இளையராஜா இசைக்க வருவது தேசத்துரோகம், ஆனால் படம் பார்ப்பது தமிழ்த்தேசியம்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 17 November 2012
- Hits: 3358
மக்களிற்காக போராடி மடிந்தவர்கள் என்றும் எம் நினைவுகளில் வாழ்வார்கள். அவர்களின் போராட்டங்களை தொடர்வதும், அவர்களின் செய்திகளை அடுத்த கட்டங்களிற்கு, அடுத்த தலைமுறைகளிற்கு எடுத்துச் செல்லுவதுமே அவர்களிற்கான அஞ்சலியாக அமையும். அந்த நாளில் அல்லது அந்த மாதத்தில் வெறும் சடங்காக செய்யப்படுபவை எந்த விதமான அர்த்தமும் இல்லாதவை. இளையராஜா கனடாவிற்கு இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக கார்த்திகை மாதம் வருகிறார் என்றதும் புலம்பெயர் புண்ணக்குகளின் தேசபக்தி உச்சத்திற்கு போய்விட்டது.
இந்திய அரசே அணு உலையினை உடனே நிறுத்து; யாழில் முழங்கிய குரல்கள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 17 November 2012
- Hits: 2270
இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான இவ் போராட்டம் இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலையினால் இலங்கைக்கும் பாதிப்புக்கள் ஏற்ப்படும் இதனால் இந்திய அரசே உடனடியாக அணு உலை நிர்மாணப் பணிகளை நிறுத்த வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுயநிர்ணய உரிமை.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 17 November 2012
- Hits: 2263
புலம்பெயர்ந்த புத்திஜீவிகளின் விவாதத்திற்கான சுவாரசிய கருப்பொருளா...?
சுரண்டல், ஒடுக்குமுறை, ஏமாத்து, சுத்துமாத்து, ஸ்பெசலாக ஏகாதிபத்தியம் மற்றும் உலக மயமாக்கல் போன்றவற்றை புரிந்து கொள்ள நாங்கள் பேராசிரியர்களாகவோ இல்லை பல்கலைகழகம் சென்றவர்களாகவோ இருக்க வேண்டியதில்லை. நாம் சராசரி மனித வாழ்க்கையிலேயே இவற்றை அனுபவித்து வருகின்றோம். உதாரணமாக சிலர் தமது வாழ்வு முறையில் ஒரு முழுமையான பிற்போக்குவாதியாக வாழ்ந்தாலும் தமது அறிவு நிமித்தம் ஒரு கலந்துரையாடலில் தான் ஒரு பரிபூரணமான முற்போக்குவாதியாக காட்டிக்கொள்ள முடியும். அதே நேரம் ஒரு பாமரன் அல்லது ஒரு அப்புராணி தன் நிஜ வாழ்வில் முற்போக்காக வாழ்ந்தாலும் தனக்கு முற்போக்காக வெளிப்படுத்தத் தெரியாத காரணத்தால் பிற்போக்கு வாதியாக அடையாளப்படுத்தப்படுகின்றான்.
ஐரோப்பாவை குலுக்கிய போராட்டம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 16 November 2012
- Hits: 2314
புதன்கிழமை லட்சக்கணக்கான ஐரோப்பிய மக்கள், மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டும் அரசாங்கங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்தினார்கள்.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். தெற்கு ஐரோப்பிய நாடுகளின் அனைத்து நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணிகளை நடத்தினார்கள். நூற்றுக் கணக்கான பேர் போலீசுடன் மோதி கைது செய்யப்பட்டார்கள்.
அதிகாரத்தினை மையப்படுத்தலும் மாகாணங்களை குறுங்குதலும்!!!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 15 November 2012
- Hits: 2402
ஆட்சியில் முழு அதிகாரத்தினையும் தமது கைகளில் வைத்துள்ள ராஜபக்ச சகோதரர்கள்; தாம் மக்களில் இருந்து அன்னியப்படுகின்ற போது மக்களை தூண்டி விடுவதன் மூலம் அரசியல் லாபம் பெறுகின்றனர். இதனால் பெருதேசிய சிந்தனைகளை முன்னோக்கி நகர்த்தும் நிகழ்வுகள் பல்வேறு முனைகளில் நடந்தேறுகின்றன. இதன்விளைவாக இனங்களுக்கிடையாயேன முரண்பாடுகளையும், சந்தேகங்களையும் தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கு ஆளும் கட்சி தொடர்ச்சியாக செயற்படுகின்றது. இதனை புரிந்து கொள்வதன் மூலம் தொடர்ச்சியான பல நிகழ்வுகளை அவதானிக்க வேண்டும்.
