மணியை ஆட்டு! மூத்திரத்தைக் குடி!! மதவெறியுடன் அலட்டு!!! இனவெறியுடன் கற்பி!!!!
அமெரிக்க ஜனாதிபதியின் இனவெறி, கொரோனாவை "சீனா வைரஸ்" என்று கற்பிக்கின்றது. யாழ் வெள்ளாளியப் பன்னாடைகள், மதவெறியுடன் கொரோனாவை காண்பிக்கின்றது. இந்திய பார்ப்பனிய இந்துப் பன்னாடைகள் மணியை ஆட்டி, சத்தத்தை எழுப்பி கொரோனாவை விரட்ட முடியுமென்கின்றது. மூத்திரத்தைக் குடி, கொரோனா தொற்றாது என்கின்றனர்.
மத நம்பிக்கை உனக்கு மட்டுமானது. அதை பிறருக்கு திணிக்க முடியாது - பிறரை திட்டவும் முடியாது. இப்படி அடிப்படை ஜனநாயகம் இருக்க, இதை மறுதளிக்கும் வண்ணம் நம்பிக்கைகளைக் கொண்டு பிறர் வாழ்வில் தலையிடுகின்றனர். இப்படி தலையிடும் மத, இன, சாதி நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகள், இயல்பாகவே சுயநலமானது, சமூக உணர்வுமற்றது.
இப்படி ஆளுக்காள் இஞ்சி, மஞ்சள், உள்ளி … சாராயம் என்று எத்தனையோ புரட்டுகள், நம்பிக்கைகள், அனுமானங்கள், முடிவுகள் எல்லாம் நடைமுறை வாழக்கையில் பொய்யாகி, புரட்டாகி, மோசடியாகிய போதும், பயம், அறியாமை, வெறும் நம்பிக்கை இன்னமும் சமூகத்தை கட்டிப் போடுகின்றது.
வாழ்வின் எதார்த்தம் என்ன? உலகெங்கும் உள்ள எல்லா மதவழிபாட்டு மையங்களும் மூடப்பட்டு வருகின்றன, தனிமனித நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட வழிபாடு மூலம், கொரோனா வைரஸ் பரவுவதையும், அதற்கு பலியாவதையும் தடுக்க முடியாது என்பதால் லைரஸ் மக்களை வீட்டுக்குள் சிறைவைக்கின்றது. கூட்டமாக கூடும் மத வழிபாட்டினால் வைரஸ் பரவி பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து வழிபடக் கூடினால் பலரைக் கொன்றுவிடும் என்ற அறிவியல் உண்மைகள், மனிதனின் எதார்த்த வாழ்வியலைத் தீர்மானிக்கின்றது. கற்பனைகள், நம்பிக்கைகள் உயிரையே பறித்துவிடும் என்ற உண்மையை யாரும் மீறத் தயாராகவில்லை.
சண் ரிவி பவித்ரா : கொரோனா தொடர்பான அறிவியல் புரட்டுகள்
அறிவியலற்ற புரட்டுகள் இனம், மதம், சாதி, நிறத்தை .. முன்வைத்து கட்டமைக்கப்படும் நிலையில், தனிப்பட்ட நம்பிக்கையை அறிவாக உளறும் வக்கிரங்களும், உள்நோக்குடன் தங்கள் உணவை முன்னிறுத்தி கட்டமைக்கும் புரட்டுத்தனங்களும், கொரோனாவை மிஞ்சும் வைரஸ்சாக உலாவி வருகின்றது.
இதன் பின்னால் உணவுகள், போதைப் பொருட்கள், வெப்பநிலை, மதம் … என்று எண்ணற்ற வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைத்துள்ள போலித்தனத்தின் பின்னணியில் சந்தை, இனவாதம், மதவாதம், நிறவாதம்.. தொடங்கி தனிப்பட்ட மதவாதிகள் கொழுத்து கும்பியடிப்பது வரை நடந்தேறுகின்றது.
இதன் எதிர்மறையில் “அறிவியல்பூர்வமான” பொய்களை அரசுகளும், ஊடகங்களும் முன்வைக்கின்றது. அரசைப் பாதுகாக்க, சந்தையை தக்கவைக்க, மருத்துவக் குறைபாட்டை மூடிமறைக்க.. அறிவையே திரிப்பது நடந்தேறுகின்றது.
