பாலஸ்தீனம் மீதான தாக்குதலை கண்டித்து கொழும்பில் மாபெரும் ஆர்பாட்டம்! (படங்கள்)
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 31 July 2014
- Hits: 2549
இன்று வியாழக்கிழமை, 31.07.2014 பிற்பகல் 04 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக, பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குலை கண்டித்தும், பாலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி அவர்களுக்கு ஆதரவாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தியும் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் இலங்கையின் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் பங்குகொண்டன. முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மா-லெ கட்சி, நவசம சமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மவோயிஸ்ட்) போன்ற அனைத்து இடதுசாரிக் கட்சிகளுடன் மத்திய மாகாண சபை ஐ.தே.க உறுப்பினர் அசாத்சாலி தலமையிலான தேசிய ஒற்றுமை முண்னனி ஆகியன கலந்துகொண்டன.
ஒரு தளராத உறுதிகொண்ட போராளி-தோழர் தங்கவடிவேல்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 30 July 2014
- Hits: 2927
தரப்படுத்தல் கண்டு தனி நாடு கேட்டு ஆயுதத்தோடு கொதிந்தெழுந்த வடக்கிலே; தனிக்குவளை, சிரட்டையில் தேநீர், கிணற்றில் நீரைக் கூட வாளியால் மொள்ளக் கூடாது, உயர் சாதியினருக்கு முன்னால் தோளிலிருக்கும் சால்வையை மடித்து கமக்கட்டுக்குள் செருகியாக வேண்டும், விவசாயக் கூலிப் பெண்கள் மார்புகளை மறைக்க குறுக்குக்கட்டு அணிய வேண்டும், வள்ளியம்மை என்றோ அல்லது கந்தையா என்றோ பெற்ற குழந்தைக்கு பெயர் வைத்தால் வள்ளி என்றும் கந்தன் என்றும் சாதிக்குறியீட்டுக்காக பெயர்கள் மாற்றி பதியப்பட்டும், இன்ன இன்ன சாதி இன்ன இன்ன ஊர்களில் குறிச்சிகளில் என்றும், தப்பித்தவறி சாதிவிட்டு சாதி காதல் கொண்டால் கடலிலோ, குளத்திலோ கிணற்றிலோ அடித்தே கொலை செய்து வீசப்பட்டு, வழக்குகள் நீதிமன்றுகளில் அப்புக்காத்துக்களால் தள்ளுபடியாக்கப்பட்டும், ஆலயங்களும் அங்கு குடிகொண்டிருக்கும் கடவுளர்கள் கூட சாதிகளுக்கென்றும், பள்ளிக்கூடங்களில் நீ பள்ளனா பறையனா என்றும், முத்தன், கந்தன் என்ற பெயரைக் கண்டால் மூட்டை சுமக்கப் போகாமல் நீ எதற்கடா வகுப்பறையில் முன் வாங்கில் அமர வேண்டும் என பாடம் நடாத்தும் சாதித்துவேசம் மிக்க "முத்துக்குமாரசாமி" வாத்தியாயர்கள் என இன்னும் பற்பல சாதிக்கொடுமைகளை ஒடுக்குமுறைகளை தமிழ்த் தேசிய சாதிமான்கள் தங்கள் புறங்காலால் ஒதுக்கிவிட்டு தங்களது தங்கப் பிள்ளைகளின் பல்கலைக்கழக வாய்ப்பு பறிபோய் விட்டதே என்று வெண்கலக் குரல்களில் வீராவேச வசனம் பேசி அணிகளைத் திரட்டி ஆயுதப் போரினை மூட்டினர்.
