Mon05062024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரமாண்டமான சதுரங்கப் பலகையில் ஆடிய ஆட்டம்..(பகுதி -2)

அல்ஃபைடா எனப்படும் ‘இலாபம்” இந்தப் பிரமாண்டமான சதுரங்கப் பலகை வாஷிங்டன் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன்னர், பயங்கரவாதிகளை உருவாக்குவது மற்றும் இராணுவச் சதிகள் (படுகொலைகள்) மூலமாகவே ஆடப்பட்டது. 2001ஆம் ஆண்டுக்குப் பின்னான இந்தப் பத்துவருடத்தில் இதே பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்தமாகவும், இறுதி 5வருடங்களில் புதிய தொடக்கமாகவும் ஆடப்பட்டது. இந்தப் பிரமாண்டமான சதுரங்கப் பலகை யூரேஷியாவை அடிப்படையாகக் கொண்ட உலகின் பிரமாண்டமான ஒரு துருவ தலைமைத்துவத்துக்கான யுத்த ஆட்டத் தொடக்கமாகும். குறிப்பாக தெற்காசியாவின் பாரசீக வளைகுடாவை மையப்படுத்திய ஒரு நீண்டகால காலனித்துவ யுத்தம் என்ற கண்ணோட்டத்திலேயே இந்தச் சதுரங்க ஆட்டம் தெரிவு செய்யப்பட்டதாகும். இருப்பினும், 2001 ஆம் ஆண்டு நியூயோக் இரட்டைக் கோபுரத்தை அல்கைடா விஸ்வரூபம் எடுத்துத் தாக்கியதாக அமெரிக்கா இந்தச் சதுரங்க ஆட்டத்தை வெளிப்படையாகவே ஆடத் தொடங்கியது. பயங்கரவாதத்துக்கு எதிரானது என்ற கோசத்தோடு மேற்குலகையும் சேர்த்து வெளிப்படையாக பலமாக ஆடநினைத்த ஆட்டமாகும்.

2025ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை உலகில் முதலிடத்திலும், ஐரோப்பிய யூனியனை இரண்டாம் இடத்துக்கும் கொண்டுவருவதற்கான ஒரு மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பு ஆட்டமாகும். சுருங்கச் சொன்னால் இது மத்திய ஆசியாவை ஆக்கிரமிக்கும் சுனாமி ஆட்டமுமாகும். மத்திய ஆசியா எனப்படுவது சோவியத் யூனியனில் இருந்து உடைந்த மேற்சொன்ன ஜந்து நாடுகள் உள்ளடங்கலாக, ஈரான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வடக்காக அமைந்திருக்கிறது. அதேவேளை அதன் மேற்கெல்லையாக காஸ்பிக் கடலையும், கிழக்கில் சீனாவையும் கொண்டு அமைந்திருக்கும் கனிமவளங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரு கேந்திரப் பிரதேசமாகும்.

Read more ...

போர்க்குற்ற விசாரணையும்… மேற்குலகமும்…!

இலங்கை அரசின் மீதும், அதன் ராணுவத்தின் மீதும் போர்க்குற்றம், சர்வதேச விசாரணை என, அமெரிக்காவும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், யுத்தம் முடிந்து இரு வருடங்களின் பின்னர் மிகவும் ஆக்கிரோசமாக பொங்கி எழுகின்றன. ஏன் இந்தத் திடீர் கரிசனை. இந்த இருவருட காலத்தில் என்னதான் நடந்தன என்பதனை, சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Read more ...

சாம்பல் பூத்த மேட்டில் இருந்து.....

நீர் கொழும்பின் கரையோரப் பகுதி. தென்னை மரங்களும், செம்மஞ்சள் மணலும், நீல கடலையும் கொண்ட, சர்வதேச புகழ் பெற்ற கடற்கரைகளில் ஒன்று. ஜே.ஆர்(J.R) ஆட்சியில் சர்வதேச நிதி மூலம் நீர்கொழும்பின் கரையோர பகுதி உல்லாசப்பயணிகளின் சொர்க்க புரியாக்கப்பட்டது.

வறுமை மிகுந்த மீன்பிடி கிராம மக்கள் தம் நிலங்களை, சர்வதேச உல்லாசப் பயண நிறுவனங்களுக்கு தாரை வார்த்ததுக் கொடுத்து விட்டு, நீர்கொழும்பின் உட் பிரதேசங்களில் குடி ஏறினர். கடற்தொழிலைத் தவிர வேறொன்றும் தெரியாத இம் மக்கள் பலர் உல்லாச விடுதிகளில் கூலித் தொழிளார்காளாக அமர்த்தப்பட்டனர். ஆசியா அபிவிருத்தி வங்கி மூலம், அந்நியமொழி கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இளம் பெண்களும், ஆண்களும் விடுதிகளில் நாளாந்த பணி செய்யும் சேவையாளர்களாக ஆக்கப்பட்டனர்.

Read more ...