மகிந்து, வாழும் புத்தர், கைத்தடி இல்லா காந்தி
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 29 September 2012
- Hits: 2405
முனீஸ்வரத்தில் விலங்குகளை பலியிடுவதை தடுத்து ஆடுகளையும், கோழிகளையும் பாதுகாத்ததை நினைத்து, நினைத்து அதி உத்தம ஜனாதிபதி மகிந்து பெருமிதம் கொண்டார். அவருடைய அன்புத் தொண்டன் மெர்வின் சில்வா தன்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை, இல்லாட்டி பத்து பேருக்கு மண்டையிலே போட்டாலும் பரவாயில்லை ஆடு மட்டும் அடிக்க விடமாட்டேன் என்று அகிம்சையின் மொத்த வடிவமாக குரல் கொடுத்ததை நினைத்து கட்சிக்கொள்கைகளை பயலுகள் என்னமா கடைப்பிடிக்கிறானுகள் என்று சந்தோசப்பட்டுக் கொண்டார். அவரது கண்களில் கருணை வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் லிப்டன் சுற்று வட்டத்தில்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 28 September 2012
- Hits: 2200
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒண்றியத்தினால் கடந்த 24 ம் திகதி பேராதனையில் ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் 05 வது நாளான இன்று நண்பகள் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தை வந்தடைந்தது.
ஒன்றுபடுவோம் உரிமையை வெல்வோம் - சம உரிமை இயக்கம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 28 September 2012
- Hits: 1102
சம உரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளார் ஜுட் பர்னாந்து புள்ளே தனது உரையில் இந்த நாட்டு குடிமக்களை சிங்களவர்தமிழர்முஸ்லீம்கள் என்று பிரித்து வைத்து ஆள்வதே இவ்வளவு காலமும் இந்த நாட்டை ஆண்ட மற்றும் ஆளும் அரசாங்கங்களின் நோக்கமாக இருக்கிறது.
இனவாதத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கான, புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் பகிரங்க அழைப்பு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 28 September 2012
- Hits: 2393
இந்தப் பகிரங்க அழைப்பு என்பது, மக்களை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டுதல். பரஸ்பரம் எதிர்த்தரப்பு இனவாதத்தைக் காட்டி அரசியல் செய்வதற்கு முரணாக, சொந்த இனத்தின் இனவாதத்தை முறியடிக்கும் போராட்டம். 1948 க்குப் பின், முதன்முதலாக இனவாதத்தை முறியடிக்கும் அறைகூவல் விடப்பட்டு இருக்கின்றது. பிரதான முரண்பாடு சார்ந்து புரட்சிகரமான அரசியல் வரலாற்றுக்கு, முதல் காலடி எடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றது. முன்னிலை சோஷலிசக் கட்சியின் இந்த முயற்சியுடன், புதிய ஜனநாயக மக்கள் முன்னணியாகிய நாமும் இந்த சவால்மிக்க பாதையில் இணைந்து கொண்டுள்ளோம். அரச இனவாதத்தை மட்டுமல்ல சிறுபான்மை இனம் சார்ந்த இனவாதத்தை முறியடிக்கும் இந்த சவால்மிக்க பணியில், அனைவரையும் ஒன்று திரளுமாறு புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இதன் மூலம் பகிரங்க அழைப்பை விடுகின்றது.
ஜனக்க மற்றும் சிசித் ஆகியோரின் வாகன விபத்து திட்டமிட்ட ஒன்று!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 27 September 2012
- Hits: 2163
இன்று அதிகாலை அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒண்றியத்தின் செயற்பாட்டு உறுப்பிணர்களான ஜானக ஏக்க நாயக்க மற்றும் சிசித் பிரியங்கர ஆகிய இருவரும் உயிரிழந்தது திட்டமிடப்பட்ட வாகன விபத்து என தாம் சந்தேகிப்பதாக அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒண்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமவுரிமை இயக்கத்தின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் வாழ்த்துச் செய்தி
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 27 September 2012
- Hits: 1064
எமது தோழமை அமைப்பான முன்னிலை சோசலிசக் கட்சி, மக்கள் போராட்டத்தை முன்னிறுத்தி உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தயாரிப்பை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவை வளரக்க, பிளவுகளை நீக்கும் முகமாக, உழைக்கும் மக்களை இனப்பாகுபாட்டிற்கு எதிராக போராடும் முகமாக சமஉரிமை இயக்கத்தை ஆரம்பிக்கின்றனர்.