நிலச் சுவீகரிப்பு பற்றிய மாவை சேனாதிராஜாவின் புரட்டு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 30 July 2014
- Hits: 2509
சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்காகவே இராணுவ முகாம் அமைத்தல் என்ற போர்வையில் வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
02.07.2014 இலங்கை தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை அலுவலகத் திறப்பு விழா தெல்லிப்பளை, ஆனைக்குட்டி, மதவடியில் இடம்பெற்றது. அலுவலகத்தினைத் திறந்து வைத்து அங்கு உரையாற்றும் போது, எமது மக்கள் நீண்ட காலமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த பூமியில் வாழ முடியாமல் அகதி முகாம்களிலும், உறவினர், நண்பர்கள், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள், பரம்பரை பரம்பரையாக மேற்கொண்டு வந்த விவசாயத்தையும், மீன்பிடியையும் செய்ய முடியாமல் தொழில் இழந்து வாழ்க்கையை தொலைத்துவிட்டு நாடோடிகளாக வாழ்கின்றனர்.
ஊடகதுறையினை அடக்கி ஒடுக்குவதில் பெயர் பெற்ற நாடு இலங்கை!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 29 July 2014
- Hits: 2358
ஊடகவியலாளர்கள் மீதான கொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இலங்கை பெயர் பெற்ற நாடாகவே இருந்து வருகிறது. ஊடக சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு என்பதெல்லாம் போலித்தனமான பசப்பு வார்த்தைகள் என்பதையே அண்மைய ஓமந்தைச் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது. யாழ்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பயணித்த தமிழ் ஊடகவியலாளர்கள் இனம் தெரியாதோரால் பின்தொடரப்பட்டதும், ஓமந்தைச்சோதனைச் சாவடியில் படையினரால் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டதும், அதனிடையே கஞ்சா வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டதும் பின்பு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதும் திட்டமிடப்பட்ட வகையிலே அரங்கேற்றப்பட்டவைகளாகும். இச்சம்பவத்தையும் அதன்பின் கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு நடைபெற இருந்த ஊடகப்பயிற்சிச் செயலமர்வு குழப்பப்பட்டு நிறுத்தப்பட்டவையும் ஒன்றோடு ஒன்று சம்மந்தப்பட்டவையாகும். இவை யாவும் வடபகுதி தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திப் பழிவாங்குவதற்கும் அடிபணிய வைப்பதற்கும் எடுக்கப்பட்ட திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளே ஆகும்.
2011 ஆண்டுக்குப் பின் இந்திய மீனவர்களை இலங்கை கொல்லவில்லையாம் - அமைச்சர் அருண் ஜெட்லி
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 29 July 2014
- Hits: 2682
இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லியின் இக் கூற்றானது, இலங்கை அரசைப் புனிதப்படுத்தும் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க கருத்தாகும். இலங்கையில் யுத்தத்தை நடத்திய இந்தியா, இன்று அதை புனிதப்படுத்தும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 28 July 2014
- Hits: 2708
எதிர்வரும் வியாழக்கிழமை, 31.07.2014 பிற்பகல் 04 மணிக்கு, கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்தின் முன்பாக பாலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தியும், அவர்களுக்கு ஆதரவாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் இலங்கையின் அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் பங்குகொள்ளவுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிகின்றனர். அத்துடன் உழைப்பாளர்கள், மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் பாலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி அவர்களுக்கு ஆதரவாக கோட்டே புகையிரத நிலையத்தின் முன்னாள் அணிதிரளுமாறு ஏற்பாட்டாளர்கள் தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் சமவுரிமை இயக்கம் ஆரம்பம் (படங்கள்)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 28 July 2014
- Hits: 1446
இன்று தேசத்தில், நாடு தழுவிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பல போராட்டங்களை சமவுரிமை இயக்கம் முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக இனவாததுக்கு எதிரான நிகழ்வுகளை அது தென்பகுதியில் முன்னெடுத்து வருகிறது. ஆனி மாதம் முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிரான மதவாத, இனவாதத் தாக்குதல்களின் பின்னால் உள்ள இனவாத- மேலாதிக்க சிந்தனை, அரச ஆதிக்க சக்திகளுக்கு மக்களைப் பிரித்தாள சாதகமான காரணியாக உள்ளது . இதை முறியடிக்கும் நோக்கிலேயே கடந்த ஆடி மாதம் முழுவதும் "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்ற தொனிப் பொருளில் கையெழுத்துப் போராடத்தையும், இன, மத, சாதிய வாதங்களுக்கு எதிரான ஒரு மாநாடையும் சமவுரிமை இயக்கம் நடத்தியது.