அறிவியல் என்பது என்ன? ஆராயும் பொருளிள் இயற்கையை, இயற்கையாக அணுகுவதும் - அதை விளக்குவதும் தான்;. வர்க்கம், சாதி, இனம், நாடு.. சார்ந்து அணுகுவது அறிவல்ல. ஒவ்வொரு நாடும் கோவிட் 19 வைரசை அணுகுகின்ற வேறுபட்ட அணுகுமுறைகளும், அளவுகோல்களும், அறிவியல் திரிபில் இருந்தே வேறுபடுகின்றது. கொரோனா வைரஸ் உலகெங்கும் ஒரேவிதமான நிபந்தனைகளில் தகவமைத்தே பரவுகின்றது என்பதே உண்மை, இயற்கை விதிக்கு உட்பட்டு வைரஸ் இயங்க, இதை வேறுபட்ட விதமாக அணுகும் முறையும் - அதை விளக்கும் வடிவமும் அறிவியல்ரீதியாக திரிபுபட்டது. இங்கு அறிவியலும் திரிக்கப்படுகின்றது என்பதே பொருள்.
உண்மையில் என்ன நடக்கின்றது எனில் சமூக பொருளாதார கட்டமைப்பை தீர்மானிக்கின்ற சந்தைப் பொருளாதார அடிப்படையில், அறிவியலைத் திரிப்பது நடக்கின்றது. மூடிமறைத்து அரைகுறையாக, அரசின் தேவைக்கு ஏற்ப விளக்குவதும் - நடைமுறைப்படுத்துவதும் நடக்கின்றது. இயற்கையில் மக்கள் கூட்டம் என்ற அடிப்படையில் இருந்து, விளக்குவது நடைமுறைப்படுத்துவதும் கிடையாது. இது தான் நாடுகளுக்கு இடையிலான வேறுபட்ட அணுகுமுறைகள்.
கொரோனா குறித்து ஆறு வருடங்கள் (2006-2012) சிறப்புப் பட்டம் பெற்ற பவித்ரா, சண் தொலைக்காட்சியில் முன்வைத்த விடயங்களில் - சமகால கோவிட் 19 குறித்து பல தவறான கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் இந்த கோவிட் 19 குறித்;து கூறுகின்ற தரவுகள் - ஏற்கனவே மேற்கு ஏகாதிபத்தியங்கள் முரண்பட்ட அணுகுமுறையுடன் முன்வைத்த - அறிவியல் புரட்டுக்களை அடிப்படையாகக் கொண்டது.
கொரோனா வைரஸ் வரலாறு குறித்து, பட்டப்படிப்பு அடிப்படையில் உள்ளடங்கிய விடயங்கள் அறிவுபூர்வமானவைதான். ஆனால் கோவிட் 19 வைரஸ் குறித்து முன்வைத்த கருத்துக்கள் தவறானது. இது போன்று பலரும் இதை முன்வைப்பதால், பவித்ராவின் கருத்தை பலரும் காவிச் செல்வதால், விரிவாக சிலவற்றை ஆராய்வோம்.
அரசுகளின் கோமாளித்தனமான கொள்கை முடிவுகளுக்கு, வைரஸ் கட்டுப்படுமா!?
இயற்கையின் உயிரியல் விதியையும் - உயிரியல் குறித்த மருத்துவ அறிவியலையும் கொச்சைப்படுத்தும் அரசியல் முட்டாள்தனங்களே - அரசுகளின் மருத்துவக் கொள்கையாக, முடிவுகளாக இருக்கின்றது. கொரோனா வைரஸ் தன் சொந்த உயிரியல் விதியில் இயங்குகின்றது. அது இயற்கையில் நெடு நேரம் இயல்பழியாது இருக்கும் எல்லா நிகழ்தகவுகளையும் தனக்குள் கொண்டுள்ளது. அது மனித உடலில் மட்டும் தன்னை உயிர்ப்படுத்தி வாழ்வதில்லை. சடப்பொருளில் தங்கி தன்னை தேக்கிக் கொண்டு, மனித உடலைச் சென்றடையும் ஆற்றல் கொண்டது. பொருள் உலகமே மனிதனின் ஆன்மாவாகிவிட்ட உலகில், பொருள் மூலமும் வைரஸ் தன்னை தகவமைத்துக் கொண்டு பரவுதன் மூலம் மனித உடலில் உயிர் வாழ முனைகின்றது. உண்மை இப்படி இருக்க, மனிதனை மட்டும் தனிமைப்படுத்தும் மேற்குலக அரசு மூலதனக் கொள்கைகள், மனித அறிவியலையே கேலி செய்கின்றது.
