அரசும் வன்முறையும்
- Details
- Parent Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Category: செம்பதாகை
- Created: 22 August 2012
- Hits: 2538
ஜூன் 29ம் திகதி, வவுனியாச் சிறைச்சாலையில் படையினர் மேற்கொண்ட கோரத் தாக்குதலின் விளைவாகப் படுகாமடைந்த தமிழ் அரசியல் கைதிகளை மகர சிறைச்சாலைக்கு மாற்றிய பின்பு, அங்கும் அவர்கள் தாக்கப்பட்டனர். அதனால் மோசமாகக் காயமடைந்த இளைஞர் கணேசன் நிமலரூபன் ஜூலை 4 அன்று உயிரிழந்தார். இக் கொடூரத் தாக்குதலையும் படுகொலையையும் மிலேச்சத்தனமான பேரினவாத பாசிச வன்முறையெனப் புதிய ஜனநாயகக் கட்சி வன்மையாகக் கண்டித்திருந்தது.
வசந்தம் இழக்கப்படும் நிலம்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: நெடுந்தீவகன்
- Created: 22 August 2012
- Hits: 7117
தூரத்தேயிருந்து
குண்டுகளை வீசிய டோராப்படகுகள்
எங்கள்
இறங்குதுறையை ஆக்கிரமித்துக்கொண்டது
கிராமத்து தலைநிலம்
அழகையும் அமைதியையும் தொலைத்து
படைமுகாம்களால் சூழப்பட்டுக்கிடக்கிறது
நிர்வாணமாக்கிய பின்னர் தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 25)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 21 August 2012
- Hits: 3924
என்னை தமது வதை முகாமுக்குள் இட்டுச் சென்றவர்கள், நிர்வாணமாக்கினர். எனது கண் கட்டப்பட்ட நிலை என்பது, தொடர்ந்து அடுத்து நான்கு நாட்களாக நீடித்தது. எந்த உடுப்புகளுமற்ற நிர்வாணமான நிலை என்பது பல நாட்களாக நீடித்த நிலையில், இறுதிக் காலத்தில் ஒரு கிழிந்து போன ரன்னிங் சோட்சைப் போராடிப் பெற்றேன். நான் அவர்களின் வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றபோது, அரை நிர்வாணமாகவே பல மைல் தூரம் கடந்து சென்றேன்.
இரண்டு ஆணுறைகளும், ஒரு கறுப்பு டோக்கனும்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 19 August 2012
- Hits: 3526
பெண்களை விளங்கிக் கொள்ள முடியாது என்பார்கள். எனக்கு சின்ன விடயங்களையே விளங்கிக் கொள்ள முடிவதில்லை, இந்த லட்சணத்தில் பெண்களை எப்படி புரிந்து கொள்ள முடியும். பள்ளிக்கூடத்தில் வாத்திமார்கள் உனக்கு படிப்பை தவிர மிச்சம் எல்லாம் ஏறும் என்று அடிக்கடி அன்பாக ஆசிர்வாதங்களை வாரி வழங்குவார்கள்.
தீப்பொறிக் குழுவின் உறுப்பினர்களை குறிவைத்து தொடர்நத புலிகளின் நடவடிக்கைகள்
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 68
"தீப்பொறி"க் குழுவின் அரசியல் செயற்பாடுகள் இனஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் புரட்சிகரத் தலைமையை உருவாக்குவதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இங்கிலாந்திலிருந்தும், சுவிஸிலிருந்தும் எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் எமக்கான பண உதவியுட்பட அனைத்து வழிகளிலும் உதவி புரிந்து கொண்டிருந்தனர்.
அனைவருக்கும் இலவசக் கல்வியை வழங்கு - முன்னிலை சோசலிச கட்சி
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
- Created: 16 August 2012
- Hits: 964
அனைவருக்கும் இலவசக்கல்வியை வழங்கு என்ற கோசங்களுடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று முன்னிலை சோசலிச கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அதில் அடங்கிய கோசங்கள் இப்படி இருந்தன.
'ஒரே ஆகாயத்தின் கீழ் " - நம்பிக்கை தரும் ஆரம்பம்!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 16 August 2012
- Hits: 4179
கடந்த மாதம் கறுப்பு ஜூலையை மையப்படுத்தி பல நிகழ்வுகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டன. அவை எல்லாம் அந்த துயர்படிந்த மூன்று தினங்களை நினைவு கூறுவதாகவே இருந்தன. இந் நிகழ்வுகளில் 'மாற்றத்திற்கான இளைஞர்கள்"(Youth For Chenge - குவேராவை நினைவுக் கூறும் முகமாக CHANGE ஆனது CHENGE என எழுதப்படுகிறது) அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்ட 'ஒரே ஆகாயத்தின் கீழ்" நிகழ்ச்சி திட்டம் உறுதியான நம்பிக்கையை தருவதாகவும் முற்போக்கனதாகவும் இருந்தது.
தில்ருக்சன் படுகொலையைக் கண்டித்து யாழ்நகரில் ஆர்ப்பாட்டம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 16 August 2012
- Hits: 2281
வவுனியா சிறைச்சாலையில் அரசியல் கைதிகளின் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் தில்ருக்சன் எனும் அரசியல் கைதியும் இறந்துள்ளார். தில்ருக்சன், வவுனியா சிறைச்சாலைத் தாக்குதல்களால் உயிரிழந்த இரண்டாமவராவார். இச் சிறைச்சாலைப்படுகொலையைக் கண்டித்து யாழ்நகரில் பேருந்து நிலையத்துக்கு முன்னால் கடந்த 15-08-2012 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
மக்கள் போராட்டம் என்றால் என்ன?
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 14 August 2012
- Hits: 3232
இது பிரதான முரண்பாட்டில் மட்டும் தனித்து இயங்குவதில்லை. மாறாக சமூகத்தில் நிலவும் அனைத்து முரண்பாடும், பிரதான முரண்பாட்டுடன் முழுமை தழுவியதாகவே இயங்குகின்றது. உதாரணமாக இனம், சாதி, வர்க்கம் என எந்த முரண்பாட்டிலும் ஒன்று எப்போதும் முன்னிலை பெற்ற போதும், மக்கள் இயக்கம் என்பது அந்த ஒன்றுக்குள் மட்டும் குறுகிவிடுவதில்லை.
மகாசபையின் அறம்சார் போராட்டங்கள் (சாதியமும்--தமிழ் தேசியமும்....பகுதி-8)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 13 August 2012
- Hits: 7156
சாதியத்திற்கொதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் வரலாறு, சிறுபான்மைத் தமிழர் மகாசபை உதயமாவதற்கு முன் பன்முகத்தன்மை கொண்ட பல தளங்களிற்கு ஊடாகவே சமூக அசைவியக்கம் பெற்று வளர்ந்து வந்தது. இதை கடந்த ஆறு பகுதிகள் கொண்டு கண்டுகொண்டோம். மேலும் மகாசபையின் தோற்றத்தையும் அதன் செயற்பாட்டுத் தளத்தையும் கடந்த பகுதிக்கூடாகவும் இன்னும் பார்ப்போம்.