வெலிக்கடை மோதலில் சம்பந்தப்படாதோரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2012
- Created: 12 November 2012
- Hits: 833
வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த ஆயுதமோதல்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட கைதிகளில் சிலர், மோதல் முடிந்த பின்னர் சிறைக்கூடத்துக்கு வெளியில் அழைத்துவரப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.
கூடங்குளம் அணு உலை அபாயத்திற்கு எதிரான மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 11 November 2012
- Hits: 866
கூடங்குளம் அணு உலை அபாயத்திற்கு எதிரான மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம். 17.11.2012 சனிக்கிழமை பகல் 11 மணிக்கு யாழ் மத்திய பேரூந்து நிலையம் முன்பாக இடம் பெறவுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி இலங்கைக்கும் குறிப்பாக வடபிரதேசத்தின் மக்களுக்கும் இக் கூடங்குளம் அணு உலை மின் நிலையத்தால் அபாயங்களே உருவாகும். எனவே இவ் அபாயம் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பை மக்கள் நலன்களில் அக்கறை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், பொது அமைப்புக்களுக்கும், சமூக அக்கறையாளர்களுக்கும் புதிய- ஜனநாயக மாக்சிச - லெனினிசக் கட்சி விடுக்கின்றது.
வரவு செலவுத் திட்டம்- பழைய மொந்தையில் புதிய கள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 November 2012
- Hits: 2218
2013க்கான வரவு செலவு அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நேற்று நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. எப்போதும் போல இந்த வரவு செலவு திட்டமும் பாமர மக்களுக்கோ நடுத்தர வர்க்க மக்ளுக்கோ எவ்வித நிவாரணங்களையும் வழங்கியதாகத் தெரியவில்லை.
எல்லா முதலாளிகளும் ஏகோபித்த குரலில் வரவேற்கும் பட்ஜெட்டாகத்தான் இது இருக்கப் போகிறது. வெளிநாட்டு செலவானி கட்டுப்பாடுகளைக் கவனியாது தனியார் வங்கிகளுக்கு வெளிநாட்டுக் கடன் பெறுவதற்காகத் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகத் தான் தெரிகிறது.
பசித்த வயிறுகளின் கொதிப்றியா ஈனச்சமூகமே பாலியல் தொழிலாயிது?
ஈழமெழுமெனப்
போரிட்ட வீரப்பெண் சேனையை
தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே
மாவீரர் நினைவேந்தக்
கார்த்திகைக்கு
மலர்தூவப் போவீரோ..
வாழ வழியேதுமற்றுச்
சாகக் கிடந்தால்
சுருக்கிட்டு சாவெனச் சொல்லும்
ஈனச் சமூகமிது
பசியால் துடிக்கும்
குழந்தையைப் பெற்றவள்
இதயத் துடிப்பறியா இனமே
உடலைவருத்தி உலையேற்றினால்
பாலியல் தொழிலாயிது ?
பிரான்ஸில் விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர் கொலை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 09 November 2012
- Hits: 2161
விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர் என்று கூறப்படும் நடராஜா மதிதரன் ( பரிதி) என்பவர் பிரான்ஸின் பாரிஸ் நகரில் 8 ஆம் திகதி வியாழக்கிழமை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
2006 ஆம் ஆண்டு பிரான்ஸில் விடுதலைப்புலிகள் அமைப்பின் வேறு இரு செயற்பாட்டாளர்களான நாதன் மற்றும் கஜன் ஆகியோர் கொலைசெய்யப்பட்டு, அது குறித்த விசாரணைகள் இன்னும் பூர்த்தியாகாமல் இருக்கும் நிலையில் இந்த கொலை தற்போது அங்கு நடந்திருக்கிறது.
தருமபுரியில் தலித் வீடுகளுக்கு தீ வைப்பு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 09 November 2012
- Hits: 2120
தருமபுரியைச் சேர்ந்த வன்னியர் இனப் பெண்ணும் அப்பகுதி தலித் இளைஞர் ஒருவரும் காதல் திருமணம் செய்துகொண்டது கலவரத்தில் முடிந்திருக்கிறது.