உதாரணமான நான் வாழும் பிரான்ஸ் நாட்டையே எடுப்போம். பிரான்சு அரசு எப்படிப்பட்ட முட்டாள்தனமாக, அறிவியலைக் கேலி செய்கின்றது என்று பார்ப்போம். வைரஸ் மனிதர்களுக்கு இடையிலான நேரடி தொடர்பு மூலமாகத் தான் பரவுகின்றது என்று வரையறுக்கும் அறிவியலுக்கு எதிரான கொள்கை முடிவுகளானது, அதிஸ்டமிருந்தால் மட்டும் தான் வெற்றி பெறும். அரசின் இந்த முடிவுக்கு அமைய மனிதர்களுக்கு இடையிலான நேரடி தொடர்புகளை தடுப்பதன் மூலம், வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்கும் திட்டமே தனிமைப்படுத்தும் நடைமுறையாகும். இது சீன மாதிரியில் இருந்து வேறுபட்டது. பிரான்சில் தனிமைப்படுத்தலை நடைமுறைப்படுத்தி, அண்ணளவாக ஒரு வாரமாகின்றது.
இதனால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாங்கள் சொந்த வீடுகளில் பாதுகாப்பாக இருக்கின்றோமா எனின் இல்லை. ஆனால் அப்படி இருப்பதாக நம்ப வைக்கப்படுகின்றது. உண்மையில் வைரஸ் தொற்றை மட்டுப்படுத்தி இருக்கின்றனரே ஒழிய, வைரஸ் மனிதர்களுக்கு மனிதர் பரவுவதை தடுத்து நிறுத்த போதுமானதல்ல. இது எப்படி பிற வழிகளில் பரவுகின்றது என்பதைப் பார்ப்போம்.
வைரஸ் பரவவும் - மரணங்கள் நிகழவும் காரணங்கள் என்ன?
நாம் இப்படி ஒரு கேள்வி எழுப்பும் போது, இதை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்ற உண்மை எதார்த்தமாகிவிடுகின்றது. இந்த உண்மை உங்கள் மனதிலும் தோன்றி இருக்கும்; என்பதும் உண்மையல்லவா! அது என்ன?
இதை தடுக்கத் தவறியதற்கு யார் காரணம்? எதற்காக கொரோனா வைரஸை தடுக்கவேண்டியவர்கள் அக்கறைப்படவில்லை?
வைரஸ் பரவலும், மரணங்களும் நிகழ அரசுகள் காரணமாக இருக்கின்றது. இது யாரும் மறுக்க முடியாத உண்மை. எப்படி, எதற்காக, ஏன் அரசுகள் வைரஸ் பரவலை அலட்சியப்படுத்தின? மீள திடீரென ஏன் கட்டுப்படுத்துவதற்கு அக்கறைப்படுகின்றன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எம்முன் எழுகின்றது. நாம் கேள்விகளை எழுப்பி பதிலைத் தேடுவது தவிர்க்கப்பட முடியாதது. இது மட்டுமே நாம் சிந்திக்கவும் - செயற்படுவதற்கான அடித்தளம்.
மக்களின் மருத்துவத்தை முதன்மைப்படுத்தி, முடிவுகளை எடுக்க வேண்டிய இடத்தில் அரசுகள் இருக்கின்றது. அரசுகள் மக்கள் சார்ந்து முடிவெடுக்க மறுக்கும் போது, மக்கள் போராடுகின்றனர். இது தான் உலகெங்கும் நடந்து வருகின்ற உண்மை. இந்த உண்மை இங்கும் பொருந்தும்.
