அப்பாவி பொதுமக்களை கொன்று விட்டு போலியான யுத்த நிறுத்த அறிவிப்பு யாருக்காக?
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 November 2012
- Hits: 2081
மேற்காசிய பிராந்தியத்தில் அரசியல் போர்க் குரல்கள் ஒருபக்கம் அரசுகளை அலற வைத்துக் கொண்டிருக்கும்...வேலையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ரத்தம் தோய்ந்த யுத்தம் ஓய்வுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் இன்று அறிவித்துள்ளது.
இந்தியாவின் நீதி அநீதியானது!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 November 2012
- Hits: 2095
மும்பையை தாக்கிய தீவிரவாதி கருதப்படும் அஜ்மல் கசாப் நேற்று தூக்கிலிடப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டது.
மும்பையை தாக்கிய 10 தீவிரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கசாப் என்று இந்திய நீதி மன்றம் முன்னரே அறிவித்துவிட்டது. அஜ்மல் கசாப் நேற்று காலையில் தூக்கிலிடப்பட்டார். அவரது கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
பாலஸ்த்தீனத்தில் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டித்து ம.போ.இ நாளை ஆர்ப்பாட்டத்தில்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 22 November 2012
- Hits: 2194
கடந்த ஒரு வராகாலமாக இஸ்ரேலிய காட்டுமிராண்டிகளால் பாலஸ்த்தீனத்தில் அப்பாவிப் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும் இதற்கு துணையாக நின்ற ஏகாதிபத்திய பிசாசுகளான ஐக்கி நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவின் ஆதரவை எதிர்த்தும் மக்கள் போராட்ட இயக்கம் நாளை வௌ்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.ஆர்ப்பபாட்டத்தில் அனைத்து இடது சாரிக் கட்சிகளும் கலந்து கொள்ளவிருக்கின்றன.என்பது குறிப்பிடத்தக்கது.
பௌர்ணமி ஒன்றுகூடல்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 21 November 2012
- Hits: 2101
தேசிய கலை இலக்கியப் பேரவை இரத்தினபுரி கிளையின் பௌர்ணமி ஒன்றுகூடல் "மலையக நாட்டார் பாடல்கள்" பாடலிசைத்தலும், கலந்துரையாடலும்.
மூலதனம், கூலியுழைப்பு இவற்றின் நலன்கள் நேரெதிரானவை - உற்பத்தித்திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சி கூலியின் மீது ஏற்படுத்தும் விளைவுகள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 21 November 2012
- Hits: 2336
இவ்வாறாக, மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்குமுள்ள உறவின் வரம்புக்குள் வைத்துப் பார்த்தாலும், மூலதனத்தின் நலன்களும் கூலியுழைப்பின் நலன்களும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை என்பதை நாம் காண்கிறோம். மூலதனத்தின் விரைவான வளர்ச்சி என்பது, இலாபத்தின் விரைவான வளர்ச்சியையே குறிக்கிறது. உழைப்பின் விலை, அதாவது ஒப்பீட்டுக் கூலி விரைவாகக் குறையும்போதுதான் இலாபம் விரைவாக அதிகரிக்க முடியும். பெயரளவு கூலி, அதாவது உழைப்பின் பணமதிப்பு உயரும்போது, கூடவே உண்மைக் கூலியும் உயரும். என்றாலும், இலாபம் அதிகரிக்கும் அதே விகிதத்தில் உண்மைக் கூலி உயரவில்லையெனில், ஒப்பீட்டுக் கூலி குறைந்துபோகலாம். எடுத்துக்காட்டாக, தொழில் வணிகம் நல்ல நிலையில் நடக்கும் காலங்களில், இலாபம் 30 சதவீதம் அதிகரிக்கும்போது, கூலி 5 சதவீதம் உயர்கிறது எனில், ஒப்பீட்டுக் கூலி குறைந்துள்ளதே அல்லாது அதிகரித்துவிடவில்லை.
