கூடங்குளம் அணு மின்னிலையத்திற்கு எதிரான போராட்டத்தினை இலங்கையிலும் முன்னெடுப்போம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 07 November 2012
- Hits: 2284
தமிழ் நாட்டின் தென் கரையோரத்தில் இலங்கைக்கு அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டு இயங்க வைக்கப்படவுள்ள கூடங்குளம் அணு உலை மின்உற்பத்தி நிலையம் தமிழ் நாட்டு மக்களுக்கும், அதே போன்று இலங்கை மக்களுக்கும் குறிப்பாக வடக்கு மேற்கு கரையோரங்களை அண்மித்த பிரதேசங்களின் மக்களுக்கும் பாரிய உயிர் அழிவுகளையும் கொடிய நோய்களையும் கொண்டு வரக் கூடியதாகும். கூடங்குளம் அணு உலை மூலமும் அணுக்கழிவுகளில் இருந்து வெளிவரும் கதிரியக்கமானது மக்களது அன்றாட வாழ்விலும் மண்ணிலும் கடலிலும் காற்றிலும் சுற்றுப்புறங்களிலும் நாசங்களை ஏற்படுத்தும் அபாயங்களையே கொண்டுள்ளது.
மீண்டும் அதே தமிழீழம் வேண்டுமென..!
எதையோ சரி சரி என்றனர் சிலர்
அதையே பிழை பிழை என்றனர் சிலர்
அந்தப் பிழை என்பதுதான் சரி என்றனர் சிலர்
இல்லை இல்லை
அந்தச் சரி என்பதுதான் சரியென்றனர் சிலர்
அத்தான் இல்லையேல், நான் செத்தேன்...!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 05 November 2012
- Hits: 3497
சொந்தத்தில் கார், கொழும்பிற் காணி
சோக்கான வீடு,வயல்,கேணி
இந்தளவும் கொண்டு வரின்
இக்கணமே வாணியின் பால்
சிந்தை இழப்பான் தண்டபாணி
- மகாகவி உருத்திரமூர்த்தி
அத்தான் இல்லையேல், நான் செத்தேன்...!
சொந்தத்தில் கார், கொழும்பிற் காணி
சோக்கான வீடு,வயல்,கேணி
இந்தளவும் கொண்டு வரின்
இக்கணமே வாணியின் பால்
சிந்தை இழப்பான் தண்டபாணி
- மகாகவி உருத்திரமூர்த்தி
முஸ்லீம் மக்கள் மீதான வன்முறையும், அதற்கு எதிரான போராட்டமும்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 03 November 2012
- Hits: 3287
முஸ்லீம் மக்கள் சொந்த மண்ணில் இருந்து (யாழ்ப்பாணத்திலிருந்து) வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் கடந்த 30ம் திகதியுடன் ஆகியுள்ளது. இன்னமும் அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு திரும்பி இயல்வு வாழ்வு வாழ்வதற்க்கான அறிகுறிகள் பெரிதாக தென்படுவதாக இல்லை. கீழே உள்ள ஆக்கம் முஸ்லீம் மக்களின் பலவந்த வெளியேற்றத்தினை கண்டித்து பல வருடங்களிற்கு முன்னர் எழுதப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் இன்றைய காலத்திற்கும் பொருந்தும் என்பதனால் மீள்பிரசுரமாகின்றது
பல்கலைக்கழக ஆசிரியர் போராட்டம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 03 November 2012
- Hits: 2299
கடந்த தொண்ணூற்றொன்பது நாட்களாக ஆறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்களது போராட்டம் கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது. அரசாங்கம் இதில் வெற்றிபெற்றுத் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டது என்றே சொல்லவேண்டும். எந்தவொரு கோரிக்கைக்கும் முழுமையான உத்தரவாதத்தை அளிக்காமல் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவந்துள்ளமை நிச்சயமாக அரசாங்கத்திற்கு வெற்றியே. இப்போது பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்மேளனச் சார்பில் ஆளாளுக்குக் கதை சொல்கிறார்கள்.