அதாவது அரசுகள் மக்களை முன்னிறுத்தி முடிவுகளை எடுப்பதில்லை. அரசுகள் மக்களுக்கு எதிராக இயங்குகின்றது. மக்கள் சார்ந்து முடிவுகளை எடுக்க மக்கள் கோரும் போது, அதை ஒடுக்குகின்றது. இந்த உண்மை தான் இங்கும் இயங்கியது. மக்களைச் சார்ந்து முடிவுகளை எடுப்பதை அரசுகள் மறுதளித்தன. கண்டு கொள்ளாது அலட்சியப்படுத்தின.
அரசுதுறை மட்டும் தான் கோவிட் 19 (கொரோனா) வைரஸ்சில் மக்களை மீட்கும்
உலகளாவில் வேகமாக பரவுகின்ற கொரோனா வைரஸ், அரசுகளின் பொறுப்பற்ற - செயற்பாடற்ற மக்கள்விரோத சந்து பொந்துகளில் புகுந்து, பலமடங்காக வேகம் பெற்று பரவி வருகின்றது. பாரிய உயிரிழப்புகளை நோக்கி பயணிக்கும் கோவிட் 19 வைரஸ் தாக்குதலை, தாராளமய தனியார்மயம் தடுத்து நிறுத்த எதையும் செய்யவில்லை. தாராளமய தனியார்மயத்திற்கு பணத்தை கறக்கவும் - திருடவுமே தெரியும்.
அரசுதுறை மருத்துவத்தால் மட்டும்தான் மக்களுக்கு மருத்துவம் செய்ய முடியும் என்ற உண்மை, உலகெங்குமான நிகழ்ச்சிநிரலாகி வருகின்றது. அரசுதுறை என்றால் செயலற்றது, இலஞ்சம் நிறைந்தது, சமூகப் பொறுப்பற்றது, ஊழல் நிறைந்தது என்று, தனியார்மய ஆதாரவாளர்கள் கூறுகின்ற சில உண்மைகளால் மூடிய பொய்யை, அரசுதுறை தவிடுபொடியாக்கி வருகின்றது. தாராளவாத தனியார்மயமாக்க அரசு தான் திட்டமிட்டு இலஞ்சத்தையும், ஊழலையும் அரசுதுறையில் அனுமதித்து, அதை செயலற்றதாக்குகின்ற சதிகளையும், தனியார்மயத்தில் ஊழல், இலஞ்சம் கிடையாது என்று கூறி, அரசுதுறையை திட்டமிட்டு தனியார் மயமாக்குகின்ற உண்மையையும், அரசுதுறை தனது செயலாற்றல் மூலம் மெய்ப்பித்து வருகின்றது.
வைரஸ் குறித்து சீன உண்மைகளை பொய்யாகக் காட்டியவர்கள் குற்றவாளிகள்
வைரஸ் குறித்து உலகறிந்த உண்மையை பொய்யாகவும், நம்பகத்தன்மையற்றதாக்கிய அரசுகள், ஊடகங்கள் தொடங்கி அதையே வாந்தியாக்கிய தனிநபர்கள் வரை, மனித இனத்துக்கு எதிரான குற்றத்தை இழைத்துள்ளனர். வைரஸ் மூலம் நிகழும் ஒவ்வொரு மரணங்களுக்கும், இவர்கள் தான் முழுப் பொறுப்பாளிகள்.
சீனா அல்லாத பிற நாடுகள் தொற்றை முன்கூட்டியே தடுத்து இருக்க முடியும். முன்கூட்டியே மருத்துவத்தை தயார் செய்திருந்தால், நிகழும் வைரஸ் மரணங்களைக் குறைத்திருக்க முடியும்;. சீனாவுக்கு வெளியில் எல்லாவற்றுக்கும் போதிய அவகாசம் இருந்தது. ஆனால் அதைச் செய்யவில்லை. இதன் பின்னால் மக்கள் குறித்து அக்கறையற்ற ஆட்சிகள், அதை நக்கிப் பிழைக்கும் ஊடகங்கள். தனிமனிதர்களிடையே வக்கரித்துக் கிடக்கும் மனிதவிரோதச் சிந்தனைமுறைகளே காரணமாக இருந்தன.