ஆணாதிக்கமே பெண்ணுறுப்பைச் சிதைக்கக் கோருகின்றது!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 27 July 2014
- Hits: 2363
ஈராக்கிய சுன்னி ஜிகாதி குழுவான ஐசிஸ் பெண்ணுறுப்பைச் சிதைக்க கோரியுள்ளதாக ஐ.நாவின் செய்தி குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. இது மதங்கள் ஆணாதிக்கமானவை என்பதையும், பெண்களுக்குரியனவல்ல என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.
மதத்திடம் ஜனநாயக தன்மையோ, சுதந்திர தன்மையோ கடுகளவும் கிடையாது என்பதுடன், அதன் காட்டுமிராண்டித்தனத்தையும் இது எடுத்துக் காட்டுகின்றது.
இறக்குவானை சிறுமி மீதான பாலியல் வல்லுறவில் அரசியல்வாதிகளின் அநீதியான தலையீடுகள்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 26 July 2014
- Hits: 3995
கடந்த 22 ஆம் திகதி இறக்குவானை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்பாட்டம் பற்றி அச்சு, இலத்திரனியல் ஊடகங்களில் நிறைய செய்திகள் வந்த வண்ணமுள்ளன. நண்பர் ஒருவரிடம் இது பற்றி விசாரித்த போது, அங்கு இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு பற்றி வந்த செய்திகளில் அச்சம்பவத்திற்கும் அதன் பின்பு இடம்பெற்ற பொலிசாரின் பக்கச்சார்பான செயற்பாடுகள் தொழிற்சங்கங்களின் கோமாளித்தனங்கள், காட்டிக்கொடுப்புக்கள் அரசியல்வாதிகளின் அநீதியான தலையீடுகள் பற்றி வெளிப்படுத்தப்படாமை துரதிஷ்டவசமானது. இதன் உண்மை தன்மை பற்றி அறியவென நேற்று இறக்குவானை டெல்வின் “B” பகுதிக்குச் சென்றோம். பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சிறுமியின் பெற்றோருடன் கதைக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அச்சிறுமியின் தந்தை இறக்குவானை நகரத்தில் பொதி சுமக்கும் தொழிலாளியாக வேலை செய்கின்றார். அச்சிறுமிக்கு சகோதரிகள் மூவரும் ஒரு சகோதரனும் உள்ளனர்.
மாலபேயில் "டொக்டர்" பட்டம் விற்பனைக்கு!!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 6
- Created: 25 July 2014
- Hits: 1326
இலங்கை ஜனநாயக "சோஷலிஸ குடியரசு" அதி விஷேட வர்த்தமான அறிவித்தல்களை வெளியிடுவதில் கைதேர்ந்ததாக இருக்கின்றது. அதன்படி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம்தான் மாலபே பட்டதாரி பட்டம் வழங்கும் கடை என்பது மாலபே பிரதேசத்தில் 'சவுத் ஏசியன் இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னோலொஜி அன்ட் மெடிசின்' (South Asian Instititute of Tecnology And Medicine) சுருக்கமாகக் கூறுவதாயிருந்தால் SAITM என்ற பெயரில் தனியார் மருத்துவக் கல்லூரியொன்று இங்குவதாக தற்போதைய உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக அந்த விஷேட வர்த்தமானி அறிவித்தலை தலைமேல் வைத்துக் கொண்டு பெருமையடித்துக் கொள்கிறார். மேற்படி நிறுவனம் தொடர்பில் இம்மாதம் 26ம் (October 2013) திகதி மீண்டும் ஒரு அதிவிஷேட வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.