கூடங்குளம் அணு உலையிலிருந்து இலங்கைக்கு 500 கி.மீ
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 21 November 2012
- Hits: 2197
தமிழ் நாட்டின் கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளப் போவதாக கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான மக்கள் இயக்கம் கூறுகிறது. மேற்படி இயக்கத்தின் அறிமுக நிகழ்வு நிகழ்வுக்காக நேற்று (20) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது இந்த விடயம் தெரிய வந்தது.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் கூட்டு அறிக்கை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 20 November 2012
- Hits: 2523
தென்னிந்தியாவில் இலங்கைக்கு மிக அருகில் கூடங்குளம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அணுவுலைகள் இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இரு நாட்டின் சூழலுக்கும் பெரும் ஆபத்தை தோற்றுவித்துள்ளது. அணு உலை விபத்துக்கள் ஏற்படுத்திய அழிவுகள் நினைவுகளை கடந்து பரம்பரை பரம்பரையாக தாக்கங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான அழிவுகளில் இருந்து எம் எதிர்கால பரம்பரையை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். ஏழை விவசாயிகளின், மீனவர்களின், தொழிலாளர்களின் நலன்களிற்கெதிராக செயற்பாடுகள் மனிதாபிமானத்தை கொண்டிருப்பதில்லை. மில்லியன் கணக்கான பிராந்திய மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் அபாயகரமான மனிதாபிமானமற்ற மிலேச்ச தனமான கூடங்குளம் அணு உலைகளுக்கெதிராக போராட்டம் முன்னெடுக்ப்பட வேண்டியது அவசியமானதாகும்.
"இது எமது அரசியலை அறிவிக்கும் காலம்¨ ! தொண்டர் அமைப்பில் தஞ்சமடைவதல்ல.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 20 November 2012
- Hits: 2410
நீண்ட கொடூரயுத்தமானது பல பேரழிவுகளை விளைவித்திருக்கிறது. குறிப்பாக மக்களின் பொருளாதார வாழ்வின் அடிப்படையைச் சிதைத்து விட்டுள்ளது. அதன் நெருக்கடியில், அச் சுமையில் வீழ்ந்து கிடக்கும் மக்களுக்கு நிவாரணப் பணியென்பது சற்று ஆறுதல் அளிக்கும் ஒரு விடயமாகும்.
இவற்றுக்கான நிவாரண வழங்கிகளாக புலம்பெயர்ந்தோர் மத்தியில் காளாண்கள் போல் பல தொண்டர் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. பல்வேறு வட்டங்களைச் சார்ந்த தரப்பினர் இதன் ஏற்பாட்டாளர்களாக உள்ளனர். இவர்களில் விசேடமாக குறிப்பிடப்பட வேண்டியவர்களாக காணப்படுபவர்கள். எவரெனில் தம்மை மாக்சியர்களாகவும், ஜனநாயக சக்திகளாகவும், முற்போக்காளர்களாகவும், அரசியல் அடையாளம் கொண்டவர்களாகவும், பெருமை பேசுபவர்களேயாகும்.
முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களை தமது ஆட்சியின் பொருளாதார நெருக்கடிகளைத் தணித்து வைப்பதற்காக கையால்வதும். அத்துடன் தாமும் பல்வேறு பெயர்களில் இது போன்ற நிறுவனங்களை உருவாக்கிக்கொண்டும் மொத்தத்தில் எல்லாவற்றையும் ஒன்று திரள ஓடவிட்டுச் சிறப்பாகவே பயன்படுத்துகின்றனர்.
காசாவில் தொடரும் தாக்குதலை கண்டித்து உலகமெங்கும் வீதிகளில் போராட்டம்!!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 19 November 2012
- Hits: 2170
இஸ்ரேலிய சியோனிச அரசால் அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் காசாவில் வாழும் பலஸ்தீன மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, உலக நாடுகள் எங்கும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றார்கள். குறிப்பாக இஸ்ரேலின் வீதிகளில் இறங்கி யூத இன மக்கள் தாக்குதலைக் கண்டித்து தமது அரசுக்கு எதிராக போராடுகின்றனர்.
இதனை விடவும் படுமோசமான தாக்குதலை இலங்கை அரசு வல்லரசுக்களின் ஆசீர்வாதத்துடன் மேற்க்கொண்டு இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலையினை நடத்தியது. அந்த வேளையில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை தவிர வேறு எந்த நாட்டு மக்களும் பெரிதாக வீதிகளில் இறங்கிப் போராட முன்வரவில்லை.
தொழிலாளர் உயிர்பாதுகாப்புக்காக அணிதிரள்வோம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 19 November 2012
- Hits: 2160
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தை பார்க்கும்போது, தனியார் துறையில் மட்டுமல்லாது அரசாங்கத் துறையிலும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது, என முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் சமீர கொஸ்வத்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.