Mon04292024

Last updateSun, 19 Apr 2020 8am

விடுப்பு! (சிறுகதை)

எல்லாரும் கொஞ்சம் சத்தம் போடாமை.., கொஞ்சம் அமைதியாய் இருங்கோ.., இப்ப வந்து பேசப்போறாங்கள். ஏதோ எங்களை நாகரீகம் தெரியாத பட்டிக்காட்டு சனங்கள் எண்டு நினைச்சுப் போடுவாங்கள். வெளிநாடென்று வந்து இன்னும் திருந்தேல்லை போலைக் கிடக்கு.., ஏதோ எங்கடை நல்ல காலத்துக்கு நிக்கிற டொக்ரரும் ஆரோ தமிழ்ப்பிள்ளை போல இருக்கு.., அவதான் பெரிய டொக்டர் போல தெரியுது.., என அங்கு நின்ற எல்லோரையும் சமாதானப்படுத்தி ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார் சுவிஸ் மாமன்.

Read more ...

யுத்தத்தின் பின்பும், இனவாதமே அரசின் கொள்கை..!

யுத்தம் தான் இனப் பிரச்சினையின் தீர்வுக்குத்தடை என்றவர்கள், இன்று இனப் பிரச்சனையே இல்லை என்கின்றனர். இப்படி தீர்வை மறுப்பவர்கள் தான், தமிழ் மக்களை இலங்கையில் இருந்து இன நீக்கம் செய்கின்றனர். பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் எதைச் செய்கின்றதோ, அதைத்தான் சிங்கள அரச பேரினவாதம் இன்றும் செய்கின்றது. ஆக, யுத்த அழிவின் பின்னான இனவாதம், இலங்கையில் இரண்டு இனங்கள் சேர்ந்து வாழக்கூடாது என்பதான அரசின் இன்றைய கொள்கையாகிவிட்டது.

Read more ...

பிரமாண்டமான சதுரங்கப் பலகையில் ஆடிய ஆட்டம்..(பகுதி -2)

அல்ஃபைடா எனப்படும் ‘இலாபம்” இந்தப் பிரமாண்டமான சதுரங்கப் பலகை வாஷிங்டன் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன்னர், பயங்கரவாதிகளை உருவாக்குவது மற்றும் இராணுவச் சதிகள் (படுகொலைகள்) மூலமாகவே ஆடப்பட்டது. 2001ஆம் ஆண்டுக்குப் பின்னான இந்தப் பத்துவருடத்தில் இதே பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்தமாகவும், இறுதி 5வருடங்களில் புதிய தொடக்கமாகவும் ஆடப்பட்டது. இந்தப் பிரமாண்டமான சதுரங்கப் பலகை யூரேஷியாவை அடிப்படையாகக் கொண்ட உலகின் பிரமாண்டமான ஒரு துருவ தலைமைத்துவத்துக்கான யுத்த ஆட்டத் தொடக்கமாகும். குறிப்பாக தெற்காசியாவின் பாரசீக வளைகுடாவை மையப்படுத்திய ஒரு நீண்டகால காலனித்துவ யுத்தம் என்ற கண்ணோட்டத்திலேயே இந்தச் சதுரங்க ஆட்டம் தெரிவு செய்யப்பட்டதாகும். இருப்பினும், 2001 ஆம் ஆண்டு நியூயோக் இரட்டைக் கோபுரத்தை அல்கைடா விஸ்வரூபம் எடுத்துத் தாக்கியதாக அமெரிக்கா இந்தச் சதுரங்க ஆட்டத்தை வெளிப்படையாகவே ஆடத் தொடங்கியது. பயங்கரவாதத்துக்கு எதிரானது என்ற கோசத்தோடு மேற்குலகையும் சேர்த்து வெளிப்படையாக பலமாக ஆடநினைத்த ஆட்டமாகும்.

2025ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை உலகில் முதலிடத்திலும், ஐரோப்பிய யூனியனை இரண்டாம் இடத்துக்கும் கொண்டுவருவதற்கான ஒரு மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பு ஆட்டமாகும். சுருங்கச் சொன்னால் இது மத்திய ஆசியாவை ஆக்கிரமிக்கும் சுனாமி ஆட்டமுமாகும். மத்திய ஆசியா எனப்படுவது சோவியத் யூனியனில் இருந்து உடைந்த மேற்சொன்ன ஜந்து நாடுகள் உள்ளடங்கலாக, ஈரான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வடக்காக அமைந்திருக்கிறது. அதேவேளை அதன் மேற்கெல்லையாக காஸ்பிக் கடலையும், கிழக்கில் சீனாவையும் கொண்டு அமைந்திருக்கும் கனிமவளங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரு கேந்திரப் பிரதேசமாகும்.

Read more ...

வன்முறையை உருவாக்குவது அதிகாரவர்க்கமே..!

இன்று ஐரோப்பிய மக்கள் மத்தியில், குறிப்பாக இளம் சந்ததியினரிடம் முஸ்லீம் எதிர்ப்புச் சிந்தனையும், கருத்துக்களும் அதிகரித்துச் செல்கின்றது. இது எல்லா வெளிநாட்டவர் மீதுமான எதிர்ப்பு அலையாக இருந்தபோதும், குறிப்பாக முஸ்லீம் மீதான எதிர்ப்பாகத்தான் பெரிய அளவில் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் சிறுசிறு அளவில் காணப்பட்ட இந்தவகை எதிர்ப்பு உணர்வுகள், தற்போது பேருருக்கொண்டு வன்முறையாக மாறியுள்ளது.

Read more ...

போர்க்குற்ற விசாரணையும்… மேற்குலகமும்…!

இலங்கை அரசின் மீதும், அதன் ராணுவத்தின் மீதும் போர்க்குற்றம், சர்வதேச விசாரணை என, அமெரிக்காவும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், யுத்தம் முடிந்து இரு வருடங்களின் பின்னர் மிகவும் ஆக்கிரோசமாக பொங்கி எழுகின்றன. ஏன் இந்தத் திடீர் கரிசனை. இந்த இருவருட காலத்தில் என்னதான் நடந்தன என்பதனை, சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Read more ...