தாலிபான்களால் சுடப்பட்ட 14 வயது உரிமைப் போராளி
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 October 2012
- Hits: 2343
பெண்களில் கல்வி உரிமைக்காகப் போராடி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுபியா என்ற மாணவி பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சவாட் மலைப் பிரதேசத்தின் மிங்கோரா நகரில் வைத்து தாலிபான்களால் சுடப்பட்டு சவாட் மிஙகோரா நகரில் உள்ள பசாவர் இராணுவ மருத்துவமனையில் சேர்க்ப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஓ….என் யாழ்ப்பாணமே…... (சிறுகதை)
ஏதோ கனவிலே கேட்பது போலே கிடக்கிறது. ஆனால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாமலும் இருக்கு. கொஞ்சம் கண்ணை விழித்து காதைக் கூர்மையாக்கி கேட்கிறேன். உண்மையிலே அது ரெலிபோன் அடிக்கிற சத்தம் தான். வெள்ளிக்கிழமையெண்டபடியாலே லேற்றாக வந்து தான் படுத்தனான் கண் திறக்க எரிந்து வலித்தது. முழிக்க முயன்றேன் முடியவில்லை. ரெலிபோன் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது.
"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 09 October 2012
- Hits: 3401
இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக ஏற்கெனவே செய்திகள் கசிந்திருந்தன.
கழிவுஎண்ணை வீசும் புலம் பெயர்ந்த கனவான்கள்
தெருக்களில் முழங்கும்
மாணவர் கிளர்ச்சிக்குத் தெரியாது
இனங்களைப் பிரித்துப்போட்டு
பதாகைகள் ஏந்திட
எமக்காய் ஒலிக்கும் குரல்களில்
இனவாதத் தீயை தேடல்
எந்தவகை நியாயம்
கூடங் குளத்து “பொலிசுகாரர்களே”!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 09 October 2012
- Hits: 2415
அணு உடைவுச் சிதறல்கள்
அண்மையிலா அதிககாலங்களா?
எப்போதும் நிகழாம்
தெருவிபத்து.
பொங்கித்தள்ளும் தீமலைகள்
உலுக்கி சிதைத்தப்போடும்
நிலநடுக்கம்
தென்னையளவுயர்ந்து
தவளையின் நாக்கென
சட்டென நீண்டு
பின்னோடும் பெருவெள்ளம்
சுனாமி.
இயற்கையின் சீற்றம்
எப்போதும் நிகழலாம்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் லண்டன் கூட்ட செய்தி (படங்கள் இணைப்பு)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 08 October 2012
- Hits: 1065
நேற்று லண்டனில் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரித்தானியக் கிளையின் பகிரங்க கருத்தரங்கு இடம்பெற்றது. இதில் முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் குமார் குணரட்ணம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
தோழர் குமார் "இன்று என்ன செய்யப்பட வேண்டும்" என்னும் தலைப்பில் உரையாற்றியதுடன் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களின் இன ஐக்கியத்தையும் வலியுறுத்தினார். கூட்டத்தின் இறுதியில் கேள்வி நேரத்தில் இரண்டும் முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டன.
முன்னிலை சோசலிசக் கட்சிக்கு எதிரான தமிழினவாதப் பிரச்சாரங்கள் குறித்து
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 08 October 2012
- Hits: 3150
இந்தப் பிரச்சாரத்தில் இரண்டு குறிப்பான விடையங்கள் குறித்து தற்போதைக்கு சுருக்கமாகப் பார்ப்போம்.
1.சுயநிர்ணயத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாதது குறித்து
சுயநிர்ணயத்தை அவர்கள் ஏற்க மறுத்தது குறித்து பேசுகின்றனர். சரி இவர்கள் யார்? இவர்கள் வைக்கும் தீர்வு என்ன? இப்படி பல கேள்விகள் மூலமும், இவர்களைப் புரிந்து கொள்ள முடியும். கடந்த 30 வருடத்தில் எங்கே எப்படி இருந்தனர் என்பது தொடங்கி இன்று என்ன செய்கின்றனர் என்பது வரை, இவர்களை தெரிந்து கொள்வதன் மூலம் இவர்களின் "சுயநிர்ணயம்" என்ன என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.
யாழ்ப்பாணத்தில் திமுத்து ஆட்டிகல மீது கழிவு எண்ணெய் வீச்சு!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 07 October 2012
- Hits: 2426
முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் திமுத்து ஆட்டிகல மீது யாழ்ப்பாணத்தில் வைத்து கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அவற்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும் போது யாழ்ப்பாண நல்லூர் கோவிலுக்கு அருகாமையில் வைத்து இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரி.பி.சி. வானொலி முன்னிலை சோசலிசக்கட்சியைச் சேர்ந்த குமார் குணரத்தினத்திடம் கண்ட பேட்டி தொடர்பாக – (பகுதி 2)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 07 October 2012
- Hits: 3348
முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த குமார் குணரத்தினத்திடம் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்கின்றீர்களா, உங்கள் தீர்வுத் திட்டம் என்ன என்ற கேள்வியைத்தான் மாற்றி மாற்றி பலரும் எழுப்பினர். வர்க்கப்போராட்டம் மூலமான அவர்களின் தீர்வை மறுக்கின்றவர்கள், அதை சாத்தியமில்லை என்று கருதுகின்றவர்களின், தர்க்கங்களும் வாதங்களும் தான் இவை. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக இந்த வர்க்க அமைப்பில் தீர்வுகளைக் காணமுடியும் என்று கருதுகின்றவர்களின் கேள்விகள் தான் இவை.
மீண்டும் அப்பாவாகிறேன்....
தாய் தகப்பனுடன் இருக்க முடியாத காரணங்களினாலும், தாய் தகப்பன் இருந்தும் சில சமூகப்பழக்க வழக்க நடைமுறைகளை சரிவரச் செய்யத் தெரியாத ஒரு வகை உளவியல் வருத்தங்களைக் கொண்ட பிள்ளைகளை பராமரிக்கின்ற இடம் தான் நான் வேலை செய்யும் இடம். மெசின்களுடன் வேலை செய்வதை விட இந்த மனிதர்களுடன் வேலை செய்வதென்பது மிகவும் கஸ்ரமான ஒன்று. அதிலும் குழந்தைகளுடன் அதுவும் கொஞ்சம் மனம் சரியில்லா உளவியல் குறைபாடுள்ள பிள்ளைகள் என்றால். அதை அனுபவிச்சவர்களுக்குத் தான் தெரியும்.