அந்தத் திருமணத்தால் மனமுடைந்த பெண்ணின் தந்தை நேற்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட தலித்துக்களின் வீடுகள், விஷமிகளால் தீவைக்கப்பட்டிருக்கிறது.
சமவுரிமை மூலம் இனவாதத்தை எதிர்த்து, இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராட முன்வாருங்கள்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 08 November 2012
- Hits: 3123
சமவுரிமை இயக்கத்திற்கான செயற்திட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. இனவாதத்தை மக்கள் மத்தியில் இல்லாது ஒழித்தலும். இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராடுதலுமாகும். இந்த வகையில் அனைவரையும் போராடுமாறும், போராட முன்வருமாறும் கோருகின்றோம். இதன் அர்த்தம் எம்முடன் இணையுமாறு கோரவில்லை. மாறாக இதை நீங்கள் சுயாதீனமாக முன்னெடுக்குமாறு கோருகின்றோம்.
புரட்சி நாளை வரவேற்போம், சுடராய் அல்ல, சுட்டெரிக்கும் நெருப்பாய்…
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 08 November 2012
- Hits: 2420
நடைமுறையிலிருக்கும் முதலாளித்துவ அமைப்பு தனக்குள் இற்றுக்கொண்டிருக்கும் ஓசைகள் வெளிக்கேட்கத் தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது. அது தன் தலை நிலமாகிய அமெரிக்காவிலேயே வங்கிகளாய், பெரு நிறுவனங்களாய் வெடித்து வீழ்ந்துகொண்டிருக்கிறது. மக்களின் பணம் கொட்டப்பட்டு அவை நிலைத்திருப்பதாய் காட்ட முற்பட்டாலும் படிந்துவிட்ட வெடிப்புகளின் பல்லிளிப்புகளை மறைக்க விழி பிதுங்குகிறது முதலாளியம். உள்ளே எழுந்து கிளைபரப்பி விரியும் வலியை தடுத்தாட்கொள்வதாய் நினைத்துக்கொண்டு முன்னிலும் அதிகமாய் மக்களைக் கடித்து ரத்தம் குடித்துக்கொண்டிருக்கிறது. புவியெங்கும் கறைகளாய் அதன் உமிழல்கள்.
அணுமின்னிலையம் சாதாரண மக்களின் விடிவிற்கா? முதலாளித்துவ நலனிற்கா?
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 08 November 2012
- Hits: 2272
இலங்கை மக்களாகிய நாம் அணுவுலையை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றோம். இந்த அணுவுலையை நாம் உருவாக்கவில்லை, ஆனால் எமது சம்மதம் இல்லாமலே எமது புவியியல் எல்லையை தாண்டி எம்மை அழிக்கும் உயிர் கொல்லி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.. இந்த உயிர் கொல்லியை எதிர்க்காது சும்மா இருப்போமானால், எமது சந்ததி இல்லாது போகும். இதனால் ஏற்ப்படக் கூடிய பேரழிவிற்கும் தாக்கத்திற்கும் இனம் மொழி கடந்து நாம் எல்லோரும் (தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், கர்நாடகர்கள் எனப் பலர்) பலியாகும் சாத்தியப்பாடு உண்டு. அணுவுலையினால் ஏற்படும் கதிரியக்கம் எல்லோரையும் தாக்கியழிக்கும் உயிர்க் கொல்லியாகும்.
அனைத்து மீனவர்களும் ஒன்று சேர வேண்டும் -தேசிய மீனவர் அமைப்புகளின் ஒன்றியம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 07 November 2012
- Hits: 2145
அனைத்து மீனவர்களையும் ஒரு மத்திய நிலையத்திற்குள் இணைக்கும் நோக்கத்தோடு தேசிய மீனவர் அமைப்புகளின் ஒன்றியம் அமைக்கப்பட்டதாக அதன் அழைப்பாளர் பிரசன்ன அபேவிக்ரம கூறினார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது மேலும் கருத்து தெரிவித்த அபேவிக்ரம,