நமக்கான போராட்ட அரசியல்!!!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 02 November 2012
- Hits: 2455
இன்றைய பொருளாதார அமைப்பில் சமூகத்தைப் பற்றிய ஆய்வு முக்கிய இடத்தை வகிக்கின்றது. உலக அரசியலை நடத்திக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் உருவாக்கும் நிறுவனங்கள் ஊடாக ஆய்வினை செய்கின்றனர். நிறுவனங்களால் அனுப்பப்படுபவர்கள் களஆய்வு என்ற பெயரில் பற்பல நாடுகளுக்கும் சென்று அங்குள்ள நிலமைகளை ஆராய்கின்றனர்.
"சுயநிர்ணயம்" பேசும் சந்தர்ப்பவாதிகளை அரசியல் ரீதியாக இனம் காணல்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 01 November 2012
- Hits: 2300
கொள்கையளவில் "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொள்வதன் மூலம் தாங்கள் சரியான அரசியலைக் கொண்டிருப்பதாகக் காட்டும் சந்தர்ப்பவாதிகளின் கோட்பாட்டு அடித்தளம், அரசியல்ரீதியாக எப்படிப்பட்டது? ஒடுக்குமுறையாளன் முதல் பிரிவினைவாதி வரை "சுயநிர்ணயத்தை" தனக்குச் சார்பாக விளக்கி, செயல்படுவதைக் காண்கின்றோம். "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்தி அரசியலை குறுக்கிவிடுகின்ற செயல்பாடுகள், அரசியல் அரங்கில் அரங்கேறுகின்றது. "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொள்ளாதவர்களின் அரசியல் செயற்பாடு தவறானது என்று குறுக்கிக் காட்டிக்கொள்வதன் மூலம், தங்களைச் சரியான கோட்பாட்டை கொண்டு செயல்படுபவர்களாக நிறுவ முனையும் அரசியல் போக்கு இன்று முனைப்புப் பெற்றிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் முடிவல்ல!!!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 30 October 2012
- Hits: 2534
முள்ளிவாய்க்காலில் ஆயிரமாயிரம் மக்களும், போராளிகளும் கொல்லப்பட்டனர். அந்த வேளையில் உலக நாடுகளின் அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினர்களும் தமிழர்கள் பக்கமாக தாம் இருப்பதாக பாங்கு செய்தனர். மக்களும் தமக்கு ஆதரவாக இந்த மேற்குலக மற்றும் இந்திய அரசியல்வாதிகள் எல்லோரும் குரல் கொடுக்கின்றார்கள், யுத்த நிறுத்தம் வரும், ஒரு மாற்றம் ஏற்படும் என்று நம்பியிருந்தனர். ஆனால் கொத்துக் கொத்தாக மக்களை கொன்று குவிக்க விட்டு விட்டு, வெறும் அறிக்கைகளையும் பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டிகளையும் கொடுத்து, தாம் தமிழ் மக்கள் பக்கம் நிற்பதாக பாசாங்கு பண்ணிய படி, இந்த அரசியல்வாதிகள் எல்லோரும் ஒதுங்கிக் கொண்டனர்.
ஒக்டோபர் புரட்சியும், ஒக்டோபர் 21 எழுச்சியும்- யாழ் கூட்ட அறிக்கை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 30 October 2012
- Hits: 2362
தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் மீதான கொடூரச் சுரண்டலுக்கும் ஏதேச்சதிகார அடக்கு முறைகளுக்கும் மட்டுமன்றி தேசிய இனங்ககளின் சிறைச்சாலையாக விளங்கிய ரசியப் பேரினவாத ஒடுக்குமுறைக்கும் எதிராக வெடித்தெழுந்து வெற்றி பெற்றதே மாமேதை லெனின் தலைமையிலான 1917 ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியாகும் அதிலிருந்து எழுந்த அதிர்வலைகள் இன்றுவரை உலகம் பூராவும் எதிரொலித்தபடியே இருந்து வருகின்றன.