இந்தப் பின்னணியில் கொரோனா வைரஸ்சை உலகெங்கும் சுதந்திரமாக பரப்பியது மேற்கு ஊடகங்களும் - ஏகாதிபத்தியங்களும், இந்த சிந்தனைமுறையைக் காவிய தனிமனிதர்களும் தான். தங்கள் போலி அறிவியல் பொய்களையும், தர்க்கங்களையும் கொண்டு, மக்கள் இன்று மரணிக்க காரணமாகி இருக்கின்றனர். இந்த மேற்கு ஏகாதிபத்திய பொருளாதார நலன்களை முதன்மைப்படுத்தி உருவான உலகமயமாக்கலை அடியொற்றி முடிவுகளை எடுக்கும் பிறநாடுகள், மேற்கின் மருத்துவக் கொள்கை முடிவைப் பின்பற்றியதன் மூலம், தங்கள் நாட்டு மக்களின் பிணங்களை எண்ணத் தொடங்கி இருக்கின்றனர்.
மாட்டு மூத்திரம் கொரோனாவைக் கட்டுப்படுத்துமா!?
கொரோனாவை வெங்காயம் கட்டுப்படுத்தும் என்றால், உள்ளி கட்டுப்படுத்தும் என்றால், இஞ்சி கட்டுப்படுத்தும் என்றால், பெருங்காயம் கட்டுப்படுத்தும் என்றால், மஞ்சள் வேப்பிலை தொடங்கி தமிழ் வைத்திய முறைகள் கட்டுப்படுத்தும் என்றால், இந்து வாழ்க்கை முறைகள் கட்டுப்படுத்தும் என்றால், காவிகளின் மாட்டு மூத்திரமும் கட்டுப்படுத்தும். இந்து காவி பாசிட்டுகள் கூறும் மாட்டுச் சாணமும் இதற்கு விதிவிலக்கல்ல. நாங்கள் எப்படிப்பட்ட அறிவியல் உலகத்தில் இருந்து சிந்திக்கின்றோம் என்பதற்கு, இவைகளே சான்று.
கொரோனாவைத் தடுக்க மாட்டு மூத்திரத்தைக் குடி, மாட்டுச் சணத்தை பூசு என்று இந்திய ஆளும் காவிகளின் காட்டுக் கூச்சலுக்கு இடையில், வைரஸ் நுழைந்திருக்கின்றது. அறிவியல் ரீதியாக பகுத்தாய முடியாத காட்டுமிராண்டிச் சமூகத்தில் மட்டும் கூறக் கூடிய வழிமுறைகளையும், தீர்வுகளையும் முன்வைக்கின்றவர்களே – மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று கொள்கை முடிவுகளை இன்று எடுக்கின்றனர். அறிவியல் ரீதியான மருத்துவத்தை மக்களுக்கு வழங்குவதையோ, முன்னெச்சரிக்கையாக வைரஸ்சை தடுப்பது குறித்தும், பகுத்தறிவுபூர்வமாக அறிவை மக்கள் பெற்றுவிடுவதை தடுக்கும் கூட்டத்தின் மத்தியில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இருக்கின்றது.
அதிகாரத்தில் இருக்கும் இந்தியக் காவிகள் இந்து மதத்தை முன்னிறுத்திய கூச்சலுக்கு மத்தியில், முஸ்லிம் மதவாதிகள் வைரஸ்சுக்கு எதிராக மார்க்கம் பற்றி உளறுகின்றனர். கிறிஸ்துவ மதவாதிகள் சாத்தானைக் கொல்ல இயேசு வந்துவிட்டார் என்று ஆளுக்காள் சன்னதம் எடுத்து ஆடுகின்றனர்.
இப்படி மதக் காட்டுமிராண்டிகளாகவுள்ள மதவாதிகள், மக்களின் கடவுள் நம்பிக்கைக்கு வைரஸ்சுக்கும் இடையில் புகுந்து - கொரோனாவை கட்டுக்கடங்காத வீரியமிக்கதாக்க முனைகின்றனர்.
கொரோனா வைரஸ்சை பணமாக்குவது எப்படி!?