இனவாதிகள் எவரும் இனப்பிளவை முன்வைத்து, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை. அதுபோல் இன ஐக்கியத்தை முன்வைத்து தீர்வு காணவும் முனையவில்லை. உண்மையில் இன ஐக்கியம் என்ற அடிப்படை அரசியலை முன்வைத்து, மக்களை எவரும் அணுகவில்லை.
சமவுரிமை இயக்கத்தின் ஆரம்ப நிகழ்வு
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 26 September 2012
- Hits: 1006
இனவொடுக்குமுறையும் பேரினவாதமும் தலைவிரித்தாடும் எம் தேசத்தில் இனவாதிகளையும் ஒடுக்குமுறையாளர்களையும் தோற்கடிக்க இன, மத பேதமின்றி மக்களை அணித்திரட்டி போராட புறப்பட்டிருக்கும் சமவுரிமை இயக்கத்தினருடன் கைகோர்த்து சமவுரிமையை வென்றெடுக்க போராடிட விடுக்கும் அறைகூவல் இது .
மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் நடை பயணம் இன்று 03வது நாளாகவும் தொடர்கிறது.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 26 September 2012
- Hits: 2275
கல்வித்துரையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு தருமாறு கூறி கன்டியிலிருந்தும் காலியிலிருந்தும் ஆரம்பமான நடைபயணம் இன்று மூண்றாவது நாளை எட்டியுள்ளது.சுதந்திரக் கல்வியையும் கல்வியின் சுதந்திரத்தையும் பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் கன்டியிலிருந்து கொழும்பிற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யபட்டிருந்த நடைபயணம் மூண்றாவது நாளான இன்று அம்பேபுஸ்ஸவிலிருந்து ஆரம்பமாகிறது.
இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 25
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 25 September 2012
- Hits: 3731
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 25
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும், ஜனநாயகமும்
ஒரு நாட்டில் வர்க்கக் போராட்டத்தை தொடர மறுப்பதுதான், மார்க்சியத்தின் முதன்மையான அரசியல் விலகலாகும். இது புரட்சி நடக்காத நாட்டிலும் சரி, நடந்த நாட்டிலும் சரி இதுவே அடிப்படையான கோட்பாட்டு ரீதியான விலகலாகும். லெனின் “இடதுசாரி கம்யூனிசம் ஒரு குழந்தைப் பருவத்தின் கோளாறு” என்ற நூலில் “நடைமுறைகளால் எழுப்பபப்பட்ட பிரச்சனைகளுக்குத் தத்துவம் விடைகாண்டாக வேண்டும்” என்றார்.
மாணவர்களின் நடைபயணம் ஆரம்பம் (படங்கள்)
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 24 September 2012
- Hits: 2289
சுதந்திர கல்வியையும் கல்வியின் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்வதற்கு அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செயயப்பட்டிருந்த பாரிய நடைப்பயணம் இன்று காலை பேராதெனிய பல்கலைக்கழகத்திலிறுந்து ஆரம்பமாகியது.
இந்த நடைபயணம் தொடர்நது 05 நாட்கள் மேற் கொள்ளப்பட விருக்கின்றது. மாவனல்ல ,அம்பே புஸ்ஸ, நிட்டம்புவ,கலனி ஊடாக கொழும்பிற்கு வர ஏற்பாடகி இருக்கிறது.