மதுபான சாலை கேட்டும், எதிர்த்தும் ஆர்ப்பாட்டங்கள்!!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 14 November 2012
- Hits: 2133
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்தில் புதிய மதுபான சாலை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டு இன்று சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக சுலோகங்களை தாங்கியவாறு வருகை தந்த ஒரு சில ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய மதுபான சாலை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படுகொலை மூலம் ஒற்றுமையையோ, விடுதலையையோ காணமுடியாது
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 14 November 2012
- Hits: 2373
கடந்த ஒரு வருடத்துக்கு முன் வாள் கொண்டு வெட்டப்பட்ட பரிதி, 08.11.2012 சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். இதை இலங்கை அரசு செய்ததாக புலிகளின் அறிக்கைகளும், அஞ்சலிகளும்; குற்றம் சாட்டுகின்றன. அதேநேரம் இலங்கை அரசு இதை மறுக்கின்றது. அதே நேரம் முரண்பட்ட புலிக் குழுக்களின் வேறுபட்ட பார்வைகள் முதல் எச்சரிக்கை வரை வெளிவருந்திருக்கின்றது. மக்கள் இந்தக் கொலை புலிக் குழுக்களுக்கு இடையிலான கொலையாக நம்புகின்றனர். ஏன் இந்த முரண்பாடு?
மக்கள் விரோத மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சி...!
அரசு எதிர்காலத்தில் மகிந்த சிந்தனையை மீறி செயற்படின் அரசுடனான உறவு முடிவுக்கு வருமென அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிகெல உறுமய மகிந்தாவிற்கு எச்சரிக்கை செய்கின்றது.
கசாப்புக்கடை நடாத்தும் இரு நண்பர்களுக்கிடையில் கொள்கை முரண்பாடு வந்தால் எது நடக்குமோ எவ்வெச்சரிக்கை கொண்ட சமிக்கையைக் காட்டுமோ, அதுபோன்றதொரு எச்சரிக்கையைத்தான் ஜாதிகெல உறுமயவின் உறுமலுக்கூடாக காணமுடிகிறது.
சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் இனவெறி கொண்ட ஆகப் படுமோசமான, படுபிற்போக்கு அரசியல் செயற்பாட்டகத்தின் மொத்த உருவகம்தான் ஜாதிகெல உறுமய. அதை அரவணைத்த அரசியல்தான் மகிந்த சிந்தனை.!
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க ஐநா தவறியது: ஐநா ஆய்வு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 13 November 2012
- Hits: 2116
இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா மன்றம் மோசமாகத் தவறியுள்ளது என்று ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஐநாவுக்குள் உள்ளளவில் நடத்தப்பட்ட ஆய்வுடைய அறிக்கையின் வரைவு பிரதி ஒன்று பிபிசியிடம் கசியவிடப்பட்டுள்ளது.
சிறைக்கொலைகள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 12 November 2012
- Hits: 2335
1983 யூலை 25 அன்று 53 போராளிகளை இனவாத காவலாளிகளும், கைதிகளும் இனவாதத்தினால் உந்தப்பட்டு தாக்கி கொலை செய்தனர். இது அரசியல் ரீதியான கிளர்ச்சியினால் ஏற்பட்ட இன முரண்பாடுகளை முன்வைத்து நடத்தப்பட்ட தாக்குதல். இவ்வாறே இந்த வருடம் வவுனியாவில் சிறைக்கைதிகளை கண்மூடித்தனமாக தாக்கியது இந்த இனவாதம். வவுனியாவில் மேற்கொண்ட தாக்குதலால் கைதிகளால் நடத்தப்பட்ட அரசியல் கோரிக்கை கொண்ட போராட்டம் முடக்கப்பட்டது.