- Details
- Category: Uncategorised
- Created: 18 March 2020
- Hits: 936
சமூகம் குறித்த அக்கறையோ, மனிதாபிமானம் குறித்த சிந்தனைமுறையோ அரசுகளிடம் கிடையாது. சுயநலமாகச் சிந்தி, கொள்ளையிடு, இதைத்தான் மனித நடத்தையாக – மனிதப் பண்பாக அரசு முன்வைக்கின்றது. இதற்கு எதிராக தான் மருத்துவமனைகளில் மருத்துவத்துறைச் சேர்ந்தவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகின்றனர்.
இப்படி உண்மைகள் இருக்க, பதுக்கல் வியாபாரிகளையும், விலையைக் கூட்டி விற்கும் முதலாளிகளையும் இனம் கண்டு கொதிக்கும் மனம், அரசுகளும் பன்னாட்டு முதலாளிகளும் கூட்டாக தொடங்கியுள்ள பகல் கொள்ளையைக் கண்டுகொள்ள முடிவதில்லை.
வைரஸ்சை அடுத்து மதவாதிகள் தங்கள் முகமூடிக்கே செயற்கை முகமூடியை அணிந்தபடி, மூலதனத்தைப் பாதுகாக்கும் தங்கள் மதப் பணியை மீளத் தொடங்கியிருப்பது போல், அரசுகள் மற்றும் பன்நாட்டு முதலாளிகளை பாதுகாக்க துடியாத் துடித்து களத்தில் இறங்கியுள்ளனர்.
அமெரிக்கா ஒரு டிரிலியன் (100000 கோடி) டொலரை முதலாளிகளுக்கு வாரி வழங்கவுள்ள அறிவித்தலை விடுத்துள்ளது. இது பிரிட்டன் வருடாந்த வரவு செலவு தொகைக்குச் சமமானது. பிரான்ஸ் அரை டிரிலியன் (50000 கோடி) டாலரை முதலாளிகளுக்கு கொடுக்கவுள்ள அறிவித்தலை விடுத்துள்ளது. வைரஸ்சைக் காட்டி எல்லா அரசுகளும் பெரும் பன்னாட்டு முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து, மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் திட்டத்தை தொடங்கி இருக்கின்றது.
ஊதிப் பம்மிய பிணமாகிவிட்ட மேற்குலக மருத்துவம்
சீனாவை மிஞ்சும் மரணங்கள் - பல மடங்காக மாறுவதை மேற்குலகம் தவிர்க்க முடியாது. மருத்துவரீதியாக மக்களைக் கைவிடும் அறிவுரைகளும், "ஜனநாயக" வக்கிரங்களுக்கும் எள்ளளவும் குறைச்சல் இல்லை. கொரோனோவுக்கு எதிராக, மேற்கில் அரங்கேறி வருவது ஏகாதிபத்திய வக்கிரங்கள் தான்.
வைரஸ் தொற்று தொடங்கியது முதல் அதன் பரவலை கட்டுப்படுத்தும் கொள்கை எதையும் மேற்கு கையாளவில்லை. எந்த மருத்துவ தயார்படுத்தலையும் செய்யவில்லை. தொற்று இனம் காணப்பட்டவுடன் நேரத்துக்கு நேரம் தங்கள் முந்தைய திட்டத்தை மாற்றுவது – தடுமாறுவதுமாக காலத்தைக் கடத்திய பின்னணியில், மூடிமறைத்த "ஜனநாயக" வக்கிரங்களை காறி உழிழ்ந்தனர். ஊதிப் பம்மி பிணமாகக் கிடக்கும் மேற்கத்தைய நவதாராளவாத மருத்துவ முறையையும் - கொள்கையையும் கொண்டு, எதையும் செய்ய முடியாது என்ற உண்மையை மூடிமறைக்க, எத்தனை "ஜனநாயக வேசங்கள் - நாடகங்கள். கண்ணை மூடிக் கிடக்கும் பூனை போல், முதலாளிகளின் மடியில் படுத்துக்கிடந்து உலகைக் கனவு கண்டவர்கள், விழித்தெழுந்து பார்த்தால் ஒன்றுமே இருக்கவில்லை. உலகை கொள்ளை அடித்த பணத்தை குவித்து வைத்துக் கொண்டு, உலகை மேய்கின்ற வக்கிரத்துடன் வைரஸ்சை ஒழிக்கக் கனவு கண்டவர்கள், காற்றுப்போன பலூன் போல் பம்மிப் பம்மி கையை விரிக்கின்றனர்.
