமா செய்துள்ளனர்.
பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் சட்டத்துக்கும் நீதிக்கும் தலைவணங்குவதாக கூறும் எந்த பாராளுமன்ற உறுப்பினரும் இவர்களுக்காக ராஜினாமாச் செய்யவில்லை. பௌத்த பேரினவாதம் குறித்து புலம்பும் யாரும், தங்கள் பதவிகளை இதற்காக துறக்க தயாராகவில்லை.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்குமிடையிலான அதிகார இழுபறிகள்
இன்று அதிகாரத்தில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சியாளர்களை பதவி விலக்கக் கோரி, பௌத்த பேரினவாத அதிகார சக்திகளின ஒரு பகுதியினர் கோருகின்றனர். பௌத்த பேரினவாத சக்திகளுடன் தங்களை அடையாளப்படுத்தும் வெள்ளாளிய இந்துத்துவமும், பேரினவாத தயவில் கிறிஸ்துவத்தின் மகிமையைக் காணும் கும்பலும், இதன் பின்னால் கும்மி அடிக்கின்றது. அத்துடன் தமிழ் இனவாதிகளும், பதவிக்கும் பணத்துக்கும் அலையும் தமிழ் தரப்புகளும் இணைந்து, மனிதகுலத்தை கூறுபோட்டு நாட்டை நவதாராளவாதத்துக்கு இரையாக்குகின்றனர்.
நாடோ இன-மதவாத பதற்றத்துக்குள்ளாகி நிற்கின்றது. இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சியாளர்களை பதவி விலக்க கோரும் உண்ணாவிரதம், சட்ட அமைப்புமுறையை ஒடுக்கும் இன – மத அதிகாரத்தின் கட்டைப் பஞசாயத்துக்கு உட்படுத்தக் கோருகின்றது.