மேற்கு குறித்த கற்பனைகளை தங்கள் இயலாமையால் தகர்த்துக் கொண்டு இருக்கின்றனர். தங்கள் நாட்டின் வலிமை குறித்த மேற்கத்தைய போலி பிரமைகளையும் - பிம்பங்களையும், கொரொனோ தவிடுபொடியாக்கிக் கொண்டு இருக்கின்றது.
கொரொனோ வைரஸ் மக்களைக் கொல்வதுடன், மக்களை அரசியல் மயப்படுத்துகின்றது. தாராளவாத தனியார் மருத்துவக் கொள்கையை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது.
முதியவர்களைக் கொல்ல - கொரானா வைரஸ்சை மூலதனம் பாவிக்கின்றதா!?
மக்களைத் தனிமைப்படுத்தி கோவிட் 19 (கொரோனோ வைரஸ்சை) கட்டுப்படுத்த அரசுகள் தவறுகின்ற, தாமதப்படுத்துகின்ற ஒவ்வொரு நிமிடம், முதியவர்கள் கொல்லப்படுகின்றனர். பலர் நோய்க்கு உள்ளாகின்றனர். மனவுளைச்சலுக்கு மனிதர்களை தள்ளிவிடுகின்றது.
இதை ஏன் அரசுகள் செய்கின்றன? அரசுகள் மக்களுக்கானதல்ல, மாறாக மூலதனத்துக்கானது என்ற உண்மைதான், எல்லா முடிவுகளையும் நிர்ணயம் செய்கின்றது. மக்கள் அரசு குறித்து, தங்கள் அனுபவவாதத்தில் இருந்து முடிவுகளை எடுக்கின்றனர்.
இந்த வகையில் வைரஸ்சுக்கு கொல்லப்படுபவர்களில் பெருமளவில் முதியவர்கள் என்பதால், அவர்களின் ஓய்வூதியத்தை திருட அரசு தனிமைப்படுத்துவதை தாமதப்படுத்துகின்றது என்று நம்புமளவுக்கு, அரசு குறித்த மனநிலை மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
அரசுகளும், மூலதனமும் ஓய்வூதிய வயதை அதிகரிக்கவும், ஓய்வூதியத்தைக் குறைக்கவும் செய்யும் இடைவிடாத முயற்சியின் பின்னணியில் இருந்து, இந்தக் கருத்து உருவாகின்றது. மக்களின் உழைப்பில் உருவான ஓய்வூதிய நிதியை மூலதனம் கொள்ளையிடுகின்ற பொதுப் பின்னணியை புரிந்துகொள்ளும் அனுபவவாதம், கொரோனொ மூலம் மக்களைக் கொன்று ஒய்வூதியத்தை திருட முனைவதாக மக்கள் நம்புகின்றனர்.
இந்தப் பார்வை சரியானதா - உண்மையானதா என்பதை விளங்கிக் கொள்ள முன், இதையொத்த இன்னுமொரு உரையாடலை நான் கேட்க முடிந்தது.
08.03.2019 நான் உள்ளடங்க 15 பேர் கொண்ட கூட்டம் ஒன்று நடந்தது. அந்தக் கூட்டம் முடிந்த பின், கொரோனோ குறித்த பலரும் தங்கள் கருத்தை முன்வைத்து உரையாடினர். அப்போது சமூக மேடைகளில் பல்வேறு பொதுக் கருத்தை முன்வைக்க கூடிய ஒருவர் "இரயா நீங்கள் இடதுசாரி, உங்களுக்கு தெரியும்" சீனக் கம்யூனிஸ்ட்டுகள் 1960களில் முதியவர்களை சமூகத்துக்கு அவசியமற்றவராக அறிவித்து, கொன்றுவிட வேண்டும் என்று கூறியதாக - கூறியதுடன், சீனா முதியவர்களை கொல்ல கொரோனோவை உருவாக்கி இருக்க முடியும் என்ற கருத்துப்படக் கூறினார். அத்துடன் கம்யூனிச சீனாவில் ஓய்வூதியம் கிடையாது, முதுமை வரை உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார்.